என் மலர்
நீங்கள் தேடியது "ஹிமந்தா பிஸ்வா சர்மா"
- பிபூரியா தொகுதியிலிருந்து 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ராகுல் காந்தியும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அசாம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் பூபேன் குமார் போரா, இன்று பாஜகவில் அதன் மாநிலப் பிரிவுத் தலைவர் திலீப் சைகியா முன்னிலையில் இணைந்தார். அவருடன், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சஞ்சு போரா, ராஜேஷ் குமார் ஜோஷி, கங்கன் தாஸ், ககன் சந்திர போரா உள்ளிட்ட பலரும் பாஜகவில் இணைந்தனர்.
பிப்.16 அன்று காங்கிரஸில் இருந்து விலகுவதாக போரா அறிவித்தார். ஆனால் காங்கிரஸ் உயர்மட்டக் குழு அவர் ராஜினாமா கடிதத்தை ஏற்கவில்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் அவரது வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ராகுல் காந்தியும் அவரிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து யோசிக்க நேரம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மறுநாளே முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வீட்டிற்கு சென்று, பாஜகவில் சேரப்போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். 32 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸில் இருந்த இவர், அசாம் மாநிலத் தலைவராக 2021 முதல் 2024 வரை பணியாற்றினார். அதற்கு முன்பு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். பிபூரியா தொகுதியிலிருந்து 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாணவர் அரசியலில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கினார். தருண் கோகோய் முதலமைச்சராக இருந்தபோது, அரசின் செய்தித் தொடர்பாளராகவும், நாடாளுமன்றச் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
அசாமின் தற்போதைய முதலமைச்சராக உள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் காங்கிஸில் இருந்து விலகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டமன்றத்திற்கு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நான் காங்கிரஸிலேயே நீடித்திருந்தால் எனக்கு என்ன கிடைத்திருக்குமோ, அதைவிட மிக அதிகமானவற்றை இறைவன் எனக்கு வழங்கியிருக்கிறார்.
- 2014 ஆம் ஆண்டு தருண் கோகோய் அமைச்சரவையில் இருந்து ஹிமந்தா பிஸ்வா சர்மா ராஜினாமா செய்தார்.
அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, 2014-ஆம் ஆண்டிலேயே தாம் முதலமைச்சராகப் பதவியேற்க வேண்டிய சூழல் இருந்ததாகவும், ஆனால் ராகுல் காந்தியின் தலையீட்டால் அப்போது நிலைமை தலைகீழாக மாறியதாகவும், அதனால் தான் அந்த பதவியை இழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று மாநில சட்டமன்றத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்தா சர்மா,
"நான் இன்னும் மேடம் என அழைக்கும் அவர் (சோனியா காந்தி) என்னிடம் தேதியை முடிவு செய்யச் சொன்னார். ஜூன் (2014) மாதம் காமாக்யா கோயிலில் நடக்கும் அம்புபாச்சி மேளாவுக்கு அடுத்த நாள் நான் சத்தியப்பிரமாணம் செய்வேன் என்று அவரிடம் சொன்னேன்.
ஆனால் அமெரிக்காவில் இருந்துவந்த ராகுல் காந்தியின் அழைப்பால் நிலைமை மாறியது. எனக்கு நீதி வழங்கப்படவில்லை, ஆனால் கார்கே எப்போதும் கட்சியில் உள்ள எனது எதிரிகளிடம்: 'நீங்கள் ஹிமந்தாவுடன் சண்டையிடுங்கள், ஆனால் அவரிடம் தான் எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள் என்று சொல்வார்.
அப்போது நான் மனவேதனை அடைந்தேன், ஆனால் இப்போது ஒருவருடைய வாழ்க்கையில் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நான் நம்புகிறேன். நான் காங்கிரஸிலேயே நீடித்திருந்தால் எனக்கு என்ன கிடைத்திருக்குமோ, அதைவிட மிக அதிகமானவற்றை இறைவன் எனக்கு வழங்கியிருக்கிறார்.
பாஜக முதலமைச்சராக, அசாம் மாநிலத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் முழுமனதுடன் சேவை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் காங்கிரஸில் இருந்திருந்தால் இது சாத்தியமாகி இருக்காது. இதற்காக நான் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவை அனைத்தும் உண்மைகள், இதற்கு பல சாட்சிகள் உள்ளனர். ஆனால், நடக்காமல் போனதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்; ஏனெனில் அது நடந்திருந்தால், நான் என்றென்றும் களங்கப்பட்டிருப்பேன்." என்று தெரிவித்துள்ளார்.
2014-இல் அசாம் காங்கிரஸில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலின் போது, 58 எம்.எல்.ஏ.க்கள் ஹிமந்தா சர்மாவுக்கு ஆதரவு அளித்ததாகவும், ஒருசிலர் நடுநிலை வகித்ததாகவும், அதே நேரத்தில் 12 பேர் மட்டுமே தருண் கோகோயின் ஆட்சி தொடரவேண்டும் எனக் கூறியதாகவும் தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு தருண் கோகோய் அமைச்சரவையில் இருந்து ஹிமந்தா பிஸ்வா சர்மா ராஜினாமா செய்தார். அடுத்த ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பின்னர் 2021-ல் அசாமின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.






