என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி"

    • உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டது.
    • உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது.

    போரூர் அருகே கடந்த 2017-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன் உடலை எரித்த வழக்கில் தஷ்வந்தை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

    இதனை தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த் தன் தாயை அதே ஆண்டு கொலை செய்து தப்பித்ததாக குற்றம்சாட்டிய போலீசார் மும்பையில் வைத்து தஷ்வந்த்தை கைது செய்தனர்.

    இதையடுத்து சிறுமி கொலை வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்த்தை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனிடையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

    தொடர்ந்து கடந்த மாதம், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தஷ்வந்த் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறிய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டது.

    வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் சிறுமி வன்கொடுமை வழக்கில் இருந்து தஷ்வந்த் விடுதலை செய்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது.

    நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ரத்து செய்து, விடுவித்த தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரிய மனுவை, தீர்ப்பு வழங்கிய நீதிபதி விக்ரம்நாத் இன்று விசாரித்தார்.

    அப்போது, தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • சிறுமி கோமா நிலையிலேயே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
    • மோட்டார் விபத்து உரிமை கோரல் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகராவில் உள்ள சோரோட் பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பேபி(வயது68) மற்றும் அவரது பேத்தியான 9 வயது சிறுமி த்ரிஷானா ஆகிய இருவரின் மீதும் அந்த வழியாக அதிவேகமாக சென்ற கார் மோதியது.

    இதில் மூதாட்டி பேபி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள் மீது மோதிய கார் நிற்காமல் சென்றுவிட்டது. அந்த கார் 10 மாதங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த விபத்து தொடர்பான வழக்கில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எந்த காப்பீட்டு தொகையும் கிடைக்கவில்லை.

    கார் மோதியதில் காயமடைந்த சிறுமி தற்போது வரை கோமா நிலையிலேயே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆகவே இந்த வழக்கை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் மோட்டார் விபத்து உரிமை கோரல் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.

    அந்த தீர்ப்பாயம், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தேசிய காப்பீட்டு நிறுவனம் ரூ1.15கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. அந்த தொகையை சிறுமியின் வங்கி கணக்கில் செலுத்தவும், அதில் ரூ.25 லட்சத்தை அவளது மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக எடுக்கலாம் எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    • சிட்-அப்கள் செய்து முடித்த சிறிது நேரத்திலேயே கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது.
    • குழந்தையால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் தாலுகாவில் பள்ளிக்கு தாமதமாக வந்ததற்காக தண்டனையாக 100 முறை சிட்-அப் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதால் 13 வயது சிறுமி உயிரிழந்தார்.

    கடந்த வாரம், ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியின் மாணவி அன்ஷிகா கவுட்-க்கு, பள்ளிப் பையுடன் 100 முறை சிட்-அப்கள் செய்து முடித்த சிறிது நேரத்திலேயே கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது.

    மாலை வீடு திரும்பியபோது சிறுமியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் பெற்றோர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    நிலைமை மேலும் மோசமடைந்து சிறுமி மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஒரு வாரமாக சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் பலனளிக்காமல் நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தண்டனைக்குப் பிறகு, தங்கள் மகளின் கழுத்து மற்றும் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டதாகவும், குழந்தையால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்த காவல்துறை, பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. 

    அன்ஷிகாவின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக வட்டார கல்வி அதிகாரி பாண்டுரங் கலங்கே தெரிவித்தார். 

    • பொதுமக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
    • அந்த வாலிபரை எனக்கு தெரியும், தினமும் என்னை பின்தொடர்ந்து வருவான்.

    அரியானா மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் அங்குள்ள நூலகத்திற்கு தினமும் படிக்க செல்வது வழக்கம். சிறுமியை வாலிபர் ஒருவர் நோட்டமிட்டு வந்தார். அவரும் நூலகத்திற்கு சென்று வருவார்.

    இந்நிலையில் வழக்கம் போல் சிறுமி நூலகத்திற்கு வந்தார். அவர் வருவதை அறிந்து அங்கு காத்திருந்த அந்த வாலிபர் சிறுமியை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

    இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அந்த வாலிபரை எனக்கு தெரியும், தினமும் என்னை பின்தொடர்ந்து வருவான். மன ரீதியாக என்னை துன்புறுத்தினான் என்று கூறியுள்ளார்.

    சம்பவ இடத்தில் வாலிபர் துப்பாக்கியை விட்டுச்சென்றுள்ளார். அதனை போலீசார் கைப்பற்றினர்.

    அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் மூடியை திறந்து குப்பைகளை அகற்றினர்.
    • தவறு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், மவுலா கா சில்லாவை சேர்ந்தவர் முகமது சல்மான். இவரது மகள் ஜெனப் (வயது 3). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார்.

    மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் மூடியை திறந்து குப்பைகளை அகற்றினர். வேலை முடிந்த பிறகு பாதாள சாக்கடை குழியை மூடாமல் சென்றனர்.

    நேற்று காலை ஜைனப் தனது தாயுடன் பள்ளிக்குச் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்தார். இதனைக் கண்ட அவரது தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகளை பாதாள சாக்கடையில் இருந்து காயம் எதுவும் இன்றி பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த வீடியோவை கண்ட மாநகராட்சி அதிகாரிகள் சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமிக்கு காயம் ஏதாவது ஏற்பட்டதா என விசாரணை நடத்தினர். மேலும் தவறு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

    • ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    தமிழ்நாட்டில் தெருநாய் தொல்லை தற்போது அதிகரித்துள்ளது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு நாய்க்கு ஆதரவாக பேசியவர்களின் கருத்துக்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் அனாமிகா என்ற 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    • 15 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியிலான சில்மிஷத்தில் சசிகுமார் ஈடுபட்டுள்ளார்.
    • மாணவி படிக்கும் பள்ளியில் தவறான தொடுதல் தொடர்பான வகுப்பு சமீபத்தில் நடைபெற்றது.

    கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 45). இவர் கடந்த 2002-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.

    தற்போது பாளையங்கோட்டை ஆயுதப்படையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ள நிலையில் குடும்பத்துடன் பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாக குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் சசிகுமார் பாளையங்கோட்டையில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவர்களது குடும்பத்தினருடன் அவர் நெருங்கி பழகி வந்த நிலையில் உறவினரின் மகளான 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியிலான சில்மிஷத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவரது உறவினர் குடும்பத்தினருக்கு தகவல் எதுவும் தெரியாமல் இருந்துள்ளது.

    இந்நிலையில் அந்த மாணவி படிக்கும் பள்ளியில் தவறான தொடுதல் தொடர்பான வகுப்பு சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அப்போதுதான் அந்த மாணவிக்கு சசிகுமார் பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்த விபரம் தெரியவந்துள்ளது. இதையடுத்து மாணவி தனது தாயாரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். ஆனாலும் அவரது தாய் போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனிடையே அவர் படிக்கும் பள்ளியில் சக மாணவிகளிடம் தனக்கு சோர்வாக இருப்பதாக தெரிவித்த அந்த மாணவி அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். உடனடியாக சக மாணவிகளின் அறிவுறுத்தலின் பேரில் 'ஒன் ஸ்டாப்' சென்டரை தொடர்பு கொண்ட அந்த மாணவி நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். இதையடுத்து குழந்தைகள் நலன் சார்ந்த அதிகாரிகள் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து ள்ளனர்.

    இதையடுத்து சிறுமியிடம் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு ஏட்டு சசி குமாரை கைது செய்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மாணவியின் தாயாருக்கும், தலைமை காவலர் சசி குமாருக்கும் நெருக்கமான பழக்கம் இருப்பதாகவும், அதன் காரணமாகவே மாணவியின் புகாரை போலீசில் தெரிவிக்க அவரது தாயார் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 33 வயதான சுர்ஜித் தனது மாமா வீட்டுக்கு சென்றுள்ளார்.
    • மாமாவின் மகள் சுர்ஜித்துக்கு ராக்கி கட்டிவிட்டுள்ளார்.

    உத்தரபிரதேசத்தில் ரக்ஷா பந்தன் அன்று தனது கையில் ராக்கி கட்டிய தங்கை முறை உறவு கொண்ட 14 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    33 வயதான சுர்ஜித் தனது மாமா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவனது மாமாவின் மகள் சுர்ஜித்துக்கு ராக்கி கட்டிவிட்டுள்ளார். இதனையடுத்து இரவில் மது அருந்திய சுர்ஜித் போதையில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான். பின்னர் அவளது உடலை அந்த அறையில் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை போல சித்தரித்துள்ளான்.

    அடுத்த நாள் தனது மகள் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியைடந்த அவளது அப்பா போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    முதலில் இதை தற்கொலை என நினைத்த போலீசார் சிறுமியின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தான் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொள்ளப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் உறவினர்களிடம் விசாரித்த போலீசார் முன்னுக்கு பின் முரணாக பேசிய சுர்ஜித்தை கைது செய்து விசாரித்தனர். பின்னர் சுர்ஜித் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • மாணவி பள்ளிக்கு வந்தபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார்.
    • இது குழந்தைகளுக்கு ஏற்படுவது அரிதான நிகழ்வு.

    ராஜஸ்தான் மாநிலம் சிகாரின் டான்டா நகரை சேர்ந்த சிறுமி பிராச்சி குமாவத் (வயது 9) இவர் அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார் .

    கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் பள்ளியில் சக மாணவிகளுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட சென்றார். சாப்பாடு பாத்திரத்தை திறந்த போது மாணவிக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. அவள் வகுப்பிலேயே சரிந்து விழுந்தார்.

    பதறிப்போன ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    குடும்பத்தினர் அவளை சிகாரில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி இறந்தார்.

    மாணவி பள்ளிக்கு வந்தபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். காலை பிரார்த்தனை மற்றும் கூட்டத்திலும் பங்கேற்றார். மதிய உணவு நேரத்தில் அவள் மயக்கமடைந்துள்ளார்.

    மாணவி மாரடைப்பு காரணமாக இருந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பள்ளியில் பதிவு செய்யப்பட்ட கடைசி வீடியோவில், மாணவி சிரித்துக் கொண்டே தன்னையும் தனது வகுப்புச் சான்றிதழ்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டு நடந்து செல்வது காணப்பட்டது.

    பிராச்சிக்கு எந்த தீவிர அறிகுறிகளும் இல்லை என்றும், அவரது திடீர் மரணம் தங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    இது குழந்தைகளுக்கு ஏற்படுவது அரிதான நிகழ்வு. சில நேரங்களில், பிறவி இதய நோய் அல்லது மின் தூண்டுதலில் தொந்தரவு இருக்கலாம், பெற்றோர்கள் அவற்றைக் கவனித்திருக்க மாட்டார்கள். ஆனால் அது விசாரிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் வர்மா என்பவர் கூறினார்.

    இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின் மகளை சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது.
    • தாய் புகார் அளித்ததை அடுத்து வனத்துறையினர் சிறுமியை தேடி வருகின்றனர்.

    கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த பச்சைமலை எஸ்டேட்டில் தாயின் கண்முன்னே 4 வயது சிறுமி ரோஷினியை சிறுத்தை கவ்விச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பச்சமலை எஸ்டேட்டில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின் மகளை சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது.

    வீட்டின் அருகே சிறுமி ரோஷினிகுமாரி விளையாடி கொண்டிருந்தபோது சிறுத்தை பாய்ந்து கவ்விச் சென்றுள்ளது.

    இதை நேரில் கண்ட தாய் புகார் அளித்ததை அடுத்து வனத்துறையினர் சிறுமியை தேடி வருகின்றனர்.

    • லாரி மோதி சிறுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • தன் கண் முன்னே மகளை பறிகொடுத்த தாய் கதறி அழுதார்.

    சென்னை பெரம்பூர் பகுதியில் நேற்று காலை தண்ணீர் லாரி மோதி, ஸ்கூட்டியில் தாயுடன் சென்ற சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து நெரிசல் நேரத்தில் லாரி சென்றதை தடுக்கத் தவறிய போக்குவரத்து ஆய்வாளர் சுடலை மணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    மேலும், போக்குவரத்துக் காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • சிறுமியின் தந்தை பக்கத்து வீட்டின் இரண்டாம் தளத்தில் உள்ள பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார்.
    • அப்பகுதியைச் சேர்ந்த சில சிறுவர்களே செய்ததாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    டெல்லியின் நேரு விஹார் பகுதியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

    இரத்தம் கசிந்த நிலையில், ஒரு சூட்கேஸில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று இரவு (ஜூன் 7) இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுமியின் முகத்தில் காயங்களும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறிகளும் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சிறுமி அருகில் உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்று 2 மணி நேரமாக திரும்பாததால் பெற்றோர் அவளை தேடத் தொடங்கினர். நேரில் பார்த்தவர்கள், சிறுமி அவளது வீட்டுக்கு 200 மீட்டர் தள்ளியுள்ள பக்கத்து வீட்டில் நுழைவதை கண்டதாக தெரிவித்தனர்.

    எனவே சிறுமியின் தந்தை பக்கத்து வீட்டின் இரண்டாம் தளத்தில் உள்ள பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சூட்கேஸில் இரத்த வெள்ளத்தில், அரை நிர்வாணமாகக் கிடந்த தனது மகளை தந்தை கண்டார்.

    இக்குற்றத்தை அப்பகுதியைச் சேர்ந்த சில சிறுவர்களே செய்ததாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு டெல்லி, காஜியாபாத், மீரட், அலிகர் ஆகிய இடங்களில் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    இந்தச் சம்பவம் அப்பகுதியில் பீதியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தலைநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கடுமையான கவலை ஏற்பட்டுள்ளது. 

    ×