search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay Vasanth"

    • பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
    • கன்னியாகுமரியின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் துணையாக அமையும்.

    கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜருக்கு ஆயிரம் அடி உயர சிலை நிறுவ வேண்டும் என்று பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பெருந்தலைவர் காமராஜர் நாட்டிற்கு செய்த நற்பணிகளை போற்றும் வகையில் அவருக்கு கன்னியாகுமரியில் ஆயிரம் அடி உயரத்திற்கு சிலை ஒன்றினை நிறுவ வேண்டும் என்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் பாராளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பினார்.

    பாராளுமன்றத்தின் 377-வது விதியின் கீழ் இன்று கோரிக்கையை சமர்ப்பித்த விஜய்வசந்த் எம்.பி தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்விகண் திறந்த வள்ளல் கர்மவீரர் காமராஜர் நாட்டுக்கு செய்த சேவைகளை உலகிற்கு எடுத்து சொல்லும் வகையில் கன்னியாகுமரியில் ஆயிரம் அடி சிலை ஒன்றினை நிறுவ வேண்டும். இந்தச் சிலை பெருந்தலைவரின் புகழை பரவ செய்வதுடன் கன்னியாகுமரியின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் துணையாக அமையும்.

    இந்த சிலை அமையும் பட்சத்தில் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை அது ஈர்த்து உள்ளூர் வணிகத்தை பெருக செய்து நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் இதனால் பயனடைவார்கள்.

    மேலும் கட்டுமான தொழில் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் இந்த சிலையை நிறுவிய பின்னர் வணிக ரீதியாகவும், வேலை வாய்ப்புகள் பெருகும் வகையிலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு கன்னியாகுமரியின் மற்றுமொரு பரிணாம வளர்ச்சியை நாம் காண வழி வகை செய்யும்.

    மேலும் இந்த சிலையின் கீழ் பெருந்தலைவர் காமராஜரின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் விதமாக அருங்காட்சியகம் ஒன்றினையும் அமைக்க வேண்டும்.

    இந்த சிலை அமைக்கும்போது சுற்றுச்சூழல் மாசுபடாத வகையிலும் கடல் சூழலையும், கடல் உயிரினங்களையும் பாதிக்காத வகையில் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொண்ட பின் இதனை கட்ட வேண்டும்.

    பெருந்தலைவர் காமராஜரின் இணை இல்லா சரித்திரத்தை உலகெங்கும் உள்ளவர்கள் அறியும் வகையில் இந்த சிலையை நிறுவ அரசு முன் வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • ரூபன் நாடார் துணைத்தலைவர் மணி நாடார் சுரேஷ் குமார் நாடார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    • திருமண மண்டபத்தில் நாடார் பேரவை தலைவர் வி எஸ் கணேசன் நாடார் தலைமையில் நடைபெற்றது.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கோடம்பாக்கம் வட்டார நாடார் சங்கத்தின் ஏழாம் ஆண்டு விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.


    கோடம்பாக்கம் நாடார் சங்க தலைவர் மாம்பழம் ராஜேந்திரன் நாடார் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜாவுடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன்.

    முன்னதாக கோடம்பாக்கம் நாடார் சங்க நிர்வாகிகளில் ஒருவரான மறைந்த டாக்டர் சபாபதி அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சங்க நிர்வாகிகளின் குழந்தைகளுக்கு உதவி வழங்கினோம்.


    இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பால் கனகராஜ் திரைப்பட நடிகர் ஜீவா தங்கவேல் ஜாக்குவார் தங்கம் நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்த்ராஜ் நாடார், பொதுச்செயலாளர் சந்திரசேகர் நாடார் கோடம்பாக்கம் நாடார் சங்க காப்பாளர் ஜார்ஜ் நாடார், முன்னாள் தலைவர் ஐ கே ரூபன் நாடார், சாந்தகுமார் நாடார் சங்க ஆலோசகர் ரூபன் நாடார் துணைத்தலைவர் மணி நாடார் சுரேஷ் குமார் நாடார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போன்று முன்னதாக பம்மல் நாடார் பேரவை சார்பில் குடும்ப விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாடார் பேரவை தலைவர் வி எஸ் கணேசன் நாடார் தலைமையில் நடைபெற்றது.


     இந்த நிகழ்ச்சியில் பேரவை தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு காமராஜர் புகழ் பாடினேன்.

    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிறந்தநாள் கொண்டாடினார்.
    • கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட விஜய்வசந்த் அமோக வெற்றி பெற்றார்.

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆனவர் விஜய்வசந்த். நேற்று பிறந்தநாள் கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு விஜய்வசந்த் முகநூல் பதிவு மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

    இத்துடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாளை முன்னிட்டு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தலைவர் திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

    • ஏற்றக்கோடு ஊராட்சி மன்ற உறுப்பினர் தெரசம்மாள் உட்பட மாற்று கட்சியினர் 20 பேர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
    • மண்டைக்காடு புதூர் புனித லூசியா ஆலயம் திருத்தலமாக உயர்த்தப்பட்டு முதல் திருப்பலி நடைபெற்றது.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இலங்கை கைவசம் உள்ள நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகளை உடனடியாக மீட்டுத்தரக் கோரியும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரியும், சேதமடைந்த படகுகளுக்கு தமிழக அரசு வழங்குவதுபோல், மத்திய அரசும் தகுந்த இழப்பீடு வழங்கக் கோரியும், மீண்டும் மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்கும்போது கைது செய்யப்படுவதையும், அவர்களின் படகுகளை சேதப்படுத்துவது, பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை கண்டித்தும், நமது மீனவர்கள் மீதான நீதிமன்ற தண்டனையை நிறுத்தக் கோரியும், இந்திய மீனவர்களிடம் அத்துமீறும் இலங்கை கடற்படையினரை கண்டித்தும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இராமேஸ்வரத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன்.


    முன்னதாக ஆரல்வாய்மொழி பகுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டிகளை தொடங்கி வைத்தேன்.

    ஏற்றக்கோடு ஊராட்சி மன்ற உறுப்பினர் தெரசம்மாள் உட்பட மாற்று கட்சியினர் 20 பேர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஜெபா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார் மற்றும் வட்டார மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


    மண்டைக்காடு புதூர் புனித லூசியா ஆலயம் திருத்தலமாக உயர்த்தப்பட்டு முதல் திருப்பலி நடைபெற்றது.


     கோட்டார் ஆயர் நசரேன் சூசை அவர்கள் நடத்திய இந்த திருப்பலியில் நானும் கலந்து கொண்டு இறை ஆசி பெற்றேன்

    • கோதநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஈத்தவிளையில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டது.
    • கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கோதநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஈத்தவிளையில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 14 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினேன்.


    இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


    முன்னதாக மறைந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஜெபின் சார்லஸ் அவர்கள் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன்.

    • தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர்செல்வம் ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தார்.
    • நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாகர்கோவிலில் வருகின்ற 15 ஆம் தேதி மிக சிறப்பாக நடைபெற இருக்கும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கன்னியகுமாரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் மாவட்ட தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர்செல்வம் ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.



    • செல்வப்பெருந்தகையை குற்றம்சாட்டி பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்.
    • செல்வப்பெருந்தகை மீது சி.பி.ஐ. வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீதான வழக்குகளை பட்டியல் போட்டு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.

    காங்கிரஸ் கட்சியில் வேறு எந்த மாநிலத்திலும் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்து விட்டு வெளியில் வந்தவர் மாநில தலைவராக இல்லை. ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு அனைவருக்குமே தெரியும்.

    செல்வப்பெருந்தகையை கைது செய்ய சென்ற போது குதித்து காலை உடைத்துக் கொண்டதும் அனைவருக்கும் தெரியும்.


    தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் எப்படி இருக்கிறார்? என்பது தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும். அதைப் பார்த்துதான் மக்கள் ஓட்டு போட வேண்டும். இது போன்ற நபர்களை படம் பிடித்து காட்டாமல் விடமாட்டேன் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

    இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் செல்வப்பெருந்தகை மீது தொடர்ந்து அநாகரீக முறையில் பேசிவரும் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க.-வினரையும் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.


    • விஜய் வசந்த் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார்.
    • நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார். இதேபோல் விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றார்.

    அந்த வகையில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற விஜய் வசந்த் இணைந்து நன்றியை தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்றது.
    • மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம், நவீன் குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு கொண்டனர்.

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செல்வபெருந்தகை தலைமையில் ஜூலை 15 அன்று நடைபெறவுள்ளது.


    அது தொடர்பான ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்றார்.

    தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் செல்வம் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம், நவீன் குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு கொண்டனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் இணைந்து கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் துவக்கி வைத்தார்.
    • கால்பந்து போட்டிகளில் பல்வேறு அணிகளை சேர்ந்த ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி பகுதியில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கால்பந்து போட்டி நடைபெற்றது. 

    கால்பந்து போட்டிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் இணைந்து கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் துவக்கி வைத்தார்.

    கால்பந்து போட்டிகளில் பல்வேறு அணிகளை சேர்ந்த ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர். 

    போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.பி விஜய் வசந்த் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

    • மீனவர் அணி தலைவர் ஸ்டர்வின், உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • காமராஜர் மற்றும் லூர்தம்மாள் சைமன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    குளச்சல் நகரத்தில் காங்கிரஸ், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாராளுமன்ற உளுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு நன்றி தெரிவித்தார்.


    பெருந்தலைவர் காமராஜர் மற்றும் லூர்தம்மாள் சைமன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


    இந்நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.டி.உதயம், நகர்மன்ற தலைவர் நசீர், காங்கிரஸ் நகர கமிட்டி தலைவர் சந்திரசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் யூசுஃப் கான், ஆரோக்கிய ராஜன், மீனவர் அணி தலைவர் ஸ்டர்வின், உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார்.
    • பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உடன் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார்.

    அந்த வகையில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக விஜய் வசந்த் சந்தித்தார். அவர்களுக்கு சால்வை அணிவித்தார்.


     அப்போது, பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உடன் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இருந்தனர்.

    ×