என் மலர்
நீங்கள் தேடியது "Marriage"
- இந்து சமய அறநிலைதுறை சார்பில் திருவந்திபுரத்தில் புதிதாக திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
- போலீசார் அதிகாலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்ததோடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தினர்.
கடலூர்:
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். பிரார்த்தனை செய்தவர்கள் இங்கு திருமணம் செய்து கொண்டு தேவநாதசாமியை தரிசித்து சென்று வருகின்றனர்.
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் முன்பு உள்ள மலையில் முகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணம் நடைபெற்று வருவதால் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் இந்து சமய அறநிலைதுறை சார்பில் திருவந்திபுரத்தில் புதிதாக திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது.
ஆவணி மாதம் முடிந்து நாளை புரட்டாசி மாதம் தொடங்குவதால் தேவநாத சுவாமி கோவிலில் இன்று அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியது. இதனை தொடர்ந்து திருவந்திபுரம் பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. மேலும் திருமண ஜோடிகள் திருவந்திபுரம் முகப்பு பகுதியில் இருந்து கோவிலுக்கு நடந்து சென்றனர்.
இந்நிலையில் கோவில் திருமண மண்டபத்தில் 76 திருமணங்களும், அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சுமார் 25 திருமணங்கள் என 101 திருமணம் நடைபெற்றது இதனால் கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அதிகாலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்ததோடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தினர்.
- அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
- கோவில் வளாகம் மற்றும் கடற்கரை திருவிழா காலம் போல் காட்சியளித்தது.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
கடற்கரை அருகில் அமைந்திருப்பதால், திருவிழா காலங்களில் தவிர்த்து மற்ற சாதாரண நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் மற்றும் சுப முகூர்த்த நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெறுகிறது.
மேலும் சுப முகூர்த்த நாள் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான திருமண ஜோடிகள், பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இன்று ஏராளமான திருமணங்கள் நடந்தது. இதனால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை திருவிழா காலம் போல் காட்சியளித்தது. அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி பொது தரிசனத்தில் சுமார் 5 மணி நேரமும், ரூ.100 கட்டண தரிசனத்தில் சுமார் 3 மணி நேரமும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
- மாணவியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
- போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளிக்கு சென்ற அந்த சிறுமி வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் அந்த மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் மாணவியை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தது தெரிய வந்தது.
சம்பவத்தன்று வந்த சிறுவன், மாணவியை கடத்தி சென்றுள்ளார். பின்னர் திருச்செந்தூருக்கு சென்று அங்கு கோவிலில் வைத்து மாணவியை வற்புறுத்தி கட்டாய திருமணம் செய்ததும் தெரிய வந்தது.
அதன் பின்னர் தஞ்சாவூருக்கு அந்த மாணவியை அழைத்து சென்று வாடகைக்கு வீடு எடுத்து 2 பேரும் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தஞ்சாவூர் சென்று சிறுவனை நெல்லைக்கு அழைத்து வந்தனர். மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.
- வி.பி.எம்.பி.வடிவேல்-வி.சுதா இல்ல திருமண விழாவில் மணமக்களை திரளானோர் வாழ்த்தினர்.
- சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நிச்சயதார்த்தம் நடந்தது.
மதுரை
மதுரை மாவட்டம் உசி–லம்பட்டி தாலுகா கருமாத் தூர் கிராமம் வடக்கம்பட்டி தொழிலதிபர் வி.பி.எம்.பி.வடிவேல்-வி.சுதா தம்ப தியரின் மகள் வி.கீர்த்திகா–வுக்கும், ஈரோடு குன்னூர் தொழிலதிபர் வி.மகேஸ்வ ரன்-எம்.பானுமதி ஆகியோ ரது மகனுமான எஸ்.வி.எம்.அருண் என்பவ ருக்கும் பெரியோர்களால் திரும ணம் நிச்சயிக்கப்பட்டது.
அதன்படி வி.கீர்த்திகா -எஸ்.வி.எம்.அருண் ஆகி யோரது திருமண விழா நேற்று முன்தினம் (10-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கருமாத் தூர் மூணாண்டிபட்டி, மதுரை தேனி மெயின் ரோடு, அருள் ஆனந்தர் கல்லூரி அருகிலுள்ள வி.கே.எஸ்.வடிவேல் ஹைடெக் மகாலில் நடைபெற்றது.
விழாவுக்கு எட்டுநாடு இருபத்தி நான்கு கிராமம், கருமாத்தூர் பதினெட்டுப் பட்டி கிராம பொதுமக்கள், வடக்கம்பட்டி இரண்டு தகப்பன் மக்கள் தலைமை தாங்கினர். வ.பால்ச்சாமி நாடார்-பா.மஞ்சனை அம்மாள் மகன்கள், தொழி லதிபர்கள் பி.துரைப்பாண்டி -டி.பெத்தம்மாள், பி.வெள்ளையப்பன்-வி.அனுசுயா தேவி, ஈரோடு, குன்னூர் நாடார் உறவின் முறை சங்க தலைவர் எஸ்.வேலுச்சாமி நாடார்-வி.காளீஸ்வரி மற்றும் தாய்மா மன்கள் முன்னிலை வகித்த னர்.
திருமண விழாவில் அரசி யல் கட்சியினர், தொழிலதி பர்கள், உற்றார், உறவினர் கள், கல்வியாளர்கள், முக் கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நிச்சயதார்த்தம் நடந்தது. அன்று இரவு டி.வி. புகழ் மூக்குத்தி முருகன், பூஜா, ஸ்ரீநிதி, மீத்துஸ்ரீ, ஸ்ரீநிதி ஆனந்த் ஆகியோர் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடு களை வி.கே.எஸ்.பட்டாசு தொழிற்சாலை தொழிலா ளர்கள், வி.கே.எஸ். கம்பி மத்தாப்பு கம்பெனி தொழி லாளர்கள், வி.கே.எஸ். விவசாய பண்ணை தொழி லாளர்கள், வி.கே.எஸ். வடி வேல் ஹைடெக் திருமண மண்டப தொழிலாளர்கள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
- இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
- ரூ.75 ஆயிரம் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
இந்து சமய அறநிலைய துறை சார்பில் கோவில்களில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகிறது.
அதன்படி காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு குடும்ப சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட 3 ஜோடிகளுக்கு குமரக்கோட்டம் முருகன் கோவிலில் இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
பட்டுச்சேலை, பட்டு வேட்டி, கைக்கடிகாரம், தங்கத் தாலி, உள்ளிட்டவைகள் வழங்கி காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. .எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தனர். பின்னர் திருமணம் செய்து கொண்ட 3 ஜோடிகளுக்கும் தலா ரூ.75 ஆயிரம் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட 29 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் துணை ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, அறங்காவலர் குழு உறுப்பினர் செல்வி, திருக்கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சுந்தரமூர்த்தி திருமணம் செய்ய மறுத்து பேசுவதையும் நிறுத்திவிட்டார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அம்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளம் பெண், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரை திருமணதகவல் மைய இணையதளம் மூலம் ஆவடி, கலைஞர் நகரை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் தொடர்பு கொண்டார். பின்னர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணிடம் நெருங்கி பழகினார். அப்போது இளம் பெண்ணிடம் உடல்நலக் குறைவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறி ரூ.1½ லட்சம் பெற்றதாக தெரிகிறது. பின்னர் சுந்தரமூர்த்தி திருமணம் செய்ய மறுத்து பேசுவதையும் நிறுத்திவிட்டார்.
இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண் இதுகுறித்து அம்பத்தூரில் உள்ள ஆவடிமாநகர போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதில் சுந்தர மூர்த்தி திருமணம் செய்வ தாக ஏமாற்றி பல பெண்களிடம் பணம் பறித்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
- கர்ப்பிணியான சிறுமிக்கு கரு கலைந்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
குளித்தலை,
குளித்தலை அருகே போத்துராவு த்தன்பட்டியைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி கருப்பையா (29) கிருஷ்ணராயபுரம், கருப்பூர் பகுதியைச் சேர்ந்த (10 ம் வகுப்பு படித்து இடையில் நின்றவர், ) உறவினர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று சிறுமியினை குழந்தை திருமணம் செய்து உள்ளார். போத்தரவுத்தன்பட்டியில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்த அவர் வீட்டில் சிறுமியை கட்டாயப்படுத்தி பலமுறை தனிமையில் இருந்ததாகவும், இதனால் கர்ப்பிணியாக இருந்துள்ளார், சில தினங்களுக்கு முன்பாக சிறுமிக்கு அதிக வயிற்று வலி வரவே கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர், மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது ஏற்கனவே கரு கலைந்து விட்டதாகவும் கூறி தகவலை மருத்துவமனை அருகில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர், தகவல் அறிந்த குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகாலட்சுமி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சென்று சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றும், குழந்தை திருமணம் செய்ததாக கிருஷ்ணராயபுரம் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் சுகுணா கொடுத்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து கருப்பையாவை போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமண சட்டத்தில் கைது செய்தார்,இவரை கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கோவிலுக்கு நேர் எதிரே மகாலட்சுமியின் வடிவமான வில்வ மரம் உள்ளது.
- அப்போது லட்சுமி நரசிம்மர் சுயம்பாக இங்கு எழுந்தருளியது பிரசன்னத்தில் தெரிய வந்தது.
கடன் தொல்லை போக்கும் லட்சுமி நரசிம்மர்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலையில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
மிகப்பழமையான இந்த கோவில் கால மாற்றத்தால் அழிந்து விட்டது.
5 வருடத்துக்கு முன்பு ராஜ அரசு என போற்றப்படுகின்ற அரச மரத்தடியில் புற்றுக்கண்ணில் சுயம்புவாக தோன்றினார் லட்சுமி நரசிம்மர்.
கோவிலுக்கு நேர் எதிரே மகாலட்சுமியின் வடிவமான வில்வ மரம் உள்ளது.
இந்த வில்வ மரத்தின் நடுவில் உள்ள இடைவெளியில் நரசிம்மர் சுயம்பு வடிவமாக காட்சி தருகிறார்.
இங்கு பக்தர்கள் முன்னிலையில் தெய்வ பிரசன்னம் பார்க்கப்பட்டது.
அப்போது லட்சுமி நரசிம்மர் சுயம்பாக இங்கு எழுந்தருளியது பிரசன்னத்தில் தெரிய வந்தது.
லட்சுமி நரசிம்மரின் மகிமையால் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
திருமணம் தடைபட்டவர்கள் நெய் தீபம் ஏற்றி அரச மரத்தில் மஞ்சள் கிழங்கு, மஞ்சள் கயிற்றை கட்டி 12 நாள், 12 முறை (பிரதட்சனம்) வலம் வந்துபக்தியோடு பூஜை செய்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அரச மரத்தில் தொட்டில் கட்டி 12 நாள் 12 முறை வலம் வந்து நெய் தீபம் ஏற்றினால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் கூறுகிறார்கள்.
பக்தர்கள் இங்கு தொழில் அபிவிருத்தி, கல்வியில் வெற்றி பெற நோய்களில் இருந்து விடுபட கடன் தொல்லை நீங்க தொடர்ந்து ஹோமங்களும், பூஜைகளும் நடந்து வருகிறது.
- சூரியனும், சந்திரனும் இங்கு அருகருகே அருள் பாலிக்கின்றனர்.
- இங்கு தரிசனம் செய்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் அருளும் ஒன்றாக கிடைக்கும்.
சித்தர்கள் வாழ்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ளது அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இத்தலம் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டது.
சூரியனும், சந்திரனும் இங்கு அருகருகே அருள் பாலிக்கின்றனர்.
இதுபோன்ற அமைப்பை காண்பது மிகவும் அரிது. எனவே இங்கு தினமும் அமாவாசை தர்ப்பணம் செய்கின்றனர்.
சிவனுக்கும், அம்மனுக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்திருப்பதால், இத்தலம் சோமாஸ்கந்த அமைப்பு கோவிலாகும்.
எனவே இத்தலத்தை வழிபட்டால் கைலாயத்தை வழிபட்ட பலன் கிடைக்குமாம்.
இத்தல விநாயகரின் திருநாமம் "கோடி விநாயகர்" என்பதாகும்.
இவரை ஒரு தடவை கும்பிட்டால் கோடி விநாயகரை கும்பிட்ட பலன் கிடைக்கும்.
பழநி திருவாவினன் குடியை போலவே இங்கும் முருகன் வடக்கு பார்த்த மயில் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
இந்த முருகனை தரிசித்தால் பழனி முருகனை தரிசித்தபலன் கிடைக்கும்.
இந்த இடத்தில் நின்று தரிசனம் செய்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் அருளும் ஒன்றாக கிடைக்கும்.
இதுபோன்ற அமைப்பை திருவதிகை வீரட்டேஸ்வரர் கோவிலிலும் காணலாம்.
குழந்தை பாக்கியத்திற்காக வழிபாடு செய்வதற்கு நாட்டில் பல கோயில்கள் இருந்தாலும், குழந்தை பிறந்து பிறந்து இறக்கும் குடும்பத்தாரின் குறை தீர்ப்பதற்காக ஒருசில கோயில்களே உள்ளது.
அதில் முதன்மையான கோயில் இது. குழந்தை பிறந்து, பிறந்து இறக்கும் தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள சிவன், முருகன், அம்மன் மூவருக்கும் பாலபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்தால், தோஷம் நீங்கி பிறந்த குழந்தைகள் இறக்காது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள சந்தான விநாயகரை வழிபடுவது சிறப்பு.
குடும்பத்தில் ஒற்றும் ஏற்படும் பிரிந்த உறவுகள் கூடி வருவார்கள்.
தீராத வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் இங்கு தினமும் மாலை வேளைகளில் விளக்கு போட்டு வழிபடுவது நல்லது.
உணவு சாப்பிடுவதில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலும், உணவு செரிமானம் ஆகாமல் வயிற்று வலியால் அவதிப்படுபவர்களும், இங்குள்ள சிவனுக்கு சுத்தன்னம் நைவேத்தியம் படைத்து அந்த பிரசாதத்தை சாப்பிட்டால் விரைவில் குணமாகும்.
ஆண்டிபட்டியை சுற்றி யுள்ள ஊர்களில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும் இத்தலத்தில் வழிபாடு செய்த பின்னரே தொடங்கும்.
மதுரை மீனாட்சி கோவில் போல், மிகவும் பழமையான இத்தலத்தில் பல சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.
மன அமைதி வேண்டுபவர்கள், தியானம் செய்பவர்கள், யோகாசனம் பயில்பவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
பல காலகட்டத்தில் பல சித்தர்கள் ஆண்டிகள் வேடத்தில் இங்கு தங்கியிருந்தனர். இவர்களில் சிவனாண்டி என்ற சித்தரும் ஒருவர்.
இவர் பல காலம் இங்கு தங்கி சித்து விளையாட்டுக்கள் செய்து வந்தார்.
இவரது ஜீவ சமாதி இங்குள்ளது. இந்த சமாதிக்கு மேல் இத்தலத்தின் விருட்சமான வில்வமரம் அமைந்துள்ளது.
தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் இத்தல விருட்சத்தின் கீழ் தரப்படும் விபூதியை பூசினால் நாள்பட்ட நோய்கள் விரைவில் குணமாகிவிடும் என இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
பஞ்சம்,பட்டினியின்றி ஊர் செழிப்புடன் வாழ, வாரம் தோறும் வெள்ளிக் கிழமைகளில் இங்குள்ள வெள்ளி வேலுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
இத்தலத்தில் திருமணம் செய்து கொண்டால் வாழ்வில் எந்தவித குறைபாடும் இன்றி திருப்தியாக வாழலாம் என்பதால் சுற்றியுள்ள ஊர்மக்களில் பெரும்பாலானோர் இங்கு வந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.
- இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில் சோழர்களால் உருவாக்கி பராமரிக்கப்பட்டது.
- இது வாலி ஈஸ்வரனை வணங்கிய தலம்.
குடிபழக்கத்தை போக்கும் வாலீஸ்வரர்
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஏழு ஈஸ்வர ஆலயங்களில் ஒன்று வாலீஸ்வரர் கோவில்.
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில் சோழர்களால் உருவாக்கி பராமரிக்கப்பட்டது.
இது வாலி ஈஸ்வரனை வணங்கிய தலம்.
வாலி மாவீரனாக உருவெடுத்ததும், உயிருடன் இருக்கும் வரை செல்வபுரியான கிஷ்கிந்தாவை அரசாண்டவன் என்ற அருள் பெற்றதும் இங்கு தான்.
இங்கு கருவறை வாசல் கிழக்கு பார்த்து இருந்தாலும், வடக்கு பக்கமே சுற்றுச்சுவர் வாசல் உள்ளது.
இதை குபேர வாசல் என்கிறார்கள். ஏனெனில் வாலி வடதிசை பார்த்தே தவமிருக்கிறான்.
இங்கு வட கிழக்கில் பஞ்சலிங்கமும் உண்டு.
இங்கு அமைதியாய், தனியே அமர்ந்து, உள்ளுக்குள் ஆழ்நிலை தியானம் செய்தால் இங்கு குடியிருக்கும் சூட்சும சக்தியை அறிய முடியும்.
அஷ்டமி அன்று பஞ்சலிங்கத்திற்கு சாம்பிராணி தூபம் போட, குடிப்பழக்கம் மறக்கப்படும். மாதுளம்பழ அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும்.