விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய விஜய் வசந்த் எம்.பி.

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 2-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.அரசியல் தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய விஜய் வசந்த் எம்.பி.
Published on

தேமுதிக கட்சியின் நிறுவனரான விஜயகாந்தின் 2-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்த வகையில் விஜய் வசந்த் எம்.பி., விஜயகாந்த் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்கள் உடனிருந்தனர்.

மேலும், காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட 140-வது ஆண்டு இன்று காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள செய்தியில் "சுதந்திரப் போராட்டத்தின் தீப்பொறியில் உருவான இந்திய தேசிய காங்கிரஸ் தியாகத்தால் வளர்ந்து ஒற்றுமை, சமத்துவம் மதச்சார்பற்ற தன்மை, சமூக நீதி என்ற கொள்கைகளால் நாட்டை கட்டி அமைத்தது.

காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல அது ஒரு கருத்து, ஒரு இயக்கம், இந்தியாவின் மனசாட்சி.

இந்திய தேசிய காங்கிரஸின் நிறுவன தினத்தில் ஏழைகளின் குரலாய், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையை மீட்க அரசியல் அமைப்பை பாதுகாக்க காங்கிரஸ் என்றும் களத்தில் நிற்கும் என்பதை உறுதி செய்வோம்.

காங்கிரஸில் இருப்பதே பெருமை !காங்கிரஸை வளர்ப்பதே கடமை!!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com