search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SupremeCourt"

    • நாங்கள் நீதிமன்றங்களை கோயில்களாக கருதுகிறோம். நீதி வழங்குவது கடவுளின் வேலை,
    • உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி எனக்கு கிருஷ்ணர் உருவில் தெரிந்தார் என்று கூறியுள்ளார்.

    சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று (பிப் 20) தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக, இன்று டெல்லி சட்டமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்ட உரையின் போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "நாங்கள் நீதிமன்றங்களை கோயில்களாக கருதுகிறோம். நீதி வழங்குவது கடவுளின் வேலை, அதனால் தான் நீதிபதிகள் தீர்ப்புகளை அறிவிக்கும் போது அதனை கடவுளின் தீர்ப்பாக நாங்கள் பார்க்கிறோம். நேற்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி எனக்கு கிருஷ்ணர் உருவில் தெரிந்தார் என்று கூறியுள்ளார்.

    பாஜகவின் பித்தலாட்டத்தை உச்சநீதிமன்றத்தில் கடவுளே வந்து அம்பலப்படுத்தினார். பாஜக தேர்தலில் நியாயமாக வெற்றி பெறாமல், குறுக்கு வழியில் வெற்றி தேடியதை வீடியோ ஆதாரம் மூலமாக இந்திய நாடே பார்த்தது என்று பேசியுள்ளார்.

    • திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு பெண்ணை வேலையை விட்டு நீக்குவது பாலின பாகுபாடு
    • 8 வாரத்திற்குள் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு பெண்ணை வேலையை விட்டு நீக்குவது "பாலின பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையின் மோசமான ஒன்று என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    1988 ஆகஸ்டில் ராணுவ செவிலியர் சேவையில் இருந்த லெப்டினன்ட் செலினா ஜான், திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக பணியில் இருந்து நீக்கப்பட்ட வழக்கை விசாரிக்கும் போது, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

    திருமணம் செய்து கொண்டார் என்பதை காரணமாக கூறி வேலையை விட்டு நீக்கப்பட்ட, ராணுவத்தில் செவிலியராக இருந்தவருக்கு 8 வாரத்திற்குள் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    குறிப்பிட்ட காலத்திற்குள் அவருக்கு இழப்பீடு பணம் வழங்க படாவிட்டால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து பணம் செலுத்தும் தேதி வரை தொகைக்கு ஆண்டுக்கு 12% வட்டி வசூலிக்கப்படும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    • ‘தேர்தல் பத்திரத் திட்டம்’ அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
    • நன்கொடையாளர்கள் குறித்த ரகசியம் காப்பாற்றப்பட வேண்டுமென பாஜக அரசு இந்த வழக்கில் வாதாடியது. அதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

    தேர்தல் பத்திரத் திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுள்ளது.

    இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் பத்திரத் திட்டம்' அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி குறித்த காலத்தில் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

    பாஜக அரசு 2017 ஆம் ஆண்டு கொண்டு வந்த 'தேர்தல் பத்திர திட்டம்' அரசமைப்புச் சட்டத்துக்கும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கும் எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 19 (1 ) (A) க்கு எதிராகத் தேர்தல் பத்திர திட்டம் உள்ளது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் யாரெல்லாம் நன்கொடை வழங்கினார்கள், எவ்வளவு வழங்கினார்கள், என்ற முழுமையான விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மார்ச் 6 க்குள் வழங்க வேண்டுமென்றும், தேர்தல் ஆணையம் அந்த விவரங்கள் அனைத்தையும் தனது இணையப் பக்கத்தில் மார்ச் 13ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

    தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தது மட்டுமின்றி நன்கொடை கொடுப்பவரின் விவரங்களை ரகசியமாக வைத்திருப்பதற்கென வருமானவரிச் சட்டம், ரிசர்வ் வங்கி சட்டம் முதலானவற்றில் பாஜக அரசு செய்த திருத்தங்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன் மூலம் எந்த அரசியல் கட்சிக்கு எந்த நிறுவனம் எவ்வளவு நன்கொடை வழங்கியது என்ற உண்மை இந்திய குடிமக்களுக்குத் தெரியவரும்.

    2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், 2024 ஆம் ஆண்டு ஜனவரி வரையிலான காலத்தில் 16,518 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகி உள்ளன எனவும், அதில் சுமார் 6600 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரியவந்துள்ளது.

    இந்தியாவிலேயே மிக அதிகமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை தேர்தல் நன்கொடையாகப் பெற்றுள்ள பாஜக, அதை எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெற்றது என்பதும், அதற்காக அந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு என்னென்ன சலுகைகள் கொடுக்கப்பட்டன என்பதும் விரைவில் தெரியவரும்.

    நன்கொடையாளர்கள் குறித்த ரகசியம் காப்பாற்றப்பட வேண்டுமென பாஜக அரசு இந்த வழக்கில் வாதாடியது. அதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த வழக்கில் பாஜக அரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி, அடுத்து நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் அது அடையப்போகும் தோல்விக்கு முன்னோட்டம் என்றே மக்கள் கருதுகின்றனர்.

    உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தன்னை இணைத்துக்கொண்டிருந்தது. இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரியதற்கு மற்றவர்கள் குறிப்பிட்ட காரணங்களை ஆதரித்ததோடு, விசிக போன்று விளிம்புநிலை மக்களுக்கு சேவை செய்யும் சிறிய கட்சிகளுக்கு இந்தத் திட்டம் பாகுபாடு காட்டுகிறது எனவே இதை ரத்து செய்யவேண்டும் என விசிக தரப்பில் வாதிடப்பட்டது. அதை உச்சநீதிமன்றம் அங்கீகரித்து கருத்து தெரிவித்திருந்தது.

    இந்திய தேர்தல் சனநாயகத்தைக் காப்பாற்றுவதில் இந்தத் தீர்ப்பு பெரும் பங்களிப்பாக அமைந்துள்ளது. அதற்காக உச்சநீதிமன்றத்தை மனமாரப் பாராட்டி நன்றி தெரிவிக்கிறோம். இந்தத் தீர்ப்பை வழங்கியது போலவே மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் குறித்த வழக்கையும் விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது
    • நீதிமன்றகாவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி

    அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்தனர். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் நெஞ்சுவலி காரணமாக அரைசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் ஆழ்வார்பேட்டை காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி மேகலா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.

    நீதிபதி பரத சக்ரவர்த்தி செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும் என்றும் நீதிபதி நிஷா பானு கைது நடவடிக்கை செல்லாது என்றும் தீர்ப்பளித்தார்.

    இதைதொடர்ந்து 3-வது நீதிபதி கார்த்திகேயன் இந்த மனுவை விசாரித்தார். அவர் கைது நடவடிக்கை செல்லும் என்று தெரிவித்ததை தொடர்ந்து, செந்தில்பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி தரப்பில் தங்களது தரப்பு விவாதங்களை எடுத்து வைத்தனர். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு இந்த மனு மீது இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும் என்றும், வருகிற 12-ந்தேதி வரை அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இன்றே அமலாக்கத்துறையினர் காவலில் எடுக்க முடிவு செய்திருப்பதால் 5 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என உறுதி
    • மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்- உச்சநீதிமன்றம்

    சென்ற மே மாதம் மணிப்பூரில் இரு இனத்தவருக்கிடையே மோதல் உருவானது. பிறகு, இதுபெருங்கலவரமாக மாறியது. இதனால் பலர் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் புகலிடம் தேடும் நிலைமை உருவானது. வீடுகள், கட்டிடங்கள், பள்ளிகள் தாக்கப்பட்டன, வழிபாட்டு தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

    அதிகாரபூர்வமாக இதுவரை 142 பேர் பலியானதாகவும், 300 பேர் காயமடைந்துள்ளதாகவும், மற்றும் சுமார் 54 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இம்மாநில கலவரம் தொடர்பாக மே மாதம் நடைபெற்றதாக சொல்லப்படும் ஒரு சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதில் ஒரு அதிர்ச்சி தரும் காட்சி இருந்தது.

    அந்த வீடியோவில் ஆண்கள் நிறைந்த கும்பல் ஒன்றில் இருபெண்கள் ஆடையின்றி அழைத்து செல்லப்படுகிறார்கள். பிறகு அவர்கள் மானபங்கபடுத்தப்படுகிறார்கள்.

    நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த வீடியோ காட்சிகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் நரசிம்மா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோரை உள்ளடக்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் தங்களது வேதனையை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து நீதிபதிகள் தெரிவித்திருப்பதாவது:-

    இது எங்களை மிகவும் மனதளவில் பாதித்திருக்கிறது. இந்த சம்பவம் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் உடனடியாக தலையிட்டு அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து, அதனை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    நாங்கள் அரசாங்கங்களுக்கு அவகாசம் அளித்து காத்திருக்கிறோம். ஆனால் எதுவும் நடைபெறவில்லையென்றால் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

    இவ்வாறு அந்த பெஞ்ச் கூறியிருக்கிறது.

    ஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்க இயலாது என்று மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. #SupremeCourt
    புதுடெல்லி:

    ஆண்களுக்கான திருமண வயது 21 ஆக இருக்கிறது. இந்த திருமண வயதை 18 ஆக குறைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் அசோக்பாண்டே என்ற வக்கீல் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    ஆண்களுக்கு திருமண வயது 21 என்றும், பெண்ணுக்கு திருமண வயது 18 என்றும் தற்போது சட்டம் உள்ளது. இருபாலருக்கும் திருமண வயதில் இந்த வித்தியாசம் ஏன் இருக்க வேண்டும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக காரணம் எதுவும் இல்லை.

    18 வயது நிரம்பிய ஆண் வாக்களிக்கவும், ராணுவத்தில் சேரவும் அனுமதி அளிக்கும் போது திருமணம் செய்ய ஏன்? அனுமதிக்ககூடாது.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.பவுல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. ஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்க இயலாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.



    மேலும் பொதுநலனுக்கு உகந்த வழக்கு இது அல்ல என்று கூறி மனுவை தாக்கல் செய்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #SupremeCourt
    லோக்ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #LokayuktaBill #SupremeCourt

    புதுடெல்லி:

    மத்திய மந்திரிகள், மாநில மந்திரிகள், மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க பாராளுமன்றத்தில் லோக் பால் மசோதாவும், லோக் ஆயுக்தா மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

    இதை பின்பற்றி மாநிலங்கள் சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதாவை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி 13 மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

    தமிழகம், காஷ்மீர், புதுவை உள்பட 11 மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதையடுத்து தமிழக அரசு லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஜூலை 10-ந்தேதி வரை (இன்று) கெடு விதித்தனர்.

    லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றி அது பற்றி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து தமிழக அரசு லோக் ஆயுக்தா மசோதாவை தயாரித்து அதை நேற்று சட்டசபையில் நிறைவேற்றியது. இதுபற்றிய பிரமாண பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்தது.

    இன்று இந்த வழக்கு சுப்ரீம கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது லோக் ஆயுக்தா மசோதாவை தமிழக அரசு 2 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த வழக்கில் புதுவை அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் லோக்ஆயுக்தா வரைவு மசோதா தயாராகி வருவதாகவும், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததும் சட்டம் நிறை வேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. #LokayuktaBill #SupremeCourt

    கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டது. #KudankulamPlant #SupremeCourt
    புதுடெல்லி:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையம் செயல்படுவதற்கு கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அணுமின் நிலையம் பாதுகாப்பாக இயங்குவது தொடர்பாக, 17 விதிமுறைகள் அடங்கிய பரிந்துரையை வழங்கியது. அதில் முக்கிய நிபந்தனை, அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான வசதிகள் கொண்ட கட்டமைப்பை அணுமின் நிலையம் 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்பதாகும்.



    இந்த 5 ஆண்டு கால அவகாசம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், மேலும் 5 ஆண்டு கால அவகாச நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கோரி இந்திய அணுமின்சக்தி கழகம் கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வசதியை கட்டமைப்பதற்கான தொழில் நுட்பம் முழுவதும் கைவராத நிலையில் அதனை அமைப்பதில் சிக்கல்களை சந்தித்து வருவதாகவும் அதனால் மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் தேவை என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதற்கிடையே, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் அணுக்கழிவுகளை உலைக்கு உள்ளேயே சேகரித்து வைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் போதிய வசதிகளை கட்டி முடிக்கும் வரை கூடங்குளத்தில் உள்ள 2 உலைகளில் இருந்து மேலும் கழிவுகள் உண்டாகாமல் இருக்கும் வகையில், இந்திய அணுமின்சக்தி கழகத்தின் கோரிக்கையை நிராகரித்து பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தி முடிக்கும் வரை இரு அணுஉலைகளிலும் மின் உற்பத்தியை நிறுத்தி வைத்து அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அணுமின் நிலையத்தை மூட உத்தரவிடவேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

    இந்த வழக்கில், கூடங்குளம் அணு உலையில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாளும் வகையில் என்னென்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறித்த நிலைத்தகவல் அறிக்கையை ஏற்கனவே இந்திய அணுமின்சக்தி கழகம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்தது. அந்த நிலைத்தகவலை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த நீதிபதிகள், அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அரசுக்கு வருகிற 2022-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

    மேலும் அதுவரை கூடங்குளம் அணு உலை இயங்குவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், அணு உலையின் பாதுகாப்பு குறித்தும் விளக்கி தனியாக ஒரு மனுவை மனுதாரர் விரும்பினால் தாக்கல் செய்யலாம் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷணிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.  #KudankulamPlant #SupremeCourt #Tamilnews

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற உள்ள நிலையில் தமிழக அரசு மற்றும் கர்நாடக அரசு முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளது. #CauveryIssue #SupremeCourt
    புதுடெல்லி :

    தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே நீண்ட காலமாக காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பிரச்சினை நீடித்து வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கின்  மேல் முறையீட்டை  விசாரித்தது. காவிரியில் தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய தண்ணீரின் அளவை 177.25 டி.எம்.சி.யாக குறைத்து தீர்ப்பு வழங்கியது.

    காவிரி நதிநீர்  பங்கீடு தொடர்பான வரைவு செயல்திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டது. நீண்ட இழுபறிக்குப் பிறகு வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது. அப்போது வரைவு செயல் திட்டம் தொடர்பாக மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டு தெரிவிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு வழக்கு காவிரி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் முன்பு தமிழக அரசு 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளது. அவை வருமாறு:-

    1. காவிரி தொடர்பான அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும்.

    2. இதனை உடனடியாக அரசிதழில் வெளியிட்டு அமல்படுத்த வேண்டும்.

    3. காவிரி தொடர்பான அமைப்பின் தலைமையிடத்தை பெங்களூருவில் இருந்து மாற்ற வேண்டும்.

    இதேபோல் கர்நாடக அரசும் தங்கள் கருத்தை முன்வைக்க உள்ளது. வரைவு செயல் திட்டத்தில் உள்ள சில அம்சங்களைத் தவிர மற்றதை முழுவதும்  ஏற்றுக்கொள்வதாக கர்நாடக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.  நீர் பயன்பாட்டிற்கு மாநில அரசுகளுக்கு சுதந்திரம் அளிக்க வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

    குறிப்பாக, தண்ணீர் அளவு மற்றும் பயன்பாடு குறித்து நதிநீர் பங்கீட்டு குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்ற விதியை மாற்ற வேண்டும் என்று கர்நாடக வலியுறுத்த உள்ளது. #CauverIssue #SupremeCourt  
    ×