search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenager was arrested"

    • அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். ஆட்டையும் மீட்டனர்.
    • போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    உடுமலை:

    உடுமலை அடுத்த கணியூரை சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் மொட்டையப்பன்(வயது 32) என்பவர் கடந்த 5ந்தேதி காலை 6 மணியளவில் உடுமலை ஆட்டு சந்தையில் ரூ. 15 ஆயிரத்துக்கு ஆடு ஒன்று வாங்கி அதை அருகில் உள்ள மரத்தடியில் கட்டி விட்டு அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது கட்டி வைத்திருந்த ஆட்டை காண வில்லை. மர்ம நபர் ஆட்டை திருடி சென்று இருந்தனர். இதில் அதிர்ச்சியடைந்த மொட்டை யப்பன், இது குறித்து உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில், உடுமலை காந்தி சவுக்கு பத்ரகாளியம்மன் லே-அவுட் டை சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் சேது மாதவன் (வயது 22 )என்பவர் ஆட்டை திருடி சென்றது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். ஆட்டையும் மீட்டனர்.

    • பல்லடம் அடுத்த கள்ளிப்பாளையம் தண்ணீர் பந்தல் அருகே உள்ள அபிராமி நகரில் குடியிருந்து வருகிறார்.
    • காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    பல்லடம்:

    சிவகங்கையைச் சேர்ந்த குப்புசாமி என்பவரது மகள் காமாட்சி என்கிற கவிதா (வயது 30). இவர் தற்போது பல்லடம் அடுத்த கள்ளிப்பாளையம் தண்ணீர் பந்தல் அருகே உள்ள அபிராமி நகரில் குடியிருந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து தனிமையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்த போது நாகை திருக்குவளை, கொடியளாத்தூரைச் சேர்ந்த அத்தியப்பன் என்பவரது மகன் பிரகாஷ் (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் தற்போது திருப்பூர், வீரபாண்டி சுண்டமேடு பகுதியில் தங்கி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் இருவருக்கும் மில்லில் ஒன்றாக பணிபுரிந்த போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவத்தன்று பிரகாஷ், காமாட்சி என்கிற கவிதாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு திருமணம் செய்து கொள்வது சம்பந்தமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காமாட்சி என்ற கவிதாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் அவர் சத்தம் போடவே உடனடியாக அங்கிருந்து பிரகாஷ் தப்பி ஓடிவிட்டார். சத்தம்கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து உடனடியாக அவரை மீட்டு பல்லடத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படை யில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த பிரகாஷை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்ட எஸ்பி பிரபாகர் உத்தரவின் படி கோத்தகிரியில் போதை பொருட்கள் ஒழிப்பு சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குஞ்சப்பனை சோதனை சாவடி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் தவிட்டுமேட்டை சேர்ந்த பாலன்(23) என்பதும், கஞ்சா விற்க நின்றதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • நவீன்குமாரை கைது செய்த போலீசார், அவரை திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
    • 16 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி, கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி பகுதியை சோ்ந்தவா் நவீன்குமாா் (வயது 22). இவா் 16 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி, கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்து சைல்டு லைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னா் மாவட்ட சமூக நல அலுவலா் சிவகாமி, காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை தொடா்ந்து நவீன்குமாரை கைது செய்த போலீசார், அவரை திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனா். 

    ×