என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Himanta Biswa Sarma"

    • அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்தார்.
    • சுபின் கார்கின் இசைக்குழு உறுப்பினர் சேகர் ஜோதி கோஸ்வாமி மற்றும் சக பாடகர் அமிர்தபர்வ மஹந்தா உட்பட நான்கு பேரை அசாம் போலீசார் கைது செய்தனர்.

    அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த சுபீன் கார்க்.

    கடந்த செப்டம்பர் 19 அன்று சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் செய்யும்போது சுபின் உயிரிழந்தார். இருப்பினும் அவரின் இறப்பில் மர்மம் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக விசாரணை செய்ய அசாம் அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக சுபின் கார்கின் இசைக்குழு உறுப்பினர் சேகர் ஜோதி கோஸ்வாமி மற்றும் சக பாடகர் அமிர்தபர்வ மஹந்தா உட்பட நான்கு பேரை அசாம் போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே ஜூபீன் கார்க்கின் மரணம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி சட்டமன்றத்தில் தீர்மானத்தை தாக்கல் செய்தது.

    அப்போது பேசிய அசாமில் ஆளும் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இது ஒரு தற்செயலான சம்பவம் அல்ல, மாறாக ஒரு கொலை என்று தெரிவித்துள்ளார்.

    ஆனால் சுபின் கார்க் மரணத்தில் சந்தேகம் இல்லை என சிங்கப்பூர் காவல்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 33 ஆயிரம் நியாய விலைக்கடைகளில் இந்த திட்டம் தொடங்கியது.
    • 2.45 கோடி பேர் இந்த திட்டத்தால் பயனடைவர்.

    மானிய விலையில் பருப்பு, சர்க்கரை, உப்பு வழங்கும் திட்டத்தை அசாம் மாநில அரசு இன்று தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் "மைசூர் பருப்பு ஒரு கிலோ 68 ரூபாய், சர்க்கரை ஒரு கிலோ 38 ரூபாய், உப்பு ஒரு கிலோ 10 ரூபாய். இது சாத்தியமா? ஆம். அசாமில் இது சாத்தியம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், "இந்த விலை ஜனவரி மாதத்தில் இருந்து மேலும் குறையும் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்தியோதயா என்பது எங்களுடைய இலக்கு. நோக்கம். ரேசன் கார்டு வைத்திருப்பவர்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்காக நாங்கள் புதிய அளவு கோலை உருவாக்கியுள்ளோம். 100 ரூபாய்க்கு ஒரு கிலோ பருப்பு, சர்க்கரை, உப்பு கிடைக்கும். இவைகள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    33 ஆயிரம் நியாய விலைக்கடையில் இந்த திட்டம் தொடங்கியது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள் இந்த தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 2.45 கோடி பேர் இந்த திட்டத்தால் பயனடைவர் என அரசு தெரிவித்துள்ளது.

    நவம்பர், டிசம்பர் மாதத்தில் ஒரு கிலோ மைசூர் பருப்பு ரூபாய் 69-க்கும், சர்க்கரை ரூபாய் 38-க்கும், உப்பு ரூபாய் 10-க்கும் வாங்கிக் கொள்ள முடியும். ஜனவரி மாதத்தில் இருந்து ஒரு கிலோ மைசூர் பருப்பு ரூபாய் 60-க்கும், சர்க்கரை ரூபாய் 30-க்கும், உப்பு ரூபாய் 10-க்கும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சமாதியில் பிரார்த்தனை செய்தாலும் அமைதி இருக்காது.
    • சட்டவிரோத மியாக்கள் நான் முதல்வராக இருக்கும்வரை பதற்றத்தை கொண்டிருக்க வேண்டும்.

    அசாம் மாநில முதல்வராக இருக்கும் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, மாநிலம் முழுவதும் ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தும் பணி தொடரும், நான் முதல்வராக இருக்கும் வரை மியாக்கள் நிம்மதியாக இருக்க முடியாது.

    இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில் "வெளியேற்றுதல் தொடரும். இன்று கூட பிஸ்வானாத் மாவட்டத்தில் உள்ள பெஹாலி பகுதியில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நான் முதல்வராக இருக்கும் வரை, சட்டவிரோத மியாக்கள் அமைதியாக இருக்க முடியாது.

    சமாதியில் பிரார்த்தனை செய்தாலும் அமைதி இருக்காது. சட்டவிரோத மியாக்கள் நான் முதல்வராக இருக்கும்வரை பதற்றத்தில் இருக்க வேண்டும். நான் அங்கு இல்லையென்றால், அது வேறு விஷயம்.

    நவம்பர் 25ஆம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரின்போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்வது தடை என்ற புதிய சட்டசம் கொண்டு வரப்பட இருக்கிறது. யாராவது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தால் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும்" என்றார்.

    மியா என்பது அசாமில் பெங்கால் மொழி பேசும் முஸ்லிம்களை அழைக்கும் இழிவான சொல். பெங்காலி பேசாத முஸ்லிம்கள் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியர்கள் என பொதுவாக அடையாளம் காணப்படுகின்றன.

    • கர்நாடக மாநிலங்களுக்கு வரும் முதலீடுகளை குஜராத், அசாமுக்கு திருப்புவதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு.
    • செமிகண்டக்டர் போன்ற பெரிய நிறுவனங்களை அமைப்பதற்கான திறன் இல்லை என பிரியங்க் கார்கே கூறியதாக குற்றச்சாட்டு.

    கர்நாடக மாநில அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகனுமான பிரியங்க் கார்கே செய்தி சேனலில், கர்நாடகாவில் முதலீடு செய்ய இருந்த நிறுவனங்கள் குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக மத்திய அரசு மீது குற்றம்சாட்டினார்.

    அப்போது, செமிகண்டக்கர் உற்பத்தி போன்ற பெரிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான திறன் வடகிழக்கு மாநிலங்களில் இல்லை எனக் கூறியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், பிரியங்க் கார்கே மீது வழக்கு தொடர இருப்பதாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில் "பிரியங்க் கார்கே முதல் தர முட்டாள். அசாம் இளைஞர்களை அவர் இழிவுப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சி இதுவரை அவருக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

    அசாம் மக்களுக்கு கல்வி அறிவு இல்லை. போட்டியான இளைஞர்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இது அசாம் இளைஞர்களை இழிவுப்படுத்துவதாகும். இதனால் அவர் மீது வழக்கு தொடர்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    • அசாமில் கடந்த பத்தாண்டுகளாக முஸ்லிம் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது.
    • வரும் 2041-ல் முஸ்லிம்கள் எண்ணிக்கை 50 சதவீதத்தை தொட்டு விடும் என தெரிவித்தார்.

    கவுகாத்தி:

    அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா சமீபத்தில் பேசுகையில், மக்கள்தொகையை மாற்றுவது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. அசாமில் முஸ்லிம் மக்கள்தொகை என்பது 40 சதவீதமாக உள்ளது. 1951-ல் 12 சதவீதமாக இருந்த முஸ்லிம் மக்கள் எண்ணிக்கை தற்போது 28 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் தேர்தலில் பல மாவட்டங்களை இழந்துள்ளோம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அசாமில் முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது அதிகரித்து வரும் மக்கள்தொகையின்படி பார்த்தால் வரும் 2041-ம் ஆண்டில் முஸ்லிம்கள் எண்ணிக்கை இந்துக்களின் எண்ணிக்கைக்கு சமமாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. முஸ்லிம்கள் எண்ணிக்கை 50 சதவீதத்தை தொட்டு விடும் என தெரிவித்தார்.

    • ஹிமாந்தா மற்றும் அவரது குடும்பம் அவர்களுடைய ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
    • சிறைக்கு அவர் செல்வதை மீடியாக்கள் காட்டும் என ராகுல் காந்தி கூறியிருந்தார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும், இந்திய பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி "அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தன்னை 'ராஜா' என்று நினைத்துக்கொண்டு உங்கள் செல்வத்தையும், நிலத்தையும் அதானி மற்றும் அம்பானிக்கு ஒப்படைப்பதில் 24 மணி நேரமும் மும்முரமாக இருக்கிறார்.

    ஆனால் நீங்கள் அவரது குரலைக் கவனமாகக் கேட்டால், டிவியில் அவரது முகத்தை உற்றுப் பார்த்தால் பயம் அதிகமாக இருக்கும். பயப்படாத காங்கிரஸ் தொண்டர்கள், அவரை ஜெயிலில் வைப்பார்கள் என்பது ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுக்கு தெரியும்.

    ஹிமாந்தா மற்றும் அவரது குடும்பம் அவர்களுடைய ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டும். சிறைக்கு அவர் செல்வதை மீடியாக்கள் காட்டும். மோடி அல்லது அமித் ஷாவால் கூட அவரை காப்பாற்ற முடியாது. காங்கிரஸ் அதை செய்ய வேண்டியதில்லை. இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அனைத்து சமுதாயத்தினர் மற்றும் மதத்தினருக்கு அவர் எப்படி ஊழல் செய்துள்ளார் என்பது தெரியும். அவர்கள் அதை செய்வார்கள்" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் எனக்கு முன்னரே ராகுல் காந்தி சிறைக்கு செல்லாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் என ஹிமாந்தா பிஸ்வா சர்மா பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    ஒரு மாநிலத்திற்கு வந்து ஒருவரை சிறைக்கு அனுப்புவேன் அல்லது மாட்டேன் என்று சொல்வது ஒரு தேசியத் தலைவருக்குப் பொருந்தாது. நான் எவ்வளவு முக்கியமானவன் என்பதை இது நிரூபிக்கிறது. எனக்கு முன்னதாகவே ராகுல் காந்தி சிறைக்கு செல்லமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?.

    நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட பல குற்ற வழக்குகளில் தானும் ஜாமினில் வெளியே இருப்பதை காங்கிரஸ் தலைவர் (ராகுல் காந்தி) "வசதியாக மறந்துவிட்டார்.

    இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

    • ஹிமாந்தா மற்றும் அவரது குடும்பம் அவர்களுடைய ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
    • மோடி அல்லது அமித் ஷாவால் கூட அவரை காப்பாற்ற முடியாது.

    அசாம் மாநில முதல்வராக இருக்கும் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, தன்னை ராஜாவாக நினைத்துக் கொண்டிருக்கிறார். ஊழலுக்காக சிறைக்கு செல்வார் என காங்கிரஸ் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:-

    முதல்வர் தன்னை 'ராஜா' என்று நினைத்துக்கொண்டு உங்கள் செல்வத்தையும், நிலத்தையும் அதானி மற்றும் அம்பானிக்கு ஒப்படைப்பதில் 24 மணி நேரமும் மும்முரமாக இருக்கிறார். ஆனால் நீங்கள் அவரது குரலைக் கவனமாகக் கேட்டால், டிவியில் அவரது முகத்தை உற்றுப் பார்த்தால் பயம் அதிகமாக இருக்கும். பயப்படாத காங்கிரஸ் தொண்டர்கள், அவரை ஜெயிலில் வைப்பார்கள் என்பது ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுக்கு தெரியும்.

    ஹிமாந்தா மற்றும் அவரது குடும்பம் அவர்களுடைய ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டும். சிறைக்கு அவர் செல்வதை மீடியாக்கள் காட்டும். மோடி அல்லது அமித் ஷாவால் கூட அவரை காப்பாற்ற முடியாது.

    காங்கிரஸ் அதை செய்ய வேண்டியதில்லை. இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அனைத்து சமுதாயத்தினர் மற்றும் மதத்தினருக்கு அவர் எப்படி ஊழல் செய்துள்ளார் என்பது தெரியும். அவர்கள் அதை செய்வார்கள்.

    பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் இருந்து மகாராஷ்டிரா தேர்தலை திருடியது. பீகார் மீண்டும் அதை செய்ய முயற்சி செய்கிறார்கள். வடகிழக்கு மாநிலமான அசாமில் இதுபோன்ற எந்த முயற்சியும் நடப்பதை தடுக்க விழிப்புணர்வுடன் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இருக்க வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்க அரசியலமைப்புச் சட்டங்களிலிருந்து கடன் வாங்கப்பட்ட சொற்கள்
    • ஆர்எஸ்எஸ் மற்றும் நாட்டின் பிற அறிவுசார் தலைவர்கள் கோரியுள்ளனர்.

    இந்திய அரசியலமைப்பிலிருந்து சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை என்ற வார்த்தைகளை நீக்க இது ஒரு பொன்னான வாய்ப்பு என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார். 

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் 42வது திருத்தம் மூலம் இந்த இரண்டு வார்த்தைகளும் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறிய அவர் "ஐம்பது ஆண்டுகால அவசரநிலை இந்த ஆண்டு முடிவடைந்துவிட்டது.

    சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவை பிரிட்டிஷ் அல்லது அமெரிக்க அரசியலமைப்புச் சட்டங்களிலிருந்து கடன் வாங்கப்பட்ட சொற்கள். மற்ற நாடுகளைச் சார்ந்து இருக்காமல் பகவத் கீதையிலிருந்து நமது மதச்சார்பின்மையை நாம் எடுக்க வேண்டும்.

    ஆர்எஸ்எஸ் மற்றும் நாட்டின் பிற அறிவுசார் தலைவர்கள் இந்த வார்த்தைகளை அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். எனவே, இது அதற்கு ஒரு பொன்னான வாய்ப்பு" என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.

    முன்னதாக ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் இந்த இரண்டு வார்த்தைகளை அரசியலமைப்பு முகவுரையில் இருந்த நீக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • மத ரீதியிலான தூண்டுதல்கள் அதிகரித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    • மாட்டு இறைச்சி கடத்தல் மற்றும் வங்கதேச சக்திகளின் தூண்டுதல்களே இந்தப் பதட்டங்களுக்குக் காரணம்

    அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, துப்ரி மாவட்டத்தில் சமீபத்திய மதரீதியான பதற்றங்களை தொடர்ந்து, இரவில், கண்டதும் சுடும் (shoot-at-sight) உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

    அசாம் - வங்கதேச எல்லையை ஒட்டிய துப்ரியில் பக்ரீத் பண்டிகைக்குப் பிறகு, ஹனுமான் கோவில் அருகே மாட்டுத் தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மற்றும் கல் வீச்சு போன்ற மத ரீதியிலான தூண்டுதல்கள் அதிகரித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பிஸ்வா, "இரவில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், மாலை 6 மணிக்குப்பிறகு கண்டதும் சுடப்படுவார்கள்.

    சட்டம்-ஒழுங்கை மீட்டெடுக்க விரைவு அதிரடிப் படை (RAF) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) நிலைநிறுத்தப்படுகின்றன.

    குற்றவாளிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்படும். மாட்டு இறைச்சி கடத்தல் மற்றும் வங்கதேச சக்திகளின் தூண்டுதல்களே இந்தப் பதட்டங்களுக்குக் காரணம்" என்று தெரிவித்தார்.

    பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    • சண்டை நடந்து கொண்டிருந்தபோது இந்தியாவின் இழப்புகளைப் பற்றி ராகுல் காந்தி கேட்டார்.
    • எனினும், பாகிஸ்தான் இழப்பு குறித்து கேட்கவே இல்லை.

    பஹல்தாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றி தொடர்பாக அசாம் மாநில சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மனம் மீதான விவாதத்தின்போது அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா பேசினார்.

    அப்போது ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    வெளிநாட்டில் மண்ணில் இந்தியாவை மிகவும் தீர்க்கமாக நியாயப்படுத்திய காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக சசி தரூர் இந்திய நிலையை வலுவாக நியாயப்படுத்தினார். அவர் மட்டுமல்ல, அசாதுதீன் ஓவைசி, சுப்ரியா சுலோ போன்ற பிரதிநிதிகளும் இந்தியாவின் நிலையை நியாப்படுத்தினர்.

    அவர்கள் அனைவரும் இந்தியாவுக்காக நின்றனர். ஆனால், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவ்வாறு நிற்கவில்லை. அவர் நாட்டிற்கு துரோகம் இழைத்துவிட்டார். அவர் இந்தியப் படைகளுக்கு துரோகம் இழைத்துவிட்டார்.

    ராணுவ மோதலுக்குப் பிறகு ஏற்பட்ட இழப்புகளைப் பற்றி கேட்பது வேறு விஷயம். ஆனால் அது நடந்து கொண்டிருந்தபோது இந்தியாவின் இழப்புகளைப் பற்றி அவர் கேட்டார். எனினும், பாகிஸ்தான் இழப்பு குறித்து கேட்கவே இல்லை.

    இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கமாக எடுத்துக்கூற, எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை 33 நாடுகளுக்கு இந்திய அரசு அனுப்பி வைத்தது.

    • கவுரவ் கோகாய் குடும்பத்தில் ஒருவர் இந்தியர். மற்ற மூன்று பேர் (மனைவி மற்றும் குழந்தைகள்) வெளிநாட்டினர்.
    • சட்டசபை தேர்தலுக்கான போட்டி இந்தியா- பிரிட்டன் இடையே நடக்கும்.

    அசாம் மாநில முதல்வரான ஹிமாந்தா பிஸ்வா சர்மா, 2026 அசாம் சட்டமன்ற தேர்தல் இந்தியா- பிரிட்டன் இடையே நடக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் அசாம் மாநில தலைவராக கவுரவ் கோகாய் இருந்து வருகிறார். இவரது மனைவி பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜென்சியான ஐஎஸ்ஐ உடன், கவுரவ் கோகாய் மனைவிக்கு தொடர்பு இருந்ததாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா குற்றம்சாட்டி வருகிறார்.

    இந்த நிலையில்தான் 2026 சட்டமன்ற தேர்தல் இந்தியா- பிரிட்டன் இடையில் நடக்கும் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    கவுரவ் கோகாய் குடும்பத்தில் ஒருவர் இந்தியர். மற்ற மூன்று பேர் (மனைவி மற்றும் குழந்தைகள்) வெளிநாட்டினர். சட்டசபை தேர்தலுக்கான போட்டி இந்தியா- பிரிட்டன் இடையே நடக்கும். இது இந்தியா பெரியதா? அல்லது பிரிட்டன் பெரியதா? என்பதற்கானதாக இருக்கும்.

    இதற்கு முந்தைய காங்கிரஸ் தலைவர் பூபன் குமார் பொரோ இருந்திருந்தால், போட்டி இருந்திருக்கும். ஆனால் தற்போது போட்டியில்லை. செப்டம்பர் 10ஆம் தேதி இன்னும் ஏராளமான விசயங்கள் வெளிவரும்.

    இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கவுரவ் கோகாய் அங்கு போர் இருக்கும் (Juz Hobo) எனற முழக்கத்துடன் பணியை தொடங்கியுள்ளார். இந்த நிலையில்தான் ஹிமாந்தா பிஸ்வா சர்மா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.
    • இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இதற்கிடையே பாகிஸ்தானுடனான சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, இந்தியாவுக்கான பிரம்மபுத்திரா நதியை சீனா தடுக்க ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மூத்த உதவியாளர் ராணா இஹ்சான் அப்சல் தெரிவித்தார்.

    இதற்கு அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    காலாவதியான சிந்து நீர் ஒப்பந்தத்திலிருந்து இந்தியா தீர்க்கமாக விலகிய பிறகு, பாகிஸ்தான் இப்போது புதிய மிரட்டலை விடுத்துள்ளது. இந்தியாவிற்கு பிரம்மபுத்திராவின் தண்ணீரை சீனா நிறுத்தினால் என்ன செய்வது என்று அச்சுறுத்தி உள்ளது. பிரம்மபுத்திராவின் மொத்த ஓட்டத்தில் சீனா 30 முதல் 35 சதவீதம் மட்டுமே பங்களிக்கிறது. மீதமுள்ள 65 முதல் 70 சதவீதம் இந்தியாவிற்குள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    பிரம்மபுத்திரா நதி இந்தியா மேல் நீரோட்டத்தை சார்ந்துள்ளது. இது மழையால் இயங்கும் இந்திய நதி அமைப்பு. இந்திய எல்லைக்குள் நுழைந்த பிறகு பலப்படுத்தப்படுகிறது. சீனா நீர் ஓட்டத்தை குறைக்கும் சாத்தியம் இல்லை. ஒருவேளை நீர் ஓட்டத்தை சீனா குறைத்தாலும் உண்மையில் இந்தியாவுக்கு அசாமில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளத்தைத் தணிக்க உதவக்கூடும்" என்று கூறினார்.

    ×