என் மலர்
நீங்கள் தேடியது "கே.ஜி.எப்.2"
- இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- அணையின் நீர்மட்டம் 83.48 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.
இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீல கிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.48 அடியாக உள்ளது. அணை க்கு நேற்று வினாடிக்கு 669 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலை யில் இன்று 2,294 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காலிங்கராயன் பாசன த்திற்கு 500 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 300 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும்,
கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் அணையில் இருந்து 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்ப ட்டு வருகிறது.
அதே சமயம் மற்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25.90 அடியாகவும்,
பெரும்பள்ளம் அணையின் நீர்ம ட்டம் இன்று காலை நிலவரப்படி 18.99 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.78 அடியாகவும் உள்ளது.
- அணைக்கு இன்று காலை நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- அணையின் நீர்மட்டம் 78.96 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதா ரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.
அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்ப குதி உள்ளது.
கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. அதே சமயம் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படு வதால் அணையின் நீர்மட்ட மும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் அணைக்கு இன்று காலை நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.96 அடியாக உள்ளது.அணைக்கு நேற்று வினாடிக்கு 1,236 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 2,594 கனடியாக அதிகரித்து வருகிறது.
அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடியும், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடியும்,
குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது
- நீர்மட்டம் 89.89 அடியாக குறைந்து உள்ளது.
- 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.
இந்த அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.89 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 657 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக 4-ம் சுற்று தண்ணீர் நேற்று முதல் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இன்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேபோல் காளிங்க ராயன் பாசனத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- திருச்சி மெயின் ரோட்டில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு அருகே சுமார் 52 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார்.
- சேலம் ஆனந்தா பாலம், தனியார் மருத்துவமனை அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
சேலம்:
சேலம் டவுன் போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட, திருச்சி மெயின் ரோட்டில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு அருகே சுமார் 52 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் டவுன் போலீசார், அவரது உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல், சேலம் ஆனந்தா பாலம், தனியார் மருத்துவமனை அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரது உடலை மீட்ட டவுன் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். பிணமாக மீட்கப்பட்ட 2 பேர் குறித்து அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- பட்டு வளர்ப்பு விவசாயிகள் 14 பேருக்கு உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அனைத்து திருமண நிதி உதவித்திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படு த்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டங்களின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
விழாவிற்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 335 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நிதி உதவியும்,
335 பயனாளி களுக்கு ரூ.1 கோடியே 49 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான தங்கமும், புதுமை பெண் நிதியுதவி பெறும் திட்டத்தின் கீழ் 2169 மாணவிகளுக்கு ரூ.43 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மொத்தம் ரூ.3 கோடியே 52 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2504 பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதேபோல் பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறந்த பட்டு வளர்ப்பு விவசாயிகள் 14 பேருக்கு ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் கணேச மூர்த்தி எம்.பி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழ் மொழித் தேர்வில் 2,492 பேர் பங்கேற்வில்லை. இது கல்வி அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்–சியை ஏற்–ப–டுத்–தி–யது.
- இதனிடையே நேற்று நடந்த பிளஸ்-2 ஆங்–கி–லம் தேர்விலும் 2,418 பேர் பங்கேற்கவில்லை.
சேலம்:
2022-2023-ம் கல்வியாண்டு, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்க ளில் நடைபெறுகிறது.
இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வு மையங்களில் 18,830 மாணவர்கள், 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 பேர் தேர்வு எழுத நுழைசீட்டு வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தமிழ் மொழித் தேர்வில் 2,492 பேர் பங்கேற்வில்லை. இது கல்வி அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே நேற்று நடந்த பிளஸ்-2 ஆங்கிலம் தேர்விலும் 2,418 பேர் பங்கேற்கவில்லை. சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 40 ஆயிரத்து 28 பேர் ஆங்கில தேர்வு எழுத வேண்டும். ஆனால், 37 ஆயிரத்து 402 மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்து கொண்டு தேர்வை எழுதினர். இதனால் 2,418 பேர் ஆங்கில தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆப்சென்ட் -க்கு என்ன காரணம்? என்பது குறித்து, ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம், சேலம் மாவட்ட பள்ளிக்கல்வி முதன்மை அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து உயர் கல்வி அதிகாரிகள், எந்த எந்த பள்ளிகளில் ஆப்சென்ட் அதிகமாக இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்க வில்லையா? எனவும், அதிக வெயில் காரணத்தால் தேர்வு எழுத வரவில்லையா? எனவும் பல்வேறு கோணங்க ளிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் சம்பந்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு உதவிப்ெபறும் பள்ளி, தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மாண வர்கள் தேர்வு எழுத வராததற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்கப்படும். மேலும் அந்த மாணவர்கள் தேர்வில் பங்கேற்க செய்ய போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதா? என்பது குறித்தும் வகுப்பு ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 92.90 அடியாக உள்ளது.
- அணையில் இருந்து 2,700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 92.90 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 756 கன அடியாக குறைந்தது.
கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2,200 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 300 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 2,700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- ராமேசுவரத்தில் இருந்து கச்சத்தீவு திருவிழாவுக்கு 72 படகுகளில் 2,400 பேர் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இங்கு வருடந்தோறும் இந்திய-இலங்கை நாட்டு மீனவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு திருப்பலி விழா நடைபெறும்.
ராமநாதபுரம்
ராமேசுவரம் அருகே இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு வருடந்தோறும் இந்திய-இலங்கை நாட்டு மீனவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு திருப்பலி விழா நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான விழா மார்ச் 3 மற்றும் 4-ந்தேதிகளில் நடைபெறுகிறது. இதில் ராமேசுவரத்தில் இருந்து மீனவர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழா குறித்து முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கடற்படை கமாண்டர் முகமதுஷானவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி பேசியதாவது:-
வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவுக்கு ராமேசு வரத்தில் இருந்து பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 2,400பேர் 60 விசைப்ப டகுகள், 12 நாட்டுப்படகுகளில் சென்று வருவதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட பொதுமக்கள் காவல்துறை, கடற்படை அலுவலர்களின் பரிசோதனைக்கு உட்பட்டு அனுப்பப்படுவார்கள். இப்பயணத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களும் அரசு வழிகாட்டுதலை கடைபிடித்து பாதுகாப்பாக சென்று வர வேண்டும்.
இவ்விழாவிற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட காவல் துறை, கடற்படை மற்றும் மீன்வளத்துறை உரிய பணிகளை திட்டமிட்டு செயல்பட்டு பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருண், துணை காவல் கண்காணிப் பாளர் உமாதேவி, ராமநாதபுரம் வருவாய் கோட்டா ட்சியர் கோபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
- குஜராத்தில் இருந்து யூரியா உரம் ரெயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, மக்காச்சோளம், எள், காய்கறிகள், வாழை, மரவள்ளி ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குஜராத்தில் இருந்து கிரிப்கோ நிறுவனத்தின் மூலம் 2,200 மெட்ரிக் டன் பாரத் யூரியா உரம் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்ததை வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி, வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுபாடு) கு.ஜெயசந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி தெரிவித்ததாவது:
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக தற்போது யூரியா உரம் 5,347 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 2,585 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1,400 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 10,169 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 896 மெ.டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு தட்டுப்பாடு இல்லாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படு த்துவதோடு, திண்டலில் உள்ள வேளாண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரைக்கப்படுவதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்தி உரச்செலவை குறைத்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.05 அடியாக உள்ளது.
- பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்வதும் பின்னர் மழை பொலிவு இல்லாததுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது.
இதனால் அணைக்கு ஒருநாள் நீர்வரத்து அதிகரித்தும், ஒரு நாள் நீர்வரத்து குறைந்தும் வருகிறது. இதனால் பவானிசாகர் அணை தொடர்ந்து 104 அடியில் நீடித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,743 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,200 கன அடி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 400 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,700 கனஅடி தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.
அனைத்து வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
ஆனால் அதே சமயம் மற்ற பிரதான அணைகளான குண்டேரிபள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 41.75 அடியிலும், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 30.84 அடியிலும்,
வரட்டு பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியிலும் தொடர்ந்து நீடித்து வருகிறது.