search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு தமிழக காங்கிரஸ் முயற்சி- 16 தொகுதி பெறலாம் என்று லேசாக சபலம்
    X

    அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு தமிழக காங்கிரஸ் முயற்சி- 16 தொகுதி பெறலாம் என்று "லேசாக சபலம்"

    • கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த தேர்தலில் கூடுதலாக 2 தொகுதிகள் கேட்டுள்ளன.
    • தி.மு.க. மூத்த தலைவர்கள் யாரும் இதுவரை காங்கிரசுக்கு சாதகமான கருத்துக்கள் எதையும் கூறவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

    கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த தேர்தலில் கூடுதலாக 2 தொகுதிகள் கேட்டுள்ளன.

    ஆனால் தி.மு.க. தரப்பில் தமிழகத்தில் 5 புதுவையில் ஒன்று என 6 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று கூறிவிட்டனர். அந்த எண்ணிக்கையை உயர்த்தி வழங்கும்படி காங்கிரஸ் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தி.மு.க. தரப்பில் இருந்து இதுவரை சாதகமான பதில் எதுவும் வரவில்லை. இது காங்கிரஸ் நிர்வாகிகளை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உடைந்து விடகூடாது என்ற மனநிலையில் இருக்கும் தி.மு.க. ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே தொகுதி பங்கீடு சுமூகமாக முடியும், 9 தொகுதிகள் முடிவாகி விட்டது என்றெல்லாம் தகவல்களை கசிய விடுகிறார்கள்.

    ஆனால் தி.மு.க. மூத்த தலைவர்கள் யாரும் இதுவரை காங்கிரசுக்கு சாதகமான கருத்துக்கள் எதையும் கூறவில்லை.

    டெல்லி மேலிடத்துடன் தி.மு.க. தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக யாரும் சென்று பேச்சை தொடரவில்லை. இதனால் காங்கிரஸ் மேலிடமும் எந்த முடிவையும் எடுக்காமல் அமைதி காக்கின்றன.

    இந்நிலையில் இந்த தேர்தலில் மாற்றி யோசிப்போம். அ.தி.மு.க. தரப்பில் நமது கூட்டணியை எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள். மறைமுகமாக காங்கிரசுக்கு அழைப்பும் விடுத்து வருகிறார்கள். எனவே அ.தி.மு.க. பக்கம் போகலாம் என்ற கருத்தை தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் முன் வைத்துள்ளார்கள்.

    அ.தி.மு.க.வுக்கு சென்றால் 16 தொகுதிகள் வரை கிடைக்கும். தி.மு.க. கூட்டணியில் தொகுதிகள் குறைவது மட்டுமல்ல. சில தொகுதிகளை மாற்றவும் முடிவு செய்துள்ளார்கள். இதனால் கட்சிக்குள்ளும் பிரச்சினை வரும். எனவே கூட்டணியை மாற்றுவதே சிறந்தது என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    இதே போல்தான் 2014 தேர்தலில் கூட்டணி பேச்சு வார்த்தை சிக்கல் கடைசி வரை எந்த தெளிவும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. கடைசியில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் சூழ்நிலை வந்தது. அதே நிலை இந்த தேர்தலிலும் ஏற்பட்டு விடக்கூடாது என்று மேலிடத்துக்கு தகவல்கள் அனுப்பி வருகிறார்கள்.

    தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் ம.தி.மு.க.வுடன் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. இன்று அல்லது நாளைக்குள் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதுவரை அமைதியாக இருக்கவும் அதன் பிறகு தி.மு.க. எவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை பொறுத்து தங்கள் நிலைப்பாட்டை மாற்றவும் காங்கிரஸ் யோசித்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×