என் மலர்
நீங்கள் தேடியது "விஜய்வசந்த் எம்பி."
- அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
- நிகழ்ச்சியை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் துவக்கி வைத்தார்.
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி நால் ரோட்டில் சோமனூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 41 நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தியின் திருஉருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து இந்திரா காந்தியின் நினைவு நாளை ஒட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வி. எம். சி. மனோகர் தலைமையில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கராஜன் முன்னிலையில் நடைபெற்ற அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார், மாவட்டத் துணைத் தலைவர் ஆர் பி முருகேஷ், மாநகராட்சி உறுப்பினர் நவீன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மாணவர்களுக்கு ரொக்க பரிசு தொகை விஜய்வசந்த் எம். பி வழங்கி சிறப்பித்தார்.
- வெயிலில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு நிழல் தரும் பெரிய குடைகள் வழங்கினார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் அவர்களின் 5-வது ஆண்டு நினைவு நாள் புகழ் வணக்க கூட்டம் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு தொகை விஜய்வசந்த் எம். பி வழங்கி சிறப்பித்தார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எச்.வசந்தகுமார் அவர்களின் 5-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் புகழ் வணக்க கூட்டம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மார்த்தாண்டம் எம்.பி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் பாகோடு பேரூராட்சி தலைவர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர்கள் ஜெகன்ராஜ், காஸ்டன் கிளிட்டர்ஸ், பால்ராஜ், சதீஷ், கிறிஸ்டோபர், அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட், மாநில பொதுச் செயலாளர் பால்ராஜ், தமிழக மீனவர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜோர்தான் உள்ளிட்டோர் அமரர் எச். வசந்தகுமார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் விதத்தில் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் எச். வசந்தகுமார் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து ஏற்கனவே நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசும், கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.
அந்த போட்டி ஆறாம் வகுப்பு முதல் கல்லூரிநிலை வரையிலான மாணவர்களுக்கு நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது. முதல் பரிசாக ரூ.5000-ரொக்கமும், இரண்டாம் பரிசாக ரூ.3000-ரொக்கமும்,
மூன்றாம் பரிசாக ரூ.2000-ரொக்கமும் வழங்கப்பட்டது.
மேலும், வசந்த் அன் கோ சார்பில் சாலையோரம் வெயிலில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு நிழல் தரும் பெரிய குடைகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ரத்தினகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதீஷ்குமார், கிள்ளியூர் மேற்கு மாவட்ட வட்டார தலைவர் என்.எ. குமார், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், மேற்கு மாவட்ட சேவா தள மாவட்ட தலைவர் ஜோசப் தயாசிங், ஓ. பி. சி பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டூவர்ட், குழித்துறை நகர் மன்ற உறுப்பினர் ரீகன், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத் தலைவர்கள் அஜிகுமார், ஜிஜி, வர்த்தக பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் சாமுவேல், துணைத் தலைவர் ஆமோஸ், மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் அஸ்வின், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் சாலின், முன்னாள் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஞானசௌந்தரி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தோஷ், ஜெகதீசன், விஜயகுமார், டேவிட், தர்மலிங்கம் உள்ளிட்ட ஏரளமானோர் கலந்து கொண்டனர்.
- தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போராடி கொண்டிருக்கும் ஐஎன்டியூசி நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.
- மத்தியில் ஆளும் அரசு தொடர்ந்து தொழிலாளர்களை வஞ்சிக்கும் திட்டங்களை கொண்டு வருகிறார்கள்.
குமரி மேற்கு மாவட்ட INTUC சார்பில் 3-வது நாளாக தக்கலை தாலுகா அலுவலகம் அருகே இருந்து குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு வரை நடைபெற்ற வாகன பிரச்சார பயணத்தை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், எம்பி, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போராடி கொண்டிருக்கும் ஐஎன்டியூசி நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள், மத்தியில் ஆளும் அரசு தொடர்ந்து தொழிலாளர்களை வஞ்சிக்கும் திட்டங்களை கொண்டு வருகிறார்கள், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டியது அவர்களின் கடமை ஆகும், உங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உங்களுக்கு துணையாக இருப்பேன், பாராளுமன்றத்தில் பேசியும் நிறைவேற்றி தர முயற்சி எடுக்கப்படும் என பேசினார்.

பத்மநாபபுரம் தொகுதி ஐஎன்டியூசி துணைத்தலைவர் சி. எல். ராபர்ட் தலைமையில் நடைபெற்ற வாகன பிரச்சார பயணத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், ஆரோக்கியராஜன், பத்மநாபபுரம் நகர தலைவர் ஹனுகுமார், வட்டார தலைவர் பிரேம்குமார், குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண்கிறிஸ்டோபர், தக்கலை ஐஎன்டியூசி நகர தலைவர் செய்யது அலி, வட்டார தலைவர் ஜெகன், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மகிளா காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் லைலா, மூத்த காங்கிரஸ் தலைவர் பி.டி. எஸ் மணி, தங்கநாடார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகள்
1. குமரி மாவட்டத்தில் E.S.I மருத்துவமனை கட்ட தேவையான இடம் ஒதுக்கீடு செய்து, E.S.I பதிவு பெற்ற தொழிலாளர்களின் நலன் காத்திட மாநில அரசை வலியுறுத்தியும்..
2 I.N.T.U.C தொழிற்சங்க பிரிதிநிதித்துவ தொழிலாளர்கள் மற்றும் மத சிறுபான்மை தொழிலாளர்கள் ஆகியோரது மனுக்களை முறையாக பரிசீலிக்காமல் அரசின் பணபயன்கள் தொழிலாளர்களுக்கு கிடைக்காமலும் அரசிற்கு கெட்டபெயர் ஏற்படுத்தி வரும் குமரி கிழக்கு மாவட்ட தொழிலாளர் நல ஆணையர் இல. இராஜகுமார் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசை வலியுறுத்தியும்....
3. தொழிலாளர்கள் போராடி பெற்ற 44 சட்டங்களை 4 தொகுப்பு சட்டங்களாக திருத்தியதை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தியும்...
4. விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும்...
5. மத்திய மாநில அரசுகளின் வரி பயங்கரவாதத்தை கண்டித்தும்...
6. ஜல் ஜீவன், அம்ருத் குடிநீர் திட்டங்களால் சேதமடைந்துள்ள அனைத்து சாலைகளையும் விரைந்து செப்பனிட மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியும்..
7. P.F. -ஐ காரணங்காட்டி நலவாரிய சலுகைகளை மறுக்கும் நலவாரிய அதிகாரிகளை கண்டித்தும் சரியான வழிமுறைகளை வகுத்திட மாநில அரசை வலியுறுத்தியும்.
8. அரசு ரப்பர் கழக தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடவும்பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திடவும், பென்ஷன் தொகையை மாதம் ரூபாய் 10000 /- மாக உயர்த்திட, ரப்பர் வாரியத்தை வலியுறுத்தியும்
9. உடலுழைப்பு தொழிலாளிகளுக்கு வழங்கி வரும் பென்ஷன் தொகையை மாதம் ரூ.3000 மாத உயர்த்த கோரியும்
ஆகிய கோரிக்கைகள்
- காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
- மார்த்தாண்டம் JCI சார்பில் இன்று ஆற்றூரில் நடைபெற்ற ரத்த தான முகாமினை தொடங்கி வைத்தேன்.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தூத்தூர் சின்னதுறை புனித ஜூட் விளையாட்டு குழு சார்பில் நடைபெற்ற மாநில மின்னொளி கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற அணிகளை வாழ்த்தி அவர்களுக்கு பரிசுகள் வழங்கினேன்.

திருவட்டார் கிழக்கு வட்டார ஆற்றூர் பஞ்சாயத்து காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.

குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு புது நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்தினேன்.
முன்னதாக ஊர்வலமாக சென்று காங்கிரஸ் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்ற பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று காலை என்னை மரியாதை நிமித்தம் சந்தித்தனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

ஈரான் இஸ்ரேல் போர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஈரானில் பணிபுரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குமரி மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களை மீட்டு பத்திரமாக தாயகம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளேன்.
மார்த்தாண்டம் JCI சார்பில் இன்று ஆற்றூரில் நடைபெற்ற ரத்த தான முகாமினை தொடங்கி வைத்தேன்.

சமீபத்தில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்ற குமரி கிழக்கு மற்றும் நாகர்கோவில் மாநகர நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டினை தெரிவித்து கொண்டேன்.

நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் கட்சியின் பெருமையை விளக்கியும், பாஜக வின் மக்கள் விரோத ஆட்சியை கண்டித்தும் நடக்க இருக்கும் தொடர் பரப்புரை பிரச்சார கூட்டத்தை தொடங்கி வைத்தேன்.

மாநகர மாவட்ட தலைவர் திரு.நவீன் குமார் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- விஜய் வசந்த் வெளியிட்ட பேஸ்புக் பதிவு.
- சமூக வலைதலத்தில் விஜய் வசந்த் நன்றி.
புதுடெல்லி:
நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக விஜய்வசந்த் எம்பியை நியமித்து சோனியாகாந்தி உத்தரவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் சோனியா காந்தி நேற்று கட்சியின் நாடாளுமன்ற செயலாளர்கள் மற்றும் பொருளாளர் ஆகியோரை நியமித்தார்.
ரஞ்சித் ரஞ்சன் மாநிலங்களவை செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், எம்.கே. ராகவன் மற்றும் அமர் சிங் ஆகியோர் மக்களவை செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக தமிழ்நாட்டை சேர்ந்த கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து விஜய் வசந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
அன்னை சோனியா காந்திக்கும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும். மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கும், தலைவி பிரியங்கா காந்திக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாகவும் இந்த மாவட்டத்தின் காங்கிரஸ் நண்பர்கள் அனைவர் சார்பிலும் எனது நன்றி.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்.
- பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்னிலை வகித்தார்.
நாகர்கோவிலில் இன்று முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், Dr. தாரகை கத்பட், நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ், விளையாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழகம் எங்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை இழிவாக பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜாவை கண்டித்து தமிழகம் எங்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் சந்திப்பில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர்.பினுலால் சிங் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். தாரகை கத்பர்ட், வட்டாரத் தலைவர்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மைதானம் சரி செய்யும் பணியினையும் தொடங்கி வைத்தார்.
- தியாகி கொடிகால் ஷேக் அப்துல்லாவை சந்தித்து நலம் விசாரித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மைதானத்தை சீரமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
அதாவது பல ஊர் மற்றும் ஊர் மக்களின் தேவைகளுக்காக சொந்த செலவில் JCB எந்திரம் ஒன்றினை இயக்கி வந்தனர்.
அவர்களுக்கு விஜய் வசந்த் எம்பி தனது சொந்த செலவில் JCB எந்திரம் ஒன்றை வாங்கி மக்களின் தேவைகளுக்காக வழங்கி அர்பணித்துள்ளார்.

மேலும் கோணம் அரசு கல்லூரியில் மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க மைதானம் சரி செய்யும் பணியினையும் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து எல்லைப் போராட்ட தியாகி கொடிகால் ஷேக் அப்துல்லா குந்திரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த விஜய் வசந்த் எம்பி அவரையும் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
- மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிக்கு ஆராட்டு விழா.
- சமூக நலக் கூட திட்டத்தை தொடங்கி வைத்த விஜய் வசந்த் எம்.பி.
அஞ்சுகிராமம், மயிலாடி நாஞ்சில் நாடு புத்தனார் கால்வாய் தீர்த்தவாரி மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிக்கு ஆராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் மற்றும் ஆராதனையில் பக்தர்களுடன் பங்கேற்றார்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் புதிய சமூக நலக் கூடம் கட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கூடம் அமைக்கும் பூமி பூஜை விழாவிலும் விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வுக் கூட்டம்.
- தேங்காபட்டணம் துறைமுகம் சென்று பார்வையிட்ட விஜய்வசந்த்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை தந்தார். அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இணைந்து கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையில் கட்டப்பட்டு வரும் கண்ணாடி பாலத்தை ஆய்வு செய்தனர்.

பின்னர் தேங்காபட்டணம் துறைமுகத்திற்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளையும் மேற்பார்வையிட்டனர்.

இதில் மாவட்ட ஆட்சியர்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி தலைவர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கத்தில் செல்வபெருந்தகை தலைமையில் நடைபெற்றது. அதிலும் விஜய்வசந்த் எம்பி கலந்துகொண்டார்.

ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஈ.சுந்தரவதனம் , மாநகர மேயர்மகேஷ், பொதுக்கணக்குகுழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சந்திரன், சேகர், முகமது ஷாநவாஸ், ஐயப்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், Dr. தாரகைகத்பட், தளவாய்சுந்தரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், மாவட்ட வன அலுவலர், மாநகர ஆணையாளர் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- திருவனந்தபுரம் மெமு ரெயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்.
- இரணியல் ரெயில் நிலைய மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும்.
கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வே துறை பொது மேலாளர் மற்றும் முதன்மை செயல் மேலாளர் ஆகியோரை சந்தித்து கன்னியாகுமரி மக்கள் சார்பில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-
வேளாங்கண்ணிக்கு நேரடி ரெயில் சேவை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் நாகர்கோவில்- திருவனந்தபுரம் மெமு ரெயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்.
இரணியல் ரெயில் நிலையம் மேம்பாலத்தில் போக்குவரத்து ஒழுங்குபடுத்த அந்த மேம்பாலத்தின் கட்டமைப்பை திருத்தி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சமூக நீதிக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளை நினைத்துப் பார்த்து அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
- பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை வழங்கியுள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி எம்.பி விஜய் வசந்த், இன்று அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "இந்திய அரசியலமைப்பின் பிரதான சிற்பி அண்ணல் பி.ஆர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் சமூக நீதிக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளை நினைத்துப் பார்த்து அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
சமத்துவம் நிறைந்த சமூகத்தை உருவாக்க அவர் கண்ட கனவினை நிறைவேற்ற பாடு படுவதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை" என்றார்.
இதைதொடர்ந்து, பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை வழங்கியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், "
கங்கை இங்கு வரவேண்டும் குமரி கடலை தொட வேண்டும் என்பதற்கேற்ப கங்கை நதியை குமரி கடலில் கொண்டு சேர்க்க மத்திய அரசு திட்டம் ஒன்றினை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை வழங்கி உள்ளேன்.
இந்தத் திட்டம் விவசாயத்திற்கு பெரிதும் உதவும். மேலும் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் அழிவுகளை தடுக்கவும் இது வழிவகை செய்யும். நீர்வழிப் போக்குவரத்து மூலம் பெரும் லாபத்தினையும் ஈட்டி தரும். எல்லாவற்றுக்கும் மேலாக இமயமலை குமரிக்கடலை தொடும்" என்றார்.






