என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Minister M.K.Stalin"

    • வேற்றுமையில் ஒற்றுமை என்பதை அழித்து, ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக மாற்ற நினைக்கிறார்கள்.
    • பரந்து விரிந்த நம்முடைய இந்திய நாடு, இப்போது மிகப்பெரிய நெருக்கடிக்கும் - ஆபத்துக்கும் உள்ளாகி இருக்கிறது.

    சென்னையில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 

    "நம்முடைய நோக்கங்களுக்கு எதிராக இருப்பவர்கள், என்னென்னவோ கனவுகள் கண்டார்கள்... இந்த ஒற்றுமையைச் சிதைக்க முடியுமா என்று பார்த்தார்கள். ஆனால், அவர்களின் எண்ணங்கள்தான் சிதைந்து போயிருக்கிறது. நம்முடைய இந்தத் தோழமையை எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது. ஏன் என்றால், இது எண்ணிக்கைக்காக அமைந்த கூட்டணி அல்ல; எண்ணங்களுக்காக அமைந்திருக்கும் கூட்டணி. நம்முடைய இந்திய நாட்டையும் - தன்மானமிக்க தமிழ்நாட்டையும் காக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை, லட்சியமாகக் கொண்டு அமைந்திருக்கும் கூட்டணி. 

    பாசிச பா.ஜ.க., தன்னுடைய ஆக்டோபஸ் கொடுங்கரங்களை அனைத்துப் பக்கமும் நீட்டி, கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. இந்திய நாடு, இதுவரை காப்பாற்றி வைத்து வந்த அனைத்து விழுமியங்களையும் சிதைக்கும் செயலை, ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்து கொண்டு வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகளை, தங்களுக்கு ஏற்ற மாதிரி சிதைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதை அழித்து, ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக மாற்ற நினைக்கிறார்கள்.

    பா.ஜ.க. எவ்வளவு ஆபத்தானது; எவ்வளவு குறுகிய சிந்தனை கொண்டது; எந்தளவிற்குப் பன்முகத்தன்மைக்கு எதிரானது என்றால், அவர்களைப் பொறுத்தவரைக்கும், ஒரு நாடு என்றால், அதில் ஒரு மதம் - ஒரு மொழி - ஒரு பண்பாடு - ஒரே ஒரு தலைமைதான் இருக்க வேண்டும். மாநிலங்களின் வளத்தைச் சூறையாடி, ஒன்றியத்தில் குவிக்கிறார்கள். மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள்.

    மதச்சார்பின்மை - சோசலிசம் - சமநீதி - சமூகநீதி - பொதுவுடைமை - பொது உரிமை உள்ளிட்ட சொற்களைக் கேட்டாலே, பா.ஜ.க.வினருக்குக் கசக்கிறது. இந்தச் சொற்களை எல்லாம், ஆட்சியில் இருந்து மட்டுமல்ல - அகராதியில் இருந்தே அழிக்க வேண்டும் என்று துடியாகத் துடிக்கிறார்கள். பரந்து விரிந்த நம்முடைய இந்திய நாடு, இப்போது மிகப்பெரிய நெருக்கடிக்கும் - ஆபத்துக்கும் உள்ளாகி இருக்கிறது.

    கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. நினைத்தது போன்று, 400 இடங்கள், 370 இடங்கள் என்று வெற்றி பெற்றிருந்தால், இப்போது இருப்பதைவிட நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். இந்தியாவில் இருக்கும் ஜனநாயகச் சக்திகள் அனைத்தையும் இன்றைக்கு இணைத்து, இந்தியா கூட்டணியை உருவாக்கி, பா.ஜ.க.வின் வேகத்தைக் குறைத்திருக்கிறோம். ஆனாலும், பெரும்பான்மை இல்லாத நேரத்திலேயே, பா.ஜ.க. தன்னுடைய கொடூரமான நகங்களைப் பயன்படுத்தி, ஜனநாயகத்திற்கு காயங்களை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. இந்தச் சூழலில், அனைவரும் குறிப்பிட்ட நாம் எச்சரிக்கையாகவும் - கவனமாகவும் இருக்க வேண்டும்!

    ஏன் என்றால், வரப்போகும் சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டுக்கும் - N.D.A. கூட்டணிக்கும் நடக்கும் தேர்தல். இதை மக்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழுக்கும் - தமிழினத்திற்கும் - தமிழ்நாட்டுக்கும் - அடுக்கடுக்காக துரோகங்களை செய்துவிட்டு, துரோகத்திற்கு ஏற்ற கொத்தடிமைகள் அனைவரையும் ஒன்று சேர்த்து, அவர்கள் முதுகில் ஏறி வருகிறது, பா.ஜ.க.

    அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை வழக்குகளைக் காட்டி மிரட்டி அமைக்கப்பட்டுள்ள அந்தத் தேர்தல் கூட்டணியின், தேர்தல் பரப்புரைக்கு வந்த பிரதமர் மோடி , அ.தி.மு.க. என்ற பெயரையே சொல்லவில்லை. ஏன், அவர் அ.தி.மு.க.வின் பெயரைச் சொல்லவில்லை தெரியுமா? ஏன் என்றால், அ.தி.மு.க. என்பது தனிக்கட்சி கிடையாது. பா.ஜ.க.வின் கிளை அமைப்பு. அந்தக் கிளை அமைப்பைச் சேர்ந்த பழனிசாமி அவர்கள், மோடி கொடுக்காத வாக்குறுதிகள் அனைத்தையும் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

    முக்கியமாக, மகாத்மா காந்தி பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தில், 50 நாட்கள்கூட வேலையைத் தராமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு எப்படியெல்லாம் சீரழித்தது என்று, நாட்டுக்கே நன்றாகத் தெரியும். இப்போது, தேசத்தந்தை காந்தியின் பெயரையே அழித்திருக்கும் அந்தத் திட்டத்தில், 125 நாட்கள் வேலை தரப்போவதாக பா.ஜ.க. சொல்கிறது! ஆனால் பழனிசாமி அவர்கள், 150 நாட்கள் வேலை தருவோம் என்று, முதலாளிகளை மிஞ்சும் பர்ஃபார்மென்ஸ்-ஐ இன்றைக்குச் செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் எப்படியும் தோல்வி உறுதி என்ற காரணத்தினால், பா.ஜ.க. அரசும் இந்தப் பட்ஜெட்டிலும் நம்மைப் புறக்கணித்திருக்கிறார்கள்.

    இந்த லட்சணத்தில், நேரடியாக பா.ஜ.க. ஆட்சி என்று சொல்ல கூச்சப்பட்டு, டபுள் எஞ்சின் ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க. சொல்லும் டபுள் எஞ்சின் என்பது டப்பா எஞ்சின் என்று நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.

    எடுத்துக்காட்டுக்கு சொல்கிறேன்... போதை மருந்து கடத்தலா? பா.ஜ.க. ஆளும் குஜராத்தைப் பாருங்கள்! குற்றச்சம்பவங்களா? பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தைப் பாருங்கள்! மாநிலமே பற்றி எரிவதை பார்க்க வேண்டுமா? பா.ஜ.க. ஆட்சி செய்த மணிப்பூரைப் பாருங்கள்! இன்னும் சொல்கிறேன்... பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களாக, ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே எந்த மாநிலம் என்று சொல்கிறதே... உத்தரப்பிரதேசம் - ராஜஸ்தான் - மத்தியப் பிரதேசம்! இந்த மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க.தான் ஆளும் கட்சி! சரி, முதல் மூன்று மாநிலங்கள் மட்டும்தானா? அடுத்த மூன்று இடங்களில் இருப்பது யார்? பீகார் - ஒடிசா - மகாராஷ்டிரா! இந்த மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க.தான் ஆட்சியில் இருக்கிறது. இதுதான் டப்பா எஞ்சினின் லட்சணம்!

    நாட்டுக்கே முன்னோடியான திட்டங்களை, தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் நாம் இன்றைக்குச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதிகமான வளர்ச்சியடைந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை திராவிட மாடல் உயர்த்தியிருக்கிறது! இங்கு பா.ஜ.க.வின் டப்பா எஞ்சினுக்கு வேலையே கிடையாது! இதே உணர்வைத்தான், மக்களின் முகங்களில் மகிழ்ச்சியாக நான் பார்க்கிறேன்!

    அண்மையில், இந்தியா டுடே பத்திரிகையும் - சி வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், நம்முடைய கூட்டணி 45 விழுக்காடு ஆதரவுடன் முன்னிலையில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்! நான் உறுதியாகச் சொல்கிறேன், நமக்கான ஆதரவு நிச்சயம் இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும்! கருத்துக்கணிப்புகள் - கருத்துத்திணிப்புகள் அனைத்திலும் கவனத்தைச் செலுத்தி, நம்முடைய எண்ணத்தை சிதறவிட்டுவிட வேண்டாம்; மெத்தனமாக இருந்துவிட வேண்டாம். மக்களுடன் இணைந்து நம்முடைய பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்! தோழமைக் கட்சியினர் அனைவரும் இன்னும் வேகமாகப் பரப்புரைகளைத் தொடங்க வேண்டும் என்று உரிமையுடன் நான் கேட்கிறேன்.

    தமிழ்நாட்டில் நாம் பொறுப்பேற்று, நாம் பெறப்போகும் வெற்றி - "பா.ஜ.க.வை வீழ்த்த முடியும்" என்ற நம்பிக்கையை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வழங்கும் வெற்றியாக இருக்க வேண்டும்! ஒற்றுமை இருக்கும் இடத்தில் பா.ஜ.க.வின் பாசிச எண்ணம் ஒருபோதும் பலிக்காது என்பதை நாம் மீண்டும் நிரூபித்துக் காட்டுவோம்! வெல்வோம் ஒன்றாக!" என தெரிவித்தார்.

    • உண்மை தங்கள் பக்கம் இருப்பதால் சோனியா, ராகுல் காந்தி நிரபராதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    • அரசியல் எதிரிகளைத் துன்புறுத்துவதற்கும், அவதூறு செய்வதற்கும் மட்டுமே இதுபோன்ற வழக்குகள் புனையப்படுகின்றன.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் (டிசம்பர் 16) ஏற்க மறுத்து நிராகரித்தது.

    இந்நிலையில் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 

    "நேஷனல் ஹெரால்டு வழக்கின் மூலம், எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைப்பதற்காக, மத்திய முகமைகளை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துவதை நீதித்துறை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. எந்தவொரு சட்ட அடிப்படையுமின்றி, அரசியல் எதிரிகளைத் துன்புறுத்துவதற்கும், அவதூறு செய்வதற்கும் மட்டுமே இதுபோன்ற வழக்குகள் புனையப்படுகின்றன. 


    மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்கள் மீது காந்தி குடும்பத்தினர் உறுதியாக நிற்பதை பாஜகவால் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில், அவர்களை தொடர்ந்து துன்புறுத்தும் நோக்கில் இருக்கும்போதிலும், உண்மை மற்றும் அச்சமின்மை தங்கள் பக்கம் இருப்பதால், சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர், என் சகோதரர் ராகுல் காந்தி நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். 

    இந்த பழிவாங்கும் நோக்கம் கொண்ட அணுகுமுறை, முதன்மை புலனாய்வு நிறுவனங்களின் மீதான நம்பகத்தன்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும், அவற்றை அரசியல் மிரட்டலுக்கான கருவிகளாக மட்டுமே மாற்றி வருகிறது." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • திண்டுக்கல் அருகில் உள்ள காந்திகிராமகிராமிய பல்கலைக்கழகத்தில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
    • இதில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் வருகை தருகிறார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள காந்திகிராமகிராமிய பல்கலைக்கழகத்தில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் வருகை தருகிறார். முன்னதாக 11-ந்தேதி காலையில் கரூரில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    அதனைதொடர்ந்து அங்கிருந்து கார்மூலம் திண்டுக்கல் வருகை தரு கிறார். முதல்-அமைச்சருக்கு திண்டுக்கல் மேற்கு, கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்ய ப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்ட எல்லையான வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டியில் அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மாநகர, நகர பகுதிபேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

    திண்டுக்கல் வருகை தரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் செந்தில்குமார் ஆகியோரும் தெரி வித்துள்ளனர்.

    • முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு 8-ந் தேதி தென்காசி வருகை தர உள்ளார்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கூறினார்.

    தென்காசி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வருகிற 8-ந் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வருகிறார்.

    ஆய்வு கூட்டம்

    இதை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்கள் உடனான முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் தலைமையில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு முதன்முறையாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு 8-ந் தேதி வருகை தர உள்ளார். நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி இம்மாவட்டத்தில் நடை பெறும் அனைத்து நிகழ்வு களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். இவ் விழா சிறப்பாக நடைபெறும் வகையில், அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளில் தனிக்கவனம் செலுத்தி, ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்

    கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ஆகாஷ், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவபத்மநாதன், ராஜா எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயனுலாப்தீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (திட்ட இயக்குநர்) மைக்கேல் ஆண்டனி பெர்னாண்டோ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், அனைத்துத்துறை முதல் நிலை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    • சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என அறிக்கையில் ராஜா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மார்ச் 1-ந்தேதி பிறந்தநாள் காணும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை மார்ச் மாதம் முழுவதும் நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட வேண்டும்.

    அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்குவது, காச நோயாளிகளுக்கு உணவு வழங்குவது, ரத்ததானம் செய்வது, மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்குவது, ஏழை எளியவர்களுக்கு நலத்திட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும்.

    பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குவது, தமிழக முதல்-அமைச்சரின் திறமையான ஆட்சியின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்த வேண்டும். நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் முதல்-அமைச்சர் பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாலை 5 மணி அளவில் தேசிய தலைவர்கள் பங்கேற்கும் முதல்வர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு புறப்படுகிறார்.
    • முதல்-அமைச்சர் வருகையையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் ஆய்வு கூட்டங்களும் நடத்தி வருகிறார்.

    நாகர்கோவில் பயணம்

    அதன்படி இன்று மதுரைக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு சாலை மார்க்கமாக அங்கிருந்து நாகர்கோவிலுக்கு புறப்படுகிறார். நெல்லை வழியாக செல்லும் அவர் இரவு 7.30 மணிக்கு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகை சென்றடைகிறார்.

    தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் புதிய மாநகராட்சி கட்டிடம் திறந்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். அதன்பின்னர் மதியம் 2 மணியளவில் காரில் தூத்துக்குடிக்கு வந்து அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை செல்கிறார்.

    போலீஸ் பாதுகாப்பு

    இதனையொட்டி விருதுநகர் மாவட்ட எல்கையில் இருந்து குமரி மாவட்ட எல்கை வரையிலும் நெல்லை, தென்காசி,தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மேலும் தூத்துக்குடி மாவட்ட எல்கையான ஸ்ரீவைகுண்டம் வட்டம் வசவப்பபுரம் கிராமத்தில் இருந்து மறவன்மடம் வரை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரையிலும் நாளை மறுநாள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • தூத்துக்குடி மாநகர ஸ்பிக்நகர் பகுதி தி.மு.க. இளைஞர் அணி சார்பாக தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் ராஜீவ்நகரில் நடைபெற்றது.
    • தூத்துக்குடி விமான நிலையம் , துறைமுகம் என அனைத்து வகையிலும் வளர்ச்சியடைவதற்கு முழுமையாக உழைக்கும் கனிமொழி எம்.பி. மீண்டும் வரும் தேர்தலில் போட்டியிடுவார் என்று சண்முகையா எம்.எல்.ஏ. பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர ஸ்பிக்நகர் பகுதி தி.மு.க. இளைஞர் அணி சார்பாக தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் ராஜீவ்நகரில் நடைபெற்றது.

    சண்முகையா எம்.எல்.ஏ.

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன், ஸ்பிக்நகர் பகுதி தி.மு.க. செயலாளர் ஆர். ஆஸ்கர் வரவேற்று பேசினார். பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் திருமணி ஆனந்த், காளிதாசன், மாரிச்செல்வம், கார்த்தி, ரூபன், ஸ்பிக்நகர் பகுதி தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளர் மாலாசின்கா, சித்திரை புஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. நிறைவேற்றி உள்ளது. கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டது. தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் அளித்த 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்.

    கனிமொழி எம்.பி. மீண்டும் போட்டி

    கொரோனா காலக்க ட்டத்தில் 4 ஆயிரம் உதவித் தொகை, பால்விலை குறைப்பு, இலவச பஸ் பயணம், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர், கல்வி உதவித்தொகை, இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி விமான நிலையம் துறைமுகம் என அனைத்து வகையிலும் வளர்ச்சியடைவதற்கு முழுமையாக உழைக்கும் கனிமொழி எம்.பி. மீண்டும் வரும் தேர்தலில் போட்டியிடுவார். அவருக்கு வெற்றியை வழங்கி மேலும் சாதனை பணிகள் தொடர வாய்ப் பளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் செந்தூர்பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் கோட்டாளம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், மாவட்ட பிரதிநிதி ராஜசேகர், அனஸ், பாலமுருகன், வக்கீல் அணி ரகுராமன், ஸ்பிக்நகர் பகுதி நிர்வாகிகள் வெள்ளைபாண்டி, அந்தோணிகுரூஸ், கல்பனா, ரகு, காளி, ஆனந்த், விவேகானந்தன், வட்ட செயலாளர் வசந்தி பால்பாண்டியன், பாஸ்கர், முத்துமாணிக்கம், அற்புதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்திட ஆணை வழங்கப்பட்டது.
    • தொழிற்பிரிவுகளின் மூலம் வருடத்திற்கு கூடுதலாக 128 பயிற்சியாளர்கள் திறன் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களி லும் மாறி வரும் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வாறு மாற்றிட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில் நுட்ப மேம்பாட்டு மையங்களாக 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்திட ஆணை வழங்கப்பட்டது.

    முதற்கட்டமாக தற்போது தமிழகத்தில் 22 தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    நெல்லை பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் அமையப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில் நுட்ப மையமும் இதில் அடங்கும். அங்கு நடந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் ராஜூ, மண்டல துணை இயக்குனர் செல்வ குமார், உதவி இயக்குனர் ஜார்ஜ் பிராங்கிளின், பேட்டை ஐ.டி.ஐ. முதல்வர் லட்சுமணன், பொறியாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினர். பின்னர் ஐ.டி.ஐ வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் மாணவ- மாணவிகள், ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

    இக்கல்வியாண்டில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைந்துள்ள இந்த தொழில் 4.0 தொழில் நுட்ப மையத்தின் மூலம் புதிதாக மேலும் 4 தொழிற்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    மேம்படுத்தப்பட்ட சி.என்.சி எந்திர தொழில் நுட்ப பணியாளர், அடிப் படை வடிவமைப்பாளர் மற்றும் மெய்நிகர் சரிபார்ப்பாளர், உற்பத்தி கட்டுப்பாடு மற்றும் தன்னியக்குமயம், தொழில்துறை எந்திரனியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்ப பணியாளர் ஆகியவை இந்த 4 புதிய தொழில் பிரிவுகள் ஆகும்.

    இத்தொழிற்பிரிவுகளின் மூலம் வருடத்திற்கு கூடுதலாக 128 பயிற்சியாளர்கள் திறன் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாறி வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பயிற்சியாளர்கள் திறன் பயிற்சி பெற்று தேர்ச்சி பெறுவதின் மூலம் தகுந்த வேலைவாய்ப்பினை பெற்று தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளலாம்.

    மேலும் நாட்டின் உற்பத்தி திறன் அதிகரித்து வளமான இந்தியாவை உருவாக்கவும் இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மூத்த வழக்குரைஞர் கபில் சிபலுக்கு வாழ்த்துகள்!
    • பாதுகாப்பான கரங்களில் இருப்பதை அவரது வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூத்த வழக்குரைஞர் கபில் சிபலுக்கு வாழ்த்துகள்! வழக்கறிஞர்கள் சங்கத்தின் சுதந்திரமும் நமது அரசியலமைப்பின் மாண்புகளும் பாதுகாப்பான கரங்களில் இருப்பதை அவரது வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது.

    நீதியையும் இந்திய மக்கள் மிகவும் போற்றும் மக்களாட்சி விழுமியங்களையும் உயர்த்திப் பிடிக்கும் வகையில் கபில் சிபல் அவர்களது தலைமை அமையும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    • நிதி ஆயோக் அமைப்பு 4-வது ஆய்வு அறிக்கையை அண்மையில் வெளியிட்டது.
    • தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தலைசிறந்து விளங்குகிறது.

    சென்னை:

    2023-24-ம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகள் பற்றிய 4-வது ஆய்வு அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது.

    நிதி ஆயோக் நிறுவனத்தின் 2018, 2019 மற்றும் 2020 ஆகிய மூன்றாண்டுகளின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வளர்ச்சிக் குறியீடுகளை எல்லாம்விட, இந்த 2023-24-ம் ஆண்டிற்கான அறிக்கை திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது என்பதைப் பறைசாற்றியுள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி தொலைநோக்குச் சிந்தனைகளுடன் செயல்படுத்தி வரும் சீரிய திட்டங்களால் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இன்று இந்தியாவிலேயே முதல் இடம் பெற்றுச் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது.

    காலநிலை மாற்றம்-சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசிலா எரிசக்தி இரண்டிலும் தேசிய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உயர்ந்துள்ளது. மேலும்,

    * பொருளாதாரம் மற்றும் சிறந்த வேலைவாய்ப்பு,

    * மக்கள் நலம் மற்றும் சுகாதார வாழ்வு,

    * தொழில் வளர்ச்சி-புத்தாக்கத் தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்,

    * தூய்மையான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல்,

    * அமைதியைக் காத்தல், நீதி நிர்வாகம், வலுவான நிறுவனங்கள்

    * பாலின சமத்துவம், ஆகிய இனங்களில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உயர்ந்து சிறந்துள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களான, மகளிர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி தொடரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மகளிர்க்குக் கட்டணமில்லாப் பேருந்து விடியல் பயணத் திட்டம், பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், சமத்துவத்தை நிலைநாட்டும் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கேற்ற திறன்களை வழங்கும் நான் முதல்வன் திட்டம் முதலான சமூகநீதித் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களால் குடும்பப் பொருளாதாரம் உயர்ந்து வறுமை ஒழிப்பில் கடந்த காலங்களைவிட மாபெரும் வளர்ச்சி கண்டு இந்தியாவிலேயே வறுமையை ஒழிப்பதில் தமிழ்நாடு தலைசிறந்த முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்பதை இந்த நிதி ஆயோக் அறிக்கை நிரூபித்துள்ளது.

    அதாவது, வறுமை ஒழிப்புத் திட்டத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தலைசிறந்து விளங்குகிறது என்பது உட்பட

    11 இனங்களில் தமிழ்நாடு நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகளில் தேசிய சராசரியைவிட அதிகமாக வளர்ச்சி பெற்று முன்னணி மாநிலமாகவும், இரண்டு இனங்களில் தேசிய சராசரிக்கு இணையாகவும் வளர்ச்சி பெற்று 13 இனங்களில் மிகவும் சிறந்துள்ளது தமிழ்நாடு.

    இவையெல்லாம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியின் தொலைநோக்குச் சிந்தனைகளுடன் கூடிய சிறந்த சீரிய திட்டங்களால் தமிழ்நாடு பெற்றுள்ள வளர்ச்சிக்கான சான்றுகளாகும் என்று பலரும் பாராட்டுகின்றனர்.

    • ரஜினிகாந்த தனது 74-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
    • கூலி படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தனது 74-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். கூலி படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

    இந்நிலையில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    என்னுடைய பிறந்தநாளன்று என்னை மனமார வாழ்த்திய என்னுடைய அருமை நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மதிப்பிற்குரிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

    தமிழக எதிர்க்கட்சி தலைவர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

    என ரஜினிகாந்த் கூறினார்.

    • நெல்லை விருந்தினர் மாளிகையில் இருந்து விழா மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் புறப்பட்டு சென்றார்.
    • 7 கிலோ மீட்டர் தூரம் சாலை ஓரங்களில் ஏராளமான பெண்களும், பொதுமக்களும் திரண்டு நின்று முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    நெல்லை:

    நெல்லை விருந்தினர் மாளிகையில் இருந்து விழா மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் புறப்பட்டு சென்றார்.

    7 கிலோ மீட்டர் தூரம் சாலை ஓரங்களில் ஏராளமான பெண்களும், பொதுமக்களும் திரண்டு நின்று முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க.சார்பில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் 25 இடங்களில் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு கொடுத்தனர். காரில் முதல்-அமைச்சர் சென்றபோது சாலையில் பெண்கள் ஏராளமானோர் நின்று இருந்தனர். அப்போது காரை நிறுத்தி அதிலிருந்து இறங்கி சென்று முதல்-அமைச்சர் மனுக்களை பெற்றார்.

    இதேபோல் மாற்று திறளாளிகள் நின்றிருந்தனர். அவர்களை பார்த்ததும் அருகில் சென்று நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் பாளை மார்க்கெட் பகுதியில் சென்றபோது ஏராளமான சிறுவர், சிறுமிகள், திருவள்ளுவர், அன்னை தெரசா உள்ளிட்டவர்களின் வேடம் அணிந்து நின்றிருந்தனர்.

    அவர்களை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி சென்ற முதல்-அமைச்சர் அவர்களுக்கு கை கொடுத்து அவர்களுடன் சிறிது நேரம் கொஞ்சி பேசினார். இதேபோல் விழா மேடை வரை பல்வேறு இடங்கிளில் காரில் இருந்து இறங்கி சென்ற முதல்-அமைச்சர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

    ×