search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marriage"

    • இரு நாடுகள் இடையே பிரச்சினைகள் நிலவுவதால், விசா கிடைக்காமல் போனது.
    • திருமணத்தை விரைந்து ஆன்லைனில் நடத்தி முடிக்க இருவீட்டார் முடிவு எடுத்தனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் இந்திய மணமகன், பாகிஸ்தான் மணமகளுக்கு ஆன்லைன் வழியே எல்லை தாண்டிய திருமணம் நடந்தது. இந்த வித்தியாச திருமணம் பா.ஜ.க.-வை சேர்ந்த உள்ளூர் தலைவர் தஹ்சீன் ஷாஹித் குடும்பத்தில் தான் வெற்றிகரமாக அரங்கேறி இருக்கிறது.

    தஹ்சீன் ஷாஹித் மகன் முகமது அப்பாஸ் ஹைதர் மற்றும் பாகிஸ்தானின் லாகூரை சேர்ந்த ஆன்ட்லீப் சஹ்ராவுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதையொட்டி, மணமகன் பாகிஸ்தான் செல்ல விசா கோரி விண்ணப்பித்து இருந்தார். எனினும், இரு நாடுகள் இடையே அரசியல் பிரச்சினைகள் நிலவுவதால், விசா கிடைக்காமல் போனது.

    இதைத் தொடர்ந்து மணப்பெண் தாயார் ராணா யாஸ்மின் ஜைதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே தாயார் உடல்நிலையை கருத்தில் கொண்டு திருமணத்தை விரைந்து முடிக்க ஆன்லைனில் நடத்துவதே சிறந்த வழியாக இருக்கும் என்று இருவீட்டார் இணைந்து முடிவு எடுத்தனர்.

    அதன்படி கடந்த வெள்ளிக் கிழமை இரவு, ஷாஹித் இமாம்பராவில் கூடி ஆன்லைன் திருமணத்தில் பங்கேற்றார். லாகூரைச் சேர்ந்த மணமகளின் குடும்பத்தினர் விழாவில் பங்கேற்றனர்.

    ஆன்லைன் திருணம் பற்றி பேசிய ஷியா மதத் தலைவர் மௌலானா மஹ்ஃபூசுல் ஹசன் கான், "இஸ்லாத்தில், திருமணம் செய்ய பெண்ணின் சம்மதம் இன்றியமையாதது. மேலும் மணப்பெண் தன் சம்மதத்தை மௌலானாவிடம் தெரிவிக்க வேண்டும். இரு தரப்பு மௌலானாக்கள் இணைந்து விழாவை நடத்தும் போது ஆன்லைன் திருமணம் சாத்தியமான் ஒன்று தான்," என்றார்.

    மேலும் மணமகன் ஹைதர் தனது மனைவிக்கு இந்திய விசாவை எந்த தொந்தரவும் இல்லாமல் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    • தான் மேடைக்கு வரும்போது குறிப்பிட்ட பாடலை இசைக்க விட வேண்டும் என்று மணப்பெண் விரும்பிக் கேட்டுள்ளார்.
    • ஆனால் மாப்பிள்ளை தரப்பு தங்களுக்குப் பிடித்த பாடல்களையே ஒளிபரப்பியுள்ளது

    கல்யாணத்தில் டி.ஜே பாடல் போடும் தகராறில் மாப்பிள்ளை பக்க விருந்தினர் பெண் வீடு சார்பாக வந்த விருந்தினரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    சமீப காலமாக திருமண நிகழ்ச்சிகளில் டி.ஜே பாடல்கள் ஏற்பாடு செய்து ஒவ்வொருவர் வரும்போதும் பாடல்களை ஒலிபரப்பும் டிரண்ட் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தானிபூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த திருமணத்தில், தான் மேடைக்கு வரும்போது குறிப்பிட்ட பாடலை இசைக்க விட வேண்டும் என்று மணப்பெண் விரும்பிக் கேட்டுள்ளார்.

    ஆனால் மாப்பிள்ளை தரப்பு தங்களுக்குப் பிடித்த பாடல்களையே ஒளிபரப்பியுள்ளது. இதனால் இரு வீட்டாருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. கடைசியில் ஒரு வழியாக இரு தரப்பினரும் சமாதானமாகி நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது.

    ஆனால் மாப்பிள்ளை வீடு சார்பில் திருமணத்துக்கு வந்த விருந்தினர் ஒருவர் ஆத்திரம் அடங்காமல் பெண் வீடு சார்பில் வந்த விருந்தினர் இரவு 11 மணிக்கு வண்டியில் வீடு திரும்பும்போது வழிமறித்து கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.

    படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் பெண்ணின் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிய மாப்பிள்ளை பக்க உறவினரை போலீசார் தேடி வருகின்றனர். 

    • சுற்றுலாப் பயணிகள் காசு கொடுத்து அவ்வூர் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம்
    • இந்த முறையில் ஒரே பெண்ணுக்கு 20 முறைகள் கூட திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது

    இந்தோனேசியவில் சுற்றுலாப்  பயணிகளை குறிவைத்து தற்காலிக திருமணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தோனேசிய கிராமங்களில் உள்ள இளம்பெண்கள் இந்த வகை திருமணங்களுக்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மேற்கு இந்தோனேசியாவில் உள்ள பன்கக் [Puncak] நகரில் சுற்றுலாப் பயணிகளை இந்த வகை திருமணங்கள் ஈர்த்து வருகிறன. மத்திய கிழக்கில் உள்ள சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிகம் வருகின்றனர்.

    PLEASURE மேரேஜ் எனப்படும் இந்த வகை திருமணத்தில் அங்கு சுற்றுலாப் பயணிகள் காசு கொடுத்து அவ்வூர் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம். சுற்றுலாப் பயணிகள் அங்குத் தங்கியுள்ள காலம் வரை, வாரக் கணக்காகவோ மாதக் கணக்காகவோ அவர்களுக்கு இப்பெண்கள் மனைவியாக வாழ்வர். சுற்றுலாப் பயணிகள் கிளம்பியவுடன் திருமணம் செல்லாததாகி விடுகிறது.

     

    ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்கள் தங்கள் வீட்டுப் பெண்களை கட்டாயப்படுத்தி இந்த வகை திருமணத்தில் தள்ளுகின்றன. பெண்களை அழைத்து வருதல், சுற்றுலாப் பயணிகளை அணுகுதல், திருமணம் செய்து வைத்தல் என பிரத்யேக நெட்வொர்க் அங்கு செயல்பட்டு வருகிறது. இந்த முறையில் ஒரே பெண்ணுக்கு 20 முறைகள் கூட திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் இம்முறைக்குக் கண்டனங்கள் எழுந்து வருகிறன. விஜய் சிம்ரன் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த 'பிரயமானவளே' படத்தில் ஹீரோ ஹீரோயினை கான்டிராக்ட் திருமணம் செய்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

    • கணவர் தன்னுடன் அடிக்கடி சண்டைபோடுகிறார் என கூறி சென் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
    • 'எனது தவறின் விளைவுகளை நான் புரிந்துகொண்டேன். இனி இந்த தவறை ஒருபோதும் செய்யமாட்டேன்'

    திருமணங்களின் எண்ணிக்கையை விட விவகாரத்துக்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் சீனாவில் நடந்த சம்பவம் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சீனாவை சேர்ந்த லீ [Li] மற்றும் சென் [Chen], ஆகிய இருவர் 20 வருடங்களாக கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது கணவர் தன்னுடன் அடிக்கடி சண்டைபோடுகிறார் என கூறி சென் சமீபத்தில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

    ஆனால் கணவர் லீ மனைவியை பிரிய துளியும் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்டது சிறிய பிரச்சனைதான் என்றும் அவர்கள் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்றும் அறிவுரை கூறி நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது. ஆனால் தனக்கு கட்டாயம் விவாகரத்து வேண்டும் என்று மனைவி சென் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

     

    இதுதொடர்பான விசாரணைக்கு கணவன் மனைவி ஆகிய இருவரும் நீதிமன்றத்துக்கு வந்த நிலையில், விசாரணையை நடக்கவிடாமல் செய்ய தனது மனைவி கணவர் துண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு நீதிமன்ற கட்டடத்தை விட்டு வெளியே ஓட முயற்சித்துள்ளார்.

    மனைவியை கையில் ஏந்திக்கொண்டு சத்தமாக கூச்சலிட்டபடி சென் நீதிமன்றத்தை விட்டு ஓட முயற்சித்ததை பார்த்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். கணவனின் காதலை பார்த்து வியந்த நீதிபதி, இனிமேல் மனைவியிடம் சண்டை போட மாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுக்க உத்தரவிட்டுள்ளனர். அதனபடி, 'எனது தவறின் விளைவுகளை நான் புரிந்துகொண்டேன். இனி இந்த தவறை ஒருபோதும் செய்யமாட்டேன்' என்று கணவர் லீ  எழுதிக்கொடுத்துள்ளார்.

    • சின்னதிரை மற்றும் வெள்ளிதிரையிலும் மிகவும் பரீட்சையமானவர் வனிதா விஜயகுமார்.
    • ராபர்ட் மாஸ்டரும் வனிதா விஜயகுமாரும் காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

    சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையிலும் மிகவும் பரீட்சையமானவர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப் பெரிய அளவில் ரீச் கிடைத்தது. ராபர்ட் மாஸ்டரும் வனிதா விஜயகுமாரும் காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர். பின் மனகசப்பால் பிரிந்து விட்டனர்.

    தற்பொழுது அவர்கள் இருவரும் இணைந்து Mr&Mrs என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதில் வனிதா கடலோரத்தில் ராபர்ட் மாஸ்டருக்கு ப்ரொபோஸ் செய்வது போல் சேவ் தி டேட் என்ற தலைப்பில் காட்சி அமைந்துள்ளது.

     

    இதனால் நெட்டிசன்கள் மீண்டும் வனிதா திருமணம் செய்துக் கொள்ள போகிறாரா. என ப்லவாறு கமெண்டுகளை கொட்டித்தீர்த்து வருகின்றனர். ஆனால் இது அந்த படத்திற்கான ப்ரோமோஷன் என சிலர் கூறி வருகின்றனர். எது உண்மை என்று அக்டோபர் 5 ஆம் தேதி பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்று.
    • ஒரே பாலின திருமணத்திற்கு அனுமதி அளித்த 3-வது நாடு தாய்லாந்து.

    பாங்காங்:

    தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.

    தென்கிழக்கு ஆசியா நாடுகளின் ஒன்றான தாய்லாந்தில் மன்னராட்சி நடக்கிறது. கடற்கரைகளை அதிகம் கொண்ட இந்த நாட்டின் பொருளாதாரம், சுற்றுலாத்துறையின் வருமானத்தை நம்பி உள்ளது.

    மேலும் வெளிநாட்டவர்களை அதிகளவில் ஈர்க்கும் வகையில் பல்வேறு சலுகைகளை தாய்லாந்து வழங்குகிறது. இதனால் கேளிக்கைகளின் தேசமாக விளங்கும் தாய்லாந்துக்கு ஏராளமான வெளிநாட்டவர்கள் சுற்றுலாவுக்காக செல்கிறார்கள்.

    ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் தாய்லாந்து விளங்குகிறது. இருப்பினும் தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்டப்பூர்வமாக அனுமதியளிக்கப்படாமல் இருந்தது. இதனால் ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக கடுமையான எதிர்ப்பை எதிர் கொண்டனர்.

    மேலும் அவர்கள், தங்களுடைய திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படலாம் என கருதப்பட்டது.

    இதனையடுத்து தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதற்கான மசோதா அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஆதரவுடன் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது.


    பின்னர் அந்த நாட்டின் மன்னரின் ஒப்புதலுக்காக ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமண சட்டமசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்தநிலையில் தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமண சட்ட மசோதாவுக்கு அந்த நாட்டின் மன்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் வருகிற ஜனவரி மாதத்தில் இந்த சட்டம் அமலுக்கு வரும் என அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

    தைவான் மற்றும் நேபாளத்திற்கு அடுத்தபடியாக ஆசியாவில் ஒரே பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கும் 3-வது நாடு என்ற சிறப்பை தாய்லாந்து பெறுகிறது.

    • சிறப்பு பூஜைகள் செய்து திருமணம் செய்து வைத்தனர்.
    • பயிரிடப்பட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகிப்போனது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்து.

    இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். விஜயவாடா உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் உள்ளதால் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கருகி நாசமானது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சத்ய சாய் மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யாததால் ஆறுகள், ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. காரிப் பருவத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகிப்போனது.


    இந்த நிலையில் வருண பகவானை மகிழ்விப்பதற்காக 2 கழுதைகளை குளிப்பாட்டி, மஞ்சள், குங்குமம், மாலை யிட்டு, பட்டாசு வெடித்து ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    மேலும் கோவில் வளாகத்தில் வைத்து கழுதைகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து திருமணம் செய்து வைத்தனர்.

    இதனால் வருண பகவான் மனம் குளிர்ந்து மழை தருவார் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • சமந்தாவின் அண்ணன் டேவிட்டின் திருமணம் அமெரிக்காவில் நடந்து முடிந்தது.
    • சமந்தா அண்ணனுக்கு நெட்டிசன்கள் திருமண வாழ்த்து.

    நடிகை சமந்தாவின் அண்ணன் டேவிட்டின் திருமணம் அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ளது. அண்ணனின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    திருமண நிகழ்வில் சமந்தா தனது தாயார் நினெட் பிரபு மற்றும் அப்பா, அண்ணனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    இதனையடுத்து சமந்தாவின் அண்ணனுக்கு நெட்டிசன்கள் திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நா.த.க நிர்வாகி அருணகிரி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
    • தாக்கப்பட்ட இளைஞரிடம் இருந்து ₹20,000 பணம் மற்றும் செல்போனை அருணகிரி பறித்துள்ளார்.

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சந்தோஷ் (20) என்பவர் தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே ஊரை சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சாதி என்பதால் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் இவர்கள் இருவரும் கடந்த 14ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி மதுரையில் தங்கியுளளார். இவர்கள் இருவரையும் பெண்ணின் உறவினர்கள் தேடி வந்த நிலையில், அவர்கள் மதுரையில் தங்கி இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து, அதே ஊரை சேர்ந்த நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளரும் வழக்கறிஞருமான அருணகிரி என்பவர் தனது நண்பர்களுடன் மதுரைக்கு சென்றுள்ளார்.

    மதுரையில் இருந்த சந்தோஷை காரில் கடத்திய அருணகிரி அவரை கொடூரமாக தாக்கி அவரிடம் இருந்து ரூ.20,000 பணம் மற்றும் செல்போனை பறித்துள்ளார். பின்னர் சந்தோஷை வழியிலேயே இறக்கி விட்டு பெண்ணை அவர்களுடன் அழைத்து சென்றுள்ளனர்.

    காயமடைந்த சந்தோஷ் அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளார்.

    இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்துள்ள காவல்துறை அருணகிரி, பிரவீன், கார்த்தி ஆகிய 3 பேரை இன்று கைது செய்தது. இவர்கள் மீது மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட 3 பேரையும் செப்டம்பர் 30ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • தொழிலதிபர் ஒருவருடன் திவ்யாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று செய்திகள் வெளியாகின.
    • வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என திவ்யா ஸ்பந்தனா பதிவிட்டுள்ளார்.

    கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் திவ்யா ஸ்பந்தனா. 'சான்டல்வுட் குயின்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட அவர், திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் 2013-ஆம் ஆண்டு மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். பின்னர் அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்.

    அண்மையில் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கப்போவதாக அவர் தெரிவித்திருந்தார். இதனிடையே இவருக்குத் திருமணம் ஆகப்போகிறது என்று அடிக்கடி தகவல்கள் பரவுவது வழக்கம். அந்தவகையில் தொழிலதிபர் ஒருவருடன் திவ்யாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில் இத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "ஊடகங்கள் எனக்குப் பலமுறை திருமணம் நடத்தி வைத்துவிட்டன. எத்தனை முறை என்பதை நானே மறந்துவிட்டேன். நான் திருமணம் செய்து கொண்டால், நானே உங்களிடம் தெரிவிப்பேன். தயவுசெய்து, அதிகாரப்பூர்வமற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 2017-ம் ஆண்டில் 227 திருமணங்கள் நடைபெற்றதே அதிகபட்சமாக இதுவரை இருந்து வந்தது.
    • குருவாயூரில் ஓரே நாளில் இவ்வளவு திருமணங்கள் நடப்பது இதுவே முதல் முறை.

    கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஏராளமானோர் திருமணம் செய்வது வழக்கம்.

    அந்த வகையில் இன்று 354 திருமணங்கள் நடைபெற்றன. குருவாயூரில் ஓரே நாளில் இவ்வளவு திருமணங்கள் நடப்பது இதுவே முதல் முறை.

    கடந்த 2017-ம் ஆண்டில் 227 திருமணங்கள் நடைபெற்றதே அதிகபட்சமாக இதுவரை இருந்து வந்தது.

    இன்று 363 திருமணங்களுக்கு முதலில் பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் 9 குழுக்கள் தேவஸ்தானத்திற்கு தெரிவிக்காததால் 354 திருமணங்கள் மட்டும் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு திருமணங்கள் தொடங்கின.

    • தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
    • நடிகை மேகா ஆகாஷ் நிச்சயதார்த்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

    தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக வந்தா ராஜாவாதான் வருவேன், தனுஷிற்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மேகா ஆகாஷ்.

    தனுசுக்கு ஜோடியாக நடித்து, `மறுவார்த்தை பேசாதே' பாடலின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர், தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

    ஹீரோயின்கள் அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள் அல்லது சக நடிகர்களைத் திருமணம் செய்து கொள்வது மிக சகஜமான ஒரு விஷயம் ஆகிவிட்டது.

    இந்த வரிசையில் பிரபல அரசியல்வாதியின் மகன் சாய் விஷ்ணு என்பவரை நடிகை மேகா ஆகாஷ் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் நடிகை மேகா ஆகாஷ் தன்னுடை வலைதள பக்கத்தில் அவரிடைய நிச்சயதார்த்த போட்டோக்களை பகிர்ந்து அதில், தன்னுடைய ஆசை நிறைவேறியதாக' தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    ×