என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sonia Gandhi"

    • யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி இடம் பெற்றிருந்தனர்.
    • 2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது.

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் ஏ.ஜே.எல். நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது.

    2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'யங் இந்தியன்' நிறுவனத்தில் இயக்குநா்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் பொறுப்பேற்றனா்.

    இதையடுத்து ஏ.ஜே.எல். நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் முடிவு செய்தது. அதைத் தொடா்ந்து அந்தக் கடன் தொகைக்காக ஏ.ஜே.எல்.நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடைபெற்றதா என்று கண்டறிய அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

    அதில் சோனியாவுக்கும், ராகுலுக்கும் யங் இந்தியன் நிறுவனத்தில் 76 சதவீத பங்குகள் உள்ளன. அவா்களின் மேற்பாா்வையில் ஏ.ஜே.எல். நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் அந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கடன் அளித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் சோனியா ராகுல் உள்ளிட்டோர் ரூ.988 கோடிக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.

    குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவா்களான மோதிலால் வோரா, ஆஸ்காா் பொ்னாண்டஸ், யங் இந்தியன் நிறுவன நிா்வாகிகள் சுமன் துபே, சாம் பிட்ரோடா உள்ளிட்டோர், ஒரு தனியாா் நிறுவனம் மற்றும் யங் இந்தியன் நிறுவனம் மீதும் சதி மற்றும் பண முறைகேடு குற்றச்சாட்டை அமலாக்கத்துறை முன்வைத்தது.

    இந்த குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடா்பாக டெல்லி கோர்ட்டில் தொடா் விசாரணையை மேற்கொண் டது. அமலாக்கத் துறையிடம் சில விளக்கங்களையும் கேட்டது.

    இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடா்பான உத்தரவை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

    ராகுல், சோனியா மீது புதிய வழக்கு

    இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ராகுல்காந்தி, சோனியா மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி கோர்ட்டில் இந்த வழக்கை ஒத்திவைத்த மறுநாள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவினர் ராகுல் காந்தி, சோனியா மற்றும் 6 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.

    • தன்னிறைவு, உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி நாட்டை வழி நடத்தினார்.
    • அவரது துணிச்சலான தலைமையும், நீதி, ஒற்றுமை, அர்ப்பணிப்பு காங்கிரஸ் முன்னோக்கி செல்வதற்கு வழி காட்டுகின்றன

    இந்தியாவின் முதல் பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் பிறந்த தினம் இன்று. இதனைத் தொடர்ந்து அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    சக்தியின் உருவகமாக, இந்திரா காந்தி ஏராளமான புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொண்ட போதும், தன்னிறைவு, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் மேம்பட்ட உலகளாவிய நிலைப்பாட்டை நோக்கி நாட்டை வழி நடத்தினார்.

    அவரது துணிச்சலான தலைமையும், நீதி, ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கான தீவிர அர்ப்பணிப்பும் காங்கிரஸ் முன்னோக்கி செல்வதற்கு வழி காட்டுகின்றன என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    • காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் நேருவின் நினைவிடத்தில் மரியாதை.
    • கிரண் ரிஜ்ஜூ, கே.சி.வேணுகோபால் உள்பட பலர் மலர் தூவி மரியாதை.

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், நேருவின் நினைவிடத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் நேருவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அவர்களுடன், மாநிலங்களவை துணை தலைவர் கிரண் ரிஜ்ஜூ, கே.சி.வேணுகோபால் உள்பட பலர் நேருவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.

    • காங்கிரஸ் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி, கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41-வது நினைவு நாளான இன்று காங்கிரஸ் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • இத்தகைய தனிப்பட்ட ரீதியான ராஜதந்திர பாணி ஒருபோதும் நிலைத்திருக்க முடியாது.
    • இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் வழிகாட்டும் திசைகாட்டியாகவும் இருக்க முடியாது.

    புதுடெல்லி:

    காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் கொடூர தாக்குதல்கள் உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி அழைப்பு விடுத்து உள்ளார். இதுதொடர்பாக, நாளிதழ் ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

    பாலஸ்தீன பிரச்சினையில் மோடி அரசின் பதிலும், ஆழ்ந்த அமைதியும் மனிதாபிமானம் மற்றும் தார்மீகத்தைக் கைவிடுவதாக உள்ளது.

    இந்தியாவின் அரசியலமைப்பு மதிப்பீடுகள் அல்லது அதன் மூலோபாய நலன்களை விட, பிரதமர் மோடிக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கும் இடையேயான தனிப்பட்ட நட்பின் அடிப்படையில் அரசின் நடவடிக்கைகள் முதன்மையாக இயக்கப்படுவதாகத் தெரிகிறது.

    இத்தகைய தனிப்பட்ட ரீதியான ராஜதந்திர பாணி ஒருபோதும் நிலைத்திருக்க முடியாது. மேலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் வழிகாட்டும் திசைகாட்டியாகவும் இருக்க முடியாது.

    உலகின் பிற பகுதிகளில், குறிப்பாக அமெரிக்காவில் இதைச் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் சமீபத்திய மாதங்களில் மிகவும் வேதனையான மற்றும் அவமானகரமான வழிகளில் தோல்வி அடைந்துள்ளன.

    உலக அரங்கில் இந்தியாவின் நிலைப்பாடு ஒரு தனி நபரின் புகழ் பாடும் வகையிலோ, வரலாற்று பெருமைகளில் ஓய்வெடுக்கவோ முடியாது.

    அது தொடர்ச்சியான தைரியத்தையும் வரலாற்று தொடர்ச்சியின் உணர்வையும் கோருகிறது. இந்தியாவின் மவுனமான குரல், பாலஸ்தீனத்துடனான அதன் பற்றின்மையைக் காட்டுகிறது.

    பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்த நாடுகளின் பட்டியலில் பிரான்சும் இணைந்து விட்டது. நீண்ட காலமாகப் போராடி வரும் பாலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான முதல் படியாக இது உள்ளது.

    193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 150-க்கு மேற்பட்ட நாடுகள் தற்போது பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.

    பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கு பல ஆண்டாக ஆதரவளித்து வந்த இந்தியா, 1988 நவம்பர் 18-ம் தேதி பாலஸ்தீனத்தை நாடாக முறையாக அங்கீகரித்து, இந்த விஷயத்தில் ஒரு தலைவராக இருந்தது.

    இந்தியா நீண்ட காலமாக ஒரு நுட்பமான அதேநேரம் கொள்கை ரீதியான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. அமைதி மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.

    நீதி, அடையாளம், கண்ணியம், மனித உரிமைகளுக்காக பாலஸ்தீன மக்கள் போராடி வரும் நிலையில் பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா தலைமைத்துவத்தை நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    • மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டினார்.
    • அமித் மால்வியா வெளிட்ட ஆதாரத்தில், '1980 ஆம் ஆண்டு- தேசிய தலைநகர் பகுதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொண்டு பாஜவுக்காக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.

    இதற்கு பதிலடியாக " இத்தாலியில் பிறந்த சோனியாவின் பெயர் 1980-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால், அதன்பிறகு 3 ஆண்டு கழித்தே அவர் இந்திய குடியுரிமை பெற்றார்" என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டினார்.

    அனுராக் தாகூரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, பா.ஜ.க. ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் வலைதளத்தில் 1980-ம் ஆண்டு புதுடெல்லி தொகுதியின் வாக்காளர் பட்டியலின் நகலை பகிர்ந்தார்.

    அமித் மால்வியா வெளிட்ட ஆதாரத்தில், '1980 ஆம் ஆண்டு- தேசிய தலைநகர் பகுதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த ஆதாரம் போலியானது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவு தலைவர் சுப்ரியா ஸ்ரீனேட் வெளியிட்டுள்ள பதிவில்,

    1991இல் 69-வது சட்டத்திருத்தத்தின் மூலமாக டெல்லி யூனியன் பிரதேசம்(Union Territory of Delhi), 'தேசிய தலைநகர் பகுதி'(National Capital Territory) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது 1992 பிப்ரவரி 1 அன்று நடைமுறைக்கு வந்தது.

    1980இல் இது டெல்லி யூனியன் பிரதேசமாக இருந்தது. 1992-க்குப் பிறகே டெல்லி சிறப்பு நிர்வாகம், சட்டமன்றம், அமைச்சர்கள் குழு உருவானது.

    நீங்கள் தொடர்ச்சியாக பொய்களை பரப்புபவர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அமித் மாளவியா பதிவை பகிர்ந்த கேரள காங்கிரஸ், "உங்கள் போட்டோஷாப் மிகவும் நன்றாக உள்ளது. ஒரே ஒரு தவறு மட்டும் அதில் இருக்கிறது.

    1991-ல்தான் 69-வது சட்டத்திருத்தம் மூலம் டெல்லி தேசிய தலைநகர் பகுதி(NCT) உருவாக்கப்பட்டது. 1980இல் டெல்லி யூனியன் பிரதேசம்.

    மோடியிடம் இதைவிட நல்ல ஐடியா கொடுக்கச் சொல்லுங்கள்" என்று பதிவிட்டுள்ளது. 

    • இத்தாலியில் பிறந்த சோனியா பெயர் 1980-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது.
    • அதன்பிறகு 3 ஆண்டு கழித்தே அவர் இந்திய குடியுரிமை பெற்றார் என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி குற்றம்சாட்டி வருகிறது.

    இந்நிலையில், பா.ஜ.க. தற்போது சோனியா காந்தியின் ஓட்டுரிமை குறித்து பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

    முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. எம்.பி.யுமான அனுராக் தாகூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இத்தாலியில் பிறந்த சோனியாவின் பெயர் 1980-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால், அதன்பிறகு 3 ஆண்டு கழித்தே அவர் இந்திய குடியுரிமை பெற்றார் என தெரிவித்தார்.

    அனுராக் தாகூரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, பா.ஜ.க. ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் வலைதளத்தில் 1980-ம் ஆண்டு புதுடெல்லி தொகுதியின் வாக்காளர் பட்டியலின் நகலை பகிர்ந்துள்ளார்.

    மேலும், 1980-ம் ஆண்டு முதல் முறையாக சோனியாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. அதன்பிறகு 3 ஆண்டு கழித்தே அவர் இந்திய குடியுரிமை பெற்றார். அந்தச் சமயம் சப்தர்ஜங் சாலையில் உள்ள பிரதமர் இந்திராவின் வீட்டில் வசித்து வந்தனர். இந்திரா, ராஜிவ், சஞ்சய் மற்றும் மேனகா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. 1980-ம் ஆண்டு டெல்லி பாராளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது, வாக்குச்சாவடி 145ல் வரிசை எண் 388ல் சோனியாவின் பெயர் சேர்க்கப்பட்டது.

    இது முழுக்க முழுக்க தேர்தல் சட்ட விதிமீறலாகும். இந்திய குடிமகன்களால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெற தகுதியுண்டு. அதன்பிறகு 1982-ல் அவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டு, 1983-ம் ஆண்டு ஜனவரி மாதம் சோனியா பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டது. அவர் 1983-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி மட்டுமே இந்திய குடியுரிமை பெற்றார். அதாவது, குடியுரிமை இல்லாத நிலையில், 4 மாதங்களுக்கு முன்பே மீண்டும் வாக்காளர் பட்டியலில் 2-வது முறையாக பெயர் சேர்க்கப்பட்டது.

    ராஜீவை திருமணம் செய்தபிறகு, இந்திய குடியுரிமையை ஏற்க சோனியா காந்திக்கு 15 ஆண்டுகள் ஏன் ஆகியது? இது அப்பட்டமான தேர்தல் முறைகேடு இல்லையென்றால் வேறு என்ன? என பதிவிட்டுள்ளார்.

    • காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
    • கூட்டத்தொடர் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. சுமார் ஒரு மாதம் நடைபெறும் இந்த நீண்ட கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகு முதல்முறையாக பாராளுமன்றம் கூடுவதால் அதுகுறித்த நடவடிக்கை பற்றியும், இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தத்தில் டிரம்ப்பின் தலையீடு குறித்தும் விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது.

    கூட்டத்தொடர் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.

    இந்த நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் அதுகுறித்து ஆலோசிக்க காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள சோனியா இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.

    பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம், பகல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பாராளுமன்றத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நேரு அருங்காட்சியகம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
    • அனைத்து பிரதமர்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்றப்பட்டது.

    புதுடெல்லி:

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நேரு அருங்காட்சியகம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அனைத்து பிரதமர்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்றப்பட்டது.

    அதற்கு முன்னதாக கடந்த 2008-ம் ஆண்டு நேருவின் முக்கியமான கடிதங்களை சோனியா காந்தி குடும்பத்தினர் திரும்பப் பெற்றனர். அருங்காட்சியக இயக்குநரின் ஒப்புதலுக்குப் பிறகு 51 அட்டைப் பெட்டிகளில் நேருவின் ஆவணங்கள் சோனியா காந்தியிடம் வழங்கப்பட்டது.

    அதில், இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் வைஸ்ராய் மனைவி எட்வினா மவுண்ட்பேட்டன், சோசலிஸ்ட் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் தலித் தலைவர் ஜெகஜீவன் ராம் போன்றவர்களுக்கு நேரு எழுதிய கடிதங்கள் உள்ளன. அந்தக் கடிதங்களை சோனியா காந்தி அருங்காட்சியகத்திற்கு திருப்பி தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சோனியா காந்தியிடம் இருந்து பிரதமர் நேருவின் கடிதங்களை திரும்பப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • சோனியா காந்தி டெல்லியின் சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி தலைநகர் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

    வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

    இந்நிலையில், சோனியா காந்தி வயிற்றுத் தொற்றில் இருந்து நன்கு குணமடைந்து வருகிறார். சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது டிஸ்சார்ஜ் தேதி இன்னும் முடிவாகவில்லை

    என சர் கங்காராம் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை விடுத்துள்ளது.

    • சோனியா காந்தி தலைநகர் டெல்லியின் சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி தலைநகர் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன் உயர் ரத்த அழுத்தம் காரணமாக இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
    • டெல்லி ஜன்பத்தில் உள்ள இல்லத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உடன் சந்திப்பு.

    டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளார். டெல்லி ஜன்பத்தில் உள்ள இல்லத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.

    பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி சென்ற நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துள்ளார்.

    இந்நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்தது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    சோனியா, ராகுல் உடனான ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு சிறப்பு அரவணைப்பு இருக்கிறது.

    சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்தது உண்மையிலேயே குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×