search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchayat union meeting"

    • ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய மேம்படுத்தப்பட்ட கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
    • இதில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் 14 பேர் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய மேம்படுத்தப்பட்ட கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியம் லீலா, நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் 14 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 85 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் ராஜாத்தி, தானி ராஜ்குமார், மல்லிகா, பரமேஸ்வரி, ரகுராமன், மாரிமுத்து, தாமஸ், நசரேத், ஜெயா, பியூலா ரத்தினம், ஜெயகிருபா, காந்திமதி, சஜிதா, ஒன்றிய பொறி யாளர்கள் வெள்ள பாண்டி யன், சிவசங்கரன், சத்துணவு மேலாளர் தனலட்சுமி, அலுவலக பணியாளர்கள் ஆறுமுக நயினார், அருள்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அ.தி.மு.க. ஒன்றியக்குழு தலைவர் தலைமை யிலும், ஒன்றிய குழு துணைத்தலைவர் முன்னிலை யிலும் நடைபெற்றது.
    • சரமாரியாக புகார்களை அனைத்து கவுன்சிலர்களும் கூறியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அ.தி.மு.க. ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன் தலைமை யிலும், ஒன்றிய குழு துணைத்தலைவர் வரதராஜன் முன்னிலை யிலும் நடைபெற்றது.

    கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட இருந்த நிலையில் கூட்டம் ஆரம்பித்த உடனே ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர் பாலகிருஷ்ணன் மற்றும் கிராம ஊராட்சி ஆணை யாளர் மலர்விழி மீது அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட 17 ஒன்றிய கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றச்சாட்டு களை கூறினர்.

    முறையாக தெரிவிக்கா மல் தன்னிச்சையாக செயல்பட்டு ஒரு சில ஊரா ட்சிகளுக்கு பாரபட்சமாக பணிகள் செய்யப்பட்டு ள்ளது. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளி கள் தேர்வு செய்யப்பட்டதை ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனர், கிராம பஞ்சாயத்து இயக்கு னர் என மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது ஒன்றியகுழு தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சி லர்களுக்கு தகவல் தெரி விப்பதில்லை. புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலைகளை ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்துகி றோம் என்ற பெயரில் உடைத்து சேதப்படுத்தி பல மாதங்கள் ஆகியும் புதுப்பி க்கப்படாமல் உள்ளது. அதனை ஒப்பந்ததாரர்கள் புதுப்பித்து தர வேண்டும் என சரமாரியாக புகார்களை அனைத்து கவுன்சிலர்களும் கூறியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன் தனக்குத் தெரியாமல் பல்வேறு வேலைகள் நடந்து வருவதாகவும், தனக்கு ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர்கள் முறையாக தகவல் தெரிவிப்பது இல்லை என்றும் சரமாரி யாக புகார் கூறினார்.

    ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பால கிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் அனைவரின் கோரிக்கைகளுக்கு ஏற்ப வருங்காலங்களில் செயல்படுவதாகவும், அடிப்படை தேவைகள், அவசரமாக தேவைப்பட்ட ஒரு சில ஊராட்சிகளுக்கு பணிகளை மேற்கொ ண்டதால் முறையாக தகவல் தெரிவிக்க முடியவில்லை என்று விளக்கமளித்தார்.

    • திருமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடந்தது.
    • செக்கனூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சில் கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் லதா ஜெகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் வளர்மதி அன்பழகன் முன்னிலை வகித்தார்.

    கூட்டம் தொடங்கி யவுடன் வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்யப் பட்டது. இதனை தொட ர்ந்து கவுன்சிலர்கள் ஆண்டிச்சாமி, மின்னல் கொடி, ஓம் ஸ்ரீ முருகன் உள்பட பலர் தங்களது வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.

    கவுன்சிலர் மின்னல் கொடி பேசுகையில், காண்டை, பொன்னமங்கலம், வாகைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நிதி ஒதுக்கா ததால் அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை. மக்கள் கேள்வி கேட்கின்ற னர். எனவே கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கூட்டத்தில் சுகாதார பணி மேற்கொள்ளப்படும் போது கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். செக்கனூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ×