என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் மில்டன்"

    • 'வேடன்' சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.
    • சமூக பிரச்சனைகளை குறித்த கூர்மையான வரிகளை கொண்டதாக வேடனின் பாடல்கள் அமைத்துள்ளது.

    கேரளாவைச் சேர்ந்த மலையாள ராப் பாடகரான 'வேடன்' சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.

    சமூக பிரச்சனைகளை குறித்த கூர்மையான வரிகளை கொண்டதாக வேடனின் பாடல்கள் அமைத்துள்ளது.

    யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர் ஹிரந்தாஸ் முரளி. இவரே பின்னணியில் வேடன் ஆனார்.

    2020 கொரோனா காலத்தில், யூடியூபில் வெளிவந்த இவரின் முதல் ஆல்பம் பாடலான 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' மூலம் கவனம் பெற்றார்.

    "நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்று சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பாடலில் அவர் பேசியிருந்தார். தொடர்ந்து சில படங்களிலும் பாடல்களை இவர் பாடியுள்ளார்.

    'மஞ்ஞும்மல் பாய்ஸ்', 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' உள்ளிட்ட புகழ் பெற்ற படங்களிலும் இவர் பாடியுள்ளார்

    டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் அண்மையில் வெளியான 'நரிவேட்டை' படத்தில் பழங்குடியினரின் போராட்டம் பற்றி 'வாடா வேடா' என்ற பாடலை எழுதி பாடியிருந்தார். திரைப்படங்களை தவிர்த்து சுயாதீன இசை ஆல்பங்களிலும் வேடன் கவனம் செலுத்தி வருகிறார்.

    இந்நிலையில், இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக வேடன் அறிமுகமாகிறார் . பரத், ஆரி அர்ஜுனன், அம்மு அபிராமி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.

    வேடன் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • விஜய் மில்டன் அடுத்ததாக தெலுங்கு நடிகரான ராஜ் தருண் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் திரைப்படத்தை இயக்குகிறார்
    • மேலும் பால் டப்பா இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

    விஜய் மில்டன் அடுத்ததாக தெலுங்கு நடிகரான ராஜ் தருண் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் திரைப்படத்தை இயக்குகிறார். இவர் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கினார்.

    தற்பொழுது இயக்கும் படத்தில் அம்மு அபிராமி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பால் டப்பா இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

    நடிகர் ஆரி அர்ஜுனன் இப்படத்தில் நடித்துள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டு கடந்த வாரம் அறிவித்தது. ஆரி இப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் படத்தில் நடிகர் பரத் இணைந்துள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதில் பரத்-க்கு ஒரு லுக் டெஸ்ட் எடுப்பது போன்ற வீடியோக்கள் இடம்-பெற்றுள்ளது. பரத் இப்படத்தில் ஒரு ரவுடி கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    விஜய் மில்டன் இதற்கு முன் பரத் நடிப்பில் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கடுகு, போன்ற திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது. மீண்டும் 8 வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    திரைப்படத்தின் டைட்டில் லுக் வரும் ஜூன் 15 ஆம் தேதி வெளியாகிறது.

    • விஜய் மில்டன் அடுத்ததாக தெலுங்கு நடிகரான ராஜ் தருண் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் திரைப்படத்தை இயக்குகிறார்.
    • பால் டப்பா இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

     விஜய் மில்டன் அடுத்ததாக தெலுங்கு நடிகரான ராஜ் தருண் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் திரைப்படத்தை இயக்குகிறார். இவர் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கினார்.அம்மு அபிராமி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பால் டப்பா  இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

    தற்பொழுது நடிகர் ஆரி அர்ஜுனன் இப்படத்தில் நடித்துள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. ஆரி இப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். ஆரி முதன்முதலில் காவல் அதிகாரியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக ஜர்னி என்ற வெப் தொடரில் நடித்து இருந்தார். திரைப்படத்தின் டைட்டில் லுக் வரும் ஜூன் 15 ஆம் தேதி வெளியாகிறது.

    • தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ராப் பாடகராக இருப்பவர் பால் டப்பா.
    • பால் டப்பா நடிகராக களம் இறங்கியுள்ளார்.

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ராப் பாடகராக இருப்பவர் பால் டப்பா. இவர் ஒரு இண்டிபெண்டண்ட் பாடகராவார். இவரின் பாடல்கள் புதுவித இசை, வரிகள் என ஜென் Z மக்களுக்கு பிடிக்கும் விதமாக அமைந்துள்ளது.

    கடந்த 2022 ஆம் ஆண்டு இவர் குரலில் வெளியான 3ஷா மற்றும் ஐ இண்டிபெண்டட் பாடல் மிகப்பெரியளவில் மக்களிடம் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஒரு பாடலில் ரேப் போர்ஷன் பாடினார்.

    இவர் குரலில் வெளியான இண்டிபெண்டண்ட் ஆல்பமான 170 CM, SAB, binge and Cringe , OCB, மற்றும் காத்து மேல பாடல் மிகப்பெரிய வைரலானது.

    இந்நிலையில் பால் டப்பா நடிகராக களம் இறங்கியுள்ளார். இப்படத்தை விஜய் மில்டன் இயக்குகிறார். இவர் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கினார். இப்படத்தில் தெலுங்கு நடிகரான ராஜ் தருண் கதாநாயகனாக நடிக்கிறார். அம்மு அபிராமி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளது. 

    • விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்."
    • இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்." இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டீசரை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து இன்று படத்தின் முதல் பாடலான `தீரா மழை' இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி மற்றும் அச்சு ராஜமணி இணைந்து இசையமைத்துள்ளனர்.

    இந்த படத்தின் ரிலீஸ் தேதி உள்பட படம், தொடர்பான இதர அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியுடன் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்." இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டீசரை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானது.

    சில நாட்களுக்கு முன் படத்தின் சென்சார்ஷிப் போர்ட் U/A சான்றிதழை வழங்கியது என்ற அப்டேட்டை கொடுத்து இருந்தனர். தற்பொழுது படத்தின் டிரைலர் குறித்து அப்டேட்டை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படத்தின் டிரைலர் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் விரைவில் திரைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு  மொழிகளிலும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியுடன் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்." இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டீசரை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானது.

    படத்தின் டிரைலர் லான்ச் ஈவண்ட் தற்பொழுது சென்னையில் நடைப்பெற்று வருகிறது. படத்தில் நடித்த பிரபலங்கள் இவ்விழாவில்  கலந்துக் கொண்டுள்ளனர். எப்பொழுதும் திரை பிரபலங்கள் அவர்களது பட நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக புதுப்புது கெட்டப்பில் வருவார்கள்.

    ஆனால் இம்முறை விஜய் ஆண்டனி யாரும் வராத ஒரு புதிய கெட்டப்பில் வந்துள்ளார். ஒரு பக்க முகம் மற்றும் கைகளில் கருப்பு சாயம் பூசியது போன்ற தோற்றம். அதற்கு காரணம் மற்றொரு படத்தின் ஷூட்டிங்கிள் இருந்து அப்படியே வந்ததால் இப்படி இருக்கிறது என்று கூறினார்.

     

    படத்தின் டிரைலர்  தற்பொழுது வெளியாகியுள்ளது. படம் வரும் ஜூலை மாதம்  திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

    ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியுடன் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்." இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

    இந்நிலையில் படத்தை குறித்து இயக்குனர் விஜய் மில்டன் ஒரு புகாரை வைத்தார். படத்தின் தொடக்கத்தில் வரும் இரண்டு நிமிட காட்சி எனக்கே தெரியாமல் தயாரிப்பாளர் சேர்த்துள்ளார். இது என் படத்தின் கதையை கெடுத்துள்ளது. தயவு செய்து படம் பார்ப்பவர்கள் அந்த 1 நிமிட காட்சியை மறந்துவிட்டு பார்க்கும் படி கேட்டுக் கொண்டார்.

    இந்த பிரச்சனை தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது, அதாவது தயாரிப்பாளரும், இயக்குனரும் சமரசம்  பேசி படத்தின் தொடக்கத்தில் வந்த 1 நிமிட காட்சியை நீக்கியுள்ளனர். இது குறித்து விஜய் மில்டன் வீடியோ பதிவிட்டுள்ளார், அதில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளாது. அனைவருக்கும் நன்றி. இந்த பிரச்சனையை சமரசம் செய்து வைத்த சரத்குமார் சாருக்கு ரொம்ப நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் விஜய் ஆண்டனி இதனை ஆதரிக்கும் வகையில் அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மழை பிடிக்காத மனிதன் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக்காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்து உள்ளதாக என் நண்பர் , படத்தின் இயக்குனர் திரு. விஜய் மில்டன் வருத்தம் தெரிவிருந்தார். அது நான் இல்லை. இது சலீம் 2 இல்லை. என்று அப்பதிவில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் மில்டன் கோலி சோடா ரைசிங் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார்.
    • கோலி சோடா ரைசிங் படத்தின் டீசர் இன்று வெளியாகியது.

    இயக்குனர் விஜய் மில்டன் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    அதைத்தொடர்ந்து தற்பொழுது விஜய் மில்டன் கோலி சோடா ரைசிங் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இத்தொடர் 2014 ஆம் ஆண்டு வெளியான கோலி சோடா மற்றும் 2018 ஆம் ஆண்டு வெளியான கோலி சோடா 2 படங்களின் தொடர்ச்சியாகவே அமைந்து இருக்கிறது.

    படத்தின் டீசர் இன்று வெளியாகியது. இத்தொடர் விரைவில் ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. மிகவும் ஆக்ஷன் நிறைந்த காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளது. தொடரில் சேரன், புகழ், அம்மு அபிராமி, ஜான் விஜய், அவந்திகா மற்றும் பலர் நடித்துள்ளனர். இவர்க்ளுடன் படத்தின் நாயகனான கிஷோர், ஸ்ரீ ராம், பாண்டி மற்றும் முருகேஷ் நடித்துள்ளனர்.

    இத்தொடர் கோலி சோடா 1 படத்தின் அடுத்ததாகவும் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு முன் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கோலிசோடா-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்டண்ட் சிவா, இந்த படத்தின் மூலமாக நடிகனாகும் ஆசை நிறைவேறிவிட்டதாக கூறியிருக்கிறார். #GoliSoda2 #StuntSiva
    விஜய் மில்டன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா, சரவணன் சுப்பையா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேகா, ரோகினி, ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் கோலிசோடா-2. 

    இந்த படத்தில் சாதி சங்க தலைவராக நடித்து இருந்தவர் ஸ்டண்ட் சிவா. படத்தில் நடித்தது பற்றி சிவா கூறும்போது ‘சண்டை பயிற்சியாளராக காதலுக்கு மரியாதை தான் முதல் படம். சேது, நந்தா, பிதாமகன் உட்பட பல படங்களில் சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்து இருக்கிறேன். என் படங்களில் சண்டைக்காட்சிகள் மிகவும் இயல்பாக இருக்கும். 



    வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் ஹாசனின் கண்ணை கேட்கும் கதாபாத்திரம் தான் நடிகராக முதல் படம். தொடர்ந்து சில படங்களில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். நடிப்பதற்காக தான் சினிமாவுக்குள் வந்தேன். அது நிறைவேறி இருப்பதோடு பாராட்டுகளும் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார். இவரது மகன்கள் இருவரும் கராத்தே சாம்பியன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #GoliSoda2 #StuntSiva

    விஜய் மில்டன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத் சீனி, இசக்கி பரத், வினோத், சுபிக்‌ஷா, கிரிஷா குரூப் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கோலி சோடா 2’ படத்தின் விமர்சனம். #GoliSoda2
    முன்னாள் போலீஸான சமுத்திரகனி வடசென்னையில் ஒரு மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று இளைஞர்கள் பழக்கம். இதில் ஒருவர் ரவுடிகளிடம் வேலை பார்த்து வரும் பரத் சீனி, அதே பகுதியில் இருக்கும் சுபிக்‌ஷாவை காதலித்து வருகிறார். இவர்களின் காதல் விஷயம் சுபிக்‌ஷாவின் அம்மா ரோகினிக்கு தெரிய வர, ரவுடி தொழிலை விட்டு நல்ல வேலைக்கு போக சொல்லி வலியுறுத்துகிறார். பரத் சீனியும் ரவுடியிடம் இருந்து பிரிந்து நல்ல வேலை செல்ல முயற்சி செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் மீண்டும் ரவுடியுடன் சேரும் நிலை ஏற்படுகிறது.

    மற்றொரு இளைஞர் இசக்கி பரத், ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டு, கூடைப்பந்தாட்டத்தில் ஆர்வமாக இருந்து வருகிறார். ஒரு கூடைப்பந்தாட்டத்தில் வெற்றி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும் என்பதால் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். இவர் கிரிஷா குரூப்பை காதலித்து வருகிறார். 

    இவர்களின் காதல் விஷயம் தெரிந்த ஜாதி தலைவரும் பக்கத்து வீட்டுக்காரருமானவர் கிரிஷா குரூப்பை அடித்து விடுகிறார். இவர் மீது புகார் கொடுக்க சென்ற கிரிஷா குரூப்பை இசக்கி பரத்தையும் போலீஸ் திருமணம் செய்து வைக்கிறார்கள். பின்னர், இசக்கி பரத்தை அடித்துவிட்டு, கிரிஷா குரூப்பை ஜாதி தலைவர் அழைத்து சென்று விடுகிறார்.



    மற்றொரு இளைஞர் வினோத், ஆட்டோ ஓட்டி வரும் இவர் கார் வாங்க வேண்டும் என்பது குறிக்கோள். இவர் கவுன்சிலரிடம் பணம் கொடுத்து ஏமாந்து விடுகிறார்கள்.

    இந்த மூன்று இளைஞர்களும் ஒவ்வொரு பிரச்சனையில் மாட்டுகிறார்கள். இவர்கள் வாழ்க்கை இதன்பிறகு எப்படி சென்றது. சமுத்திரகனி எப்படி உதவி செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் பரத் சீனி ரவுடியுடன் வலம் வருகிறார். காதலியை கரம் பிடிப்பதற்காக ரவுடியை விட்டு விலக முடியாமல், காதலியையுடனும் செல்ல முடியாமல் தவிக்கிறார். இவருடைய நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. முந்தைய படத்தை விட சிறப்பாகவே நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக வரும் சுபிக்‌ஷா துறுதுறு பெண்ணாக நடித்து மனதை கவர்ந்திருக்கிறார்.

    இசக்கி பரத் சுறுசுறுப்பான இளைஞராக மனதில் பதிகிறார். இவருக்கு ஜோடியாக வரும் கிரிஷா குரூப்பும் அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதுபோல், வினோத் ஆட்டோ ஓட்டுநராக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். 



    சமுத்திகனியின் நடிப்பு பெரிய பலம். இந்த மூன்று இளைஞர்களுக்கும் ஆலோசனை வழங்குவது, எப்படி பிரச்சனைகளை கையாளவது என்று சொல்லும் போது நமக்கே அதை ஏற்றுக் கொள்ள தோன்றுகிறது. 

    கோலிசோடா படத்தின் வெற்றியை தொடர்ந்து, இரண்டாவது பாகத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கும் மூன்று இளைஞர்களை இந்த சமூகம் அவர்களை வளர விடாமல் பிரச்சனைகளை கொடுக்கிறது. அந்த பிரச்சனைகளில் இருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்.

    படம் ஆரம்பத்தில் மெதுவாக செல்கிறது. ஏற்கனவே பார்த்த காட்சிகள் என பார்ப்பவர்களை சோர்வடைய செய்கிறது. ஆனால், பிற்பாதியில் படம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. முதல் பாதியில் சுவாரஸ்யமான காட்சிகள் வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். 

    விஜய் மில்டனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. அச்சு ராஜாமணியின் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘கோலி சோடா 2’ கேஸ் குறைவு. 
    விஜய் மில்டனிடம் விளையாட்டாக சொன்னதை, சீரியஸாக எடுத்து கொண்டு, தன்னை, பரத் சீனிக்கு ஜோடியாக அழுத்தமான கதபாத்திரத்தில் நடிக்க வைத்ததாக ‘கோலிசோடா-2’ படத்தில் நடித்துள்ள சுபிக்‌ஷா கூறியிருக்கிறார். #GoliSoda2
    விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கோலிசோடா-2’. சமுத்திரகனி, க்ருஷா, செம்பன் வினோத் ஜோஸ், சரவண சுப்பையா, பாரத் சீனி, எசக்கி பரத், வினோத், ரேகா, ரோஹிணி, ஸ்டன்ட் சிவா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறது. இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

    படத்தில் நாயகியாக நடித்துள்ள சுபிக்‌ஷா கூறும்போது, 

    "கடுகு படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சிறியது என்றாலும், எனக்கு பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது. ரசிகர்கள் என்னை கடுகு சுபிக்‌ஷா என்று அழைத்தது மகிழ்ச்சியாக இருந்தது, மீண்டும் விஜய் மில்டன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம் என நினைத்தேன். ஆனால் உடனடியாக அந்த வாய்ப்பு என் வீட்டு கதவை தட்டும்  என நான் எதிர்பார்க்கவேயில்லை.

    படத்தில் என் கதாபத்திரத்தின் பெயர் இன்பவல்லி, பக்கத்து வீட்டுப் பெண் போன்ற ஒரு ஜாலியான கதாபாத்திரம். படத்தை பற்றியும், என் கதாபாத்திரத்தை பற்றியும் விவாதிக்கும் போது விஜய் மில்டன் சார், இயல்பாக நடித்தாலே போதும், எந்த முன் தயாரிப்பு வேலையும் அந்த கதாப்பாத்திரத்துக்கு தேவையில்லை என்றார்.



    பாரத் சீனிக்கு ஜோடியாக நடிப்பது பற்றி கூறும் சுபிக்‌ஷா, கடந்த முறை கடுகு படத்தில் எனக்கும் அவருக்கும் ஒரு சில காட்சிகளே இருந்தன, அதை பற்றி நான் விஜய் மில்டன் சாரிடம் சொன்னேன். அதை விஜய் மில்டன் சீரியஸாக எடுத்து கொண்டார் போல, கோலி சோடா-2 படத்திலும் எங்களை நடிக்க வைத்து, எனக்கும் பாரத் சீனிக்கும் அழுத்தமான காட்சிகளை கொடுத்திருக்கிறார். பாரத் சீனி ஆக்‌ஷன் காட்சிகளை விட, காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

    கோலி சோடா 2 உலகம் முழுவதும் வரும் ஜூன் 14-ஆம் தேதி வெளியாகிறது. ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் பாரத் சீனி இந்த படத்தை தயாரித்திருக்கிறார். ஏற்கனவே வெளியான ப்ரோமோ காட்சிகளில் சுப்ரீம் சுந்தர் வடிவமைத்த சண்டைக்காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்றி இருக்கிறது. அச்சு இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார், குறிப்பாக பொண்டாட்டி பாடல் கோலி சோடா படத்தின் சுவையை கொண்டு வந்திருக்கிறது.​ #GoliSoda2 #Subhiksha

    ×