search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nivetha Pethuraj"

    • 20 ஆண்டுகளாக நாங்கள் துபாயில் வசித்து வருகிறோம்.
    • உறுதிப்படுத்துவர் என்ற நினைப்பில் நான் அமைதி காத்தேன்.

    யூடியூப் நேர்காணல் ஒன்றில் தன்னை பற்றி தெரிவிக்கப்பட்ட அவதூறு கருத்துக்களுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "எனக்காக அதிகளவில் பணம் செலவிடப்படுவதாக பொய் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக பேசுவோர், ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாழாக்குவதற்கு முன்பு அவர்கள் பெறும் தகவல்கள் அனைத்தும் உண்மை தானா என்று உறுதிப்படுத்துவர் என்ற நினைப்பில் நான் அமைதி காத்தேன்."

    "எனது குடும்பமும், நானும் கடந்த சில நாட்களாக அளவில்லா மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். இதுபோன்ற போலி செய்திளை பரப்பும் முன் தயவு செய்து யோசியுங்கள். நான் மிகவும் ஒழுக்கமான குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன். எனது 16 வயதில் இருந்தே எனக்கான செலவீனங்களை நானே பார்த்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன். எனது குடும்பம் இப்போதும் துபாயில் தான் வசிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் துபாயில் வசித்து வருகிறோம்."

    "திரைத்துறையில், நான் இதுவரை எந்த தயாரிப்பாளரிடமோ, இயக்குநரிடமோ அல்லது கதாநாயகனிடமோ படத்தில் என்னை நடிக்க வையுங்கள் என்றோ பட வாய்ப்புகளை கொடுங்கள் என்றோ உதவி கேட்டதில்லை. நான் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். பணியாற்ற வேண்டும் என்றோ அல்லது பணம் சம்பாதிக்க வேண்டும் என்றோ நான் எப்போதும் பேராசை கொண்டதில்லை."

    "இதுவரை என்னை தொடர்புப்படுத்தி பேசப்பட்ட விவரங்கள் எதிலும் உண்மையில்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். 2002-ம் ஆண்டில் இருந்து துபாயில் நாங்கள் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம். 2013-ம் ஆண்டில் இருந்து எனக்கு ரேசிங் மீது ஆர்வம் அதிகரித்தது. மேலும் சென்னையில் நடத்தப்படும் ரேஸ் பந்தயங்கள் பற்றி எனக்கு எந்த தகவலும் தெரியாது."

    "நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் மிக முக்கியமானவர் அல்ல. நான் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். மேலும் எனது வாழ்க்கையில் நானும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறேன். மனரீதியாக நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன். உங்கள் குடும்பங்களில் இருக்கும் பெண்களை போன்றே, நானும் கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழவே விரும்புகிறேன்."

    "அவர்கள் இதுபோன்று மேலும் என்மீது அவதூறு பரப்ப மாட்டார்கள் என்றும் ஊடகத்துறையில் இன்னமும் மனிதநேயம் மிஞ்சி இருக்கும் என்ற நம்பிக்கையிலும், இந்த விவகாரத்தை நான் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டாம் என்ற முடிவை எடுத்திருக்கிறேன்."

    "ஒரு குடும்பத்தின் நன்மதிப்பை கெடுப்பதற்கு முன்பு நீங்கள் பெறும் தகவல்களை உறுதிப்படுத்துமாறு ஊடகத்தினரை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். எனக்காக குரல் கொடுத்த அனவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். உண்மை ஜெயிக்கட்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • நடிகை நிவேதா பெத்துராஜ், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் கார் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

    கடந்த 2015-ஆம் ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற மிஸ் இந்தியா அழகி பட்டத்தை வென்ற நிவேதா பெத்துராஜ் 'ஒரு நாள் கூத்து' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத் தமிழன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.


    இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்துள்ளார். தெலுங்கில் மெண்டல் மதிலோ, சித்ரலேகாரி, ப்ரோச்சேவரவருரோ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இளம் நடிகையாக வலம் வரும் நிவேதா பெத்துராஜ் கார் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.


    இந்நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் பேட்மிண்டன் போட்டியிலும் கலக்கியுள்ளார். அதாவது, டால்பின் ஸ்போர்ஸ் மேனேஜ்மெண்ட் நடத்திய பேட்மிண்டன் போட்டியில் மதுரை அணி சார்பில் கலந்து கொண்ட நிவேதா பெத்துராஜ் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    துருவங்கள் பதினாறு பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு மாஃபியா என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    `தடம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் `அக்னிச் சிறகுகள்', `சாஹோ' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. `பாக்ஸர்' மற்றும் கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்க இருக்கிறார். `துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்திலும் நடிக்கிறார்.

    குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்திற்கு `மாஃபியா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். வில்லனாக நடிக்க பிரசன்னாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.



    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்த கார்த்திக் நரேன் திட்டமிட்டுள்ளார்.

    விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் `சங்கத்தமிழன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. #SangaTamizhan #VijaySethupathi
    ‘வாலு’, `ஸ்கெட்ச்‘ ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து `சங்கத்தமிழன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் முறுக்கு மீசையுடன் வித்தியாசமான தோற்றத்தில் விஜய்சேதுபதி உள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் நிலையில், விஜய் சேதுபதி இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில், இரட்டை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



    நாசர், சூரி, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர். #SangaTamizhan #VijaySethupathi #VijayChander #RaashiKhanna #NivethaPethuraj

    விஜய் சேதுபதி - விஜய் சந்தர் இணையும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. #Sangatamizhan #VijaySethupathi
    `சூப்பர் டீலக்ஸ்' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘சிந்துபாத்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    தற்போது வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


    இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள். காமெடி வேடத்தில் சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். #Sangatamizhan #VijaySethupathi #VijayChandar 
    தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமாகி வரும் நிவேதா பெத்துராஜ், தற்போது ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காண்பித்து வருகிறார். #NivethaPethuraj
    அமெரிக்கா வாழ் தமிழ்ப்பெண்ணான நிவேதா பெத்துராஜ் ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் என்று தமிழ் படங்களில் நடித்து வரும் நிவேதா அடுத்து ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.



    நான்கு தெலுங்குப்படங்கள், இரண்டு தமிழ்ப்படங்கள் என்று நிவேதா பெத்துராஜ் பிசியாக வலம் வருவதற்கு அவரது அர்ப்பணிப்பு உணர்வு தான் காரணம் என்கிறார்கள். நிவேதாவுக்கு தற்போது ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் எளிமையான வாழ்க்கையை கடைபிடிக்க தொடங்கியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி - விஜய் சந்தர் இணையும் புதிய படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Sangathamizhan #VijaySethupathi
    விஜய் சேதுபதி நடிப்பில் `சூப்பர் டீலக்ஸ்' படம் வருகிற மார்ச் 29-ந் தேதி திரைக்கு வருகிறது. விஜய் சேதுபதி தற்போது வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

    விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள். காமெடி வேடத்தில் சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.



    இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, எம்.பிரபாகரன் கலை பணிகளையும், அனல் அரசு சண்டைக்காட்சிகளையும், பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.

    இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் சமீபத்தில் முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது. #Sangathamizhan #VijaySethupathi #VijayChander #RaashiKhanna #NivethaPethuraj

    ஒரு நாள் கூத்து படம் மூலம் பிரபலமான நடிகை நிவேதா பெத்துராஜ், தற்போது ஒரு புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். #NivethaPethuraj
    ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பார்ட்டி, ஜகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. மேலும் புதிதாக தமிழ் படமொன்றிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

    நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். பின்னர் கோவிலுக்குள் கையில் பிரசாதத்துடனும், கோவில் தெப்பக்குளம் அருகில் உட்கார்ந்தும் சில புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.



    இந்த புகைப்படங்கள் சர்ச்சையை உருவாக்கி உள்ளன. மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடுமையான சோதனைக்கு பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிப்படுகிறார்கள். இதையும் மீறி நிவேதா பெத்துராஜ் கோவிலுக்குள் செல்போனை கொண்டு சென்று புகைப்படம் எடுத்ததை சமூக வலைத்தளத்தில் பலரும் கண்டித்து வருகிறார்கள். நிவேதா பெத்துராஜ் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதித்ததையும் விமர்சித்து வருகிறார்கள்.
    விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். #VijaySethupathi
    சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்சந்தர். இவர் தற்போது தனது மூன்றாவது படத்தை விஜய் சேதுபதியைக் கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிப்பது ஏற்கெனவே படக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது. 

    தற்போது நிவேதா பெத்துராஜ் மற்றொரு கதாநாயகியாக நடிப்பது உறுதியாகியுள்ளது. விஜயா புரொடக்‌‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்குத் தற்காலிகமாக ‘விவிவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. விவேக், மெர்வின் இணைந்து இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. 



    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
    பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் பொன் மாணிக்கவேல் படக்குழுவினர் டீசர் பற்றிய அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். #PrabhuDeva #PonManickavel
    சார்லி சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.  நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் பிரபுதேவா போலீசாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘பொன் மாணிக்கவேல்’ என்று தலைப்பு வைத்து டைட்டில் லுக் போஸ்டரையும் சமீபத்தில் வெளியிட்டார்கள்.

    இதில் பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். மேலும், முக்கிய கதபாத்திரங்களில் இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 



    இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Prabhudeva #PonManickavel 
    பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் பொன் மாணிக்கவேல் படக்குழுவினர் நாளை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார்கள். #PrabhuDeva #PonManickavel
    சார்லி சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.  நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் பிரபுதேவா போலீசாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘பொன் மாணிக்கவேல்’ என்று தலைப்பு வைத்து டைட்டில் லுக் போஸ்டரையும் சமீபத்தில் வெளியிட்டார்கள்.

    இதில் பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். மேலும், முக்கிய கதபாத்திரங்களில் இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 



    இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை நாளை காலை 11 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Prabhudeva #PonManickavel 
    விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா ஒப்பந்தமாகி இருக்கிறார். அத்துடன் மற்றொரு அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. #VijaySethupathi #VijayChander
    விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத் படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் `மாமனிதன்' படத்திலும், ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். 

    அடுத்ததாக ‘வாலு’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் துவங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், விஜய் சேதுபதி ஜோடியாக நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா  நடிக்கவிருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.




    இந்த நிலையில், ராஷி கண்ணா நடிப்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் காமெடி நடிகர் சூரியும் இந்த படத்தில் நடிக்கிறார். அத்துடன் விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைப்பதாக இயக்குநர் விஜய் சந்தர் தெரிவித்துள்ளார்.  

    வடசென்னை கதையாக உருவாகும் இந்த படத்தை விஜயவாகினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. #VijaySethupathi #VijayChander #NivethaPethuraj #RaashiKhanna

    ×