என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் மாநாடு"

    • மகளிர் மாநாட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார்
    • பாமக மகளிர் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

    மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் மகளிர் பெருவிழா மாநாடு பறை, தவில் இசையுடன் தொடங்கியது

    இந்த மாநாட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பெண்களுக்கு பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பூரண மதுவிலக்கு என பாமக மகளிர் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. மாநாட்டில் ராமதாஸின் மகள் காந்திமதி முதல் தீர்மானத்தை வாசித்தார்.

    இந்த மாநாட்டில் ராமதாஸ் பேசிக்கொண்டிருக்கும்போது தொண்டர்கள் சத்தம் போட்டதால் ராமதாஸ் கோபமடைந்தார். சத்தம் போட கூடாது... எதுக்கு சத்தம் போடுறிங்க...? என்று தொண்டர்களை ராமதாஸ் கண்டித்தார். 

    • மகளிர் மாநாட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார்
    • 10.5% உள்ஒதுக்கீட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் மகளிர் பெருவிழா மாநாடு பறை, தவில் இசையுடன் தொடங்கியது

    இந்த மாநாட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பெண்களுக்கு பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பூரண மதுவிலக்கு என பாமக மகளிர் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. மாநாட்டில் ராமதாஸின் மகள் காந்திமதி முதல் தீர்மானத்தை வாசித்தார்.

    இந்த மாநாட்டில் பேசிய ராமதாஸ், "என்னுடைய அருமை நண்பர் கலைஞர் 20% இடஒதுக்கீடு அளித்தார். 10.5% உள்ஒதுக்கீட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் முதல்வருக்கு ஏன் தயக்கம்? 10.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது

    2026 பேரவைத் தேர்தலில் வெற்றி கூட்டணி அமைப்பேன். யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காதீர்கள். நான் சொல்வதுதான் நடக்கும்" என்று தெரிவித்தார்.

    • மகளிர் மாநாட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
    • கஞ்சா, மது என்ற தீமை ஒழிய வேண்டும்.

    மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் மகளிர் பெருவிழா மாநாடு பறை, தவில் இசையுடன் தொடங்கியது

    இந்த மாநாட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பெண்களுக்கு பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பூரண மதுவிலக்கு என பாமக மகளிர் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. மாநாட்டில் ராமதாஸின் மகள் காந்திமதி முதல் தீர்மானத்தை வாசித்தார்.

    இந்த மாநாட்டில் பேசிய ராமதாஸ், "பெண்கள் இல்லாமல் நாம் இல்லை. உலகமே இல்லை; பெண்களுக்கு காக்கும் சக்தி உள்ளது. பெண்கள் எல்லா வகையிலும் முன்னேற வழிகாட்டுவதற்கே இந்த மாநாடு.

    கஞ்சா, மது என்ற தீமை ஒழிய வேண்டும். அதை செய்வது பெரிய காரியம் இல்லை. 10 அதிகாரிகளை என்னிடம் அனுப்புங்கள். நான் சொல்வதை அவர்கள் கேட்டால் சமூக தீமை ஒழிக்கப்படும். பெண்களை விட ஆண்கள் பின்னால் இருப்பதற்கு இந்த இரு தீமைகள்தான் காரணம்.

    தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது. அதற்கு உதாரணம் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன். கங்கை கொண்ட சோழபுரம் கோவில் பெரியகோவிலை விஞ்சிடக் கூடாது என ராஜேந்திரன் நினைத்ததே இதற்கு உதாரணம்" என்று தெரிவித்தார். 

    • பாமக மாநாட்டில் ராமதாஸின் மகள் காந்திமதி முதல் தீர்மானத்தை வாசித்தார்.
    • வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை காலந்தாழ்த்தாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்

    மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் மகளிர் பெருவிழா மாநாடு பறை, தவில் இசையுடன் தொடங்கியது

    இந்த மாநாட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பெண்களுக்கு பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பூரண மதுவிலக்கு என பாமக மகளிர் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. மாநாட்டில் ராமதாஸின் மகள் காந்திமதி முதல் தீர்மானத்தை வாசித்தார்.

    பாமக மகளிர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    * பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.

    *பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும்

    * பெண்களின் பாலியல் வன்கொடுமை நாளும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * மது குடியினால் குடும்பமே சீரழிகிறது. பெண்களும், குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்படுவதோடு பெண்கள் தற்கொலை உயிரிழப்பு அதிகரித்து வருவதால் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.

    * தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் எங்கும் தடையின்றி விற்பதால் மாணவர்கள், இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் கஞ்சா விற்பனையை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி தடை செய்ய வேண்டும்.

    * நீட் தேர்வுக்கு செல்லும் மாணவிகள் சோதனை என்ற பெயரால் மன வேதனைக்கு உள்ளாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    * பள்ளிகள்-கல்லூரிகள் பெண்கள் பணி புரியும் இடங்களில் பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருவதால் அதை தடுத்திட பெண் காவலர்கள் ஆங்காங்கே நியமிக்கப்பட வேண்டும்.

    * 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் கிராமப்புற, நகர்ப்புற ஏழை - எளிய பெண்களின் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த வேலை நாட்களின் எண்ணிக்கையும் தின கூலியையும் அதிகப்படுத்த வேண்டும்.

    * தமிழ்நாட்டின் பெண் கல்வி அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி பெற கூடுதலாக மகளிர் பல்கலைக்கழகம் தனியாக உருவாக்கப்பட வேண்டும்.

    * தமிழ்நாட்டில் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்து பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய் கொடுமைகள் அதிகரித்து வருவதால் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்.

    * வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை காலந்தாழ்த்தாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் அதேபோல் அனைத்து சமுதாயத்திற்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    * தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை சரியாக நிர்ணயித்திட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்

    * தமிழ்நாட்டின் காவிரி பாசன டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட வேண்டும்

    * பூம்புகார் பகுதி மீனவர்கள் மற்றும் மீன்பிடி துறைமுக மீனவர்கள் உள்ளிட்ட தமிழ்நாடு மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்

    • பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது மனைவி சரஸ்வதியுடன் வந்தடைந்தார்.
    • மகளிர் பெருவிழா மாநாடு பறை, தவில் இசையுடன் தொடங்கியது

    மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் மகளிர் பெருவிழா மாநாடு பறை, தவில் இசையுடன் தொடங்கியது

    மாநாட்டிற்கு தலைமை தாங்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது மனைவி சரஸ்வதியுடன் வந்தடைந்தார்.

    இந்த மாநாட்டில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அனைத்து ஜாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பிரதானமாக அமைய உள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

    இந்நிலையில், பாமக மாநாடு நடைபெறும் பூம்புகார் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பாமக தொண்டர்கள் அவதியடைந்துள்ளனர்.

    • மாநாட்டில் பங்கேற்க வருபவர்களுக்காக பூம்புகார் எல்லைகளில் வழிகாட்டி பலகைகள், அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
    • மாவட்ட போலீஸ் துறை சார்பில் 41 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பூம்புகாரில் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு இன்று மாலை பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் தலைமையில் நடக்கிறது.

    பெண் உரிமையை காக்க, பெண்கள் முன்னேற்றம் காண, பெண்களுக்கு எதிரான வன்முறையை போக்கிட, அரசு பதவிகளில் பெண்கள் அதிகாரத்தில் அமர்ந்திட, மது, போதை பொருட்களால் ஏற்படும் சீரழிவில் இருந்து பாதுகாத்திட, சம உரிமை, சம அந்தஸ்து, சம வாய்ப்பு, சமபங்கு என அனைத்திலும் பெண்கள் முன்னேற்றம் காண பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் வன்னிய மகளிர் பெருவிழா மாநாடு இன்று மாலை 3 மணியளவில் நடக்கிறது.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தலைமையில் நடக்கும் மாநாட்டில் சரஸ்வதி ராமதாஸ், மகள் காந்திமதி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்கள் ம.க.ஸ்டாலின், பாக்கம்.சக்திவேல், தஞ்சை மண்டல பா.ம.க. செயலாளர் ஐயப்பன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பா.ம.க. வன்னியர் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான மகளிர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்த மாநாட்டில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அனைத்து ஜாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பிரதானமாக அமைய உள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர்கள் என சுமார் 3 லட்சம் பேர் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பிரமாண்ட நுழைவாயிலுடன் கூடிய பந்தல் அமைக்கப்பட்டு, மேடை போடப்பட்டு, அனைத்து பணிகளும் நிறைவடைந்தது.

    மாநாட்டில் பங்கேற்க வருபவர்களுக்காக பூம்புகார் எல்லைகளில் வழிகாட்டி பலகைகள், அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக மணி கிராமம், மேலையூர், பல்லவனேஸ்வரம், காவிரிப்பூம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தும் இடமும் அமைக்கப்பட்டு, அதற்கான முறையான வழிகாட்டி பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் மகளிர் தொண்டர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவர்கள் மாநாட்டில் பங்கேற்று மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்பும் வகையில் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டில் பங்கேற்க வருபவர்கள் பூம்புகார் கடலில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டு, அதனை கடலோர காவல் குழும போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    மாநாட்டிற்கு பங்கேற்பவர்களுக்கு உரிய குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டு பந்தலில் அனைவரும் அமரும் வகையில் விரிவான பந்தல் மற்றும் இருக்கைகள் அமைக்கப்பட்டு மாநாட்டு நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டு களிக்கும் வகையில் ஏராளமான எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு, மின்னொளியில் பந்தல்கள் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்சு வசதிகள், சுகாதார குழுவினர்களும் அமைக்கப்பட்டு உள்ளனர்.

    மாவட்ட போலீஸ் துறை சார்பில் 41 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் என ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று (சனிக்கிழமை) பொதுகுழு நடத்தப்பட்டு, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று டாக்டர்.ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சவுராஷ்டிரா மகளிர் மாநாடு நடந்தது.
    • சவுராஷ்டிரா பள்ளிகளில் சவுராஷ்டிரா மொழியை வளர்க்க விருப்ப பாடமாக நடத்த அனுமதிக்க வேண்டும்

    பரமக்குடி

    பரமக்குடி நகர் எமனேசுவரத்தில் சவுராஷ்டிரா சமூக நலச் சங்கம் சார்பில் சவுராஷ்டிரா மகளிர் மாநாடு நடந்தது. சங்க தலைவர் மாருதி ராமன் தலைமை தாங்கினார். எமனேசுவரம் சவுராஷ்டிரா சபை தலைவர் சேசைய்யன், பரமக்குடி சபை தலைவர் மாதவன், சங்க முன்னாள் தலைவர்கள் ராஜன், யோகையன், முன்னாள் பொதுச் செயலாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தனர்.

    துணைத் தலைவர்கள் கோவிந்தன், கங்காதரன் வரவேற்றனர்.பொதுச் செயலாளர் ரமேஷ்பாபு தீர்மானத்தை முன்மொழிந்தார். மதுரை சவுபாக்கியா தொழில் முனைவோர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் மகாலட்சுமி சிறப்புரையாற்றினார். இதில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சவுராஷ்டிரா சமூகத்திற்கு மொழி வாரி சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் அரசு பணியில் 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

    சவுராஷ்டிரா பள்ளிகளில் சவுராஷ்டிரா மொழியை வளர்க்க விருப்ப பாடமாக நடத்த அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் ரமேஷ் பாபு நன்றி கூறினார்.

    • பெண்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
    • போராடி பெற்ற சமூக நீதியை பாஜக அழித்து வருகிறது.

    சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிரணி நடத்தும் மகளிர் உரிமை மாநாடு தொடங்கியது. இதில், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.

    இந்த மாநாட்டில் "இந்தியா" கூட்டணியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஏழை எளிய மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி. மாநில சமத்துவத்துக்கு குரல் கொடுத்தவர் கருணாநிதி.

    மொழி, சாதி, மதம் கடந்து சிந்தித்து உழைத்தவர் கருணாநிதி. ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக ஈடுபட்டவர் கருணாநிதி.

    பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். பெண்களுக்கான உரிமையை பெறுவது நீண்ட பயணம்.

    காந்தி, நேரு போன்றவர்கள் அனைவருக்கும் ஓட்டு உரிமை என்பபைத உறுதிபடுத்தினர். பெண்கள் பல்வேறு தடைகளை தாண்டி தான் சமத்துவத்தை பெற் வேண்டிய நிலை உள்ளது. தடைகளை தாண்டி பெண்கள் உரிமையை நிலைநாட்ட முடியும்.

    தலைமைத்துவத்திற்கு இந்திரா காந்தியை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்.

    ஒரு பெண் படித்தால் குடும்பமே படித்ததுபோல் மாறிவிடும். பெண்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டால் நாடு வலிமை பெறும்.

    பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா எப்போது வரும் என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்தியா கூட்டணி வந்து தான் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி தரும்.

    பாராளுமன்றத்தில் நாங்கள் கொண்டு வந்த பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறாமல் போனது. இந்தியாவில் தமிழகம் பெண்களுக்கான ஒளி விளக்காக உள்ளது.

    பெண்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. தமிழக காவல் துறையில் நான்கில் ஒரு பங்காக பெண்கள் உள்ளனர். அரசு பணிகளில் பெண்களுக்கான பணியிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி உள்ளார்.

    தாய் சேய் இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாக உள்ளது. பெற்று தந்த உரிமைகளை எல்லாம் சீரழிக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது. போராடி பெற்ற சமூக நீதியை பாஜக அழித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
    • இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படும்.

    சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிரணி நடத்தும் மகளிர் உரிமை மாநாடு தொடங்கியது. இதில், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.

    இந்த மாநாட்டில் "இந்தியா" கூட்டணியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியின் மகளிர் தலைமைகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். பாஜகவை முற்றிலுமாக வீழ்த்த வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற எண்ணத்தில் பிரதமர் செயல்படுகிறார்.

    உண்மையான அக்கறையுடன் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படவில்லை. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக செயல்படுத்தி இருந்தால் பாராட்டி இருக்கலாம்.

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    2024க்கு பிறகு பாஜகவின் ஆட்சி இருக்காது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    சமூக நீதியை எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்கக்கூடாது. இந்தியா கூட்டணைி கொள்கை கூட்டணி. இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படும்.

    இந்த மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை இன்றே வந்துவிடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பெண்களின் செயல்திறனே தேசத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும்.
    • பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள கூடாது.

    சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிரணி நடத்தும் மகளிர் உரிமை மாநாடு தொடங்கியது. இதில், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.

    இந்த மாநாட்டில் "இந்தியா" கூட்டணியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இறந்த எனது தந்தையின் உடலை பெற முதல் முறையாக தமிழகம் வந்தேன். நீங்கள் தான் என் தாய், நீங்கள் தான் என் சகோதரி. உங்களுடன் இருப்பதை பெருமையாக கருதுகிறேன்.

    பெண்களே இந்தியாவின் தூண்கள். சமூக மாற்றத்திற்கான புரட்சி இங்கே தான் உருவானது. பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் எழுதி உள்ளார்.

    பெண்களின் செயல்திறனே தேசத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும். பெண்களை மையமாக வைத்துதான் குடும்பம் என்பது கட்டமைப்படுகிறது.

    100 ஆண்டுகள் கழித்தும் பெரியார் கேட்ட அதே கேள்வியை தான் இன்றும் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

    இன்றும் பெண்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. மாற்றத்திற்கான சரியான தருணத்தில் இருக்கிறோம்.

    பெண்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உரிமைக்காக பெண்கள் இனியும் காத்திருக்க கூடாது.

    மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள கூடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு காவல்துறையில் இடமளிக்கப்பட்டது.
    • மத்திய பாஜக ஆட்சியில் குடியரசு தலைவராக இருக்கட்டும்.

    சென்னை:

    திமுக மகளிர் உரிமை மாநாட்டில் அவர் பேசிவருவதாவது:-

    பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் மகளிர் இட ஒதுக்கீடை பாஜக நடைமுறைபடுத்தாது . புதுச்சேரியில் பட்டியல் இன பெண் என்பதால் அமைச்சரே ராஜினாமா செய்யும் நிலை உள்ளது. மேலும் பாஜக கொண்டு வந்துள்ள மகளிர் இட ஒதுக்கீடு 50 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைக்கு வராது.

    மத்தியரசின் கொள்கை முடிவுகளில் மகளிருக்கு இடமில்லை. இந்த மாநாட்டில் அறிவொளி பெற்ற தீபங்களாக மகளிர் அணியினர் பங்கேற்று உள்ளனர். ஒடுக்கப்பட்ட சமூக பெண் என்பதால் குடியரசு தலைவரும் அவமதிக்கப்படுகிறார். மணிப்பூரில் பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் கொடுமைகள் நடந்துள்ளன. மேலும் டெல்லியில் போராடிய விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த மத்திய பாஜக ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை.

    மேலும் பேசிய அவர், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு காவல்துறையில் இடமளிக்கப்பட்டது. மேலும் படிக்கும் ஆர்வமுள்ள பெண்களை கைதூக்கி விட நிதியுதவி அளித்து வருகிறது திமுக அரசு. மேலும் பெண்கள் முன்னேற்றத்திற்காக மகளிர் உரிமை தொகை வழங்கியுள்ளது, இதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழ்நாட்டில்தான் 11 பெண் மேயர்கள் உள்ளனர்,

    மத்திய பாஜக ஆட்சியில் குடியரசு தலைவராக இருக்கட்டும், விளையாட்டு வீராங்கனைகளாக இருக்கட்டும், சாமானிய பெண்களாக இருக்கட்டும் எந்த நிலை பெண்களுக்கும் நீதி கிடைக்காது, என்றும் அவர் பேசினார்.

    ×