search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Congress"

    • தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் ஏற்கனவே வெளியிட்டது.
    • மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    இதில், ஏற்கனவே தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

    அதன்படி, திருவள்ளூர் (தனி)- சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி- கே. கோபிநாத், கரூர்- ஜோதிமணி, கடலூர்- எம்.கே. விஷ்னு பிரசாத், சிவகங்கை- கார்த்தி சிதம்பரம், விருதுநகர்- மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரி- விஜய் வசந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    ஆனால், திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாமல் இருந்தது.

    அதேபோல் புதுச்சேரிக்கும் இன்னும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. 

    இந்நிலையில், தமிழக காங்கிரஸ் இன்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடுகிறார்.

    விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டியிடுகிறார். மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    • கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த தேர்தலில் கூடுதலாக 2 தொகுதிகள் கேட்டுள்ளன.
    • தி.மு.க. மூத்த தலைவர்கள் யாரும் இதுவரை காங்கிரசுக்கு சாதகமான கருத்துக்கள் எதையும் கூறவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

    கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த தேர்தலில் கூடுதலாக 2 தொகுதிகள் கேட்டுள்ளன.

    ஆனால் தி.மு.க. தரப்பில் தமிழகத்தில் 5 புதுவையில் ஒன்று என 6 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று கூறிவிட்டனர். அந்த எண்ணிக்கையை உயர்த்தி வழங்கும்படி காங்கிரஸ் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தி.மு.க. தரப்பில் இருந்து இதுவரை சாதகமான பதில் எதுவும் வரவில்லை. இது காங்கிரஸ் நிர்வாகிகளை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உடைந்து விடகூடாது என்ற மனநிலையில் இருக்கும் தி.மு.க. ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே தொகுதி பங்கீடு சுமூகமாக முடியும், 9 தொகுதிகள் முடிவாகி விட்டது என்றெல்லாம் தகவல்களை கசிய விடுகிறார்கள்.

    ஆனால் தி.மு.க. மூத்த தலைவர்கள் யாரும் இதுவரை காங்கிரசுக்கு சாதகமான கருத்துக்கள் எதையும் கூறவில்லை.

    டெல்லி மேலிடத்துடன் தி.மு.க. தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக யாரும் சென்று பேச்சை தொடரவில்லை. இதனால் காங்கிரஸ் மேலிடமும் எந்த முடிவையும் எடுக்காமல் அமைதி காக்கின்றன.

    இந்நிலையில் இந்த தேர்தலில் மாற்றி யோசிப்போம். அ.தி.மு.க. தரப்பில் நமது கூட்டணியை எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள். மறைமுகமாக காங்கிரசுக்கு அழைப்பும் விடுத்து வருகிறார்கள். எனவே அ.தி.மு.க. பக்கம் போகலாம் என்ற கருத்தை தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் முன் வைத்துள்ளார்கள்.

    அ.தி.மு.க.வுக்கு சென்றால் 16 தொகுதிகள் வரை கிடைக்கும். தி.மு.க. கூட்டணியில் தொகுதிகள் குறைவது மட்டுமல்ல. சில தொகுதிகளை மாற்றவும் முடிவு செய்துள்ளார்கள். இதனால் கட்சிக்குள்ளும் பிரச்சினை வரும். எனவே கூட்டணியை மாற்றுவதே சிறந்தது என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    இதே போல்தான் 2014 தேர்தலில் கூட்டணி பேச்சு வார்த்தை சிக்கல் கடைசி வரை எந்த தெளிவும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. கடைசியில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் சூழ்நிலை வந்தது. அதே நிலை இந்த தேர்தலிலும் ஏற்பட்டு விடக்கூடாது என்று மேலிடத்துக்கு தகவல்கள் அனுப்பி வருகிறார்கள்.

    தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் ம.தி.மு.க.வுடன் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. இன்று அல்லது நாளைக்குள் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதுவரை அமைதியாக இருக்கவும் அதன் பிறகு தி.மு.க. எவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை பொறுத்து தங்கள் நிலைப்பாட்டை மாற்றவும் காங்கிரஸ் யோசித்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி வரும் 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பதவியேற்கிறார். #Congress #KSAlagiri
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சாதாரண தொண்டராக இருந்த என்னை பெரியார், காமராஜர், மூப்பனார் ஆகியோர் அமர்ந்து பெருமை சேர்த்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் நியமித்த தலைவர் ராகுல்காந்திக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல, சோனியா காந்தியின் வாழ்த்துகளை பெறுவதை பாக்கியமாக கருதுகிறேன்.

    இந்தியாவின் எதிர்கால பிரதமராக ராகுல்காந்தியை அமர்த்துகிற இமாலய பணியில் தமது பங்களிப்பை செய்வதற்கு காங்கிரஸ் கட்சியினர் அல்லும், பகலும் அயராது உழைக்க வேண்டிய சூழல் இன்றைக்கு உருவாகி இருக்கிறது.

    இந்த பணியை செய்து முடிப்பதற்காக நமக்கு 100 நாட்கள் கூட இல்லை. கண் துஞ்சாது, அயராது, கடமை உணர்வோடு உழைப்பதன் மூலமே நமது வெற்றிகளைப் பெற முடியும்.

    எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 8-ந் தேதி மாலை 3 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பொறுப்பேற்க இருக்கிறேன். என்னோடு செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள எச்.வசந்தகுமார், கே.ஜெயக்குமார், எம்.கே.விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் பொறுப்பேற்க இருக்கிறார்கள்.

    விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் செயல்வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

    இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என அன்போடு அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #Congress #KSAlagiri  
    ×