என் மலர்
நீங்கள் தேடியது "காமராஜர் மக்கள் கட்சியின் ஐம்பெரும் விழா"
- காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் இருந்தார்.
- தமிழருவி மணியன் பின்னாளில் காமராஜர் மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார்.
காந்திய மக்கள் இயக்கம் தலைவராக இருந்த தமிழருவி மணியன் பின்னாளில் தனது இயக்கத்தை காமராஜர் மக்கள் கட்சி என மாற்றம் செய்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், தமிழருவி மணியன் தனது காமராஜர் மக்கள் கட்சியை, ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளார்.
தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜக தலைமையிலான தேசியய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- காமராஜர் மக்கள் கட்சியின் ஐம்பெரும் விழா நடைபெற்றது
- தமிழருவி மணியன் பங்கேற்பு
திருச்சி:
காமராஜர் மக்கள் கட்சியின் மேற்கு மண்டல இளைஞர் அணி சார்பில் ஐம்பெரும் விழா, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளத்தில் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் இளைஞர் அணி தலைவர் நடிகர் ஜீவா தங்கவேல் உள்பட அனைத்து மாநில, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். விழாவில் கட்சியின் முதல் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து மாநில செயல்வீரர்கள் கூட்டமும், தகவல் தொழில்நுட்ப பயிலரங் கமும், பட்டிமன்றமும் நடைப்பெற்றது. , இறுதியாக தமிழருவி மணியன் காமராஜர் மக்கள் கட்சி, தமிழ் நாட்டிற்கு ஏன் தேவை என எழுச்சியுரை ஆற்றினார். இதில் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
கணிம வளக் கொள்ளை, 10 சதவிகித இட ஒதுக்கீடு, திருக்குறளை,தேசிய நூலாக அறிவித்திடுக, விலைவாசி உயர்வு, மதுக்கடைகளை மூடும் செயல் திட்டத்தை அறிவித்திடுக, முட்டை கொள்முதல் ஊழல் - அதே பாதையில் பயணிப்பது ஏன்? போன்ற தீர்மானங்கள் மாநில செயல் வீர்ரகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.






