என் மலர்
நீங்கள் தேடியது "செந்தில் பாலாஜி வழக்கு"
- செந்தில் பாலாஜிக்கான ஜாமின் நிபந்தனைகளில் தளர்வு கோரி வழக்கு தொடரப்பட்டது.
- தனது நிலைப்பாட்டை நீதிமன்றம் தெளிவாக வழக்கு விசாரணையின்போது கூறியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், செந்தில் பாலாஜி மீது பண பரிவர்த்தனை உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது பின்னர். அவர் கைதும் செய்யப்பட்டார். இதனால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணைக்கு இடையே, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கான ஜாமின் நிபந்தனைகளில் தளர்வு கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட நபர் அமைச்சராக இருக்கக் கூடாதா? நீதிமன்றம் அப்படி கூற முடியாது என வாதம் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம். ஆனால், அமைச்சராகும்போது சாட்சியங்களை கலைக்க முயற்சிப்பதாக புகார் வந்தால் , ஜாமீன் விதிமுறைகளை மீறினார் செந்தில் பாலாஜியின் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், தனது நிலைப்பாட்டை நீதிமன்றம் தெளிவாக வழக்கு விசாரணையின்போது கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் எந்த ஒரு மாற்றுக் கருத்தோ, குழப்பமோ இருக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நபர் அதிகாரத்தில் இல்லை என்பதால் தான் ஜாமின் வழங்கப்பட்டதாக நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.
மீண்டும் அமைச்சராக விரும்பினால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
- சட்டப்பூர்வமாக ஜாமின் கிடைத்த பிறகு தான் அமைச்சராக பதவியேற்றதாக செந்தில் பாலாஜி தரப்பு வாதம்.
- செந்தில் பாலாஜி அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க மாட்டார் என எப்படி கூற முடியும் ?
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சட்டப்பூர்வமாக ஜாமின் கிடைத்த பிறகு தான் அமைச்சராக பதவியேற்றதாக செந்தில் பாலாஜி தரப்பு வாதம் செய்துள்ளது.
ஜாமின் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி வழங்கவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.
செந்தில் பாலாஜி அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க மாட்டார் என எப்படி கூற முடியும் ? எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி சமரசம் செய்த விதம் குறித்து கண்டுபிடிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைப்பார் என்ற அச்சம் இருந்தால் வழக்கு விசாரணையை வேற மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.
மேலும், மெரிட் அடிப்படையில் நாங்கள் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கவில்லை, அரசியல் சாசன பிரிவுஐ மீறியதன் காரணமாகவே ஜாமின் வழங்கப்பட்டது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
- செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
- குற்றப்பத்திரிகையில் அசோக்குமார் உள்ளிட்ட 13 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
அசோக் குமார் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அமலாக்கத்துறை கடந்த ஜனவரியில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அசோக்குமார் உள்ளிட்ட 13 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- நாங்கள் எழுப்பிய கேள்விக்கு முதலில் பதில் அளிக்க வேண்டும் என அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
- இதுபோன்ற கேள்வி அமலாக்கத்துறைக்கு எதிரானதாக எடுத்துக் கொள்ள கூடாது.
பண மோசடி வழக்கில் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, செந்தில் பாலஜிக்கு சொந்தமான இடத்தில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்படாத சீகேட் ஹார்ட் டிஸ்க் அமலாக்கத் துறைக்கு எப்படி கிடைத்தது என்றும் எளிமையான கேள்விக்கு, எளிமையான பதில் தேவை என்றும் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், சோதனையில் கைப்பற்றிய பென் டிரைவில் சர்ச்சைக்குரிய கோப்பு இருந்ததா ? எனவும், கைப்பற்றிய பென் டிரைவில் சர்ச்சைக்குரிய கோப்பு இல்லை என்பதே செந்தில் பாலாஜி தரப்பின் வாதமாக உள்ளதே எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நாங்கள் எழுப்பிய கேள்விக்கு முதலில் பதில் அளிக்க வேண்டும் என அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதுபோன்ற கேள்வி அமலாக்கத்துறைக்கு எதிரானதாக எடுத்துக் கொள்ள கூடாது. 15 நிமிடங்களாக உரிய பதில் இல்லையே எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அப்போது, சோதனையில் கைப்பற்றாத சீகேட் ஹார்ட் டிஸ்க்கை ஏற்கனவே தமிழ்நாடு லஞ்சம் ஓழிப்புத்துறை வசம் இருந்ததாக அமலாக்கத்துறை வாதம் செய்தது.
கடந்த 2020, பிப்ரவரி 2ம் தேதி சோதனையிட்டபோது, இந்த விவகாரத்தை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் செந்தில் பாலாஜி எழுப்பவில்லை எனவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
இதற்கிடையே, செந்தில் பாலாஜி ஏற்கனவே ஓராண்டுக்கு மேல் சிறையில் உள்ளார். இன்னும் எத்தனை நாட்கள் சிறையில் கிழப்பது ? என செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கூறினார்.
இந்நிலையில், நாளை உரிய பதிலுடன் வர அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியதை தொடர்ந்து, வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
- செந்தில் பாலாஜி வழக்குடன் 23 வழக்குகளை விசாரித்து வருவதாக நீதிபதி அறிக்கை.
- விசாரணையை அக்டோபர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவு.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோடி செய்ததாக தொடர்ந்த வழக்கை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது.
மனு விசாரணையின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், செந்தில் பாலாஜி வழக்குடன் 23 வழக்குகளை விசாரித்து வருவதாக நீதிபதி அறிக்கை அளித்துள்ளார் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அடுத்த விசாரணைக்குள் அளிக்க வேண்டும் என்றும் விசாரணையை அக்டோபர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






