என் மலர்
நீங்கள் தேடியது "செந்தில் பாலாஜி"
- ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து வருகிறார்.
- சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
கோவை மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று செந்தில் பாலாஜிக்கு தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு மேற்கொண்டு வருகிறார். இந்த சந்திப்பின் போது தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் முதல், கிளை கழக செயலாளர்கள் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து வருகிறார்.
அந்த வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் இன்று சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, கோவையில் மாவட்டத்தில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளார்.
- எடப்பாடி பழனிசாமி தனக்கு தானே புரட்சி தமிழர் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டிருக்கிறார்.
- ஊழலை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை.
திருவண்ணாமலையில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணிக்கு விஜய் வருவது என்பது நடக்காத காரியம். தமிழக உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது என்பதற்காக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மற்றும் கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு ஆகியவற்றை சி.பி.ஜ விசாரிக்க கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழக போலீஸ்துறை மீது உள்ள நம்பிக்கை போய்விடக் கூடாது என்பதற்காக சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
தி.மு.க ஆட்சி மட்டும் அல்ல தமிழகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக மனு செய்திருப்பார்கள். இந்த கருத்தை சொல்வதால் நான் தி.மு.க கூட்டணிக்கு சென்றுவிடுவேன் என நீங்கள் கருத வேண்டாம். கரூர் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதித்திட்டம் தீட்டி இருக்க வாய்ப்பு இல்லை.
இதுபோன்ற கொடூர எண்ணம் செந்தில் பாலாஜிக்கு கிடையாது. எடப்பாடி பழனிசாமி தனக்கு தானே புரட்சி தமிழர் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வில் பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமியின் பயனாளிகள்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும். டாஸ்மாக் மூலம் 22 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு ஊழல் செய்துள்ளது என குற்றம்சாட்டும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்துக்கு செல்லாமல் ஊர், ஊராக சென்று பேசுவது ஏன்? ஊழலை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நிவாரண நிதிக்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது.
- முதற்கட்டமாக 45 நபர்களுக்கு நிதியை செந்தில் பாலாஜி வழங்கினார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த சம்பவத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்து இருந்தது.
பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே நிவாரண நிதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நிவாரண நிதிக்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிதியுதவி வழங்கினார். முதற்கட்டமாக 45 நபர்களுக்கு நிதியை அவர் வழங்கினார்.
பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் லேசான காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிதியையும் வீடு வீடாக சென்று செந்தில் பாலாஜி வழங்கினார்.
- விசாரணை முடிந்த பின்பு இறுதி அறிக்கையில் என்ன வருகின்றது என்பதை பார்த்து பேசுவோம்.
- டிசம்பரில் நடத்த வேண்டிய கூட்டத்தை ஏன் முன்கூட்டியே நடத்தினீர்கள் என பல கேள்விகள் உள்ளது.
கோவையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் சம்பவம் தொடர்பாக அரசின் சார்பில் முழு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மாவட்டத்தில் நடந்த நிகழ்வு குறித்து, கரூரிலிருந்து நான் முழு விளக்கம் கொடுத்துள்ளேன். தற்போது இது தொடர்பாக எஸ்.ஐ.டி. நிறுவப்பட்டு, விசாரணை சென்று கொண்டிருக்கிறது.
விசாரணை முடிந்த பின்பு இறுதி அறிக்கையில் என்ன வருகின்றது என்பதை பார்த்து பேசுவோம். அதுதான் சரியாக இருக்கும்.
உங்களைப் போன்ற ஒரு பத்திரிகையாளரிடம் நான் கேட்டேன். அரசின் மீது கேட்கக்கூடிய கேள்விகள், இன்னொரு பக்கம் ஏன் திரும்பி போகவில்லை என்று கேட்டேன். அதனை தான் உங்களிடமும் கூறுகிறேன். யாரை நோக்கி நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இருக்கிறதோ, அதை நீங்கள் தவிர்த்து விடுகிறீர்கள். நீங்களே உங்களை சுய பரிசோதனை செய்து பாருங்கள்.
ஏன் 2 மணி நேரம் லேட் ஆக வந்தீர்கள். 500 மீட்டருக்கு முன்பாக ஸ்கிரீன் போட்டு லைட்டை ஏன் ஆப் செய்தீர்கள் என்று கேட்க வேண்டும். 12 மணிக்கு அறிவித்துவிட்டு ஏன் 7 மணிக்கு வந்தீர்கள்.
டிசம்பரில் நடத்த வேண்டிய கூட்டத்தை ஏன் முன்கூட்டியே நடத்தினீர்கள் என பல கேள்விகள் உள்ளது. இதெல்லாம் பத்திரிகைகள், சமூக வலைதளங்களில் வருவதில்லை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதில்லை.
யாரை நோக்கி நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இருக்கிறதோ அதை எல்லாம் தவிர்த்து விடுகிறீர்கள். ஒரு கணம் நீங்களே உங்களை சுய பரிசோதனை செய்து பாருங்கள்.
எதார்த்த சூழ்நிலையை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை நம்மிடம் இருக்கிறது. என்ன நடந்தது?. எப்படி நடந்தது?. இதில் யாரெல்லாம் இருக்கிறார்கள். ஒரு கேள்வி என்னிடம் கேட்டால் எதிர் முகாமிலும் ஒரு கேள்வி கேட்க வேண்டும் அல்லவா?.
அதற்கு கேள்விகள் வந்தால் பரவாயில்லை. ஒரே தரப்பில் உங்களுடைய கேள்விகள் இருக்கிறது. கரூர் சம்பவம் சம்பந்தமாக எந்த கேள்வியும் வேண்டாம். விசாரணை முடிந்த பின்பு அறிக்கை வந்த பிறகு மீண்டும் சந்திப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதியா?
- மக்களைப் பாதுகாக்க வேண்டியதே அரசுதான் என்றார் இபிஎஸ்.
தர்மபுரி:
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலில் தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகில் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார்.
செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். அவர்களுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள் என்றதும் அனைவரும் அமைதி காத்தனர். அதன்பின் இபிஎஸ் பேசியதாவது:
தர்மபுரியில் எழுச்சிப் பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டு பின்பு ஒத்திவைக்கப்பட்டது. காரணம் உங்களுக்குத் தெரியும். கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி நடந்த சம்பவத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.
இந்த ஆட்சியாளர்கள் உரிய முறையில் பாதுகாப்பு கொடுத்திருந்தால் அந்த உயிர்களைப் பாதுகாத்திருக்கலாம். முறையான, சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் யார்? இது மக்கள் கேட்கும் குரல்.
ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதியா? நாட்டு மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணி இதுக்கெல்லாம் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. முதல்வரின் கையில்தான் காவல்துறை இருக்கிறது. சரியான முறையில் முதல்வர் உத்தரவிட்டிருந்தால், காவல்துறை சரியான முறையில் செயல்பட்டிருந்தால், பாதுகாப்புக் கொடுக்கப்பட்டிருந்தால், 41 உயிரை இழந்திருக்க வேண்டியதில்லை.
இன்னும் ஆழமாகப் பேசமுடியும். ஆனால் இந்த அரசாங்கம் ஒரு நபர் கமிஷன் அமைத்துள்ளனர், விசாரணை தொடங்கிவிட்டது. அதனால் மேலோட்டமாகத்தான் பேச முடியும். இவ்வளவு பிரச்னை நடந்துவிட்டது. தமிழகத்தை தலை குனிய விடமாட்டேன் என்று ஸ்டாலின் சொன்னார், ஆனால் இன்று தலைகுனிந்து நிற்கும் காட்சியைப் பார்க்கிறோம். நாடே அதிர்ந்துவிட்டது.
இதுவரை எத்தனையோ அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறது, எந்த ஒரு பொதுக்கூட்டத்திலும் இல்லாத அளவுக்கு 41 உயிர்கள் பறி போயிருக்கிறது என்று சொன்னால், இந்த அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். ஆட்சி உங்கள் கையில் இருக்கிறது, ஆட்சியாளர்களைத்தான் கேட்க முடியும். யார் யார் மீதோ பழி சுமத்தி தப்பிக்கக் கூடாது, ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இனியாவது பொதுக்கூட்டத்துக்கு முறையான பாதுகாப்பு தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
நான் 163 தொகுதியில் மக்களைச் சந்தித்தேன். 5 முதல் 6 மாவட்டத்தில்தான் காவல்துறை பாதுகாப்பு கொடுத்தனர், மற்ற இடங்களில் நம்முடைய கழகத் தொண்டர்கள், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் தான் பாதுகாப்பு கொடுத்தனர்.
ஆளுங்கட்சி முதல்வர் கூட்டம் நடத்தினால் ஆளே இல்லாத பகுதியில்கூட காவலர்களை நிறுத்தி பாதுகாப்பு கொடுக்கிறீர்கள். அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆளே இல்லாத இடத்தில் பாதுகாப்பு கொடுக்கும் முதலமைச்சர், ஆயிரக்கணக்கான பேர் இருக்கும் இடத்தில் ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று மக்கள் கேட்கும் கேள்விக்கு முதல்வர் பதில் சொல்லியாக வேண்டும்.
இதற்கெல்லாம் பதில் சொல்வதற்கு மக்கள் 2026 தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள், உங்களுக்குத் தகுந்த பதிலடி வழங்குவார்கள்.
அதுமட்டுமல்ல, ஸ்டாலின் மாடல் அரசு உயர் அதிகாரிகளை, செய்தியாளர்களைச் சந்தித்து இந்த ஆட்சியின் திட்டங்களைச் சொல்ல வேண்டும் என்று பணித்து, இந்த 10 நாட்களாக இந்த ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் என்று சொல்லிவருகிறார்கள். அது சொல்லலாம், ஆனால் கரூரில் நடந்த சம்பவத்தை எப்படி அரசு செயலாளர் சொல்ல முடியும்?
ஒரு நபர் கமிஷன் அமைத்துவிட்டு அரசு செயலாளர்களை வைத்து அரசியல் செய்யவேண்டாம். உங்கள் துறையின் பணிகளை மட்டும் நீங்கள் செய்யவேண்டும். அதைவிட்டுவிட்டு அவர் எப்போது அங்கு சென்றார், இவர் ஏன் கையைக் காட்டவில்லை என்பதெல்லாம் உங்களுடைய பேச்சாக இருக்கக் கூடாது. இதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தோண்டியெடுத்து தவறான செயலில் ஈடுபடுகின்ற அதிகாரிகளை விடமாட்டேன்.
என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? மக்களின் வரிப்பணத்தில் தான் உங்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே, நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு மக்கள் துயரத்தை எண்ணி துடித்துக்கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய துயர சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுவது எந்த விதத்தில் சரி? அரசியல்வாதிகள் தப்பித்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும், இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த ஆட்சியிலும், அதிகாரிகளிடமும் அது கிடைக்காது.
சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி நடந்த சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுகிறார், நீங்க என்ன அரசியல்வாதியா? சட்டத்தைப் பாதுகாப்பது தான் உங்கள் பொறுப்பு. சரியான பாதுகாப்பு கொடுக்காததால் இத்தனை பேரை இன்றைக்கு நாம் இழந்திருக்கிறோம். கரூரில் ஒரு டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடக்கிறது, அப்படியிருக்கும்போது ஏடிஜிபி செய்தியாளர்களிடம் நியாயப்படுத்தி பேசினர், கீழே இருக்கும் அதிகாரி எப்படி நியாயமாக விசாரிப்பார்? இவை எல்லாமே நடந்த தவறை மறைப்பதற்கு அரசு நடத்தும் கண் துடைப்பு நாடகம்.
ஸ்டாலின் அவர்களே இவ்வளவு பிரச்சனை ஏற்பட்ட பிறகும் நீங்கள் திருந்தவில்லை. கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண்மணியைத் தூக்கிக்கொண்டு செல்கிறார்கள், தலை சாய்ந்து செல்கிறார்கள். இப்படி தமிழர்கள் தலை குனிந்த காட்சிகளைக் கண்டு அனைவரும் பதறிப்போயிருக்கிறார்கள், இதற்கு பதில் சொல்ல வேண்டியது முதல்வர் தானே?
ஒரு நபர் கமிஷன் அமைத்துள்ளீர்கள், எந்த தகவல் என்றாலும் அதை கமிஷனில் தான் கொடுக்க வேண்டும். அதிகாரிகள் மூலம், தன்னுடைய அதிகாரத்தை வைத்து உண்மை சம்பவத்தை மறைத்துவிடலாம் என்றால் நிச்சயமாக நடக்காது, மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.
கரூரில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஏன் பதறுகிறார்? மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் இருக்கக் கூடாது, ஆனால் முகத்தில் பயம் தெரிகிறது. அவர் பேச்சில் பயம் தெரிகிறது, மாறி மாறி அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் எல்லாம் உண்மையை மறைத்துப் பேசுகிறார்கள். இதற்கெல்லாம் தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
பணத்தைக் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்று கரூர் எம்.எல்.ஏ நினைத்துக் கொண்டிருக்கிறார். ஒருமுறை மக்கள் ஏமாந்துவிட்டார்கள், இனியும் மக்கள் ஏமாற மாட்டார்கள். உங்களுடைய போலிக் கொலுசு, போலி வாக்குறுதி இனி எடுபடாது. அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 3 சென்ட் இடம் தன்னுடைய சொந்தப் பணத்தில் வாங்கிக் கொடுப்பதாகவும், வீடுகட்டித் தருவதாகவும் 25 ஆயிரம் பேருக்கு வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அத்தனையும் வெற்று அறிவிப்பு. அவற்றை எல்லாம் மாவட்ட மக்கள் ஞாபகம் வைத்திருக்கிறார்கள், எப்போது தேர்தல் வரும் என எதிர்பார்க்கிறார்கள். சரியான தண்டனை வழங்குவார்கள்.
துயர சம்பவம் நடந்துவிட்டது. முதல்வர் இரவோடு இரவாக வந்து ஆறுதல் சொன்னார். ரைட். துணை முதல்வர் உல்லாசமாக வெளிநாடு போய்விட்டார். ஏங்க இங்கே நாடு பத்தி எரிஞ்சிக்கிட்டு இருக்கு, நாட்டு மக்கள் பதறிக்கொண்டு இருக்கிறார்கள். உடனே தனி விமானம் பிடித்து வருகிறார், பார்த்தார், மீண்டும் விமானம் ஏறி போய்விட்டார். இவரெல்லாம் ஆண்டால் நாடு உருப்படியாக இருக்குமா? மக்கள் உயிரிழந்து துடிக்கும் நேரத்தில்கூட இவர்களுக்கு இரக்கம் இல்லை, உல்லாச சுற்றுப்பயணம் தான் முக்கியம். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாட்டு மக்கள் உணரவேண்டும்.
ஒரு துணை முதல்வர் இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்படும்போது எங்கே இருக்கவேண்டும்? தமிழ்நாட்டில் இருந்து தேவையான உதவிகளை செய்துகொடுக்க வேண்டும். அந்த நெரிசலில் சிக்கியவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதையெல்லாம் திட்டமிட்டு செயல்படுத்தி இருந்தால் ஒரு நல்ல துணை முதல்வர் என்று சொல்லலாம். ஆனால் அதையெல்லாம் கருணாநிதி குடும்பத்தில் எதிர்பார்க்க முடியாது.
யார் எப்படி இருந்தால் என்ன? தன் குடும்பம் நன்றாகயிருக்க வேண்டும். மக்களை சுரண்டி உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும். இதுதான் ஆட்சியாளர்களின் குறிக்கோள். இனியாவது அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டத்துக்கு முறையான பாதுகாப்பு கொடுங்கள். இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்று பிரித்துப் பார்க்காதீர்கள். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நம்முடைய சகோதர, சகோதரிகள் யார் இறந்தாலும் அது நம் குடும்ப இழப்பு என்பதை உணரவேண்டும். தி.மு.க. இதை இன்னமும் உணர்ந்தபாடில்லை.
அவர்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஜால்ரா அடிக்கின்றன. திருமாவளவன் உண்மையில் மனசாட்சியோடு பேசுகிறாரா? 41 உயிர் போன நேரத்தில் ஏதேதோ குற்றச்சாட்டுகள் சொல்லி ஆட்சியாளர்களூக்கு தூபம் போடுவதை விட்டுவிடுங்கள்.
இதே திருமா திருச்சியில் மாநில மாநாடு நடத்தினார். அவரை எப்படியெல்லாம் அலைக்கழித்தார்கள் என்பதை அவரே கூறினார். இடது கம்யூனிஸ்ட் விழுப்புரத்தில் மாநாடு நடத்தினார்கள், முழுமையான அனுமதி கொடுக்கவில்லை என்பதை எல்லாம் மறந்து விடாதீர்கள். உங்கள் கட்சிக்கும் இதே நிலை ஒரு காலத்தில் வந்தே தீரும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
இதே அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா இருக்கும்போதும், அம்மா மறைந்த பிறகும் ஆயிரக்கணக்கான போராட்டங்கள் தமிழகத்தில் நடந்தன. அத்தனைக்கும் அனுமதியும் பாதுகாப்பும் கொடுத்தோம். எந்த சம்பவமும் இல்லாமல் எல்லா கட்சிகளும் போராட்டம் நடத்தினார்கள். அதை நாங்கள் ஜனநாயகமாகப் பார்த்தோம், இந்த ஆட்சியில் ஜனநாயகத்தைப் பார்க்க முடியாது.
நாங்கள் எழுச்சிப் பயணக் கூட்டத்துக்கு கரூர் பஸ் நிலையம் பக்கத்தில் ரவுண்டானா இருந்தது, அதற்கு அருகில் இடம் கேட்டோம், விஜயபாஸ்கர் கேட்டார். கொடுக்கவில்லை. இப்போது துயர சம்பவம் நடந்த இடத்தைத்தான் கொடுத்தார்கள், இருந்தாலும் வேறு வழியின்றி அவ்விடத்தில் நடத்தினோம்.
இதே அ.தி.மு.க. ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோது தி.மு.க.வுக்கு இரண்டு முறை கரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ரவுண்டானாவில் அனுமதி கொடுத்தோம். இதுதான் அ.தி.மு.க. நடுநிலையோடு நடந்தோம். திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு 3 முறை ரவுண்டானா அருகில் பொதுக்கூட்டம் நடத்தினீர்கள், உங்களுக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சியை ஒடுக்கும் போக்கை நீங்கள் கடைபிடித்தால் உங்கள் கட்சி எதிர்காலத்தில் காணாமல் போய்விடும். ஆட்சி அதிகாரம் இருப்பதால் தான் இந்த ஆட்டம் போடுறீங்க, இதுக்கெல்லாம் மக்கள் முடிவு கட்டுகின்ற நேரம் வந்துவிட்டது என்பதை ஸ்டாலின் உணரவேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. போதை பொருள் தாராளமாக கிடைக்கிறது. கிராமம் முதல் நகரம் வரை இளைஞர்கள் சீரழிகிறார்கள், நான் பலமுறை சொல்லியும் முதல்வர் கண்டுகொள்ளவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் கூடும் இடங்களில் கஞ்சா விற்பனை நடக்கிறது, சிறுமி முதல் முதியோர் வரை பாலியல் சீண்டலுக்கு ஆளாவது இந்த போதை ஆசாமிகளால் தான். கொலை, கொள்ளை நடக்காத நாளே இல்லை. மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். எல்லோரும் போதைக்கு அடிமையாகி சீரழிந்த பின்னர் சொல்லி என்ன பயன்? இப்படிப்பட்ட முதல்வரை எங்கேயும் பார்க்க முடியாது எந்த திறமையும் இல்லாத பொம்மை முதல்வர்.
இந்த தர்மபுரி மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏதாவது ஒரு பெரிய திட்டம் கொண்டுவந்தார்களா? ஆட்சி போகுற நேரத்தில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுகிறார்களாம், எங்கே பணம் இருக்கிறது? பணமே ஒதுக்கவில்லை. அடுத்த தேர்தலில் வாக்குகளை பெற வேண்டும், என்பதற்காக சுமார் 8 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அத்தனையும் பொய்.
எத்தனை திட்டத்தை அதிமுக ஆட்சியில் அறிவித்தேன், அவற்றை எல்லாம் முடக்கி வைத்திருக்கிறீர்கள். அப்படியிருக்கும்போது எப்படி புதிய திட்டத்தை நிறைவேற்றுவீர்கள்? ஏற்கனவே தமிழக அரசு திவாலாகிவிட்டது. திமுகவின் நான்காண்டுகளில் 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டனர். இந்தாண்டு ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குகிறார்கள். ஐந்தாண்டு முடியும் தருவாயில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் இருக்கும். ஆனால் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. அப்புறம் எதுக்கு கடன் வாங்குகிறீர்கள்? எதுவும் தெரியவில்லை. திறமையான முதல்வராக இருந்தால்தானே நிர்வாகம் தெரியும், இவர் பொம்மை முதல்வராக எதுவும் தெரியாமல் ஆட்சி நடத்துகிறார்.
இந்த கடனை எல்லாம் மக்கள்தான் கட்ட வேண்டும். உங்கள் தலையில்தான் எல்லாமே விழும். எப்படி கடனை கட்ட முடியும்.? அவர் கடனை வாங்கிவிட்டு போய்விடுவார், வரி மூலமே திருப்பிச் செலுத்த வேண்டும்.
மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67 சதவீதம் உயர்த்திவிட்டனர். தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியாக வசூலிக்கிறார்கள். இதெல்லாம் உண்மைதானே? திமுககாரருக்கு தில்லு திராணி தெம்பு இருந்தால் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். இந்த கேள்வியை கூட்டத்தின் வாயிலாக கேட்கிறேன். மக்கள் கருத்தின் அடிப்படையில் பேசுகிறேன்.
10 ரூபாய் என்றால் யார் ஞாபகம் வருது? நேற்று வீடியோவில் என்னைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5,400 கோடியுமாக இந்த 4 ஆண்டுகளில் 22,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இதையெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வந்தால் விசாரிப்போம், கவலைப்படாதீர்கள். இந்த 22 ஆயிரம் கோடி பணத்தை வைத்துக்கொண்டுதான் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
உதயநிதியும் சபரீசனும் 30,000 கோடியை வைத்து திணறிக்கொண்டு இருக்கிறார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒருமுறை சொன்னார். இதற்கு முதல்வர் இதுவரை பதிலே சொல்லவில்லை. இரண்டு வருடத்தில் 30,000 கோடி கொள்ளை என்றால், 53 மாதத்தில் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள். கொள்ளையடித்த பணத்தை, அடுத்தாண்டு தேர்தலில் கொடுத்து வாக்குகளைப் பெற திட்டமிடுகிறார்கள். ஒருமுறை ஏமாந்துவிட்டீர்கள், அதற்கே நாட்டு மக்கள் படும் துன்பம் ஏராளம். மீண்டும் ஏமாந்து விடாதீர்கள்.
விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய் எல்லாம் 40 சதவீதம் உயர்ந்துவிட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது, விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம். எம்ஜிஆர், அம்மா இருவரும் மக்களுக்காக வாழ்ந்தனர், மக்கள் தான் வாரிசு. திட்டங்களை பார்த்துப் பார்த்து செயல்படுத்தினார்கள். அவர்கள் வழியில் அதிமுக அரசு செயல்பட்டது.
ஏழை, விவசாயத் தொழிலாளி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.
மகளிர் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்குச் சென்றுவர ஏதுவாக அம்மா இருசக்கர வாகன திட்டம் மூலமாக சுமார் 3 லட்சம் பேருக்கு 25,000 ரூபாய் மானியம் கொடுத்தோம். இந்த திட்டத்தையும் திமுக அரசு ரத்துசெய்துவிட்டது. உங்கள் ஆதரவினால் அதிமுக அரசு மீண்டும் அமையும்போது இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவுசெய்தவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு 75,000 ரூபாய் மானியமாக கொடுக்கப்படும்.
அதிமுக அரசு மீண்டும் அமைவதற்கு துணை நிற்க வேண்டும். திமுக அரசு மக்களுக்கு எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் வளமோடு செழிப்போடு அதிகாரத்தோடு வாழ வேண்டும் என்பதுதான் ஸ்டாலின் எண்ணம் அப்படிப்பட்ட எண்ணம் உடையவர்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்படும் தேர்தல் 2026 தேர்தல்.
தர்மபுரி தொகுதியில் அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டினோம், துணை மின் நிலையம் அமைத்தோம், புதிய தாலுகா அமைத்தோம், சிப்காட் 1789 ஏக்கர் ஃபேஸ் 1 திட்டம் கொண்டுவந்தோம். இதை அதிமுக கொண்டுவந்ததால் பணிகளை ஆமை வேகத்தில் செய்கின்றனர். புதிய நீதிமன்றக் கட்டிடம் அமைத்தோம். மாசுகட்டுப்பாடு அலுவலகம் கட்டப்பட்டது. இப்படி பல திட்டம் கொடுத்தோம்.
சேஷம்பட்டி முதல் தர்மபுரி வரை வெளிவட்ட சாலை அமைக்க வேண்டும், தர்மபுரி சாலை விரிவாக்கம், புதிய ஊராட்சி தொடங்க வேண்டும், விவசாய கிணத்தில் நீர்மட்டம் உயர ஒகேனக்கல் உபரி நீரை கொண்டுவர வேண்டும் என்றெல்லாம் பல கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். இவை எல்லாமே அதிமுக ஆட்சியில் ஆய்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும். 2026 தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின் என தெரிவித்தார்.
- 10 ரூபாய் பழனிசாமி என்று அழைக்கலாமா? என்று செந்தில் பாலாஜி விமர்சித்தார்.
- புகார் எழுந்த உடன், 8000-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிந்துள்ளோம்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர், "அ.தி.மு.க. ஆட்சியிலும் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது. ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது தொடர்பாக அ.தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை எடப்பாடி பழனிசாமிக்கு சென்றதா? 10 ரூபாய் பழனிசாமி என்று அழைக்கலாமா? என்று தெரிவித்தார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் விமர்சனத்திற்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பத்து ரூபாய் பாலாஜி பதறுவது ஏன்?. கரூர் துயரம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம் என்று திமுக அரசு அறிவித்த பிறகு, EB அதிகாரி, மாவட்ட ஆட்சியர், சட்டம் ஒழுங்கு ADGP ஆகியோர் பிரஸ் மீட் நடத்துகின்றனர், டிஜிபி பிரஸ் மீட் நடத்துகிறார், பொம்மை முதல்வர் வீடியோ வெளியிடுகிறார், வருவாய்ச் செயலாளர், மருத்துவத்துறைச் செயலாளர், டிஜிபி, ஏடிஜிபி ஆகியோர் கூட்டாக பிரஸ் மீட் நடத்துகின்றனர், இப்போது செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு... இவ்ளோ பதட்டப்பட்டு என்ன சொல்ல வர்றீங்க
மாண்புமிகு புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சொன்னதுபோல், விசாரணை ஆணையத்தை அரசுக்கு வேண்டிய திசையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறீர்களா?
"அரசியல் செய்யாதீர்" "அரசியல் செய்யாதீர்" என்று எல்லா அரசியலையும் செய்துக் கொண்டிருப்பது யார்? திமுக தானே?
உங்கள் பதட்டம் தான் உண்மையிலேயே கரூரில் நடந்தது என்ன? என்ற கேள்வியை, சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது. ஒரு விசாரணை ஆணையம் அமைத்த பிறகு, அது தொடர்பான வாதங்களையோ, காணொளிகளையோ அரசு அதிகாரிகள், அரசைச் சார்ந்தோர் பொதுவெளியில் வெளியிட்டு, ஆணையத்தின் நிர்ணயங்களை அவமதித்துள்ளீர்கள். இது நீதிமன்ற அவமதிப்புக்கு சமம்.
அப்புறம், அந்த பத்து ரூபாய்.... இந்தா வர்றோம்...
அஇஅதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் எந்த புகார் வந்தாலும் அதற்கு நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம். எங்கோ ஒரு இடத்தில் நடந்த, சட்டவிரோத விற்பனை முதல் சந்து விற்பனை வரை அனைத்து புகார்களுக்கும், புகார் எழுந்த உடன், 8000-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிந்துள்ளோம்.
ஆனால், திமுக ஆட்சியில் நடப்பது என்ன?
Senthil Balaji Model Institutionalised Robbery- நிறுவனமயமாக்கப்பட்டக் கொள்ளை!
தமிழகத்தில் உள்ள எல்லா TASMAC கடைகளிலும், பாட்டிலுக்கு மேல் ரூ.10 முதல் ரூ.40 வரை கணக்கே இல்லாமல் கொள்ளை அடித்து, இப்போது பாட்டில் மேல் 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டி வசூல் செய்யும் அளவிற்கு பகல் கொள்ளை அடித்துவிட்டு, அதை "Open-ஆகப் பேசுகிறேன்" என்று சொல்லி Justify செய்ய பத்து ரூபாய் பாலாஜிக்கு வெட்கமாக இல்லையா?
இதுவரை 168 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், "பத்து ரூபாய்" என்று மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் சொன்னாலே, "பாலாஜி" என்று மக்களே சொல்லும் அளவிற்கு, உங்கள் பத்து ரூபாய் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றினார் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள். அப்போது எல்லாம் கள்ள மவுனம் சாதித்த பாலாஜி, இப்போது 41 உயிர்கள் பலியானதும் இதைப் பேசுகிறீர்கள் என்றால், உங்கள் அரசின் அலட்சியத்தை, Gross Negligence-ஐ மறைக்க முனையும் மடைமாற்ற அரசியல் தானே இது?
ஏற்கனவே "காசு வாங்கினேன்... ஆனா திரும்ப கொடுத்தேன்" ன்னு சொல்லி தான் ED வந்து, உங்களுக்கு நெஞ்சு வலி எல்லாம் வந்து அழுதீங்களே.... இப்போ திரும்ப அதே Tone-ல பேசுறீங்களே... இந்த டைம் CBI வந்தா
செந்தில் பாலாஜி Conditions-ah follow பண்ணுவீங்களா? (உபாயம் அன்பில் மகேஷ்)" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. ஆட்சியிலும் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது.
- அ.தி.மு.க. ஆட்சியில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை எடப்பாடி பழனிசாமிக்கு சென்றதா?
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. ஆட்சியிலும் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது.
* ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது தொடர்பாக அ.தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* அ.தி.மு.க. ஆட்சியில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை எடப்பாடி பழனிசாமிக்கு சென்றதா?
* 10 ரூபாய் பழனிசாமி என்று அழைக்கலாமா? என்று அவர் விமர்சனம் செய்தார்.
- தவறு நடந்தால் எந்த இயக்கமும் பொறுப்பேற்க வேண்டும்.
- விஜய் நடத்திய எல்லா கூட்டங்களிலும் தொண்டர்கள் மயக்கமடைந்துள்ளனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* த.வெ.க. தலைவர் விஜயுடன் வந்தவர்களும் கூட்டத்திற்குள் வந்ததே நெரிசலுக்கு காரணம்.
* சம்பவம் நடந்தபோது நான் கட்சி அலுவலகத்தில் தான் இருந்தேன்.
* நடந்த துயரத்திற்கு பொறுப்பேற்காமல் அரசு மீது மடைமாற்றி விடுகின்றனர்.
* தவறு நடந்தால் எந்த இயக்கமும் பொறுப்பேற்க வேண்டும்.
* உண்மை கண்டறியும் குழு மணிப்பூர் சென்றிருந்தால் ஏற்புடையதாக இருக்கும்.
* கட்சி அலுவலகத்தில் இருந்து அமராவதி மருத்துவமனை அருகில் தான் உள்ளது.
* விஜய் நடத்திய எல்லா கூட்டங்களிலும் தொண்டர்கள் மயக்கமடைந்துள்ளனர்.
* விஜய் பேச ஆரம்பித்தன 6-வது நிமிடத்தில் தான் செருப்பு வீசப்பட்டுள்ளது.
* கூட்டத்திற்கு 3 மணிக்கு அனுமதி பெற்று விட்டு 12 மணிக்கு உரையாற்றுவதாக அறிவித்தது ஏன்?
* த.வெ.க. தலைவர் விஜய் கட்டுக்கடங்காத கூட்டத்திற்குள் பேருந்தில் சென்றது ஏன்?
* கூட்டத்திற்கு வரும்போது திடீரென த.வெ.க. தலைவர் பேருந்துக்குள் சென்றது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
- ஜெனரேட்டர் அணைக்கப்பட்ட நேரத்தில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன.
- நாமக்கல்லில் இருந்து விஜய் வாகனத்துடன் 2 ஆம்புலன்ஸ்கள் வந்தன.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கூட்ட நெரிசல் காரணமாக த.வெ.க. தொண்டர்கள் ஜெனரேட்டர் அறைக்கு சென்றனர்.
* தொண்டர்கள் சென்ற காரணத்தால் ஜெனரேட்டர் அணைக்கப்பட்டது.
* ஜெனரேட்டர் அணைக்கப்பட்ட நேரத்தில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன.
* கூட்டம் நடக்கும் 500மீ முன்னர் விஜய் பேருந்தின் உள்ளே சென்றது ஏன்?
* விஜயின் கவனத்தை ஈர்க்க அந்த கட்சி தொண்டர்களே செருப்பை எறிந்திருக்கலாம்.
* அரசியல் தலைவர்கள் முன்சீட்டில் அமர்ந்து கை காட்டுவது வழக்கம்.
* விஜய் பிரசார பகுதிக்கு வந்ததும் வாகனத்தின் முன்பகுதி லைட் அணைக்கப்பட்டது.
* எல்லா நாளும் வாகனம் ஓட்டும் எனக்கு இன்று மட்டும் விபத்து ஏன் ஏற்பட்டது என்பது போல் உள்ளது.
* தண்ணீர் கேட்டபோது கடைகள் பூட்டியிருந்ததால் தி.மு.க.வினர் கைவசம் இருந்த பாட்டில்களை கொடுத்தோம்.
* காவல்துறையினர் அறிவுரையை த.வெ.க.வினர் கேட்டிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது.
* நாமக்கல்லில் இருந்து விஜய் வாகனத்துடன் 2 ஆம்புலன்ஸ்கள் வந்தன.
* த.வெ.க. கூட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த எந்த ஆம்புலன்ஸ்களும் செல்லவில்லை.
* கூட்டநெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு த.வெ.க.வினர் உதவ முன்வரவில்லை.
* த.வெ.க. கூட்டத்திற்கு வந்தது கட்டுக்கடங்காத கூட்டமல்ல, கட்டுப்பாடற்ற கூட்டம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒன்றரை வயது குழந்தை இறந்துள்ளது, இதனை அரசியலாக பார்க்க வேண்டாம்.
- த.வெ.க. பிரசாரம் நடந்த இடத்தில் ஒரு காலி குடிநீர் பாட்டிலையாவது பார்த்தீர்களா?
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கடந்த 27-ந்தேதி கரூரில் நடந்த துயர சம்பவம் என்பது கொடுமையானது.
* யாராலும் எந்த சூழ்நிலை ஏற்றுக்கொள்ள முடியாத துயர சம்பவம்.
* தமிழ்நாட்டில் எங்கும் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
* கரூர் துயர சம்பவத்தை அரசயலாக பார்க்காமல் மனித நேயத்துடன் அணுக வேண்டும்.
* கரூரில் உயிரிழந்த அனைத்து குடும்பத்தினருடன் நேரடியாக தொடர்பில் இருக்கிறேன்.
* ஒன்றரை வயது குழந்தை இறந்துள்ளது, இதனை அரசியலாக பார்க்க வேண்டாம்.
* தற்போதைய நிலவரத்தில் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* அனைவருக்குமான பொது நபராக மக்களின் அன்பை பெற்றுள்ளேன்.
* த.வெ.க. கேட்ட இடங்களில் அதிகம் பேர் நிற்க முடியும் இடம் வேலுசாமிபுரம்தான்.
* எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை முடிவு செய்து இடத்தை தேர்வு செய்வது கட்சிகளின் பணி.
* லைட் ஹவுஸ் கார்னரில் அதிகபட்சமாக 7 ஆயிரம் பேர் தான் நிற்க முடியும்.
* கூட்டத்திற்கு வருவபவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும்.
* தொண்டர்களுக்கு தேவையான குடிநீரை அளிக்க வேண்டியது கட்சிகளின் பொறுப்பு.
* த.வெ.க. பிரசாரம் நடந்த இடத்தில் ஒரு காலி குடிநீர் பாட்டிலையாவது பார்த்தீர்களா?
* லைட் ஹவுஸ் கார்னரில் அனுமதி கொடுத்திருந்தால் மாநகர் முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
* விஜய் பிரசாரம் 4 மணிக்கு நடந்திருந்தால் கூட இந்த பெருந்துயரம் நடந்திருக்காது. விஜய் குறித்த நேரத்தில் வந்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- செந்தில் பாலாஜி தேர்தலின்போது மக்களுக்கு வெள்ளி கொலுசு கொடுத்துள்ளார்.
- செந்தில் பாலாஜிக்கு அளவுக்கு அதிகமான அதிகாரம் தரப்பட்டுள்ளது.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எந்த போராட்டமாக இருந்தாலும் எங்களது ஆட்சியில் அனுமதி கொடுத்தோம். சிவாஜி கணேசனை விட மிகவும் சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜி தேர்தலின்போது மக்களுக்கு வெள்ளி கொலுசு கொடுத்துள்ளார். செந்தில் பாலாஜிக்கு அளவுக்கு அதிகமான அதிகாரம் தரப்பட்டுள்ளது.
தேர்தல் முடியும் வரை தான் செந்தில் பாலாஜி திமுகவில் இருப்பார், தேர்தல் முடிந்த பின் எந்த கட்சியில் இருப்பார் என தெரியாது.
கரூரில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புக்கு மணல் திருட்டு நடைபெறுகிறது. செந்தில் பாலாஜியால் அவரையே காப்பாற்றிக் கொள்ள முடியாது, அவரை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- செந்தில் பாலாஜியை உலகமகா உத்தர் போல் முதலமைச்சர் பாராட்டுகிறார்.
- செந்தில் பாலாஜியை திருடன் என விமர்சித்த முதலமைச்சர் தற்போது பாராட்டுகிறார்.
சென்னை:
பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* செந்தில் பாலாஜியை உலகமகா உத்தர் போல் முதலமைச்சர் பாராட்டுகிறார்.
* செந்தில் பாலாஜியை திருடன் என விமர்சித்த முதலமைச்சர் தற்போது பாராட்டுகிறார்.
* மண் குதிரையை நம்பி முதலமைச்சர் காவிரி நோக்கி பயணிக்கிறார்.
* 2026 தேர்தலுக்கு முன் மண் குதிரையில் காவிரிக் கரை நோக்கி முதலமைச்சர் செல்கிறார்.
* சாராயம் விற்ற பணத்தில் தான் தி.மு.க.வின் முப்பெரும் விழா நடைபெற்றுள்ளது என்றார்.






