search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Resolutions"

    • கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சத்தியமூர்த்தி தீர்மானங்களை படித்தார்.
    • மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி ஒன்றியம் பனையபுரத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபா கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் சங்கீத அரசிரவி துரை முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவி காந்த ரூபி வரவேற்றார்.கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சத்தியமூர்த்தி தீர்மானங்களை படித்தார். மக்கள் குறைகளை கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் பழனி பேசியதாவது,

    இக்கிராமத்தில் வசிக்கும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு ,வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க ஆணை , கிராமத்தி்ல் பிளாஸ்டிக் முழுமையாக ஒழிக்கப்பட்டு ,பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் .இவ்வாறு கலெக்டர் பேசினார் 

    இதில் மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் ஜோதி , மாவட்ட ஊராட்சிகள் இயக்குனர் பொன்னம்பலம், நேர்முக உதவியாளர் லட்சாதிபதி, தாசில்தார் யுவராஜ் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி ,முபாரக் அலி பேக், வேளாண்மை உதவி இயக்குனர் கங்காகவுரி, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், ஒன்றிய பொறியாளர் இளையராஜா, கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ், துணைத் தலைவர் கலா, ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தி ராமராவ், கஸ்தூரி பாண்டியன், கண்காணிப்பு குழு எத்திராசன், கல்வி மேலாண்மை குழு ராஜசேகர்,கணேசன் புகழேந்தி ,வேல்முருகன், மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.

    மேல்மலையனூர்

    மேல்மலையனூர் அருகே தேப்பிரம்பட்டு ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் கண்மணிநெடுஞ்செழியன் தலைமைக தாங்கி பேசினார். இதில் வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோத்துங்கன், சரவணக்குமார் மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்ரமணியன்,செல்வி ராம சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • சுப்பராயபுரம் ஊராட்சியில் சுய உதவிக்குழு கட்டிடம் படிக்கட்டுகளில் மேற்கூரை அமைக்க ரூ. 2.50 லட்சம் ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அப்பாதுரை, ஒன்றிய ஆணையர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முருகேஸ்வரி தீர்மானங்களை வாசித்தார். இதில் ஒன்றிய தலநிதி கணக்கு உபரி நிதியில் இருந்து புதுக்குளம் ஊராட்சி வேலாயுதபுரத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்ய ரூ. 5.30 லட்சமும், சுப்பராயபுரம் ஊராட்சியில் சுய உதவிக்குழு கட்டிடம் படிக்கட்டுகளில் மேற்கூரை அமைக்க ரூ. 2.50 லட்சமும் ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் லதா, சுபா கிறிஸ்டி பொன்மலர், பிச்சிவிளை சுதாகர், செல்வம், ஜோதி, சசிகலா, ஜேசுஅஜிட் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித், பொறியாளர் அருணா, உதவியாளர் சிவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய மேம்படுத்தப்பட்ட கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
    • இதில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் 14 பேர் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய மேம்படுத்தப்பட்ட கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியம் லீலா, நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் 14 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 85 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் ராஜாத்தி, தானி ராஜ்குமார், மல்லிகா, பரமேஸ்வரி, ரகுராமன், மாரிமுத்து, தாமஸ், நசரேத், ஜெயா, பியூலா ரத்தினம், ஜெயகிருபா, காந்திமதி, சஜிதா, ஒன்றிய பொறி யாளர்கள் வெள்ள பாண்டி யன், சிவசங்கரன், சத்துணவு மேலாளர் தனலட்சுமி, அலுவலக பணியாளர்கள் ஆறுமுக நயினார், அருள்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தோப்புத்துறை ஊராட்சிபள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைவர் நிஷாந்தி தலைமையில் நடந்தது.

    முன்னதாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மாணிக்கம் அனைவரையும் வரவேற்றார்.

    பள்ளி தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி, கூட்ட பொருள் குறித்து பேசினார்.

    தொடர்ந்து, துணை தலைவர் உமா மகேஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர் அம்சவல்லி கோவிந்தராஜுலு, கல்வியாளர் ஆர்த்தி, உறுப்பினர்கள் ரபியத்துல் பஜ்ரியா, மீனா, முருகானந்தம், சுரேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்துவது, 10, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கல்லூரி கல்வி பெற வழிகாட்டுவது மற்றும் உதவி செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் ஆசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    • ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடந்தது.
    • 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர்பாபு வரவேற்றார். உதவி அலுவலர் பிரபாகரன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தடையின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்தல், கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கிராம ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம் தலைவர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
    • ஜல்ஜீவன் திட்டத்தில், குளறுபடிகள் உள்ளதாக துணைத்தலைவர் ஆட்சேபனை தெரிவித்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் கிராம ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம் தலைவர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். செயலாளர் தங்கராஜ் வரவேற்றார்.

    ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில், தொட்டம்பட்டி காலனி பகுதியில் சாலையோர பூங்கா அமைப்பது. லட்சுமி நகர் தரைப்பாலத்தில் குழாய்கள் அமைத்து சிறிய பாலம் அமைப்பது, கிருஷ்ணாபுரம் ஆரம்பப்பள்ளி, மாதப்பூர் காலனி பகுதி, கள்ளகிணறு காலணி பகுதி, தொட்டம்பட்டி அங்கன்வாடி பள்ளி ஆகிய இடங்களில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்வது உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஜல்ஜீவன் திட்டத்தில், குளறுபடிகள் உள்ளதாக துணைத்தலைவர் பாலசுப்ரமணியம் ஆட்சேபனை தெரிவித்தார்.

    • ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியில் சாதாரண கூட்டம் அங்குள்ள கூட்ட அரங்கில் நடந்தது.
    • கூட்டத்தில் சாலை வசதிகள் அமைத்தல் உள்ளிட்ட 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியில் சாதாரண கூட்டம் அங்குள்ள கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜான் ரவி, பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் ரவிக்குமார், அன்னத்தாய், ஆரோக்கியமேரி, பபிதா, உமாதேவி, அன்னக்கிளி, சுபாஷ்சந்திர போஸ், சுந்தரம், வென்சிராணி, சாலமன் ராஜா, கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் திட்டம், பொது சுகாதார பராமரிப்பு, தெருவிளக்கு அமைத்தல், சாலை வசதிகள் அமைத்தல் உள்ளிட்ட 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் துணைத்தலைவர் ஜான்ரவி நன்றி கூறினார்.

    • சங்கராபுரம் அருகே ரங்கப்பனூரில் ஏப்ரல் மாத சாதாரண கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் அனைவர்களுக்கும் மாதாந்திர படி வழங்கியது, மற்றும் ஊராட்சிக்கு தேவையான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ரங்கப்பனூரில் ஏப்ரல் மாத சாதாரண கூட்டம் நடைபெற்றது. ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு துணை தலைவர் ராதிகா பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் மீணா துரை, இளம்வழிதி, ஸ்டெல்லா வேலூ, தமிழ் ரகு, ரூபாவதி புகழேந்தி, ஏழுமலை, மாசிலாமணி, விருத்தம்பால் பச்சையாப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனைவர்களுக்கும் மாதாந்திர படி வழங்கியது, மற்றும் ஊராட்சிக்கு தேவையான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலர் திருமால்வளவன் நன்றி கூறினார்.

    • கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. மகாத்மா தேசிய ஊரக வளர்ச்சித் திட்டம், பிரதமரின் குடியிருப்பு திட்டம், டெங்கு காய்ச்சல் தடுப்பு, தூய்மை பாரத இயக்கம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, கிராம ஊராட்சி பொது செலவினம், ஜல் ஜீவன் இயக்கம், சாலை விரிவாக்கம் ஆகிய வளர்ச்சி பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார், ஊர் முக்கியஸ்தர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா, ஊராட்சி உறுப்பினர்கள் பொன்னையா, மகாலட்சுமி, சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

    • கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் மொத்தம் 40 தீர்மானம் வாசித்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா, ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா, மேலாளர் சண்முகவேல், நகர அமைப்பு அலுவலர் காஜாமைதீன், சுகாதார அலுவலர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மொத்தம் 40 தீர்மானம் வாசித்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து தீர்மானங்கள் குறித்தும் கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் முகமது அலி, யாசருக்கான், அலி அக்பர், சுந்தர மகாலிங்கம், சுபா ராஜேந்திர பிரசாத் மாரி, முருகன், முகைதீன் கனி, சங்கரநாராயணன், அரபா வஹாப் ஆகியோர் பேசினர்.

    • கடலூர் அரசு பாலிடெக்னிக்- மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்துகின்றன.
    • ஜனவரி 2022 முதல் 3 சதவீதம் அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் வட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 4-வது வட்ட மாநாடு தலைவர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. சங்க கொடியை வட்டத்துணைத்தலைவர்கிருஷ்ணமூர்த்தி ஏற்றினார். மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வட்ட துணைத்தலைவர்ராமதாஸ் வரவேற்புரை ஆற்றினார். வட்ட செயலாள ர்கல்யாணசுந்தரம் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார்.

    மாநாட்டை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் புருஷோத்தமன் தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டில் அறிக்கையின் மீது விவாதத்தை வாழ்த்திஓய்வு பெற்ற துணைப்பதிவாளர் குருமூர்த்தி த ேபசினார். ஊரக வளர்ச்சித்துறை அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர்நடராஜன், மாவட்ட நிர்வாகிகள் காசிநாதன், குந்தைவேலு, மாவட்ட துணைத்தலைவர்கள் கருணாகரன், ஆதவன், சிவப்பிரகாசம், மாவட்ட இணைச்செயலாளர்கள் பாலு, பச்சையப்பன், வி.சுந்தர்ராஜன், வேளாண்மை துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர்.ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், ஆகியோர் பேசினார்கள்.

    மாநாட்டில் தீர்மானங்களை முன்மொழிந்து வட்ட துணைத்தலைவர்கள்பஷீர், சந்திரசேகரன். ரவிச்சந்திரன். வட்ட இணைச்செயலாளர் ஜோதி ஆகியோர் பேசினார்கள்.

    மாநாட்டில் புதிய வட்டக்கிளை நிர்வாகிகளாக தலைவராக பத்மநாபன். செயலாளராக ராமதாஸ். பொருளாளராக குலசேகர மணவாள ராமானுஜம், துணைத்தலைவர்களாக கிருஷ்ணமூர்த்தி, பஷீர், சந்திரசேகரன்ர, விச்சந்திரன், ராமசாமி. இணைச்செயலாளர்களாக ஜோதி, விஸ்வலிங்கம், முருகேசன்,அரிக்குமார் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து மாநில செயலாளர்மனோகரன் பேசினார். வட்ட இணைச்செயலாளர்ரா மசாமி நன்றி கூறினார்.

    மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-ஜனவரி 2022 முதல் 3 சதவீதம் அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்க வேண்டும்.

    கடலூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைத்திட வேண்டும்.கடலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைத்திட வேண்டும் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×