என் மலர்

    நீங்கள் தேடியது "Nirmala Sitharaman"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னையில் நடந்த விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.
    • மதத்தை ஒழிப்பேன் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என்றார்.

    சென்னை:

    சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற கணக்கு தணிக்கையாளர்கள் அமைப்பின் 90-வது ஆண்டு விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    தணிக்கை துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானது. தணிக்கையாளர்கள் தங்கள் பணியை திறம்பட செய்ய வேண்டும்.

    அனைத்து மாநிலங்களுக்கும் தேவையானவற்றை வழங்கி வருகிறோம்.

    அரசியல் சாசனப்படி உறுதிமொழி எடுத்துக் கொண்டு அமைச்சராக பொறுப்பு ஏற்கிறோம். அப்படி இருக்கும்போது, என்னதான் நமது கொள்கை என்றாலும், ஏதோ ஒரு மதத்தை ஒழிப்பேன் என்று சொல்வதற்கான அதிகாரம் யாருக்கும் இல்லை. முக்கியமாக அமைச்சருக்கு அது இல்லவே இல்லை.

    ஒரு பொது மேடையில் இருந்து கொண்டு ஒழிக்கப்போகிறேன் என்று சொன்னால், அது ரொம்ப தப்பு. அப்படி ஒழிப்பேன் என்று சொல்லவில்லை என்று இப்போது சொல்வது பொருந்தாது.

    சனாதனத்தை எதிர்க்கும் மாநாடு இது இல்லை, ஒழிக்கின்ற மாநாடு என்று கூறினார். அமைச்சராக இருப்பவர் பொறுப்பாக பேசவேண்டும். அதே மேடையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் இருந்திருக்கிறார்.

    தேர்தலுக்காக சனாதன எதிர்ப்பு கருத்துகளை எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    கோயிலின் உண்டியல் பணம் மட்டும் தமிழக அரசின் அறநிலையத்துறைக்கு வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவும் அவர்கள் பிரச்சினைகளை கேட்டறியவும் முடிவு செய்துள்ளார்கள்.
    • 36 தொகுதிகளில் பாதயாத்திரை செல்லும் அண்ணாமலை 27-ந்தேதி கோவையில் நிறைவு செய்கிறார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற கோஷத்துடன் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை செல்கிறார்.

    ராமேசுவரத்தில் கடந்த மாதம் மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 7 பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 41 சட்ட மன்ற தொகுதிகளில் பாத யாத்திரை சென்றார். கடந்த 22-ந்தேதி நெல்லையில் முதற்கட்ட பாதயாத்திரையை நிறைவு செய்தார்.

    2-ம் கட்ட பாதயாத்திரை அடுத்தமாதம் (செப்டம்பர்) 3-ந்தேதி தொடங்குகிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங் கும் அண்ணாமலை அன்று இரவு தென்காசியில் நிறைவு செய்கிறார்.

    பின்னர் அங்கிருந்து வாசுதேவ நல்லூர், கடையம், ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக 6-ந்தேதி சங்கரன் கோவில் செல்கிறார்.

    சங்கரன் கோவிலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பாதயாத்திரையில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

    பின்னர் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம், கம்பம், போடி ஆகிய பகுதிகள் வழியாக 36 தொகுதிகளில் பாதயாத்திரை செல்லும் அண்ணாமலை 27-ந்தேதி கோவையில் நிறைவு செய்கிறார்.

    இந்த 2-ம் கட்ட பாத யாத்திரை செல்லும் பகுதிகள் விவசாயிகள், நெசவாளர்கள், சிறு தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. எனவே இந்த பகுதிகளில் பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவும் அவர்கள் பிரச்சினைகளை கேட்டறியவும் முடிவு செய்துள்ளார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ‘எனக்கு அதிகாரம் இல்லை’ என்று சொல்லிக் கொள்ளும் கவர்னர் ஆர்.என்.ரவி, அதிகாரத்தை மீறிச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்.
    • மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டுமானால் முதலில் அந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு ஆங்கில நாளேட்டுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- மக்களவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது பேசிய பிரதமர் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை சந்தர்ப்பவாத, அகங்காரக் கூட்டணி என்று விமர்சித்துள்ளாரே இது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்:- 2014 தேர்தலுக்கு முன்னதாக அவர் காங்கிரஸ் கட்சி மீது என்ன குற்றச்சாட்டு வைத்தாரோ, அதே குற்றச்சாட்டை 9 ஆண்டுகளுக்குப் பிறகும் வைத்துக் கொண்டு இருந்தார். பா.ஜ.க. அமைச்சர்கள் சிலரே கொட்டாவி விட்ட காட்சிகளை நேரலையில் பார்க்க முடிந்தது.

    பிரதமர் உரையை யாராவது எடுத்து முழுமையாகப் படித்தால், இது காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து 'எதிர்க்கட்சித் தலைவர்' மோடி பேசுவதைப் போல இருக்கும்.

    பா.ஜ.க. ஆட்சியை ஒரு வாக்கில் கவிழ்த்த கட்சி அ.தி.மு.க. அந்தக் கட்சிக்கு எதிராகத் தான் 2009, 2014 பாராளுமன்றத் தேர்தல்களில் வாக்கு கேட்டார் மோடி. இப்போது அ.தி.மு.க.வை அருகில் வைத்திருப்பதை விட சந்தர்ப்பவாதம் இருக்க முடியுமா?

    கேள்வி:-மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசுகையில், 1989-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டதாகக் கூறி, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாகத் தி.மு.க.வை நேரடியாகத் தாக்கிப் பேசியிருக்கிறார். உங்களது பதில் என்ன?

    பதில்:- நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ்அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசுவார். ஜெயலலிதாவுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அது அவராக நடத்திக் கொண்ட நாடகம் என்பதை அப்போது அவையில் இருந்த அனைவரும் அறிவார்கள்.

    இப்படி சட்டமன்றத்தில் செய்ய வேண்டும் என்று முன்னதாகவே தனது போயஸ்கார்டன் வீட்டில் வைத்து ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்றும், அப்போது நான் உடனிருந்தேன் என்றும் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு (இப்போதைய திருச்சி காங்கிரஸ் எம்.பி) சட்டமன்றத்திலேயே பேசி அதுவும் அவைக் குறிப்பில் உள்ளது. எனவே தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது.

    கேள்வி:-தமிழ்நாடு கவர்னருக்கும் உங்களுக்குமான மோதல் அவர் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிக் கடிதம் எழுதியதில் தீவிரமடைந்தது. அவரைத் திரும்பப் பெற வைக்க நீங்கள் ஜனாதிபதிக்கே கடிதம் எழுதினீர்கள். தமிழ்நாடு அரசாங்கத்தில் அவர் எத்தகைய பாத்திரத்தை ஏற்றுள்ளார்?

    பதில்:- மோடி, குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த போது, 'குஜராத் கவர்னர் மாளிகை என்பது காங்கிரஸ் கட்சி அலுவலகம்' என்று குற்றம் சாட்டினார். இன்றைய கவர்னர் மாளிகைகள், பா.ஜ.க. அலுவலகங்களாக மாற்றப்பட்டு இருக்கின்றன.

    'எனக்கு அதிகாரம் இல்லை' என்று சொல்லிக் கொள்ளும் கவர்னர் ஆர்.என்.ரவி, அதிகாரத்தை மீறிச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். 'எனக்கு வேலையே இல்லை' என்று சொல்லிக் கொள்ளும் கவர்னர் ரவி, வேண்டாத வேலைகளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

    கேள்வி:- செந்தில் பாலாஜியை கைது செய்ததிலும், அமலாக்கத்துறை விசாரிப்பதிலும் தவறில்லை என்று சுப்ரீம் கோர்ட்டே கூறியுள்ளது. பிறகு ஏன் அமைச்சராகத் தொடர அனுமதிக்கிறீர்கள்?

    பதில்:- பா.ஜ.க. தனது அரசியல் எதிரிகளைப் பழி வாங்க இது போன்ற விசாரணை அமைப்புகளை வைத்துள்ளது. இது பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு அல்ல. இதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து உதாரணங்களைச் சொல்ல முடியும்.

    பா.ஜ.க.வின் அரசியல் எதிரிகளின் வீடுகளுக்குள் மட்டுமே இந்த அமைப்புகள் போகும். அப்படி விசாரிக்கப்பட்ட நபர்கள், பா.ஜ.க.வில் ஐக்கியம் ஆனால், அவர்கள் புனிதமாகி விடுவார்கள். வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம். இத்தகைய வாஷிங் மிஷினாகத்தான் இவை இருக்கின்றன.

    எனவேதான் இவர்களது கைதுகளைக் 'குற்ற விசாரணைகள்' என நாங்கள் பார்க்கவில்லை. 'அரசியல் விசாரணைகள்' ஆகத் தான் பார்க்கிறேன். அரசியல் வழக்கில் கைதானவர்களுக்கு தரப்படும் சலுகையே செந்தில் பாலாஜிக்கும் தரப்பட்டுள்ளது.

    கேள்வி:- கூட்டாட்சி வடிவத்தையும், கூட்டுறவுக் கூட்டாட்சியியலையும் மத்திய அரசு சிதைக்கிறது என சி.பி.ஐ., அமலாக்கத்துறை நடவடிக்கைகளை வைத்து நீங்கள் கூறுவது ஏன்?

    பதில்:- பா.ஜ.க.வுக்கு எதிராக உள்ள கட்சிகள் ஒரே அணியாக ஆகிவிடக் கூடாது என்பதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது. அனைவரும் பிரிந்து நின்றால்தான் பா.ஜ.க.வுக்கு லாபம். எனவேதான் அனைவரையும் ஒன்று சேர்க்காமல் இருக்கவே இது போன்ற (சி.பி.ஐ, ஈ.டி) ரெய்டுகள் செய்யப்படுகின்றன. அச்சுறுத்துவது, பயமுறுத்துவதுதான் இந்த ரெய்டுகளின் நோக்கமாகும்.

    கேள்வி:- இந்திய பொருளாதாரத்தில் தற்போது மந்தநிலை உள்ள சூழலில், தமிழ்நாட்டில் முதலீட்டுச் சூழல் எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

    பதில்:- தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அப்படி எந்த மந்தநிலையும் இல்லை என்றே சொல்வேன். அப்படி நினைத்திருந்தால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைச் சென்னையில் வரும் ஜனவரி மாதம் கூட்டி இருக்க மாட்டோமே. இதற்கு அழைப்பு விடுக்க ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு நான் சென்றிருந்தேன். அங்கு நான் சந்தித்துப் பேசிய முதலீட்டாளர்கள் பலரும், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தார்கள். அமைதியான மாநிலம், சிறந்த உள்கட்டமைப்பு உள்ள மாநிலம் எனத் தமிழ்நாட்டை நினைக்கிறார்கள்.

    எனவே நீங்கள் சொல்லும் மந்த நிலைமை நம் மாநிலத் துக்கு இல்லை.

    கேள்வி:- மணிப்பூரில் தொடரும் வன்முறைக்குத் தீர்வுகாண நீங்கள் சொல்லும் வழி என்ன?

    பதில்:- பா.ஜ.க.வின் பிளவுவாத வெறுப்பரசியல் தான் மணிப்பூர் பற்றி எரிவதற்குக் காரணம். இரண்டு பிரிவினருக்கு இடையில் பிளவை ஏற்படுத்தி அவர்களை ஆயுதம் ஏந்த வைத்தது பா.ஜ.க.வின் மதவாத அரசியல் ஆகும். இன்று அவர்கள் அடக்க முடியாத அளவுக்கு கைமீறிப் போய்விட்டது.

    மணிப்பூரில் இப்படி நடக்கும் என்பது அந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசுக்கும் தெரியும். ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் தெரியும். ஆனால் இவ்வளவு பெரிதாக நடக்கும் என்று அவர்கள் கணிக்கவில்லை. வன்முறை இருபக்கமும் கூர்மையான ஆயுதம். 'பூதத்தை உருவாக்கினால், அந்த பூதம் உருவாக்கியவனேயே தாக்கும்' என்பார்கள். அதுதான் மணிப்பூரில் நடக்கிறது.

    மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டுமானால் முதலில் அந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவானவர்கள் தான் நாங்கள் என்பதை ஒன்றிய அரசு நிரூபிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களைப் போய் பிரதமர் பார்க்க வேண்டும். அங்கே ஊர் ஊராக மக்களைச் சந்திக்க வேண்டும்.

    சாதாரணமாக அங்கு அமைதி திரும்பி விடாது. இத்தனை நாட்களாக எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் செயல்களைச் செய்துவிட்டு, அவ்வளவு சீக்கிரம் அதனை அணைத்து விட முடியாது.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை.
    • தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது.

    பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசின் மீதும், பிரதமர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

    அப்போது, இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக உறுப்பினர் கனிமொழி கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், "மணிப்பூர், ராஜஸ்தான், டெல்லி என எங்கும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஆனால் அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது" என்றார். அப்போது, 1989 ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த சம்பவத்தை நிர்மலா சீதாராமன் நினைவு கூர்ந்து பேசியிருந்தார்.

    இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தி.மு.க. குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியிருப்பதாவது:-

    நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ்அப் வரலாற்றைப் படித்துவிட்டுப் பேசுவார். ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அது அவராக நடத்திக் கொண்ட நாடகம் என்பதை அப்போது அவையில் இருந்த அனைவரும் அறிவார்கள். முன்னதாகவே தனது போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்று முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு சட்டமன்றத்திலேயே பேசியது அவைக்குறிப்பில் உள்ளது.

    தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது என கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 1972-ல் அ.தி.மு.கவை உருவாக்கியபோது எம்.ஜி.ஆர் எத்தனை வேகத்தில் செயல்பட்டாரோ அதைவிட 4 மடங்கு வேகத்தில் எடப்பாடி பழனிசாமி செயலாற்றி வருகிறார்.
    • எப்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தது அ.தி.மு.க ஆட்சியில் மட்டுமே.

    திண்டுக்கல்:

    அ.தி.மு.க பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க சார்பில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டு நுழைவாயிலில் 51 அடி உயர கொடிமரம் நடப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் அனைத்து தொண்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டிற்கு 25 லட்சத்திற்கும் அதிகமாக தொண்டர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவிலேயே வேறு ஒரு கட்சியும் இதுபோன்ற ஒரு மாநாட்டை நடத்தியது இல்லை என கூறும் அளவிற்கு வெற்றி மாநாடாக அமையும். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு பணியும் பார்த்து, பார்த்து செய்யப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு எப்படியாவது இடையூறு அல்லது தடை செய்ய தி.மு.க முயற்சி மேற்கொண்டு வருகிறது. அது ஒருபோதும் பலிக்காது.

    1972-ல் அ.தி.மு.கவை உருவாக்கியபோது எம்.ஜி.ஆர் எத்தனை வேகத்தில் செயல்பட்டாரோ அதைவிட 4 மடங்கு வேகத்தில் எடப்பாடி பழனிசாமி செயலாற்றி வருகிறார். அ.தி.மு.க.வில் 2 கோடியே 25 லட்சம் தொண்டர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இது எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறது.

    பாராளுமன்றத்தில் மத்திய அரசின் மீது எதிர்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது. இந்த தீர்மானத்தின்போது பங்கேற்று பேசிய தி.மு.க எம்.பி. கனிமொழி தமிழகத்தில் சமூகநீதி காக்கப்பட்டு வருவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும், மணிப்பூரில் திரவுபதிக்கு நேர்ந்ததைபோல துகில் உரியப்பட்டதாக ஆவேசமாக பேசினார். இதற்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 1989-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வை குறிப்பிட்டு பேசினார்.

    அன்றைய எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் துகில் உரியப்பட்ட சம்பவத்தை நினைவுபடுத்தி இதுதான் தி.மு.கவின் சமூகநீதியா என கேள்வி எழுப்பினார். தி.மு.கவின் சமூகநீதி குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சிவகங்கையின் வீரமங்கை வேலுநாச்சியாராக நாங்கள் பார்க்கிறோம். அன்றைய சட்டசபை நிகழ்வின்போது உறுதிமொழி எடுத்து கொண்ட ஜெயலலிதா இனிமேல் இந்த சட்டசபைக்குள் முதலமைச்சராகத்தான் நுழைவேன் எனக்கூறி அதன்படியே 2 ஆண்டுகள் கழித்து தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராக பதவிஏற்றார். வரலாறு இவ்வாறு உள்ள நிலையில் சமூகநீதிக்காக தி.மு.க போராடுவதாக பேசுவதும், மணிப்பூர் பெண்களை திரவுபதியாக சித்தரித்து கனிமொழி பேசியதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

    எப்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தது அ.தி.மு.க ஆட்சியில் மட்டுமே. இதனை தமிழக மக்கள் நன்கு உணர்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுரை எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
    • மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்குவதால் தமிழக அரசுக்கு நிதி சுமையும் ஏற்படாது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    தமிழகத்தை பற்றி பேச நிறைய இருக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மதிப்பீடு ரூ.1900 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட தாமதமாவதற்கு தமிழக அரசே காரணம். எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மீண்டும் மீண்டும் தவறான தகவல்களை கொடுக்க வேண்டாம். மதுரை எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்கள். மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்குவதால் தமிழக அரசுக்கு நிதி சுமையும் ஏற்படாது. மற்ற மாநிலங்களைவிட மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் கல்லூரியில் கூடுதல் படுக்கை வசதி அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நிறுவனத்தின் கடன் மூலம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக கட்டித் தரப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிர்மலா சீதாராமன் பேசிக்கொண்டிருந்த போதே அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொரோனா பாதிப்பு இருந்தபோதிலும் இன்று நாம் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கிறோம்.
    • இந்தியா தனது எதிர்கால வளர்ச்சியை பற்றி நம்பிக்கையுடனும், நேர்மறையாகவும் இருக்கும் ஒரு அரிய நிலையில் உள்ளது.

    புதுடெல்லி:

    மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மீது காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பேசினார். அதற்கு மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பதில் அளித்தார்.

    பின்னர் மாலை உள்துறை மந்திரி விவாதத்தில் பங்கேற்று பேசினார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று 3-வது நாளாக பாராளுமன்ற மக்களவையில் நடந்தது.

    இதில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து கூறியதாவது:-

    கடந்த 2013-ம் ஆண்டு இந்தியாவை உலகின் ஐந்து பலவீனமான பொருளாதாரங்கள் பட்டியலில் மோர்கன் ஸ்டான்லி சேர்த்தது. இந்தியா பலவீனமான பொருளாதாரமாக அறிவிக்கப்பட்டது. இன்று அதே மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் இந்தியாவுக்கு அதிக மதிப்பீட்டை வழங்கி உள்ளது. 9 ஆண்டுகள் பா.ஜனதா அரசாங்கத்தின் கொள்கைகளால் பொருளாதாரம் உயர்ந்து வளர்ச்சியை கண்டுள்ளது.

    கொரோனா பாதிப்பு இருந்தபோதிலும் இன்று நாம் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கிறோம்.

    இந்தியா தனது எதிர்கால வளர்ச்சியை பற்றி நம்பிக்கையுடனும், நேர்மறையாகவும் இருக்கும் ஒரு அரிய நிலையில் உள்ளது. இன்று உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியின் காலம். அதிகரித்து வரும் பணவீக்கத்தால் வளர்ச்சி குறைகிறது.

    இதனால் வெளிநாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதாக ஆய்வு நிறுவனங்கள் அறிக்கைகள் தந்து வருகின்றன.

    2023-24ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. முந்தைய அரசாங்கம் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கின. அவைகளை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். முந்தைய அரசாங்கம் செய்த தவறுகளை மோடி அரசு சரி செய்துள்ளது.

    மாற்றம் என்பது பேசும் வார்த்தைகளாக அல்ல. உண்மையான செயல்கள் மூலம்தான் வரும். நீங்கள் மக்களுக்கு கனவுகளை காட்டுகிறீர்கள். அவர்களின் கனவுகளை நாங்கள் நனவாக்குகிறோம். எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது திட்டங்களை மட்டுமே தொடங்கி வைத்தனர். அவைகளை முறையாக செயல்படுத்தவில்லை.

    2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராக மக்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் (தேர்தல்) கொண்டு வந்து அவர்களை தோற்கடித்தனர். 2024-ம் ஆண்டிலும் இதே நிலைதான் அவர்களுக்கு ஏற்படும்.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து போராடுகிறார்களா? அல்லது ஒன்றாக சண்டையிடுகிறார்களா? என்பதை புரிந்து கொள்வது கடினம்.

    எதிர்க்கட்சிகளின் மோசடிகளால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து மோடி அரசாங்கம் மீட்டு கொண்டு வந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஊழல் உள்ளிட்டவற்றால் முழு தசாப்தத்தை வீணடித்தது. இன்று ஒவ்வொரு நெருக்கடியும், துன்பமும் சீர்திருத்தமாகவும் வாய்ப்பாகவும் மாற்றப்பட்டுள்ளது.

    வங்கித்துறை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து பல நடவடிக்கை எடுத்துள்ளோம். அரசியல் தலையீடு இல்லாமல் வங்கிகள் செயல்படுகின்றன. தொழில் நேர்மையுடன் செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மணிப்பூரில் நடக்கும் கலவரம் இப்போது முதலாவதாக நடப்பது அல்ல. அரசியல் பேசுவதாக நினைக்க வேண்டாம்.
    • ராகுல்காந்தி பாராளுமன்றத்துக்கு வரட்டும். பார்த்துக் கொள்ளலாம்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் 5 இடங்களில் அருங்காட்சியகம் அமைக்க மொத்தமாக ரூ.2500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக ஆதிச்சநல்லூருக்கும் செலவிடப்படுகிறது.

    1200 பொது ஆண்டுகளுக்கும் பழமையானது இந்த ஆதிச்சநல்லூர். எனவே விரைவில் இதற்கான பணிகளை முடிப்போம். தமிழக அரசு கீழடியில் மிகச் சிறப்பான பணிகளை முன்னெடுத்து மேற்கொண்டு வருகிறது.

    மணிப்பூரில் நடக்கும் கலவரம் இப்போது முதலாவதாக நடப்பது அல்ல. அரசியல் பேசுவதாக நினைக்க வேண்டாம்.

    கடந்த 2013-ம் ஆண்டு மருந்துகள் உட்பட எந்த ஒரு பொருட்களும் மணிப்பூரில் கிராமங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை மந்திரி கூட அங்கு செல்லவில்லை. ஆனால் இப்போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாட்கள் அங்கு தங்கியிருந்து அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்து திரும்பி இருக்கிறார்.

    எதிர்க்கட்சிகள் மணிப்பூர் சென்று நேரில் பார்த்துக்கொண்டு வந்த பிறகும் கூட அவர்களது கருத்துக்களை தெரிவிக்கவில்லை. சம்பந்தப்பட்ட உள்துறை மந்திரியிடம் தெரிவித்தால் அதற்கான விடை கிடைக்கும். ஆனால் அவர்கள் அங்கு என்ன நடந்தது என்று குறித்து பேசவில்லை.

    உள்துறை மந்திரி பாராளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து பதில் சொல்ல தயாராக இருந்தும், எதிர்க்கட்சிகள் அதுதொடர்பாக விவாதிக்க தயாராக இல்லை. எதிர்க்கட்சிகள் சர்ச்சை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்படுகிறார்கள்.

    பாராளுமன்றத்துக்கு பிரதமர் நேரில் வந்து தான் ஒரு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    ராகுல்காந்தி பாராளுமன்றத்துக்கு வரட்டும். பார்த்துக் கொள்ளலாம். எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அகழாய்வு பணியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், வெண்கல பொருட்கள், தங்க நெற்றிப்பட்டயம் உள்பட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அங்கேயே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    செய்துங்கநல்லூர்:

    உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 1876-ல் இந்தியாவிலேயே முதல் முதலில் அகழாய்வு நடந்தது. இங்கு தற்போது வரை பல்வேறு கட்டங்களாக மத்திய, மாநில அரசுகளின் சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

    இதில் பண்டைய தமிழர்களின் வாழ்விடம், இடுகாடு ஆகியவை குறித்து தகவல்கள் கிடைத்தது. அகழாய்வு பணியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், வெண்கல பொருட்கள், தங்க நெற்றிப்பட்டயம் உள்பட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்விடங்களை தேடும் பணியும் திருக்கோளூர், அகரம் போன்ற பகுதியில் நடந்து வருகிறது. இதனால் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் நாகரிகம் உலகிற்கு தெரியவந்தது. இங்கு நடந்த அகழாய்வில் கண்டு பிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அங்கேயே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால் அந்த பணி கடந்த 145 ஆண்டுகளாக தள்ளிப்போய் கொண்டிருந்தது. கடந்த 2020-ம் ஆண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனால் 145 வருட கனவு நிறைவடைந்தது.

    இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. திருச்சி தொல்லியல்துறை மண்டல இயக்குனர் டாக்டர் அருண்ராஜ் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர் யதீஸ்குமார் தலைமையில் பணி நடந்து வந்தது.

    இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. கனிமொழி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் ஊர்வசி அமிர்தராஜ், மார்கண்டேயன், சண்முகையா, கடம்பூர் ராஜூ, மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி சங்கர் கணேஷ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள், மலேசியா சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை மாணவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.

    மேலும் ஆதிச்சநல்லூர் பரம்பில் பி சைட்டில் ஆன் சைட் எனப்படும் எடுத்த பொருட்களை அந்த குழியில் வைத்து காட்சிப்படுத்தி உள்ளனர். மேலும் அதை சுற்றி கண்ணாடி பேழைகள் அமைத்து மேல் இருந்து குழியின் உள்ளே உள்ள பொருட்களை பார்க்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு இந்தியாவில் முதன் முறையாக ஆதிச்சநல்லூரில் தான் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp