பாகிஸ்தான்: திருமண விழாவில் தற்கொலைப் படைத் தாக்குதல்.. 7 பேர் பலி - 25 பேர் படுகாயம்

அரசு தரப்பு சமாதானக் குழு தலைவராக நூர் ஆலம் மெஹ்சூத் என்பவர் உள்ளார்.வரது வீட்டில் நேற்று இரவு நடந்த திருமண விழாவின்போது விருந்தினர்கள் இசைக்கு நடனமாடிக் கொண்டிருந்தனர்.
பாகிஸ்தான்: திருமண விழாவில் தற்கொலைப் படைத் தாக்குதல்.. 7 பேர் பலி - 25 பேர் படுகாயம்
Published on

பாகிஸ்தானில் திருமண விழாவில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில்

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் டெரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில், கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசு தரப்பு சமாதானக் குழு தலைவராக நூர் ஆலம் மெஹ்சூத் என்பவர் உள்ளார்.

இவரது வீட்டில் நேற்று இரவு நடந்த திருமண விழாவின்போது விருந்தினர்கள் இசைக்கு நடனமாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது மர்ம நபர் ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் தலிபான் (TTP) அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com