என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Engagement"
- இருவரும் மோதிரம் மாற்றக்கொண்டு திருமணம் நிச்சயம்.
- விரைவில் திருமண தேதியை அறிவிக்கவுள்ளார்.
நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் இன்று மும்பையில் பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இருவரும் மோதிரம் மாற்றக்கொண்டு திருமணம் நிச்சயம் செய்துக்கொண்டனர்.
நடிகை வரலட்சுமி, மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ்-ஐ விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.
இருவரும் விரைவில் திருமண தேதியை அறிவிக்கவுள்ளார்.
- பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான ஆறே மாதத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு இரண்டாம் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
- மாப்பிள்ளை தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான ஆறே மாதத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு இரண்டாம் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த தகவலை அவரது தங்கையான அதிதி ஷங்கர் உறுதிப்படுத்தி உள்ளார்.
இயக்குநர் ஷங்கர் மற்றும் ஈஸ்வரி தம்பதியினருக்கு ஐஸ்வர்யா ஷங்கர், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர் என இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதில் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தற்போது இவர் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
கோலிவுட்டில் பிரமாண்ட இயக்குநராக கொண்டாடப்படும் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022ம் ஆண்டு மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவும் ரோஹித்தும் ஆறு மாதங்கள் கூட ஒன்றாக சேர்ந்து வாழவில்லை. திருமணமான உடனே ரோஹித் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும், அதுமட்டுமல்லாமல் ரோஹித் மீது பல குற்றச்சாட்டுகளும் புகார்களும் உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதனால் ரோஹித்தும் ஐஸ்வர்யாவும் சட்டப்படி மணமுறிவு பெற்று பிரிந்தனர்.
இப்போது, ஷங்கர் தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க உள்ளார் எனற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயத்தை ஷங்கரின் இரண்டாவது மகள், நடிகை அதிதி ஷங்கர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா மற்றும் மாப்பிள்ளை புகைப்படங்களைப் பகிர்ந்து, இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகக் கூறியிருக்கிறார். மாப்பிள்ளை தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் திருமணம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்
- விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
- தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்தனர்.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் அர்ஜூன். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது நடிப்பாலும், ஆக்ஷனாலும் ரசிகர்களை கவர்ந்தவர்.
இந்நிலையில், இவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
ஐஸ்வர்யா தமிழ் படங்களில் நடத்துள்ளார். இவர், விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அந்தப் படத்துக்கு பிறகு கன்னடத்தில் பிரேம பரஹா, தமிழில் சொல்லவிடவா ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு படங்களில் நடிக்க வாய்ப்புகள் பெரிதளவில் இல்லை.
இந்நிலையில், தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்தனர். இவர்களது காதலுக்கு இரண்டு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டினர்.
இதையடுத்து, இன்று ஐஸ்வர்யா- உமாபதி நிச்சயதார்த்தம் சிம்ப்பிளாக நடந்து முடிந்தது. திருமணம் விரைவில் நடக்கவுள்ளது. இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
- 39 மக்களவை உறுப்பினா்கள் நாடாளுமன்றத்துக்கு செல்வது, நமது உரிமையை நிலைநாட்ட செல்வதாக பொருள்.
- காலப்போக்கில் பட்டியலின இட ஒதுக்கீட்டை காலி செய்ய போகும் ஆபத்தும் இருக்கிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி மாநாட்டு அரங்கத்தில் திராவிடா் கழகம் சாா்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். செயலவை தலைவர் அறிவுக்கரசு, பொருளாளர் குமரேசன், பொது செயலாளர்கள் அன்புராஜ், துரை சந்திரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்றார்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் என்ற பட்டத்தை வீரமணி வழங்கி பாராட்டினார். தொடர்ந்து வீரமணி தொகுத்த தாய் வீட்டில் கலைஞர் என்ற நூலை முதல்-அமைச்சர் வெளியிட அதன் முதல் படியை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி பெற்று கொண்டார்.
இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :-
தமிழ் மொழி, தமிழினம், தமிழ்நாட்டை காக்க, இந்தியா முழுவதும் சமதா்மம், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதியைக் காக்க எனது வாழ்க்கையை முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன் என்பதுதான் எனக்கு திராவிடா் கழகம் நடத்திய இந்த பாராட்டு விழாவில் நான் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி.
ஏதோ சாதித்துவிட்டான், நினைத்ததை முடித்து விட்டான் என்பதற்காக நடத்துகிற விழா அல்ல.
இன்னும் நீ சாதிக்க வேண்டியது நிரம்ப இருக்கிறது. அதைச் சாதிப்பதற்கு நீ தயாராக இருக்க வேண்டும்.
நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் என்பதை சொல்லிக் கொள்வதற்காகத்தான் இந்தப் பாராட்டு விழா நடைபெற்றது.
கூட்டாட்சி கருத்தியலை உள்ளடக்கிய இந்தியாவை அமைப்பதற்காகவே 'இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளோம்.
இது அரசியல் கூட்டணி அல்ல; கொள்கை கூட்டணி. தோ்தல் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு இதை நாங்கள் உருவாக்கவில்லை.
அந்த வெற்றிக்குப் பின்னால் அமையப்போகும் ஆட்சியில் கோலோச்ச வேண்டிய கொள்கைகளை மனதில் வைத்தே நாங்கள் சோ்ந்துள்ளோம்.
தமிழ்நாடு இதுவரை இழந்த அனைத்து உரிமைகளும் மீட்கப்படும். கல்வி உரிமை, நிதி உரிமை, சமூக நீதி உரிமை, மொழி உரிமை, இன உரிமை, மாநில சுயாட்சி உரிமை ஆகிய அனைத்தையும் மீட்போம்.
தமிழ்நாட்டின் மக்கள்தொகை குறைந்துவிட்டது எனக் கூறி, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கிற சதியை அரங்கேற்ற பாா்க்கின்றனா்.
தமிழ்நாட்டிலிருந்து 39 மக்களவை உறுப்பினா்கள் நாடாளுமன்றத்துக்கு செல்வது, நமது உரிமையை நிலைநாட்டச் செல்வதாக பொருள்.
இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் எனக் கூறினால், அது பொருத்தம்.
ஆனால், குறையக் கூடாது.மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீதமாக்க சட்டம் கொண்டு வந்தனா்.
ஆனால், அதை பாஜக முழு ஈடுபாட்டுடன் கொண்டு வரவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி வரையறை முடிந்த பிறகு என சொல்வதே, இந்த இட ஒதுக்கீடு நிறைவேறாமல் இருப்பதற்கான தந்திரம்.
அதிலும் குறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்ட மகளிா் இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பது பாஜகவின் உயா் வகுப்பு மனோபாவம். காலப்போக்கில் பட்டியலின இட ஒதுக்கீட்டை காலி செய்ய போகும் ஆபத்தும் இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பா் அலி, மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலா் பாலச்சந்திரன், பாலபிரஜாபதி அடிகளாா் ஆகியோா் பாராட்டி பேசினா்.
இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சிவசங்கர், எம்.பி.க்கள் டி.ஆா். பாலு, எஸ்.எஸ். பழனி மாணிக்கம், கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், அன்பழகன், அசோக்குமார், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்வம், மகேஸ்கிருஷ்ணசாமி, மாநகராட்சி மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, மாவட்ட துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் அருளானந்த சாமி, முரசொலி, செல்வகுமார், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் ராணி கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் ஜோதிவேல், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தி.க. மாவட்ட தலைவர் அமர்சிங் நன்றி கூறினார்.
- சந்தோஷத்தை கொண்டாட சிறிது மது அருந்தியுள்ளனர்
- அனைத்தும் உடனடியாக நடந்து முடிந்து விட்டது என வேதனை தெரிவித்த காதலன்
துருக்கி நாட்டில் கடந்த ஜூலை 6-ம் தேதி நடந்த ஒரு துயர சம்பவத்தில் ஒரு பெண், தன் காதலனுடன் நிச்சயம் செய்து கொண்ட சில நிமிடங்களுக்குள் உயிரிழந்தார். 39 வயதான எசிம் டெமிர் எனும் பெண்ணும் நிசாமெட்டின் குர்சு என்பவரும் மணமுடிக்க விரும்பினர். இயற்கையழகுடன் கூடிய ஒரு சிறு மலைவிளிம்பில் நின்று கொண்டு சூரிய அஸ்தமனத்தை ரசித்தபடி நிச்சயதார்த்தம் செய்து கொள்ள இருவரும் விரும்பினர்.
இதற்காக இருவரும் வடமேற்கு துருக்கியில் உள்ள கனக்காலே (Canakkale) மலை முகட்டிற்கு சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சம்பிரதாய விருப்பங்களை தெரிவித்து கொண்டனர். பிறகு இந்நிகழ்வை கொண்டாட நிசாமெட்டின் காரிலிருந்து உணவு வகைகள் மற்றும் பானங்களை கொண்டு வர சென்றார்.
அப்போது திடீரென ஒரு அலறல் சத்தம் கேட்டு அவர் விரைவாக திரும்பி வந்திருக்கிறார். அங்கு அவருடைய வருங்கால மனைவி மலை உச்சியில் இருந்து தவறி விழுந்திருப்பதை கண்டார். அப்போது எசிம் உயிரோடு இருந்திருக்கிறார். நிசாமெட்டின் உடனடியாக உதவி கோரியிருக்கிறார். விரைந்து வந்த மருத்துவ குழு அவர் உயிரை காக்க போராடியது. ஆனால் பலத்த காயம் அடைந்த எசிம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
"நாங்கள் சந்தோஷத்தை கொண்டாட சிறிது மது அருந்தினோம். அனைத்தும் உடனடியாக நடந்து முடிந்து விட்டது. அவள் நிலை தடுமாறி 100 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் இருந்து விழுந்து இறந்தார்" என காதலியை பறி கொடுத்த சோகத்தில் நிசாமெட்டின் தெரிவித்தார்.
பலர் இந்த இடத்திற்கு இயற்கையழகை ரசிப்பதற்காக வந்து கொண்டிருந்தாலும், அங்குள்ள சாலைகள் மிகவும் மோசம் என்றும் மலை முகட்டின் ஓரங்களில் ஒரு பாதுகாப்பு தடுப்பு கூட இல்லை என்றும் எசிம் டெமிரின் நண்பர்கள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து தடை செய்யப்பட்டிருந்த இந்த பகுதி, சுற்றுலா பார்வையாளர்களுக்கு ஜூலை 15 அன்று மீண்டும் திறக்கப்பட்டது.
- ஐஸ்வர்யா கவுடா, தற்போது ‘ரேவ் பார்ட்டி’ என்ற திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருக்கிறார்.
- இப்படத்தை தொடர்ந்து இவர் பான் இந்திய படமாக உருவாகவுள்ள ‘எங்கேஜ்மெண்ட்’ படத்தில் நடிக்கவுள்ளார்.
'ஜாகுவார்' படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஐஸ்வர்யா கவுடா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கன்னட திரைப்படம் 'பிரவீணா'-வில் தனது நடிப்பு மூலம் பாராட்டுகளைப் பெற்றார். இவர் தற்போது விரைவில் வெளியாக இருக்கும் 'ரேவ் பார்ட்டி' என்ற திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில், இயக்குனர் ராஜு போனகானி இயக்கத்தில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் 'எங்கேஜ்மெண்ட்' (Engagement) படத்தில் ஐஸ்வர்யா கவுடா நாயகியாக நடிக்கிறார்.
போதைப்பொருள் மற்றும் அரசியலின் இருண்ட பாதையில் செல்லும் இளைஞர்களின் கதையை சொல்லும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள 'ரேவ் பார்ட்டி' கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. போனகானி எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
'எங்கேஜ்மெண்ட்' படத்தின் வாய்ப்பு பற்றி நடிகை ஐஸ்வர்யா கவுடா கூறுகையில், "சிறு வயதில் இருந்தே எனக்கு நடிப்பில் ஆர்வம் அதிகம். 2016 ஆம் ஆண்டு 'ஜாகுவார்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். அதன்பிறகு 'பிரவீணா' படமும் எனக்கு பெரிய பிரேக் கொடுத்தது. தற்போது 'ரேவ் பார்ட்டி' படத்தில் எனது திறமையை பார்த்து இயக்குநர் ராஜு போனாகானி 'எங்கேஜ்மெண்ட்' படத்தில் என்னை கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார். இந்த வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சியாக இருப்பதோடு, பெரும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. 'எங்கேஜ்மெண்ட்' படம் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்." என்றார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மாரிமுத்து ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). இவர் கேரள மாநில பெண்களை ஆத்தூர், கெங்கவல்லி பகுதிகளில் பலருக்கு திருமணம் செய்து வைக்கும் தரகர் வேலை செய்து வருகிறார். கண்ணனிடம் ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் கிராமத்தை சேர்ந்த கொத்தனார்கள் சக்திவேல், விஸ்வநாதன், பாலமுருகன் ஆகியோர் தனித்தனியே அணுகி தங்களுக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கூறியுள்ளனர்.
அதற்கு அவர், தனக்கு புரோக்கர் கமிஷன் ரூ.25 ஆயிரம் மற்றும் கேரளாவுக்கு சென்று வர போக்குவரத்து செலவு, நிச்சயதார்த்த பெண்ணுக்கு மோதிரம் என ஒவ்வொருவரிடமும் ரூ.65 ஆயிரம் வரை செலவு செய்ய வைத்துள்ளார். பின்னர் அவர்கள் 3 பேரையும் சமீபத்தில் கேரள மாநிலத்திற்கு தனித்தனியாக அழைத்து சென்று, அங்குள்ள ஒரே பெண்ணுக்கு 3 பேரையும் மோதிரம் போட்டு நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளார். அப்போது அவர்கள் அந்த மணப்பெண்ணை தங்கள் செல்போனில் படம் எடுத்துள்ளனர்.
இந்த புகைப்படம் தான், பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற ரீதியில் இந்த தரகரின் மோசடி வேலையை அடுத்த சில நாட்களிலேயே வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. கொத்தனார்கள் 3 பேரும் அவர்கள் நிச்சயம் செய்த பெண் குறித்து ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.
பேச்சுவாக்கில், தாங்கள் திருமணம் செய்து கொள்ள போகும் கேரள பெண்ணின் படத்தை அவர்கள் 3 பேரும் மற்றவர்களிடம் காண்பித்தனர். அப்போது தான் அவர்கள் 3 பேரும் ஒரே பெண்ணை நிச்சயம் செய்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் ஒரே பெண்ணை நிச்சயம் செய்ததையும், தாங்கள் ஏமாற்றபட்டதையும் அறிந்து ஆத்தூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் திருமண தரகர் கண்ணனிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த மோசடி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்