search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "little girl"

    • சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வந்தனர். அவர்கள் சிறுமியை மீட்க முயன்றனர்.
    • போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், தாடி பத்ரி அருகே உள்ள அவுலதிபய பள்ளியை சேர்ந்தவர் கங்க ராஜூ. இவரது மகள் அவந்தி (வயது 7). இவர் அதே ஊரில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த அவந்தி வீட்டின் அருகே ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக 2 சுவர்களுக்கு இடையில் சென்ற அவர் சிக்கிக் கொண்டார். முன்னோக்கியும் பின்னோக்கியும் செல்ல முடியாமல் அவதி அடைந்து கத்தி கூச்சலிட்டார்.

    சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வந்தனர். அவர்கள் சிறுமியை மீட்க முயன்றனர்.

    ஆனால் முடியவில்லை. பதறிப்போன பெற்றோர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்களது முயற்சி தோல்வி அடைந்தது.

    இதையடுத்து கியாஸ் கட்டர் மூலம் சுவற்றை இடித்து சிறுமியை மீட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமி காயம் இல்லாமல் மீட்கப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். தீயணைப்புத் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். 

    • பெண்ணின் இடுப்பில் துப்பட்டாவால் அந்த சிறுமி கட்டப்பட்டுள்ளது
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள தெக்கூர் கிராமம் கல்லணை கால்வாயில் இன்று காலை 30 வயது மதிக்கதக்க பெண் மற்றும் சிறுமியின் சடலங்கள் மிதந்து வந்தன.

    இதனை பார்த்த பொதுமக்கள் இரு உடல்களையும் மீட்டனர்.

    உடனடியாக தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    பெண்ணின் இடுப்பில் துப்பட்டாவால் அந்த சிறுமி கட்டப்பட்டுள்ளது. இவர்கள் யார்? இருவரும் தாய், மகளா ? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எப்படி இறந்தனர் போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

    இதையடுத்து அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த பெண், இடுப்பில் சிறுமியை கட்டிக்கொண்டு தற்கொலை செய்தாரா ? அல்லது யாரேனும் கொலை செய்து வீசினரா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 2021 ம் ஆண்டு, ஜூன் மாதம் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
    • விசாரணை நடத்திய காவல் துறையினா் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    திருப்பூா்:

    திருப்பூரை அடுத்த பல்லடத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து விரைவு மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

    திருப்பூா் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வடுகபாளையம்புதூரை சோ்ந்தவா் ஆா்.குமாா் (வயது 66), இவா் கடந்த 2021 ம் ஆண்டு, ஜூன் மாதம் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    இது குறித்து சிறுமியின் பெற்றோா் பல்லடம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், விசாரணை நடத்திய காவல் துறையினா் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    இந்த வழக்கின் மீதான விசாரணை திருப்பூா் விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பு வழங்கினாா். இதில் குற்றம் சாட்டப்பட்ட குமாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் அபராதத்தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜரானாா்.

    • இரவு சின்னப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சாலையில் செல்வோரையும் அந்த வெறிநாய் கடித்தது.
    • குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கத்தாள பேட்டை பகுதியில் வசிப்பவர் விமலா, மாதேஸ்வரன் தம்பதி. இவர்களது 2 வயது மகள் ஹரிணி அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அப்பகுதியில் இருந்த தெருநாய் ஒன்று ஹரிணியை முகத்தில் கடித்தது. இதில் அந்த குழந்தைக்கு முகத்தில் பல காயங்கள் ஏற்பட்டது. வலியால் துடித்த குழந்தையை பெற்றோர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

    இதேபோல் நேற்று இரவு சின்னப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சாலையில் செல்வோரையும் அந்த வெறிநாய் கடித்தது. இதில் சிறுவர்கள், பெரியவர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து நகராட்சி சுகாதாரத் துறையினருக்கு தகவல் தரப்பட்டு அந்த நாய் பிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

    இது குறித்து சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறியிருப்பதாவது:-

    வெறிநாய் கடித்தது குறித்து தகவல் கிடைத்தவுடன் அதற்குரிய வாகனம் மற்றும் ஆட்கள் அனுப்பி வைத்து அந்த நாய் பிடிக்கப்பட்டது. நகரில் உள்ள நாய்களுக்கு எல்லாம் கருத்தடை மற்றும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவைகளால் எவ்வித பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்படாது. இந்த நாய் வெளியில் இருந்து புதிதாக வந்துள்ளது. அதனை பிடித்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • சாலையோர தடுப்புச்சுவரில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
    • விபத்தில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள காமேஸ்வரம் ஆனையன்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருள்.இவரது மனைவி பிரபா. இந்த தம்பதிக்கு வர்ஷா (4), நிஷாலினி(7) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் காமேஸ்வரத்திலிருந்து திருப்பூண்டிக்கு மோட்டார்சைக்கிளில் அருள், பிரபா மற்றும் வர்ஷா ஆகிய 3 பேரும் சென்றுள்ளனர்.

    தென்னம்பிள்ளை சாலையோரத்தில் கீழ்க்குமிழி தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு நாகை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் 4 வயது குழந்தை வர்ஷா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்க ள்தெரிவித்தனர். மேலும் அருள், பிரபா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • திருமண ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைதானார்.
    • சிறுமியிடம் பலமுறை உதயகுமார் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகேயுள்ள குமிலாங்குலம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 19). இவர் அதேபகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி காதலித்து வந்ததாக கூறப் படுகிறது.மேலும் அந்த சிறுமியிடம் பலமுறை உதயகுமார் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். அதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.

    சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து நரிகுடி போலீசாருக்கு தகவல்த ந்த அதன் அடிப்படையில் சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய உதயகுமாரை பிடித்து விசாரணை மேற்கொண்ட னர்.

    அதில் அந்த சிறுமியை காதலித்து வந்ததும், திருமண ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்ததும் தெரியவந்தது.இதனையடுத்து நரிகுடி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் உதயகுமாரை கைது செய்தனர்.

    • போக்சோ வழக்கில் சிறுமியின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • ஆனந்தன் வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் பெத்துசெட்டிபட்டியை ேசர்ந்தவர் ஆனந்தன் (வயது44). இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது மகள் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்.28-ந்தேதி வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து வச்சக்கா ரப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஆனந்தன் புகார் செய்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்த தமிழரசன் (20) என்பவர் ஆனந்தன் மகளை கடத்தி சென்று திருமண ஆைச காட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது.

    போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ கோர்ட்டில் நடந்து வருகிறது. விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்காக ஆனந்தன் தனது மகளை அழைத்து சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்தார். இந்த நிலையில் அவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, தமிழரசன் மற்றும் தனது நண்பர் வீரபாண்டியுடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து வழக்கை வாபஸ் வாங்க கூறி ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஆனந்தன் வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணப்பெண்ணுக்கு உரிய திருமண வயது ஆகவில்லை.
    • சிறுமிக்கு குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே சாலியமங்கலம் கீழ ரெயில்வே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், கரூர் மாவட்டம் சுக்காம்பட்டியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கும் தஞ்சையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று காலை திருமண நடக்க இருந்தது.

    மணப்பெண்ணுக்கு உரிய திருமண வயது ஆகவில்லை என்பதால் திருமணத்தை நிறுத்த கோரி மாவட்ட சமூக அலுவலகத்துக்கு புகார் சென்றது.

    இதையடுத்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா மற்றும் குழுவினர் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்றனர்.

    மேலும் தஞ்சை அனைத்து மகளிர் போலீசாரும் பாதுகாப்பிற்கு சென்றனர்.

    தொடர்ந்து சிறுமியிடம் குழந்தைகள் நல குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

    அங்கு சிறுமிக்கு குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விருதுநகர் மாவட்டத்தில் சிறுமி-இளம்பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி தமிழ்செல்வி(28). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்த தமிழ்செல்வி திடீரென மாயமானார். எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்க ளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து நாகராஜ் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி அருகே மந்திரியோடை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 முடித்து விட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்நிலையில் அந்த சிறுமி வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும், விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை யடுத்து அவரது தாயார் ஆவியூர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.

    சாத்தூர் பாரதிநகரை சேர்ந்தவர் மேட்டுராஜா(43), பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. வியாபார நஷ்டம் காரணமாக மேட்டுராஜா பலரிடம் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் மீண்டும் கடன் வாங்க முடிவு செய்தார்.

    ஆனால் இதற்கு கிருஷ்ணவேணி சம்மதிக்கவில்லை. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வெளியே சென்ற மேட்டுராஜா மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் காணமுடியா ததால், கிருஷ்ணவேணி சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நவீன்குமாரை கைது செய்த போலீசார், அவரை திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
    • 16 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி, கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி பகுதியை சோ்ந்தவா் நவீன்குமாா் (வயது 22). இவா் 16 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி, கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்து சைல்டு லைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னா் மாவட்ட சமூக நல அலுவலா் சிவகாமி, காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை தொடா்ந்து நவீன்குமாரை கைது செய்த போலீசார், அவரை திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனா். 

    • மணமகனும் தாலியை பெற்றுக் கொண்டு மணமகள் கழுத்தில் கட்ட தயாரானார்.
    • சைல்டு லைன் அதிகாரிகளுக்கு குறைந்த வயதான எனக்கு தனது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைப்பதாக தகவல் தெரிவித்தார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கிராமத்தை சேர்ந்த 30 இளைஞர் ஒருவருக்கும் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அவரது உறவினர் மகள் 17 வயது சிறுமி ஒருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இந்த நிலையில் பெரியார்களால் முடிவு செய்யப்பட்ட நாளான நேற்று பாண்டி கடை தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் திருமணம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

    அதன்படி காலை 6.30 மணிக்கு மணமேடைக்கு மணமக்கள் இருவரும் வந்திருந்தனர். புரோகிதர் மந்திரங்கள் ஓதி தாலியை மணமகனிடம் எடுத்துக் கொடுத்தார்.

    மணமகனும் தாலியை பெற்றுக் கொண்டு மணமகள் கழுத்தில் கட்ட தயாரானார்.

    அப்பொழுது மணப்பெண் தாலி கட்டுவதை தடுத்து நிறுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் அப்படியே திகைத்து நின்றார். இதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்பொழுது மணமகள் தான் வைத்திருந்த செல்போன் மூலம் சைல்டு லைன் அதிகாரிகளுக்கு குறைந்த வயதான எனக்கு தனது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைப்பதாக தகவல் தெரிவித்தார்.

    இதன் அடிப்படையில் சைல்டு லைன் அதிகாரிகள் முத்துப்பேட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனைடுத்து அங்கு வந்த காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    அதன் பிறகு அங்கு வந்த சைல்டு லைன் அதிகாரிகள் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • ராதாபுரம் தாலுகா வடக்கன்குளத்தை சேர்ந்த தொழிலாளியின் மகள் 17 வயது சிறுமி 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
    • கடந்த 10-ந்தேதி வீட்டில் இருந்த சிறுமி மீண்டும் மாயமானார்

    களக்காடு:

    ராதாபுரம் தாலுகா வடக்கன்குளத்தை சேர்ந்த தொழிலாளியின் மகள் 17 வயது சிறுமி 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மாயமானர். இதுபற்றி பணகுடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து தொழிலாளி தனது மகளை மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மேல அரியகுளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே கடந்த 10-ந்தேதி வீட்டில் இருந்த சிறுமி மீண்டும் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு போலீசார் செய்து விசாரணை நடத்தி மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

    ×