என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் டெண்டருக்கு இடைக்கால தடை
    X

    தெருநாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்தும் டெண்டருக்கு இடைக்கால தடை

    • தமிழ்நாடு கால்நடைகள் அபிவிருத்தி முகமை 2 லட்சத்து 40 ஆயிரம் மைக்ரோ சிப்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டது.
    • டெண்டரை திடீரென ரத்து செய்து விட்டு கடந்த நவம்பர் 26-ந்தேதி வேறு ஒரு நிறுவனத்தை டெண்டர் வழங்கப்பட்டது.

    சென்னை:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, அவற்றுக்கு 'மைக்ரோ சிப் பொருத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு கால்நடைகள் அபிவிருத்தி முகமை 2 லட்சத்து 40 ஆயிரம் மைக்ரோ சிப்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டது.

    இந்த மேக்ரோ சிப்களை வழங்கும் டெண்டர், 'எக்ஸ்ஹீலர் இன்னோவேடிவ் சொல்யூசன்ஸ்' என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. பின்னர், அந்த டெண்டரை திடீரென ரத்து செய்து விட்டு கடந்த நவம்பர் 26-ந்தேதி வேறு ஒரு நிறுவனத்தை டெண்டர் வழங்கப்பட்டது.

    இந்த டெண்டரை எதிர்த்து 'எக்ஸ்ஹீலர்' நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, "டெண்டரில் பல்வேறு குளறுபடிகள், விதிமீறல்கள் நடந்துள்ளன எனக்கூறி அந்த டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

    Next Story
    ×