என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay Vasanth"

    • கப்பியறை பேரூராட்சி கஞ்சிக்குழியில் உள்ள பழைய அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டது.
    • புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்திடம் கோரிக்கை விடுத்தனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை பேரூராட்சி கஞ்சிக்குழியில் உள்ள பழைய அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டது. அதனை மாற்றி புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்திடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா கஞ்சிக்குழியில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் பொன் சாலமன் தலைமை தாங்கினார். குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கப்பியறை பேரூராட்சி தலைவர் அனிஷா கிளாடீஸ் அகியோர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் புதிய கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அனைவரும் இனிப்புகள் வழங்கினார்.

    முன்னதாக அவருக்கு பொன்னாடை போர்த்தி காங்கிரஸ் கட்சினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்ததோடு மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் கப்பியறை பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் கிளாட்சன் விபின், துணை தலைவர் குமாரி, வார்டு உறுப்பினர்கள் பாலம்மான், சுபியான், சுஜின் கட்சி நிர்வாகிகள் ரமேஷ், மணிகண்டன், ஜெபா, வின்சென்ட், பகவத்சிங் உட்பட கப்பியறை பேரூராட்சி காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விஜய்வசந்த் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
    • காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    நாடு முழுவதும் இன்று 77-வது குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் உழைப்பாளர் சிலை அருகே கவர்னர் ஆர்.என்.ரவி தேசியகொடி ஏற்றினார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள், கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியகொடி ஏற்றப்பட்டது.

    அந்த வகையில், நாகர்கோவில் வெட்டுர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விஜய்வசந்த் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் செல்வராஜ், அசோக்ராஜ், தங்கம் நடேசன், பால்துரை, மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான், மயிலாடி நகர தலைவர் நடேசன், காங்கிரஸ் அமைப்பு சாரா துறை மாவட்ட ராதாகிருஷ்ணன், மண்டல தலைவர்கள் செல்வன், சிவபிரபு, மாமன்ற உறுப்பினர் அனுஷா பிரைட், வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரி ஆர்.வேலு அவர்களை ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.
    • எம்.பி. விஜய் வசந்துக்கு நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து ஆளுயர மாலை அணிவித்து கவுரவித்தனர்.

    மும்பை மாநகராட்சி தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையின் அறிவுறுத்தலின்படி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து வரும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நேற்று மும்பை தெட்சணமாற நாடார் சங்கம் கிளை சேர்மன் காசிலிங்கம் தலைமையில் பொருளாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் ஜஸ்டின், ஆல்பர்ட் உட்பட பலர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

     

    கடந்த 2 நாட்களாக தாராவி பகுதியில் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்ட எம்.பி. விஜய்வசந்த் நேற்று வார்டு 174ல் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரி ஆர்.வேலு அவர்களை ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.

    சாலிமார் வாடு பகுதியில் 174ல் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரி ஆர்.வேலுவை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார். நிறைவாக எம்.பி. விஜய் வசந்துக்கு நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து ஆளுயர மாலை அணிவித்து கவுரவித்தனர்.

     

    இந்த பொதுக்கூட்டத்தில் ஹோலிவாட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்றார்.
    • தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா கலந்து கொண்டு உரையாற்றினர்.

    குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பெயரை மாற்றியதை கண்டித்தும், விபி- ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா கலந்து கொண்டு உரையாற்றினர். 

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகைகத்பட் கண்டன குரல் எழுப்பினார்கள்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், நிர்வாகிகள், துணை அமைப்பு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக எம்.பி. விஜய் வசந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    • தமிழ் சினிமாவை நசுக்குவதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் அவமதிக்க வேண்டாம்

    விஜய் நடிப்பில் நாளை வெளியாக இருந்த படம் 'ஜன நாயகன்'. படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் சான்றிதழ் வழங்குவதற்கு சென்சாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.

    மனுவை விசாரித்த கோர்ட் வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டது.

    இந்நிலையில், ராகுலின் பழைய பதிவை மேற்காள் காட்டி ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக எம்.பி. விஜய் வசந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    விஜய் வசந்த் தனது பதிவில், "ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் சினிமாவை நசுக்குவதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் அவமதிக்க வேண்டாம் என்று ராகுல் காந்தி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.

    இன்று, பாஜக வேண்டுமென்றே 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கான தணிக்கைச் சான்றிதழை நிறுத்தி வைத்து, அதன் வெளியீட்டைத் தடுத்து, தமிழ் மக்களின் உணர்வுகளை அவமதிப்பதால், அந்த எச்சரிக்கை மீண்டும் உண்மையாகியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    மெர்சல் படத்திற்கு ஆதரவாக 9 ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தி தனது பதிவில், "மோடி அவர்களே, சினிமா என்பது தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியின் ஆழமான வெளிப்பாடு ஆகும். மெர்சல் திரைப்படத்தில் தலையிட்டு தமிழ் பெருமையை அசிங்கப்படுத்த முயற்சிக்காதீர்கள்" என்று பதிவிட்டிருந்தார். 

    • விஜய்வசந்த் எம்.பி, நேரில் சென்று பொன்னாடை போர்த்தி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
    • குணசேகர் முன்னாள் கவுன்சிலர் தாமஸ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    கன்னியாகுமரி மாவட்ட சிஎஸ்ஐ பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் கிறிஸ்டோபர் விஜயன் அவர்களை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி, நேரில் சென்று பொன்னாடை போர்த்தி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் சீனிவாசன், அகஸ்தீஸ்வரம் நகர காங்கிரஸ் தலைவர் விஜயன், மேற்கு மாவட்ட காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் சாமுவேல், வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் கிங்ஸ்லின், குணசேகர் முன்னாள் கவுன்சிலர் தாமஸ் உட்பட பலர் உடன் இருந்தனர். 

    • தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 2-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • அரசியல் தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

    தேமுதிக கட்சியின் நிறுவனரான விஜயகாந்தின் 2-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்த வகையில் விஜய் வசந்த் எம்.பி., விஜயகாந்த் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்கள் உடனிருந்தனர்.

    மேலும், காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட 140-வது ஆண்டு இன்று காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனைத் தொடர்ந்து, விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள செய்தியில் "சுதந்திரப் போராட்டத்தின் தீப்பொறியில் உருவான இந்திய தேசிய காங்கிரஸ் தியாகத்தால் வளர்ந்து ஒற்றுமை, சமத்துவம் மதச்சார்பற்ற தன்மை, சமூக நீதி என்ற கொள்கைகளால் நாட்டை கட்டி அமைத்தது.

    காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல அது ஒரு கருத்து, ஒரு இயக்கம், இந்தியாவின் மனசாட்சி.

    இந்திய தேசிய காங்கிரஸின் நிறுவன தினத்தில் ஏழைகளின் குரலாய், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையை மீட்க அரசியல் அமைப்பை பாதுகாக்க காங்கிரஸ் என்றும் களத்தில் நிற்கும் என்பதை உறுதி செய்வோம்.

    காங்கிரஸில் இருப்பதே பெருமை !காங்கிரஸை வளர்ப்பதே கடமை!!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • மத்திய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும்.
    • எஸ்ஐஆர் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான கட்சிகளின் விருப்பம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் விஜய்வசந்த் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மேலும் அந்த திட்டத்திற்கான நிதியில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் வழங்க வேண்டும் என்று புதிய சட்டம் இயற்றி உள்ளனர்.

    இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எம்.பி.க்கள் மனு அளித்துள்ளோம்.

    ஏனென்றால் அந்தந்த மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசு நிதி வழங்குவது சாத்தியமில்லை. மேலும் மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது.

    மத்திய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஆட்சி நடத்தி வருகிறது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகின்றனர்.

    நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கி உள்ளார். ஆனால் அவர் தீய சக்தி தி.மு.க., தூய சக்தி த.வெ.க. என கூறியது ஏற்புடையதல்ல. ஏனென்றால் தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இன்னும் சில நாட்களில் மேலிட பொறுப்பாளர்கள் பேசுவர். இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. கண்டிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும்.

    தி.மு.க. கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் கூட்டணி கட்சியினர் பணியாற்றி வருகின்றனர்.

    எஸ்ஐஆர் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான கட்சிகளின் விருப்பம். எங்கள் தலைவர் ராகுல்காந்தி கூட இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தி வருகிறார்.

    தமிழகத்தில் பல லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்படி வாக்குகள் நீக்கப்படுவது ஏற்புடையதல்ல. பீகாரில் கூட கடைசி நேரத்தில் பல வாக்குகள் சேர்க்கப்பட்டது. இந்த எஸ்ஐஆர் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
    • கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குடில் திறப்பு விழாயில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.

    இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

     

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இயேசுவின் பிறப்பை கொண்டாடும் வகையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குடில் திறப்பு விழா மற்றும் அலங்கார விளக்குகள் இயக்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி., கலந்து கொண்டு தனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.

     

    • புதியதாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள சென்னை அம்ரித் பாரத் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.
    • காலி சரக்கு ரெயில்கள் செல்ல கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே மூன்றாவது ரெயில் பாதையை அமைக்க வேண்டும்.

    புதிய ரெயில்கள், ரெயில் நிறுத்தங்கள், ரெயில் நீட்டிப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், தொலைநோக்கு திட்டங்கள் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து பேசினார்.

    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் மக்கள் கோரிக்கையை வலியுறுத்திய விஜய் வசந்த் அவர்கள் கீழ்கண்ட முக்கிய கோரிக்கைகளையும் முன் வைத்தார்.

    புதிய ரெயில்கள்

    நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் – வேளாங்கண்ணி வாரந்திர ரெயில், கன்னியாகுமரி – ஐதராபாத் தினசரி விரைவு ரெயில் ஆகிய புதிய ரெயில்களின் தேவையை முன் வைத்தார்

    ரெயில்கள் நீட்டிப்பு

    புதியதாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள சென்னை அம்ரித் பாரத் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும், புனலூர் - மதுரை ரெயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும், மங்களூரு – திருவனந்தபுரம் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்தல், ஹவுரா – திருச்சி ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்தல், திருநெல்வேலி வந்தே பாரத் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டித்தல், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி செல்லும் பயணிகளுக்காக திருவனந்தபுரம் – நாகர்கோவில் ரெயில்களை நீட்டிக்க வேண்டும் எனவும், தாம்பரம் – நாகர்கோவில், ராமேஸ்வரம் – கன்னியாகுமரி ரெயில்களை தினசரி சேவையாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

    ரெயில் நிறுத்தங்கள்

    காந்திதாம் விரைவு ரெயில் மற்றும் ஜாம்நகர் ரெயில்கள் குழித்துறை ரெயில் நிலையத்திலும், புனலூர்-மதுரை ரெயில் பள்ளியாடி ரெயில் நிலையத்திலும், திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி (intercity) ரெயில் இரணியல் ரெயில் நிலையத்திலும் நின்று செல்ல வேண்டும் என கோரினார்.

    உட்கட்டமைப்பு வசதிகள்

    ரெயில் இரட்டிப்பு பணிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக மந்தமான நிலையில் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி அதனை துரிதபடுத்த ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    கன்னியாகுமரியில் மின்சார லோகோ ஷெட் (electric loco shed), நாகர்கோவில் டவுன் மற்றும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்திற்கு செல்ல இரண்டாவது நுழைவு வாயில், நாகர்கோவில் டவுன், இரணியல் மற்றும் குழித்துறை ரெயில் நிலையங்களில் கூடுதல் நடைமேடைகள், மோசமான நிலையில் காணப்படும் குழித்துறை ரெயில் நிலையம் செல்லும் சாலையை செப்பனிடுதல், மழை காலங்களில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்படுவதை தடுக்க தகுந்த நடவடிக்கைகள், பயணிகள் வசதி கருதி ரெயில் நிலையங்களின் மேம்பாடு ஆகியவற்றை சுட்டிக்காட்டி கோரிக்கை வைத்தார்.

    தொலைநோக்கு திட்டங்கள்:

    ராமேஸ்வரம்-தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி கடற்கரை ரெயில் பாதை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நடைமுறைபடுத்த வேண்டும் என கேட்டுகொண்டார். அதுபோன்று அறிவிக்கப்பட்டுள்ள அங்கமாலி-எருமேலி-விழிஞ்சம் ரெயில் பாதையின் ஒரு பகுதியை கன்னியாகுமரி மாவட்டம் நெட்டா-குலசேகரம்-பூதப்பாண்டி வழியாக ஆரல்வாய்மொழி சென்றடையும் விதமாக நீட்டிப்பதற்கு ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். அது போன்று காலி சரக்கு ரெயில்கள் செல்ல கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே மூன்றாவது ரெயில் பாதையை அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    • ஒரு கூட்டு உயர்நிலைக் நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று விஜய் வசந்த் வலியுறுத்தினார்.
    • மீன்பிடி மற்றும் விவசாய வாழ்வாதாரங்கள் குறித்து ஒரு ஆழமான ஆய்வை நடத்த வேண்டும்

    கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், இன்று அம்மாவட்டத்தின் மீனவ சமூகங்களைப் பாதிக்கும் அவசரப் பிரச்சினைகளை எழுப்பி, அதற்கு உடனடியாக மத்திய அரசு தலையிட வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

    பாராளுமன்றத்தில் பேசிய அவர், "தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் நிலவும் பாதுகாப்பு நெருக்கடி, நம்பகமான ஆழ்கடல் தகவல் தொடர்பு அமைப்பு இல்லாதது மற்றும் தற்போதைய கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள்" ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

    மீன்பிடித்தலுக்கும் விவசாயத்திற்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளைச் சட்டங்கள் பெரும்பாலும் அங்கீகரிப்பதில்லை என்றும், இது முரண்பாடுகளை உருவாக்கி கடலோரக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும், இந்தியாவின் மீனவ சமூகங்களின் தனித்துவமான சமூகப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் யதார்த்தங்களை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

    இதற்காக கடல்சார் விஞ்ஞானிகள், சமூகப் பொருளாதார மற்றும் சட்ட வல்லுநர்கள், கடலோர பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் மக்களை உள்ளடக்கிய ஒரு கூட்டு உயர்நிலைக் நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று விஜய் வசந்த் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

    அந்தக் குழுவானது மீன்பிடி மற்றும் விவசாய வாழ்வாதாரங்கள் குறித்து ஒரு ஆழமான ஆய்வை நடத்த வேண்டும். தற்போதுள்ள கடல்சார் விதிமுறைகளை மறுஆய்வு செய்ய வேண்டும், மேலும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக அறிவியல் அடிப்படையிலான, பங்கேற்பு சீர்திருத்தங்களை முன்மொழிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு நீண்ட கால செயல் திட்டம் அவசியம் என்றும், கடலோர வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதிலும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பைப் பேணிப் பாதுகாப்பதிலும் அக்குழுவின் பரிந்துரைகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.




    • ரெயில்வே பணிகளுக்காக நுள்ளிவிளையில் புதிய மேம்பாலம் அமைக்க ரெயில்வே நிர்வாகம் முன் வந்தது.
    • தற்போதைய பாலத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    நுள்ளிவிளையில் புதிதாகக் கட்டப்படும் ரெயில்வே மேம்பால பணிகளுக்காக தற்பொழுது உபயோகத்தில் உள்ள பாலத்திற்கு பதில் புதிய பாலம் அமைப்பதை மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப திட்டமிட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    நாகர்கோவில்–திங்கள் நகர் ஆகிய ஊர்களை இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது நுள்ளிவிளை. ரெயில்வே இரட்டிப்பு பணிகளுக்காக இங்கு ஒரு புதிய ரயில்வே மேம்பாலத்தை அமைக்க ரயில்வே நிர்வாகம் முன் வந்தது.

    அதை கட்ட தற்போது உபயோகத்தில் உள்ள மேம்பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அன்றாட வாழ்க்கை பாதிக்கும் என பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மக்கள் சார்பாக இன்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவை தொடர்பு கொண்டு இந்தப் பாலத்தை இடிக்கும் பணியினை மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப திட்டமிட வேண்டும்.

    மக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில், மக்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களை சிரமத்திற்கு உள்ளாக்காமல், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் இந்தப் பாலத்தினை சீரமைப்பு செய்யும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், அந்தப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்த பின்னரே இந்தப் பாலத்தின் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    ×