search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stray dogs"

    • தெரு நாய்கள் வலை மூலம் பிடிக்கப்பட்டு கால்நடை மருத்துவரால் தடுப்பூசி.
    • நாய்களை அடையாளம் காணும் வகையில் அவைகளின் உடலில் வண்ணம் பூசவும் திட்டம்.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 93,000 நாய்களுக்கும் வெறிநாய் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணியை நீக்குவதற்கான மருந்தையும் ஊசி மூலம் செலுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

    தெரு நாய்கள் வலை மூலம் பிடிக்கப்பட்டு கால்நடை மருத்துவரால் தடுப்பூசிகள் விட முடிவு செய்யப்படுகிறது.

    தடுப்பூசி போடப்பட்டு பின்னர் அதே தெருவில்

    தடுப்பூசி செலுத்திய நாய்களை அடையாளம் காணும் வகையில் அவைகளின் உடலில் ஒரு பகுதிகளில் வண்ணம் தீட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    • தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் தெரு நாய்கள் நின்று கொண்டு இருசக்கர வாகனத்தில் வருபவர்களை தூரத்துகிறது.
    • சிறுவர், சிறுமிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேருராட்சி பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக அங்குள்ள சாலையில் சுற்றி திரிந்து வருகிறது. சில நேரம் சாலையின் நடுவே சண்டையிட்டு அவ்வழியாக செல்லும் இருசகக்கர வாகனத்தில் விழுந்து அதில் வருபவர்களை பயமுறுத்துகிறது. மேலும் தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் தெரு நாய்கள் நின்று கொண்டு இருசக்கர வாகனத்தில் வருபவர்களை தூரத்துகிறது. இதில் சிலர் தவறி விழுந்து காயம் அடையும் நிலையும் ஏற்படுகிறது.

    சிறுவர், சிறுமிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அதிகாரிகள் தெருவில் திரியும் நாய்களை கட்டுப்படுத்திட நடவடிக்கை வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கால்நடை டாக்டர் செல்வமுத்து தெரு நாய்களுக்கும், வீட்டு செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி போட்டார்.
    • வீட்டு செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி போட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் உலக ரேபிஸ் தடுப்பு தினத்தை முன்னிட்டு தெருவோர மற்றும் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடந்தது.

    கால்நடை டாக்டர் செல்வமுத்து தெரு நாய்களுக்கும், வீட்டு செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி போட்டார். 60க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. மேலும், பிராணிகள் வளர்க்கும் உரிமையாளர்களிடம் தடுப்பு ஊசி பற்றியும் அதன் நன்மைகள் குறித்தும் விளக்கினார்.

    • கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திட்டக்குடி நகர சாலையில் சென்ற பா.ம.க. நகர செயலாளர் சுரேஷ் உட்பட 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்தது.
    • முதியோர்கள் என அனை வரும் அச்சத்துடனேயே நடந்து செல்கின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாய் செல்கின்றன. இதில் வெறி பிடித்த நாய்கள் மோட்டார் சைக்கிளில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோரை துரத்தி, துரத்தி கடிக்கிறது. கடந்த இரண்டு தினங்க ளுக்கு முன்பு திட்டக்குடி நகர சாலையில் சென்ற பா.ம.க. நகர செயலாளர் சுரேஷ் உட்பட 10-க் கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்தது. இவர்கள் திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சுரேசுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து திருச்சி தனி யார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களினால் பள்ளி குழந்தைகள், பாதசாரிகள், முதியோர்கள் என அனை வரும் அச்சத்துடனேயே நடந்து செல்கின்றனர்.

    எனவே, திட்டக்குடி நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றி தெரியும் தெரு நாய்களை பிடித்து செல்ல வேண்டுமென திட்டக்குடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாய் செல்கின்றன. இதில் வெறி பிடித்த நாய்கள் மோட்டார் சைக்கிளில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோரை துரத்தி, துரத்தி கடிக்கிறது. கடந்த இரண்டு தினங்க ளுக்கு முன்பு திட்டக்குடி நகர சாலையில் சென்ற பா.ம.க. நகர செயலாளர் சுரேஷ் உட்பட 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்தது. இவர்கள் திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சுரேசுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து திருச்சி தனி யார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களினால் பள்ளி குழந்தைகள், பாதசாரிகள், முதியோர்கள் என அனை வரும் அச்சத்துடனேயே நடந்து செல்கின்றனர்.

    எனவே, திட்டக்குடி நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றி தெரியும் தெரு நாய்களை பிடித்து செல்ல வேண்டுமென திட்டக்குடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பரமக்குடியில் உயிருக்கு போராடிய பெண் மான் மீட்கப்பட்டது.
    • தெரு நாய்கள் கடித்ததால் அந்த மான் காயம் அடைந்திருப்பது தெரியவந்தது.

    பரமக்குடி

    பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட 1-வது வார்டு மஞ்சள்பட்டிணம் பகுதியில் அதிகாலை வீடுகளின் அருகே உயிருக்கு போராடி கொண்டிருக்கும் பெண் மானை பார்த்த அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை, காவல்துறை, வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த மானை மீட்டனர். உடனடியாக பெண்மானை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு முதலுதவிக்காக பரமக்குடியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்து வருகின்றனர்.

    தெரு நாய்கள் கடித்ததால் அந்த மான் காயம் அடைந்திருப்பது தெரியவந்தது.

    • தெருக்களில் சுற்றித் திரியும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை கட்டுப்படுத்த அரசு எச்சரிக்கை விடுத்தது.
    • உணவு பைகளை கீழே போட்டு போட்டுவிட்டு அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.

    கடலூர்:

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி மாணவியை நெடுஞ்சாலையில் சுற்றி திரிந்த மாடு முட்டியது. அதில் அவர் படுகாயம் அடைந்தார்.இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தெருக்களில் சுற்றித் திரியும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை கட்டுப்படுத்த அரசு எச்சரிக்கை விடுத்தது.

    ஆனால் இதனை கால்நடை வளர்ப்போர்கண்டு கொள்ளவே இல்லை. இந்த நிலையில் வடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளில் தெரு நாய்களின் நடமாட்டம் மிகவும் அதிகரித்துள்ளது. அதிகாலை நேரத்திலேயே 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களில் உலா வரத் தொடங்குகிறது .நடைப்பயிற்சி செல்வோர் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பணிகளுக்கு செல்வோர் சாலையில் பயணிக்கும் போது இந்த நாய்கள் அவர்களை சுற்றி குறைப்பதோடு கடிக்கவும் முற்படுகிறது .

    இதனால் அவர்கள் அச்சத்துடன் ஓட வேண்டி உள்ளது. இதனை தவிர்க்க நடைப்பயிற்சி மேற்கொள்வோர் கைகளில் தடியுடன் நடக்க வேண்டி உள்ளது. பள்ளி மாணவ -மாணவிகள் தங்களது உணவு பைகளை கீழே போட்டு போட்டுவிட்டு அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.இரவு நேரங்களில் தனியாக தெருக்களில் நடந்து வருவோரை இந்த நாய்களின் கூட்டம் குறைத்துக் கொண்டே துரத்துவதும் வாடிக்கையாக உள்ளது இதனால் பலர் அச்சமடைந்து குரல் எழுப்பிய படி அங்கும் எங்கும் ஓடி தங்களை நாய்க்கடிகளில் இருந்து காத்துக் கொள்கின்றனர். இது போன்ற இடையூர்களை போக்க நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஈரடுக்கு பஸ் நிலையம், ேமம்பாலங்கள், சாலைகள் விரிவாக்கம், பாதாள சாக்கடை பணிகள் என நாளுக்கு நாள் பல பணிகள் நடைபெற்று வருகிறது.
    • வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகளும் அடிக்கடி அரங்கேறுகின்றன. மேலும் 4 சக்கர வாகனங்களையும் சில நாய்கள் ஓட ஓட துரத்துகின்றன.

    சேலம்:

    சேலம் மாநகரில் 60 வார்டுகள் உள்ளன. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் சேலம் மாநகராட்சி நாளுக்குநாள் விரிவடைந்து வருகிறது. ஈரடுக்கு பஸ் நிலையம், ேமம்பாலங்கள், சாலைகள் விரிவாக்கம், பாதாள சாக்கடை பணிகள் என நாளுக்கு நாள் பல பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஆனால் சேலம் மாநகரில் சமீப காலமாக நாய்கள் தொல்லை மிக அதிகமாக உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்கள் தனியாக சாலைகள் மற்றும் தெருக்களில் செல்ல முடியாமல் பயத்தில் தவித்து வருகிறார்கள். குறிப்பாக பெரியபுதூர், நகரமலை அடிவாரம், ரெட்டியூர், பள்ளப்பட்டி அம்மாப்பேட்டை, களரம்பட்டி, கிச்சிப்பாளையம், தாதகாப்பட்டி, பெரமனூர் உள்பட பல பகுதிகளில் சாலையிலேயே நாய்கள் படுத்து கிடக்கின்றன.

    இந்த நாய்கள் சாலைகளிலே படுத்து கிடப்பதால் பொதுமக்கள் அச்சத்துடனே அதனை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாணவ- மாணவிகள் சிறுமிகள் இந்த நாய்களால் பெரும் அச்சத்தில் உள்ளனர். சில நாய்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்களையும் விரட்டி விரட்டி விரட்டி கடிக்கிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வோரையும் ஓட ஓட விரட்டியும் சில நாய்கள் கடிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகளும் அடிக்கடி அரங்கேறுகின்றன. மேலும் 4 சக்கர வாகனங்களையும் சில நாய்கள் ஓட ஓட துரத்துகின்றன.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் வாய்க்கால்பட்டடறை பகுதியில் 22 பேரை ஒரு நாய் கடித்து குதறியது. அதில் காயம் அடைந்த அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

    சேலம் பள்ளப்படடி போலீஸ் நிலையத்தில் போலீஸ் காரர் ஒருவர் நாய் வளர்த்து வருகிறார். கடந்த வாரம் போலீஸ் நிலையம் முன்பு சென்ற 7 பேரை அந்த நாய் கடித்து குதறியது. இதேபோல சேலம் மாநகரில் தினம், தினம் பல இடங்களில் பொது மக்களை நாய்கள் அச்சுறுத்தி வருகிறது. ஆனால் சேலம் மாநகராட்சி சார்பில் கருத்தடை ஊசி போடவும், நாய்களை பிடிக்கவும் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அதற்கு போதுமான நடவடிக்கைள் சமீப காலமாக மேற்கொள்ளப்படுவது இல்லை. இதனால் நாளுக்கு நாள் நாய்கள் அதிக அளவில் தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றி திரிகின்றன.

    இதேபோல சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் முன்பு மற்றும் சுரங்கப்பாதைகளில் அதிக அளவில் நாய் தொல்லை உள்ளது.

    குறிப்பாக அங்குள்ள சுரங்கப்பாதைகளில் நாய்கள் படுத்து தூங்குவதால் பயணிகள் அச்சத்துடன் கடக்கும் நிலை உள்ளது. ஒரு கட்டத்தில் சுரங்கப்பாதைக்குள் நாய்கள் சண்டையிட்டு கொள்வதால் பயணிகள் தங்கள் உடமைகளை விட்டு விட்டு அலறி அடித்து ஓட்டம் பிடிக்கும் சூழலும் நிலவுகிறது. இதனால் அந்த நாய்களை பிடித்து அகற்ற வேண்டும் என்பது ரெயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    மாநகராட்சியில் நாய்கள் தொல்லை குறித்து புகார் கொடுத்தாலும் நாய்களை பிடிக்க யாரும் வருவதில்லை.இதனால் போன் செய்வதற்கும் பலர் விரும்புவதில்லை.

    எனவே நாளுக்கு நாள் பெருகி மக்களை அச்சுறுத்தி வரும் தெரு நாய்களிடம் இருந்து மக்களை பாதுகாப்பதுடன் அதனை பிடித்து அகற்றவும் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • தெரு நாய்கள் தொல்லை அதிகரிக்கிறது.
    • இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் அதிகரித் துள்ளது. பகல், இரவில் நாய்கள் கூட்டமாக குடியி ருப்புகளில் வலம் வந்து அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    தற்போது நாய்களுக்கு இனப்பெருக்கத்திற்கான காலம் என்பதால் இணைகளை தேடி வெளியிடங்களில் இருந்து நகருக்குள் அதிகம் சுற்றித் திரிகிறது.

    இறைச்சி கடைகளை சுற்றியும் கூட்டமாக திரிகின்றன. குடியிருப்பு பகுதிகளில் வலம் வரும் தெரு நாய்கள் குழந்தைகள், வயதானவர்களுக்கு அதிக பாதிப்பை தருகிறது. மெயின் ரோட்டில் திடீரென்று குறுக்காக வரும் தெரு நாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அடிக்கடி விபத்து ஏற்படுத்துகிறது.

    தெரு நாய்கள் தொல்லை தருவதாக இருந்தாலும் அதனை அப்புறப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் உள்ளாட்சி நிர்வாகத்தினர், தன்னார் வலர்கள் யாரும் முன் வருவதில்லை. தற்போது நாய் கள் எண்ணிக்கை பெருகி விட்டது. தெரு நாய்களுக்கான கருத்தடை ஆபரேஷன்களை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி நிர்வா கங்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

    • மாணவர்களுக்கு தெரு நாய்களின் உளவியல், பண்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது அவைகளுக்கு வெறி நோய் தடுப்பு ஊசி செலுத்தும் நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படும்.

    புதுச்சேரி:

    இந்தியா அறக்கட்டளை என்ற அரசு சாரா நிறுவனம் மற்றும் பள்ளி கல்வி துறையுடன் இணைந்து ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு தெரு நாய்களின் உளவியல், பண்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது அவைகளுக்கு வெறி நோய் தடுப்பு ஊசி செலுத்தும் நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுவதற்கு கருத்துரு அளிக்க உழவர் கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள், தெருநாய்களுக்கு உணவு அளிப்பவர்கள் 7598171674 என்ற நகராட்சி வாட்ஸ் ஆப்எண்ணில் பதிவு செய் து கொள்ளுமாறு உழவர் கரை நகராட்சி அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன.
    • பணியில் அலட்சியம் காட்டியதாக கிராம பஞ்சாயத்து செயலாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பல நாடு மாவட்டம் முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நாய்களால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இதற்கு தீர்வு காண கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். நாய் தொல்லை தடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    பஞ்சாயத்து ஊழியர்கள் கிராமங்களில் உள்ள நாய்களை பிடித்து கூண்டுகளில் அடைத்தனர். 100-க்கும் ஏற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டன.

    போதிய விழிப்புணர்வு இல்லாததால் இந்த நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசிக்கு பதிலாக தவறான ஊசி போட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் பஞ்சாயத்து ஊழியர்களால் பிடிக்கப்பட்டு ஊசி போடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இறந்தன.

    இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. கலெக்டர் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    இதனையடுத்து பணியில் அலட்சியம் காட்டியதாக கிராம பஞ்சாயத்து செயலாளர் ஹேமாவதி சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் 3 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    • தெரு நாய்கள் கடித்து ஆந்திரா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் மனித உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
    • பல இடங்களில் தெரு நாய்கள் நோய்வாய்பட்டு சாலைகளில் சுற்றி வருகின்றன.

    கோவில்பட்டி:

    தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணிமன்ற கோவில்பட்டி நகர தலைவர் மைக்கேல் அமலதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் 6.2 கோடி தெரு நாய்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தெரு நாய்கள் கடித்து ஆந்திரா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் மனித உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. தெரு நாய்களால் பல விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் தெரு நாய்கள் நோய்வாய்பட்டு சாலைகளில் சுற்றி வருகின்றன. இதனால் பல நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    எனவே தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி தெரு நாய்களை கட்டுப்படுத்த ஒரு குழு அமைத்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அந்த குழந்தையை சூழ்ந்து கொண்டு கடிக்க முற்பட்டது.
    • நாயிடம் கடிபட்டவர்களின் எண்ணிக்கையை விட அதற்கு பயந்து ஓடும் போது கீழே விழுந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது .

    குனியமுத்தூர்.

    கோவை சுந்தராபுரம் அருகே குறிச்சியில் வெங்கடாஜலபதி நகர், திருமறை நகர் மற்றும் போத்தனூர் ரோடு போன்ற பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் வீட்டை விட்டு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை தொடர்ந்து நாய்கள் துரத்தி வருகிறது. இதனால் குழந்தைகள் தலை தெறிக்க ஓடி பயத்தில் கீழே விழுந்து எழும் நிலை உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் நாய்கள் துரத்துகிறது.

    நேற்று மாலை திருமறை நகரில் கணேசன் என்பவரின் 3 வயது குழந்தை வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அந்த குழந்தையை சூழ்ந்து கொண்டு கடிக்க முற்பட்டது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஆங்காங்கே இருக்கும் பெரியவர்கள் உடனே வந்து தெரு நாய்களை துரத்தி விட்டு குழந்தையை காப்பாற்றினார்கள்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

    தெரு நாய்கள் எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை. இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக ஊளையிட்டு வருகிறது. வீட்டில் வளர்க்கும் நாய்களை வெளியே நடை பயிற்சிக்கு அழைத்துக் கொண்டு செல்லும் போது கூட தெரு நாய் கூட்டம் சுற்றி வளைத்துக் கொண்டு குறைத்து வருகிறது. அந்த நாய்களை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. அனேகமான நபர்களை நாய்கள் கடித்து இருக்கிறது. நாயிடம் கடிபட்டவர்களின் எண்ணிக்கையை விட அதற்கு பயந்து ஓடும் போது கீழே விழுந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது .

    பெரியவர்களே நாயை கண்டு பயந்து போய் ஓடும் சூழலை இருக்கும்போது சிறிய குழந்தைகள் என்ன செய்ய முடியும். எங்கள் பகுதி மட்டுமல்ல கோவையில் பெரும்பாலான பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே கோவை மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோவை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ×