search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் பேரூராட்சி கூட்டத்தில்  73 தீர்மானங்கள் நிறைவேற்றம்
    X

    கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    ஆலங்குளம் பேரூராட்சி கூட்டத்தில் 73 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    • ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியில் சாதாரண கூட்டம் அங்குள்ள கூட்ட அரங்கில் நடந்தது.
    • கூட்டத்தில் சாலை வசதிகள் அமைத்தல் உள்ளிட்ட 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியில் சாதாரண கூட்டம் அங்குள்ள கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜான் ரவி, பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் ரவிக்குமார், அன்னத்தாய், ஆரோக்கியமேரி, பபிதா, உமாதேவி, அன்னக்கிளி, சுபாஷ்சந்திர போஸ், சுந்தரம், வென்சிராணி, சாலமன் ராஜா, கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் திட்டம், பொது சுகாதார பராமரிப்பு, தெருவிளக்கு அமைத்தல், சாலை வசதிகள் அமைத்தல் உள்ளிட்ட 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் துணைத்தலைவர் ஜான்ரவி நன்றி கூறினார்.

    Next Story
    ×