என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகளை விஜய் நியமனம் செய்தார்.
- புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் என தெரிவித்தார்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகளை அக்கட்சி தலைவர் விஜய் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தில் அணிகளின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணியில் பின்வரும் முறையில் நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
பொறுப்பாளர்:
ராஜ்மோகன், துணைப் பொதுச் செயலாளர்
ஒருங்கிணைப்பாளர்கள்:
எஸ்.ரமேஷ், செங்கல்பட்டு
ஜே.கேத்ரின் பாண்டியன், திருநெல்வேலி
தேசியச் செய்தித் தொடர்பாளர்கள்:
பெலிக்ஸ் ஜெரால்டு, சென்னை
வழக்கறிஞர் எம்.சத்தியகுமார், சென்னை
எம்.கே.தேன்மொழி பிரசன்னா, மதுரை
மாநிலச் செய்தித் தொடர்பாளர்கள்:
முகில் வீரப்பன் (எ) மு. சு.சிவகுமார். புதுக்கோட்டை
அமலன் சாம்ராஜ் பிரபாகர், சென்னை
க.சி.தி. அனந்தஜித் மகியா. திருவள்ளூர்
மு. ஞான செல்வின் இன்பராஜ், செங்கல்பட்டு
முகமது இப்ராஹிம், சென்னை
ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், சென்னை
புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து. எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின்படியும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் புதிய நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்வார்கள். கட்சியினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
- புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.
சென்னை:
நாடு முழுவதும் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.
தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் மக்கள் புதிய ஆண்டை வரவேற்றனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டு நிறைவடைந்து 2026-ம் ஆண்டு பிறந்துள்ளது.
புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தலைநகர் டெல்லி முதல் சென்னை வரை கொண்டாட்டங்களில் மக்கள் மூழ்கினர்.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலையில் இருந்து வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
'மாலைமலர்' சார்பில் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
- புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமைய வேண்டும் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- நடிகர் அஜித் குமார் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
சென்னை:
தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு உள்ளன.
புதிதாக பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாகவும், ஏற்றமிகு வாழ்க்கையை அளிப்பதாகவும் அமைய வேண்டும் என அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் திருப்பூர் அருகிலுள்ள வெள்ளகோயில் அருகே கொங்குநாடு ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், அஜித் குமார் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், புத்தாண்டு அனைவருக்கும் வளமான ஆண்டாகவும், உங்கள் வாழ்க்கை அழகானதாகவும் அமைய வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட கடந்த 15-ந்தேதி முதல் விருப்பமனு விநியோகம்.
- இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் சுமார் 9,500 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் தேர்தல் கூட்டணி ஜனவரி மாதத்தில் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம்.
அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை தெளிவாகப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அதிமுக விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தருமாறு கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்று 31-ந்தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் அப்படிவங்களை வழங்கலாம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி விருப்ப மனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. மொத்தம் சுமார் 9,500 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுவை அளித்துள்ளனர். விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்க்காணல் விரைவில் தொடங்கும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர்,
- திருவாரூர், நாகை, கோவை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக பனிப்பொழிவு காணப்படுகிறது. சூரியன் காலை 7 மணிக்குப் பிறகுதான் தெரிகிறது. இவ்வாறு இருக்கும் நேரத்தில் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகள் மற்றும் சில மாவட்டங்களில் இன்று மழை பெய்வதற்கான அறிகுறியுடன் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கோவையின் காட் (ghat) பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இரவு 7 மணி வரை ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.
- தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 400 குறைந்தது.
- இன்று மாலை மேலும் 560 ரூபாய் சவரனுக்கு குறைந்தது.
தங்கம், வெள்ளி விலை கடந்த ஒரு மாதமாக 'கிடுகிடு'வென உயர்ந்து வந்தது. தினமும் புதிய உச்சத்தை கடந்த வண்ணமே விலை பயணம் ஆனது. தங்கத்தை பொறுத்தவரையில், கடந்த 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800-க்கு விற்பனை ஆனது புதிய உச்சமாக பார்க்கப்பட்டது.
கொஞ்சமாவது விலை குறையாதா? என பார்த்து கொண்டிருந்த நேரத்தில் நேற்று தங்கம் விலை அதிரடியாக சரிந்து இல்லத்தரசிகள், மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.420-ம், சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 360-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 800-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று காலையும் குறைந்தது சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,550-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,400-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்று மாலை மீண்டும் தங்கம் விலை குறைந்தது. ஒரு சவரனுக்கு ரூ. 560 குறைந்தது. இதனால் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 960 ரூபாய் குறைந்தது, தற்போது ஒரு சவரன் 99 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
30-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800
29-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,160
28-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800
27-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800
26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,120
- போதையில் யார் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா?
- ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு சாமானியர் மீது 2 இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதாக செய்திகள் வருகின்றன. அதேபோல், திருப்பூரில் போதை இளைஞர் ஒருவர், காவலரை கத்தியுடன் நடுரோட்டில் விரட்டிய செய்தியும் அதிர்ச்சி அளிக்கின்றன.
போதைப் பொருள் புழக்கமும், போதை இளைஞர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடும் தினசரி செய்தியாகி இருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் பொம்மை முதல்வர்?
அடுத்த நொடி யார், எந்த போதையில் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா?
"தமிழ்நாட்டில் கஞ்சாவே இல்லை" என்று வெட்கமே இன்றி கூறும் மாரத்தான் அமைச்சருக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா?
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், நாகப்பட்டினத்தில் 140 கிலோ, இராமநாதபுரத்தில் 564 கிலோ, திருச்சியில் 4 கிலோ என தமிழகத்தில் பிடிப்பட்டுள்ள கஞ்சா குறித்த செய்திகள் எல்லாம் இந்த அமைச்சருக்கும், அவரின் தலைவரான பொம்மை முதல்வருக்கும் தெரியாதா என்ன?
போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்,
சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால்,
எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?
நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத திறனற்ற பொம்மை முதல்வரிடம் சிக்கித் தமிழ்நாடு தவித்தது போதும்!!
2026, விடியா ஆட்சியிடம் இருந்து தமிழகம் விடுதலை பெறும் ஆண்டாக அமையட்டும் என கூறினார்.
- மெரினா கடற்கரையில் புத்தாண்டையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
- புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று மாலை முதல் நாளை வரையில் பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
2025-ம் ஆண்டு இன்று இரவுடன் விடைபெற்று நள்ளிரவு 12 மணிக்கு 2026-ம் ஆண்டு பிறக்கிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று இரவு களைகட்டி காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு உள்ளன.
குறிப்பாக சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நட்சத்திர விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளில் புத்தாண்டையொட்டி ஆட்டம், பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத் துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இன்று பிற்பகலில் இருந்தே இளைஞர்கள் அதற்கு தயாரானார்கள்.
மெரினா கடற்கரையில் புத்தாண்டையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று இரவு 9 மணியில் இருந்து மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவு 12 மணியளவில் புத்தாண்டு பிறந்ததும் மெரினாவில் கூடியிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஹேப்பி நியூ இயர் என உற்சாக குரல் எழுப்பி புத்தாண்டை வரவேற்கிறார்கள்.
இந்த கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக சென்னை மாநகர் முழுவதும் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
அனைத்து கடற்கரை பகுதிகள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்திலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.
நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பை பாஸ் சாலை மற்றும் ஜி.எஸ்.டி. ரோடு ஆகிய பகுதிகளிலும், தாம்பரம் ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பைக்ரேசை கட்டுப் படுத்துவதற்காக 30 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இன்று இரவு 9 மணிக்கு பிறகு சென்னை மாநகரில் உள்ள 30 மேம்பாலங்கள் முழுமையாக மூடப்படுகிறது.
சென்னையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட முக்கிய கோவில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டு தலங்கள், பொது இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று மாலை முதல் நாளை வரையில் பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தற்காலிக காவல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மெரினாவில் மணல் பரப்பில் இறங்குவதற்கு கூட இன்று இரவு போலீசார் அனுமதிக்க மாட்டார்கள். இதைத் தாண்டி யாராவது கடற்கரை மணல் பகுதிக்குள் நுழைவதை தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட இருக்கிறது. முக்கிய இடங்களில் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட உள்ளன. மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நன்கு நீச்சல் தெரிந்த வீரர்களையும் தயார் நிலையில் பணியமர்த்த உள்ளனர். கடலில் யாரும் மூழ்கிடாமல் உயிரிழப்பை தடுப்பதற்காக இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அவசர மருத்துவ உதவிக்காக மெரினாவில் முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் சீண்டல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கு சாதாரண உடைகளில் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தனியார் இடங்களில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கும் போலீசார் முழுமையாக தடை விதித்து உள்ளார்கள். இது தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருப்பவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் போதை பொருட்களை யாராவது பயன் படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறி யாராவது போதைப் பொருட்களை பயன்படுத்தினால் அதுபற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் புத்தாண்டு கொண்டாட் டத்தின்போது நடைபெறும் மது விருந்துகளை இரவு 1 மணிக்குள் முடித்து விட வேண்டும் என்றும், போதையில் மோட்டார் சைக்கிள்கள், கார்களை பொதுமக்கள் ஓட்டக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறி யாராவது போதையில் வாகனங்களை ஓட்டினால் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இப்படி சென்னை, கோவை, திருச்சி மதுரை, நெல்லை, கன்னியாகுமரி என அனைத்து முக்கிய மாநகர பகுதிகளிலும் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தமிழகம் முழு வதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாமி தரிசனம் செய்தார்.
- திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதைத் தடுக்க முடியாது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில்,
திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதைத் தடுக்க முடியாது. மலை மீது தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக தமிழ்நாடு அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் ஒன்றிய பாஜக அரசு ஆர்வம் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
- கடந்த 28-ந்தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்.
சென்னை:
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இந்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த 26-ந்தேதி இடைநிலை ஆசிரியர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். 27-ந்தேதி எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 28-ந்தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் சென்னை எழிலகம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் ஆகிய 2 இடங்களில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள். நேற்று எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி னார்கள். அதன்பிறகு பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு கல்லூரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர். இருவழி சாலையில் ஒரு பகுதியில் முழுவதும் ஆசிரியர்கள் அமர்ந்ததால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டம் குறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க பொதுச்செயலாளர் ராபர்ட் கூறியதாவது:-
எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும். இதுவரை விடுமுறை நாட்களில் போராடி வந்தோம். இனி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. ஆனாலும் நாங்கள் வேலை நாட்களில் விடுமுறை எடுத்து போராட்டத்தை தொடருவோம். எங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்தால் அமர்ந்து போராடுவோம். எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். புத்தாண்டு, பொங்கல் நாட்களிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியர்கள் மறியல் போராட்டம் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் பதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்திய ஆசிரியர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
- போலியான வாக்குறுதிகளையும் பசப்பு வார்த்தைகளையும் தமிழக மக்கள் இனியும் நம்புவதற்கு தயாராக இல்லை.
- தமிழ்நாடே தலை குனிகின்ற செயலாக திருத்தணியில் வடமாநில வாலிபர் மதுபோதையில் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் மக்கள் வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவார்கள்.
போலியான வாக்குறுதிகளையும் பசப்பு வார்த்தைகளையும் தமிழக மக்கள் இனியும் நம்புவதற்கு தயாராக இல்லை.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தபோதும் கள்ளக்குறிச்சிக்கு செல்லாத முதலமைச்சர் இப்போது தேர்தலுக்காக அங்கு சென்று உள்ளார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் என போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகமே போர்க்களமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களின் குரலெல்லாம் தமிழக அரசுக்கு கேட்கவில்லை.
செவிலியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து முதலமைச்சர் கவலைப்படாமலேயே இருந்து வருகிறார். ஆனால் தினந்தோறும் போட்டோ ஷூட் மட்டும் நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டை சீரழிக்கும் ஆட்சி புதிய ஆண்டில் முடிவுக்கு வரும். மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.
தமிழ்நாடே தலை குனிகின்ற செயலாக திருத்தணியில் வடமாநில வாலிபர் மதுபோதையில் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவம் நடந்திருப்பது அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது.
கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் தமிழ் நாட்டில் கஞ்சா இல்லை போதை பொருட்கள் புழக்கம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி இருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாகும்
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தேசிய தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
- கதவை திறந்து வைத்துக்கொண்டு கூட்டணிக்கு யாராவது வருவார்களா? என்று எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு மீது குறை சொல்வதை காங்கிரஸ் அனுமதிக்காது. பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தேசிய தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
தமிழக அரசுக்கு எதிராகவும், பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் பேசும் நிர்வாகிகள் மீது அகில இந்திய தலைமையிடம் புகார் அளித்து உள்ளோம்.
இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. யாராலும் கூட்டணியை உடைக்க முடியாது. கூட்டணி சமுத்திரம் போன்றது. அதில் சில அலைகள் வரலாம். போகலாம். கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது.
கதவை திறந்து வைத்துக்கொண்டு கூட்டணிக்கு யாராவது வருவார்களா? என்று எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி கதவை திறந்து வைத்துக்கொண்டு இருந்தாலும் யாரும் செல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






