என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராப் பாடகர் வேடன்"

    மேத்யூ தாமஸ் நடிப்பில் Night Riders திரைப்படம் உருவாகியுள்ளது!

    மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களுள் மாத்யூ தாமஸ் முக்கியமானவர். இவர் சில மாதங்களுக்கு முன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் , ப்ரோமான்ஸ் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.

    இவர் நடிப்பில் அடுத்ததாக நைட் ரைடர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பிரபல படத்தொகுப்பாளரான நவ்ஃபல் அப்துல்லா இயக்கியுள்ளார்.

    இந்நிலையில் படத்தில் மலையாள இண்டிபெண்டண்ட் இசையமைப்பாளர் மற்றும் பாடகரான வேடன் படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் ஒரு பாடலை அவர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    வாழ படத்தில் நடித்துத் திறமையை நிரூபித்த மீனாக்ஷி உண்ணிகிருஷ்ணன், இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும் இதில் அபு சலீம், ரோனி டேவிட் ராஜ், ரோஷன் ஷணவாஸ், ஷரத் சபா, மெரின் பிலிப், சினில் சைனுடீன், நௌஷாத் அலி, சைத்ரா பிரவீன் மற்றும் நஸீர் சங்கராந்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    தொழில்நுட்பக் குழு

    திரைப்படத்தின் ஒளிப்பதிவை அபிலாஷ் ஷங்கர் மேற்கொண்டுள்ளார். சிறப்பாக, இந்தப் படத்தின் எடிட்டிங் பணியையும் இயக்குநர் தானே செய்துள்ளார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையை யாக்சன் கேரி பெரெய்ரா மற்றும் நேஹா எஸ். நாயர் இணைந்து அமைத்துள்ளனர்.

    உள்ளக்கல் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் நிசார் பாபு மற்றும் சஜின் அலி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். திரைப்படம் மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 2021 முதல் 2023 முறை ஒன்றாக இருந்தோம்.
    • அந்த காலக்கட்டத்தில் திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொடர்பில் இருந்ததாக பெண் டாக்டர் குற்றச்சாட்டு.

    கேரளாவின் பிரபல ராப் பாடகர் வேடன். வேடன் என்று அறியப்படும் ஹிரன்தாஸ் முரளி மீது பெண் டாக்டர் திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொடர்பில் இருந்துவிட்டு பின்னர் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி வேடன் கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்கியுள்ளது.

    வேடன் 2021 முதல் 2023 வரை தாங்கள் ஒன்றாக இருந்தோம். பின்னர் பிரிந்துவிட்டோம். ஒன்றாக இருந்தபோது பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெண் டாக்டர் புகார் அளித்திருந்தார்.

    இருவரும் ஒன்றாக இருந்து பல சந்தர்ப்பங்களில் உடல் ரீதியான உறவுகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில், மனுதாரருக்கு முன்ஜாமீன் மறுப்பது கடுமையான பாரபட்சத்தை ஏற்படுத்தும் எனக் கூறிய நீதிமன்றம், முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    மேலும், சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு இடையேயான உறவில் முறிவு ஏற்பட்டு, அது குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் கைதுக்கும் வழிவகுத்தால், ஒரு தனிநபரின் எதிர்காலத்தை அழிக்கும் போக்கிற்கு வழிவகுக்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • 'வேடன்' சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.
    • சமூக பிரச்சனைகளை குறித்த கூர்மையான வரிகளை கொண்டதாக வேடனின் பாடல்கள் அமைத்துள்ளது.

    கேரளாவைச் சேர்ந்த மலையாள ராப் பாடகரான 'வேடன்' சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.

    சமூக பிரச்சனைகளை குறித்த கூர்மையான வரிகளை கொண்டதாக வேடனின் பாடல்கள் அமைத்துள்ளது.

    யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர் ஹிரந்தாஸ் முரளி. இவரே பின்னணியில் வேடன் ஆனார்.

    2020 கொரோனா காலத்தில், யூடியூபில் வெளிவந்த இவரின் முதல் ஆல்பம் பாடலான 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' மூலம் கவனம் பெற்றார்.

    "நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்று சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பாடலில் அவர் பேசியிருந்தார். தொடர்ந்து சில படங்களிலும் பாடல்களை இவர் பாடியுள்ளார்.

    'மஞ்ஞும்மல் பாய்ஸ்', 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' உள்ளிட்ட புகழ் பெற்ற படங்களிலும் இவர் பாடியுள்ளார்

    டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் அண்மையில் வெளியான 'நரிவேட்டை' படத்தில் பழங்குடியினரின் போராட்டம் பற்றி 'வாடா வேடா' என்ற பாடலை எழுதி பாடியிருந்தார். திரைப்படங்களை தவிர்த்து சுயாதீன இசை ஆல்பங்களிலும் வேடன் கவனம் செலுத்தி வருகிறார்.

    இந்நிலையில், இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக வேடன் அறிமுகமாகிறார் . பரத், ஆரி அர்ஜுனன், அம்மு அபிராமி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.

    வேடன் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • நீங்கள் நல்லா ஆரோக்கியமா இருப்பீங்க என்று வேடன் கூறினார்.

    கேரளாவைச் சேர்ந்த மலையாள ராப் பாடகரான 'வேடன்' சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். சமூக பிரச்சனைகளை குறித்த கூர்மையான வரிகளை கொண்டதாக வேடனின் பாடல்கள் அமைந்துள்ளது.

    2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில், யூடியூபில் வெளிவந்த இவரின் முதல் ஆல்பம் பாடலான 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' மூலம் கவனம் பெற்றார்.

    "நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்று சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பாடலில் அவர் பேசியிருந்தார்.

    'மஞ்சும்மல் பாய்ஸ்', 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' உள்ளிட்ட புகழ் பெற்ற படங்களிலும் இவர் பாடியுள்ளார். டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் அண்மையில் வெளியான 'நரிவேட்டை' படத்தில் பழங்குடியினரின் போராட்டம் பற்றி 'வாடா வேடா' என்ற பாடலை எழுதி பாடியிருந்தார். திரைப்படங்களை தவிர்த்து சுயாதீன இசை ஆல்பங்களிலும் வேடன் கவனம் செலுத்தி வந்தார்.

    இவரது பாடல்களில் இந்து மதத்தையும், பிரதமர் மோடியையும் அடிக்கடி வேடன் அவமதிக்கிறார் என பா.ஜ.க.வினர் அண்மையில் வேடன் மீது புகார் அளித்தனர். இதனிடையே வேடனுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

    இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுடன், ராப் பாடகர் வேடனிடம் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பலரும் பகிர்ந்தும், சிலர் விமர்சித்தும் வருகின்றனர். வீடியோவில் திருமாவளவன் பேசும் போது, அம்மா, அப்பா எல்லாம் என்ன பண்றாங்க? எங்க இருக்காங்க என கேட்டார். அதற்கு வேடன், அம்மா தவறி 4 வருடம் ஆகுது. அப்பா இருக்காங்க. கூலி வேலைக்கு போய்ட்டு இருக்காங்க. அவரால் வேலைக்கு போகாமல் இருக்க முடியாது என்றார்.

    இதையடுத்து, கேரளாவில் எந்த இடத்தில் இருந்தீர்கள் என திருமாவளவன் கேட்க, திருச்சூர் தான் என வேடன் சொன்னார். மேலும் கேரளாவிற்கு அடிக்கடி வருவேன் என்று திருமாவளவன் கூற, ஐயா தயவு செய்து அடுத்த முறை வரும்போது என் வீட்டிற்கு வாங்க என்று வேடன் கூறினார்.

    திருச்சூரில் டவுன்ல இருக்கீங்களா? என்று திருமாவளவன் கேட்க, டவுனில் இருந்து 8 கிலோ மீட்டர் தான். நீங்கள் நல்லா ஆரோக்கியமா இருப்பீங்க என்று வேடன் கூறினார்.

    இதையடுத்து, வாழ்த்துகள் தம்பி. நல்லா இருக்கு... புரட்சிகரமா இருக்கு... உங்கள் பாடலில் நீங்கள் சொல்லப்படக்கூடிய கருத்து புரட்சிகரமா இருக்கு. நாங்க 35 வருஷமா பேசுறத நீங்க 2 நிமிட பாடலில் சொல்லி இருக்கீங்க என்று திருமாளவன் கூறினார்.

    இதற்கு, நீங்க பேசறதினால தான் பாடுவதற்கான தைரியம் கிடைக்குது என்று வேடன் கூறினார்.

    நீங்கள் உலகளாவிய பிரச்சனை குறித்து ஒரு பாடல் பாடினீங்க.. அது ரொம்ப அருமையா இருந்தது. நான் பலமுறை கேட்டேன். குறுகிய காலத்தில் தான் சமூக வலைத்தளத்தில் பிரபலமானீர்கள் இல்ல? என்று திருமாவளவன் கேட்க... ஆமாம்ஜி என்று வேடன் கூறினார்.

    யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர் ஹிரந்தாஸ் முரளி. இவரே பின்னணியில் வேடன் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×