கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய நடிகை நிவேதா பெத்துராஜ்?..

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துபாயைச் சேர்ந்த கேரள தொழிலதிபர் ராஜ் ஹீத் இப்ரானுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.அண்மையில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனாவின் திருமணம் நின்றது.
கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய நடிகை நிவேதா பெத்துராஜ்?..
Published on

விஜய் ஆண்டனியின் திமிரு புடுச்சவன், உதயநிதியின் பொதுவாக எம் மனசு தங்கம், ஜெயம் ரவியின் டிக் டிக் டிக்  உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துபாயைச் சேர்ந்த கேரள தொழிலதிபர் ராஜ் ஹீத் இப்ரானுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த விஷயம் முதலில் ரகசியமாக வைக்கப்பட்டு, பின்னர் சமூக ஊடகங்கள் மூலம் இருவரும் புகைப்படங்களை பகிர்ந்து நிச்சயதார்த்தம் முடிந்ததை உறுதி செய்தனர். இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் நிவேதா மற்றும் ராஜ் ஹீத் இருவரும் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் இருந்து அந்த புகைப்படங்களை தற்போது நீக்கியுள்ளனர். மேலும் இருவரும் ஒருவரை ஒருவர் unfollow செய்துள்ளனர். இதனால் திருமணம் நின்றுபோனதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அண்மையில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனாவின் திருமணம் நின்ற நிலையில் அதே பாணியில் நிவேதா திருமணமும் நின்றதாக பலர் புறணி பேசி வருகின்றனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com