search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sonia Gandhi"

    • 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியல் கடந்த 19-ந்தேதி அன்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
    • ராஜஸ்தான் எம்எல்ஏ சச்சின் பைலட், கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

    அகமதாபாத்:

    குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 26 மக்களவைத் தொகுதிகளில், காங்கிரஸ் 23 இடங்களிலும், அதன் இந்திய கூட்டணிக் கட்சியான ஆம் ஆத்மி கட்சி பரூச் மற்றும் பாவ்நகர் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

    இதையடுத்து, காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியல் கடந்த 19-ந்தேதி அன்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இப்பட்டியலில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் ராஜஸ்தான் எம்எல்ஏ சச்சின் பைலட், கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

    • காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
    • முறைகேடு நடந்ததாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்ததுடன், அந்த நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர்.

    2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

    இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி இருந்தது.

    இதன் தொடர்ச்சியாக நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.751.9 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்படுவதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை தெரிவித்தது.

    இந்நிலையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்திற்கான தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.

    இதை விசாரித்த தீர்ப்பாயம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துக்கள் மற்றும் பங்குகளை சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை முடக்கிய நடவடிக்கை செல்லும் என உத்தரவிட்டது.

    எனவே டெல்லி, மும்பை, லக்னோவில் உள்ள அந்த பத்திரிகைக்கு சொந்தமான ரூ.752 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்த எவ்வித தடையும் இல்லை என தீர்ப்பாய உத்தரவின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

    • ஜெய்ப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்றார்.
    • எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி, கட்சியில் சேர்க்க அனைத்து யுத்திகளையும் பா.ஜ.க. பயன்படுத்துகிறது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை ஆகியவற்றை மத்திய அரசு ஊக்கப்படுத்தியது.

    ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. அரசியல் சாசனத்தை மாற்ற சதி நடக்கிறது. நாட்டையும், ஜனநாயகத்தையும் பிரதமர் மோடி அழித்து வருகிறார்.

    எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி, அவர்களை கட்சியில் சேர்க்க அனைத்து யுத்திகளையும் பா.ஜ.க. பயன்படுத்துகிறது.

    அனைத்து இடங்களிலும் அநீதி என்ற இருள் நிலவுகிறது. இதற்கு எதிராக நாம் அனைவரும் போராட வேண்டும் என தெரிவித்தார்.

    • மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என சோனியா காந்தி அறிவித்தார்.
    • இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறையும் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், உடல்நலத்தை கருத்தில் கொண்டு மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தார். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிட்டார். அவருக்கு போதுமான எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருந்ததால் போட்டியின்றி தேர்வானார்.

    இந்த நிலையில் இன்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெக்தீப் தன்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

     சோனியா காந்தியுடன் மேலும் பலர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உடன் இருந்தனர்.

    • கெஜ்ரிவால் அவர்கள், சிறைக்குள் இருந்து ஆட்சியை மட்டும் நடத்தவில்லை, இந்தியா கூட்டணியின் எழுச்சிக்கும் தூண்டுதலாக அமைந்து விட்டார்
    • ஆம் ஆத்மி கட்சிக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாகத் துணை நிற்கிறது

    டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அக்கூட்டத்தில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா கலந்து கொண்டார். அங்கு அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வாசித்தார்.

    அக்கடிதத்தில், "இந்தியாவில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் கைதுக்கு எனது கடுமையான கண்டனங்கள்

    பா.ஜ.க அரசு தனது ஏவல் படைகளான சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றைப் பயன்படுத்தி எங்களை மிரட்டுகிறார்கள். இதில் மிரண்டு பா.ஜ.க.வில் ஐக்கியம் ஆகிறவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்குகளே திரும்பப் பெறப்படும்.

    ஆனால் பா.ஜ.க.வின் ஆணவத்துக்கு அடங்காதவர்களாக இருந்தால் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பார்கள். இது இந்தியாவில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதைப் போல இருக்கிறது.

    இது போன்ற கைதுகள், 'இந்தியா' கூட்டணியை வலிமையாக ஆக்கியதே தவிர பலவீனப்படுத்தவில்லை. அரைக்க அரைக்கச் சந்தனம் மணப்பதைப் போல, தாக்குதல் அதிகமாக அதிகமாகக் கூட்டணியும், கூட்டணித் தலைவர்களும் வலிமை அடைகிறார்கள்.

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரைக் கைது செய்திருப்பது பா.ஜ.க.வின் தோல்வி பயத்தின் வெளிப்பாடே ஆகும்!

    அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், பாஜகவுக்கு எதிராகப் பரப்புரை செய்தால் அவர் கருத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதை அறிந்து, அதனைத் தடுக்கும் முயற்சியாகவே அவரைக் கைது செய்துள்ளனர். ஆனால், அவரது பரப்புரை ஏற்படுத்தி இருக்க வேண்டியதை விட, அவரது கைது மூலமாகக் கிடைத்த அரசியல் விழிப்புணர்வு என்பது மிகமிக அதிகம்.

    அருமை நண்பர் கெஜ்ரிவால் அவர்கள், சிறைக்குள் இருந்து ஆட்சியை மட்டும் நடத்தவில்லை, இந்தியா கூட்டணியின் எழுச்சிக்கும் தூண்டுதலாக அமைந்து விட்டார்.

    இந்தச் சூழலில் ஆம் ஆத்மி கட்சிக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாகத் துணை நிற்கிறது.

    'இந்தியா' கூட்டணியின் ஒற்றுமையால் மட்டுமே மோடியை வீழ்த்த முடியும் என்பதை மறந்து விட வேண்டாம். மக்கள் அளிக்கும் வாக்கு மட்டும்தான் பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு முடிவுரை எழுத முடியும்.

    நான் தினந்தோறும் பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து வருகிறேன். பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த மக்கள் தயாராகி விட்டார்கள்.

    பாசிச பாஜகவை வீழ்த்துவோம்! கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்" என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • இந்திய மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிற்கிறார்கள். அவரை சிறையில் அடைக்க முடியாது என்று சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்தார்
    • அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் எழுதிய ஆறு உத்தரவாதங்களை அவர் வாசித்தார்.

    டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அக்கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், "இந்திய மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிற்கிறார்கள். அவரை சிறையில் அடைக்க முடியாது என்று தெரிவித்தார்.

    அப்போது சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்காக எழுதிய கடிதத்தை அவர் வாசித்தார் . அதில், "நான் உங்களிடம் வாக்கு கேட்கவில்லை. தேர்தலில் யாரையும் தோற்கடிக்க உதவுமாறு நான் உங்களிடம் கேட்கவில்லை. இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு உதவுமாறு 140 கோடி இந்தியர்களை மட்டுமே கேட்டுக்கொள்கிறேன்" என்று கெஜ்ரிவால் எழுதியுள்ளார்.

    மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் எழுதிய ஆறு உத்தரவாதங்களை அவர் வாசித்தார்.

    1.நாடு முழுவதும் மின்வெட்டு இருக்காது.

    2. நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

    3. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நல்ல பள்ளி இருக்கும், அங்கு சமூகத்தின் அனைத்து தரப்பு குழந்தைகளும் தரமான கல்வியைப் பெறுவார்கள்.

    3. ஒவ்வொருவரும். கிராமத்தில் மொஹல்லா மருத்துவமனை இருக்கும்,

    4. ஒவ்வொரு ஜில்லாவிலும் அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இருக்கும்.

    5. சுவாமிநாதன் அறிக்கையின்படி விவசாயிகளுக்கு நல்ல குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும்.

    6. டெல்லி மக்களுக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்

    இந்த உத்தரவாதங்கள் அனைத்தையும் நாங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றுவோம்," என்று அவர் கூறினார்.

    மேலும் அக்கூட்டத்தில் பேசிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, "கெஜ்ரிவால் என்ன தவறு செய்தார்? அவர் டெல்லியின் கல்வியை மேம்படுத்தியுள்ளார், மக்களுக்கு உதவினார். மக்கள் அவர் ஆட்சியில் மகிழ்ச்சியாக இல்லையென்றால் , அவர் டெல்லியை மீண்டும் ஆட்சி செய்திருக்க மாட்டார்.

    பாஜகவில் சேராத தலைவர்களை சிறையில் அடைக்கும் வேலையை மட்டுமே தற்போது பாஜக செய்து வருகிறது. பாஜகவின் 2 கோடி வேலைவாய்ப்பு வாக்குறுதி என்ன ஆனது? வருமான வரித்துறை மூலம் பாஜக வசூல் நடத்தி வருகிறது என்று கூறினார்.

    • நடுவரை அழுத்தத்திற்கு உட்படுத்தி, கிரிக்கெட் வீரரை விலைக்கு வாங்கி, கேப்டனை பயமுறுத்தி, போட்டியில் வெற்றி பெறுவதுதான் மேட்ச் பிக்சிங்
    • மோடியின் 400 தொகுதி வெற்றி கோஷம் என்பது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாற்றம் செய்யாமல் சாத்தியமில்லை

    டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    அக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, "மேட்ச் பிக்சிங் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நடுவரை அழுத்தத்திற்கு உட்படுத்தி, கிரிக்கெட் வீரரை விலைக்கு வாங்கி, கேப்டனை பயமுறுத்தி, போட்டியில் வெற்றி பெறுவதுதான் மேட்ச் பிக்சிங்.

    இந்தத் தேர்தலில் நரேந்திர மோடி நடுவர்களைத் தேர்ந்தெடுத்தார். ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார். மோடியின் 400 தொகுதி வெற்றி கோஷம் என்பது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாற்றம் செய்யாமல் சாத்தியமில்லை

    பாஜகவின் இந்த மேட்ச் பிக்சிங் நாட்டின் அரசியலமைப்பை அதன் மக்களின் கைகளில் இருந்து பறிப்பதற்காக செய்யப்படுகிறது.

    அரசியல் சாசனம் இல்லாமல், காவல்துறை, , வற்புறுத்தல்கள் மூலம் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்திய மக்களின் குரலை ஒடுக்கும் சக்தி உலகில் எவருக்கும் இல்லை.

    மக்கள் முழு மனதுடன் பாஜகவிற்கு எதிராக வாக்களிக்கவில்லை என்றால், அவர்களின் மேட்ச் பிக்சிங் வெற்றி பெறும். பாஜக வெற்றி பெற்று அரசியல் சட்டத்தை மாற்றினால் நாடு முழுவதும் தீப்பற்றி எரியும். இந்தத் தேர்தல் வாக்குகளுக்கானது அல்ல. இது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதாக நடக்கிறது.

    மேட்ச் பிக்சிங், சமூக வலைதளங்கள், ஊடகங்களுக்கு அழுத்தம் தருவது இவையெல்லாம் இல்லையென்றால் பாஜகவால் 180 சீட் கூட வெல்ல முடியாது

    இரண்டு முதல்வர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், எங்கள் வங்கி கணக்குகள் சீல் வைக்கப்பட்டன. இதை ஏன் ஆறு மாதங்களுக்குப் பிறகும் தேர்தலுக்கு முன்பும் அவர்கள் செய்யவில்லை" என்று அவர் கேள்வியெழுப்பினார்.

    • டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் தலைவர்கள் பங்கேற்றனர்.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    ஜார்க்கண்ட் முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் மனைவி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி ஆகியோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்று கெஜ்ரிவால் மனைவிக்கு ஆறுதல் கூறினார். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    • காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய 3 பிரிவினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
    • பெண்களுக்கு மாதம் உதவி தொகை கொடுப்பது பற்றி அறிவிப்புகள் வர உள்ளன.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை இந்த தடவை மிகவும் வித்தியாசமான கோலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது. புதிய அம்சங்களுடன் தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவினர் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர். சமீபத்தில் அந்த அறிக்கை காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    வருகிற 6-ந்தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட காங்கிரஸ் மேலிட தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இதற்கான விழா நடக்கிறது. அதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் ஆகியோர் பங்கேற்று தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்கள்.

    தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக நேற்று காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய 3 பிரிவினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிமொழி அளிக்கப்பட உள்ளது.

    அதுபோல பெண்களுக்கு மாதம் உதவி தொகை கொடுப்பது பற்றி அறிவிப்புகள் வர உள்ளன. இதனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 15 பாராளுமன்ற தேர்தல்களில் 11 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது
    • புதுவை காங்கிரசின் கோட்டையாகவே திகழ்ந்தது.

    புதுச்சேரி:

    பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட யூனியன் பிரதேசமான புதுவையில் 1963-ம் ஆண்டு முதல் சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் தேர்தல் நடந்து வருகிறது.

    ஆரம்பகால தேர்தல்களில் சுதந்திரத்துக்கு போராடிய கட்சி காங்கிரஸ் என்பதால் மக்களிடம் பெரியளவில் மதிப்பு இருந்தது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க.வும், அதிலிருந்து பிளவுபட்டு அ.தி.மு.க.வும் தொடங்கியபோது புதுவையிலும் அந்த கட்சிகளின் ஆதிக்கம் தொடங்கியது.

    பெரும்பாலும் சட்டமன்றத்தில் காங்கிரஸ்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க. 2 முறையும், தி.மு.க. 4 முறையும், என்.ஆர். காங்கிரஸ் 2 முறையும் ஆட்சி அமைத்தனர். 1963-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றது.

    அதன்பிறகு நடந்த பல தேர்தல்களில் தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தனர்.

    அதேநேரத்தில் இதுவரை நடந்த 15 பாராளுமன்ற தேர்தல்களில் 11 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 1963, 1967, 1971 ஆகிய 3 தேர்தல்களில் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி பெற்றது. அதன்பின் 1980, 1984, 1989, 1991, 1996 என 5 முறை தொடர்ச்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றது. பின்னர் 1999, 2009, 2019 ஆகிய தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. இதனால் புதுவை காங்கிரசின் கோட்டையாகவே திகழ்ந்தது.

    யூனியன் பிரதேசமான புதுவை மக்களும், மத்தியில் உள்ள ஆட்சியில் இருப்பவர்களுக்கு வாக்களித்தால் புதுவைக்கு நன்மை கிடைக்கும் என வாக்களித்தனர்.

    வ.சுப்பையா, ப.கண்ணன் ஆகியோர் புதுவைக்கென தனி கட்சி தொடங்கினர். ஆனால் அவர்களால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை, பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் 2011-ல் காங்கிரசில் பிளவை ஏற்படுத்தி ரங்கசாமி, என்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி ஆட்சியையும் பிடித்தார்.


    தொடர்ந்து 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு என்.ஆர்.காங்கிரஸ் வெற்றியும் பெற்றது. 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம், பதவியை ராஜினாமா செய்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அவர் தற்போது சிட்டிங் எம்.பி.யாக உள்ளார். அவர் மீண்டும் 2-வது முறையாக பாராளுமன்ற தேர்தலில் களத்தில் இறங்கியுள்ளார்.

    அதேநேரத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரசில் பெரும் பிளவு ஏற்பட்டது. அமைச்சராக இருந்த நமச்சிவாயம், கட்சியிலிருந்து வெளியேறி பா.ஜனதாவில் இணைந்தார்.

    அவருடன் சேர்ந்து காங்கிரசில் இருந்த பல்வேறு பிரிவுகள், அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் வெளியேறினர். 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. தற்போது காங்கிரசுக்கு புதுவை லாஸ்பேட்டை தொகுதி, மாகி தொகுதி ஆகியவற்றில் மட்டுமே 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    ஆனால் காங்கிரஸ் கட்சியில் அடித்தளம் வரை கட்டமைப்பு உள்ளது. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனைத்து தொகுதியிலும் உள்ளனர். கூட்டணி கட்சியான தி.மு.க.வுக்கு 6 எம்.எல்.ஏ.க்கள் பலமும் உள்ளது. இதோடு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

    2021 சட்டமன்ற தேர்தலில் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து புதுவை மீண்டும் காங்கிரசின் கோட்டை என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. தங்களுக்கு சாதகமாக சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் வாக்களிப்பார்கள் என காங்கிரஸ் நம்புகிறது.

    ஏனெனில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரைவிட சுமார் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். 22 எம்.எல்.ஏ.க்கள் பலத்தோடு பா.ஜனதா போட்டியிட்டாலும் மக்கள் ஆதரவோடு மீண்டும் வெற்றி பெறுவது உறுதி என காங்கிரசார் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதற்காக அனுபவத்தின் மூலம் பிரசார வியூகம் அமைத்து தலைவர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

    புதுவை தொகுதி காங்கிரசுக்கு மீண்டும் 'கை' கொடுக்குமா? என்பது ஜூன் 4-ந்தேதி தெரிந்து விடும்.

    • கேரள மாநிலத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தொகுதி வயநாடு மக்களவை தொகுதி.
    • வயநாடு தொகுதியில் இருகட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்ட நிலையில், தற்போது அந்த பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித்துவிட்டன. இதையடுத்து கட்சி வேட்பாளர்கள் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட பிரதான கட்சிகளின் தலைவர்கள் ஏப்ரல் மாதம் தொடங்கியதும், கேரள மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர். கேரள மாநிலத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தொகுதி வயநாடு மக்களவை தொகுதி.

    அதற்கு காரணம் அந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக உள்ள ராகுல் காந்தியே, இந்த முறையும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். மேலும் இந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளரான டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் களம் காணுகிறார்.


    இதன்காரணமாக இந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியிருக்கிறது. காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டுகட்சிகள் இந்திய அளவில் ஒரே கூட்டணியில் இருக்கும் நிலையில், வயநாடு தொகுதியில் இருகட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன. அவர்களுடன் வயநாடு தேர்தலில் களம் காணப்போகும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் யார்? என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், அக்கட்சியின் மாநில தலைவரான சுரேந்திரனே அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

    வயநாடு தொகுதியை பொறுத்தவரை 2009-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்த தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதைய தேர்தலில் ராகுல்காந்தியை, சுரேந்திரன் எதிர்கொள்ள உள்ளார்.

    சுரேந்திரன் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பத்தினம்திட்டாவில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு அடுத்த படியாக மூன்றாவது இடத்தை பிடித்தார். மேலும் அவர் 2016-ம் ஆண்டு நடந்த சட்மன்ற தேர்தலில் மஞ்சேஸ்வரம் தொகுதியில் போட்யிட்டு வெறும் 89 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.


    2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலிலும் சுரேந்திரன் போட்டியிட்டார். அந்த தேர்தலிலும் அவர் தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் 2020-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அடுத்தடுத்து பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய சுரேந்திரனுக்கு தற்போது வயநாடு தொகுதியில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி வாய்ப்பு வழங்கியிருக்கிறது.

    அவர் வயநாடு தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ராகுல் காந்தி மற்றும் ஆனி ராஜா ஆகியோருக்கு சவால் விடும் வகையில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவதாக பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதா ஆகிய மூன்று கட்சிகளுமே வயநாடு தொகுதியை கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அங்கு நிலவும் முன்முனைப் போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? என்பது தேர்தல் முடிவு வந்தபிறகே தெரியவரும்.

    • காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன
    • தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை சுதந்திரமாக செயல்பட வேண்டும்

    காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் முடக்கப்பட்டுள்ளது அந்த கட்சிக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

    அப்போது பேசிய சோனியா காந்தி, "ஒருபுறம், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு பெரும் தொகை நன்கொடையாக வந்துள்ளது. மறுபுறம், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சிக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு, தேர்தல் செலவுகள் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த சவாலான சூழ்நிலையிலும் தேர்தல் பரப்புரையை திறம்பட செய்ய எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம்

    இது நமது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகும். ஜனநாயகத்தை முடக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என்று அவர் பேசினார்.

    பின்னர் பேசிய கார்கே, "தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை சுதந்திரமாக செயல்பட வேண்டும். நியாயமான, நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் களம் சமமாக இருக்க வேண்டும். கணக்கில் வராத கட்டுக் கட்டான பணம் பாஜகவுக்கு சென்றுள்ளது. ஒரே கட்சி எல்லாவற்றையும் கைக்குள் வைத்துக்கொள்ள முயற்சித்து செயல்படுகிறது.

    தேர்தல் பத்திரத்தின் மூலம், 55% நிதியை பாஜக பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி வெறும் 11% மட்டுமே பெற்றிருக்கிறது. இந்நிலையில் தான், எங்கள் வங்கி கணக்குகளையும் முடக்கி, அபாயகரமான விளையாட்டை பாஜக விளையாடியிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

    ×