என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Himanta Biswa Sarma"

    • நான் காங்கிரஸிலேயே நீடித்திருந்தால் எனக்கு என்ன கிடைத்திருக்குமோ, அதைவிட மிக அதிகமானவற்றை இறைவன் எனக்கு வழங்கியிருக்கிறார்.
    • 2014 ஆம் ஆண்டு தருண் கோகோய் அமைச்சரவையில் இருந்து ஹிமந்தா பிஸ்வா சர்மா ராஜினாமா செய்தார்.

    அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, 2014-ஆம் ஆண்டிலேயே தாம் முதலமைச்சராகப் பதவியேற்க வேண்டிய சூழல் இருந்ததாகவும், ஆனால் ராகுல் காந்தியின் தலையீட்டால் அப்போது நிலைமை தலைகீழாக மாறியதாகவும், அதனால் தான் அந்த பதவியை இழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    இன்று மாநில சட்டமன்றத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்தா சர்மா,

    "நான் இன்னும் மேடம் என அழைக்கும் அவர் (சோனியா காந்தி) என்னிடம் தேதியை முடிவு செய்யச் சொன்னார். ஜூன் (2014) மாதம் காமாக்யா கோயிலில் நடக்கும் அம்புபாச்சி மேளாவுக்கு அடுத்த நாள் நான் சத்தியப்பிரமாணம் செய்வேன் என்று அவரிடம் சொன்னேன்.

    ஆனால் அமெரிக்காவில் இருந்துவந்த ராகுல் காந்தியின் அழைப்பால் நிலைமை மாறியது. எனக்கு நீதி வழங்கப்படவில்லை, ஆனால் கார்கே எப்போதும் கட்சியில் உள்ள எனது எதிரிகளிடம்: 'நீங்கள் ஹிமந்தாவுடன் சண்டையிடுங்கள், ஆனால் அவரிடம் தான் எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள் என்று சொல்வார்.

    அப்போது நான் மனவேதனை அடைந்தேன், ஆனால் இப்போது ஒருவருடைய வாழ்க்கையில் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நான் நம்புகிறேன். நான் காங்கிரஸிலேயே நீடித்திருந்தால் எனக்கு என்ன கிடைத்திருக்குமோ, அதைவிட மிக அதிகமானவற்றை இறைவன் எனக்கு வழங்கியிருக்கிறார்.

    பாஜக முதலமைச்சராக, அசாம் மாநிலத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் முழுமனதுடன் சேவை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் காங்கிரஸில் இருந்திருந்தால் இது சாத்தியமாகி இருக்காது. இதற்காக நான் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவை அனைத்தும் உண்மைகள், இதற்கு பல சாட்சிகள் உள்ளனர். ஆனால், நடக்காமல் போனதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்; ஏனெனில் அது நடந்திருந்தால், நான் என்றென்றும் களங்கப்பட்டிருப்பேன்." என்று தெரிவித்துள்ளார்.

    2014-இல் அசாம் காங்கிரஸில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலின் போது, 58 எம்.எல்.ஏ.க்கள் ஹிமந்தா சர்மாவுக்கு ஆதரவு அளித்ததாகவும், ஒருசிலர் நடுநிலை வகித்ததாகவும், அதே நேரத்தில் 12 பேர் மட்டுமே தருண் கோகோயின் ஆட்சி தொடரவேண்டும் எனக் கூறியதாகவும் தெரிவித்தார். 

    2014 ஆம் ஆண்டு தருண் கோகோய் அமைச்சரவையில் இருந்து ஹிமந்தா பிஸ்வா சர்மா ராஜினாமா செய்தார். அடுத்த ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பின்னர் 2021-ல் அசாமின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • நீதிமன்றத்திற்கு வரும்போது நடுநிலையான மனுவுடன் வாருங்கள்.
    • நீதிமன்ற உத்தரவால் ஒருவரின் எண்ணங்களை மாற்றிவிட முடியுமா?

    நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுக்கு எதிராக 12 பேர் இணைந்து தாக்கல் செய்த பொதுநல மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி நாகரத்னா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு நேற்று விசாரித்தது.

    மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி, "நாட்டில் நிலவும் சூழல் மிகவும் நச்சுத்தன்மையுடன்மாறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தால் மட்டுமே இதனை சரிசெய்ய முடியும்" என்று வாதிட்டார்.

    இந்த மனுவில் பாஜகவைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத்(உ.பி), ஹிமந்த விஸ்வ சர்மா(அசாம்), தேவேந்திர பட்னாவிஸ்(மகாராஷ்டிரா), புஷ்கர் சிங் தாமி(உத்ராகண்ட்) உள்ளிட்ட சில முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், "வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபடும் மற்றவர்களை விட்டுவிட்டு, ஒரு குறிப்பிட்ட தரப்பை மட்டும் இலக்கு வைப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்புனார்.

    மேலும், நீதிமன்றத்திற்கு வரும்போது நடுநிலையான மனுவுடன் வாருங்கள். வெறுப்புப் பேச்சு என்பது அனைத்துத் தரப்பிலும் உள்ளது.

    வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டுமானால், அவை அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    வெறுப்புப் பேச்சு என்பது ஒருவரின் எண்ணத்திலிருந்து உருவாகிறது. நீதிமன்ற உத்தரவால் ஒருவரின் எண்ணங்களை மாற்றிவிட முடியுமா?" என்று நீதிபதி நாகரத்னா கேள்வி எழுப்பினார்.

    நீதிமன்றத்தின் விமர்சனத்தைத் தொடர்ந்து, மனுவில் உள்ள தனிநபர்களின் பெயர்களை நீக்கிவிட்டு, திருத்தப்பட்ட புதிய மனுவைத் தாக்கல் செய்ய வழக்கறிஞர் கபில் சிபல் ஒப்புக்கொண்டார். இதற்கு நீதிமன்றம் இரண்டு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.  

    • "அந்நியர்கள் இல்லாத அசாம்" மற்றும் "இரக்கமே காட்டமாட்டோம்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
    • விருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சுமார் 4 முதல் 5 லட்சம் முஸ்லிம் வாக்குகளை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப் போவதாகவும் அவர் சூளுரைத்தார்.

    அசாம் மாநிலத்தில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் அசாம் பாஜக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த இஸ்லாமிய வெறுப்பு வீடியோ கண்டனத்தை குவித்து வருகிறது.

    "Point Blank Shot" என்று தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், முதல்வர் பிஸ்வா கையில் ரைபிள் துப்பாக்கியை எடுத்து குறிபார்க்கிறார், அடுத்த காட்சியில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட குல்லாய், தாடி உள்ளிட்ட இஸ்லாமிய அடையாளம் கொண்ட இருவரின் மீது பிஸ்வாவின் துப்பாக்கி சுடுவதற்கு குறி வைக்கப்பட்டது பொன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

    வீடியோவின் பின்னணியில் "அந்நியர்கள் இல்லாத அசாம்" மற்றும் "இரக்கமே காட்டமாட்டோம்" போன்ற வாசகங்கள் ஆங்கிலத்திலும் அசாமி மொழியிலும் இடம்பெற்றுள்ளன.

    முதல்வர் பிஸ்வா அசாம் இஸ்லாமிய சமூகம் குறித்து தொடர்ந்து கடுமையான கருத்துக்களை கூறியும், நடவடிக்கை எடுத்தும் வரும் சூழலில் இந்த வீடியோ கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த வீடியோ வெறுப்பைத் தூண்டும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அசாம் பாஜக அந்தப் பதிவை நீக்கியது.

    அசாம் காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகாய், ஹிமாந்தா பிஸ்வா சர்மாவின் குடும்பத்தினர் அசாம் முழுவதும் சுமார் சுமார் 4,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும் இந்த நில மோசடி புகாரிலிருந்து திசைதிருப்பவே பிஸ்வா இத்தகைய வகுப்புவாதக் கருத்துகளைப் பரப்புவதாகவும் தெரிவித்தார்.

    அண்மையில் பொதுநிகழ்வு ஒன்றில் பேசிய பிஸ்வா, பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்களான மியாக்களை தொந்தரவு செய்வதன் மூலமே அசாமிலிருந்து அவர்களை வெளியேற்ற முடியும்.

    ஒரு ரிக்ஷா ஓட்டுநர் 'மியா' முஸ்லிமாக இருந்தால், ரூ.5 கட்டணத்திற்கு ரூ.4 மட்டும் கொடுங்கள். அவர்களுக்குத் தொல்லை கொடுத்தால் மட்டுமே அவர்கள் அசாமிலிருந்து வெளியேறுவார்கள்" என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தார்.

    மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சுமார் 4 முதல் 5 லட்சம் முஸ்லிம் வாக்குகளை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப் போவதாகவும் அவர் சூளுரைத்தார். 

    • அசாம் பா.ஜ.க முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
    • மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவரது வருகை நடைபெற்றது.

    அசாமை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.கருண் கோகாய் இவரது மனைவி எலிசபெத். இவருக்கும் பாகிஸ்தான் ஏஜெண்டு அலிதவுகீர் ஷேக்குக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க ஏற்கனவே குற்றம்சாட்டியது.

    இந்தநிலையில் தருண் கோகாய் மனைவியுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தான் ஏஜெண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 13 முறை இந்தியா வந்ததாக அசாம் பா.ஜ.க முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகிஸ்தானை சேர்ந்த அலிதவுகீர் ஷேக் சுற்றுச் சூழல் ஆர்வலர் அல்ல. அவர் சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

    2010 முதல் 2013 வரை காங்கிரஸ் ஆட்சியின்போது அலிதவுகீர் 13 முறை இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்பட்டார். அவர் அனைத்து கூட்டங்களிலும் இந்தியாவை விமர்சித்தார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவரது வருகை நடைபெற்றது.

    மேலும், தருண் கோகாய் மனைவி எலிசபெத்தும் இந்தியாவின் அதிகார மையத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அனைத்து விசாக்களும் காங்கிரஸ் ஆட்சியின்போது வழங்கப்பட்டன.

    பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அவர் இந்தியாவுக்கு வருவதை நிறுத்திவிட்டார். அவர் இந்தியா வந்தபோது பாகிஸ்தான் அதிகாரிகளையும் தன்னுடன் அழைத்து வந்தார்.

    காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், எம்.பி.யும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கும்போது இந்தக் குற்றச்சாட்டு மேலும் தீவிரமாகிறது. அசாம் புலனாய்வு குழு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த விவகாரத்தை மத்திய அரசு நிறுவனம் விசாரிக்க வேண்டும் என்று மாநில அரசு கருதுகிறது. இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

    மத்திய அரசிடம் சாதகமான பதில் வந்தவுடன் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முன்னதாக இந்த எண்ணிக்கை 90 ஆக இருந்தது.
    • தொகுதி வரையறைக்குப் பின் எண்ணிக்கை 13 முதல் 15 வரை அதிகரித்துள்ளது.

    தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலத்துடன் பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் 126 இடங்களில் பாஜக கூட்டணி 103 இடங்களை பிடிக்கும் என அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூகையில் "இந்த நேரத்தில் பாஜக கூட்டணி 103 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. முன்னதாக இந்த எண்ணிக்கை 90 ஆக இருந்தது. தொகுதி வரையறைக்குப் பின் எண்ணிக்கை 13 முதல் 15 வரை அதிகரித்துள்ளது.

    நாங்கள் நூறு சதவீத இடங்களை வெல்கிறோமா, 90 அல்லது 80 சதவீத இடங்களுக்குள் சுருங்கிவிடுகிறோமா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்.

    இவ்வாறு ஹிமாந்தா சர்மா தெரிவித்துள்ளார்.

    அசாம் மாநிலத்தில் தொகுதி வரையறை 2023-ல் முடிவடைந்தது. மக்களவை மற்றும் சட்டசபை இடங்களின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டன. ஆனால், எண்ணிக்கையில் எந்த பாதிப்பும் இல்லை. 

    • அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்தார்.
    • சுபின் கார்கின் இசைக்குழு உறுப்பினர் சேகர் ஜோதி கோஸ்வாமி மற்றும் சக பாடகர் அமிர்தபர்வ மஹந்தா உட்பட நான்கு பேரை அசாம் போலீசார் கைது செய்தனர்.

    அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த சுபீன் கார்க்.

    கடந்த செப்டம்பர் 19 அன்று சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் செய்யும்போது சுபின் உயிரிழந்தார். இருப்பினும் அவரின் இறப்பில் மர்மம் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக விசாரணை செய்ய அசாம் அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக சுபின் கார்கின் இசைக்குழு உறுப்பினர் சேகர் ஜோதி கோஸ்வாமி மற்றும் சக பாடகர் அமிர்தபர்வ மஹந்தா உட்பட நான்கு பேரை அசாம் போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே ஜூபீன் கார்க்கின் மரணம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி சட்டமன்றத்தில் தீர்மானத்தை தாக்கல் செய்தது.

    அப்போது பேசிய அசாமில் ஆளும் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இது ஒரு தற்செயலான சம்பவம் அல்ல, மாறாக ஒரு கொலை என்று தெரிவித்துள்ளார்.

    ஆனால் சுபின் கார்க் மரணத்தில் சந்தேகம் இல்லை என சிங்கப்பூர் காவல்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 33 ஆயிரம் நியாய விலைக்கடைகளில் இந்த திட்டம் தொடங்கியது.
    • 2.45 கோடி பேர் இந்த திட்டத்தால் பயனடைவர்.

    மானிய விலையில் பருப்பு, சர்க்கரை, உப்பு வழங்கும் திட்டத்தை அசாம் மாநில அரசு இன்று தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் "மைசூர் பருப்பு ஒரு கிலோ 68 ரூபாய், சர்க்கரை ஒரு கிலோ 38 ரூபாய், உப்பு ஒரு கிலோ 10 ரூபாய். இது சாத்தியமா? ஆம். அசாமில் இது சாத்தியம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், "இந்த விலை ஜனவரி மாதத்தில் இருந்து மேலும் குறையும் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்தியோதயா என்பது எங்களுடைய இலக்கு. நோக்கம். ரேசன் கார்டு வைத்திருப்பவர்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்காக நாங்கள் புதிய அளவு கோலை உருவாக்கியுள்ளோம். 100 ரூபாய்க்கு ஒரு கிலோ பருப்பு, சர்க்கரை, உப்பு கிடைக்கும். இவைகள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    33 ஆயிரம் நியாய விலைக்கடையில் இந்த திட்டம் தொடங்கியது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள் இந்த தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 2.45 கோடி பேர் இந்த திட்டத்தால் பயனடைவர் என அரசு தெரிவித்துள்ளது.

    நவம்பர், டிசம்பர் மாதத்தில் ஒரு கிலோ மைசூர் பருப்பு ரூபாய் 69-க்கும், சர்க்கரை ரூபாய் 38-க்கும், உப்பு ரூபாய் 10-க்கும் வாங்கிக் கொள்ள முடியும். ஜனவரி மாதத்தில் இருந்து ஒரு கிலோ மைசூர் பருப்பு ரூபாய் 60-க்கும், சர்க்கரை ரூபாய் 30-க்கும், உப்பு ரூபாய் 10-க்கும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சமாதியில் பிரார்த்தனை செய்தாலும் அமைதி இருக்காது.
    • சட்டவிரோத மியாக்கள் நான் முதல்வராக இருக்கும்வரை பதற்றத்தை கொண்டிருக்க வேண்டும்.

    அசாம் மாநில முதல்வராக இருக்கும் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, மாநிலம் முழுவதும் ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தும் பணி தொடரும், நான் முதல்வராக இருக்கும் வரை மியாக்கள் நிம்மதியாக இருக்க முடியாது.

    இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில் "வெளியேற்றுதல் தொடரும். இன்று கூட பிஸ்வானாத் மாவட்டத்தில் உள்ள பெஹாலி பகுதியில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நான் முதல்வராக இருக்கும் வரை, சட்டவிரோத மியாக்கள் அமைதியாக இருக்க முடியாது.

    சமாதியில் பிரார்த்தனை செய்தாலும் அமைதி இருக்காது. சட்டவிரோத மியாக்கள் நான் முதல்வராக இருக்கும்வரை பதற்றத்தில் இருக்க வேண்டும். நான் அங்கு இல்லையென்றால், அது வேறு விஷயம்.

    நவம்பர் 25ஆம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரின்போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்வது தடை என்ற புதிய சட்டசம் கொண்டு வரப்பட இருக்கிறது. யாராவது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தால் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும்" என்றார்.

    மியா என்பது அசாமில் பெங்கால் மொழி பேசும் முஸ்லிம்களை அழைக்கும் இழிவான சொல். பெங்காலி பேசாத முஸ்லிம்கள் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியர்கள் என பொதுவாக அடையாளம் காணப்படுகின்றன.

    • கர்நாடக மாநிலங்களுக்கு வரும் முதலீடுகளை குஜராத், அசாமுக்கு திருப்புவதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு.
    • செமிகண்டக்டர் போன்ற பெரிய நிறுவனங்களை அமைப்பதற்கான திறன் இல்லை என பிரியங்க் கார்கே கூறியதாக குற்றச்சாட்டு.

    கர்நாடக மாநில அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகனுமான பிரியங்க் கார்கே செய்தி சேனலில், கர்நாடகாவில் முதலீடு செய்ய இருந்த நிறுவனங்கள் குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக மத்திய அரசு மீது குற்றம்சாட்டினார்.

    அப்போது, செமிகண்டக்கர் உற்பத்தி போன்ற பெரிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான திறன் வடகிழக்கு மாநிலங்களில் இல்லை எனக் கூறியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், பிரியங்க் கார்கே மீது வழக்கு தொடர இருப்பதாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில் "பிரியங்க் கார்கே முதல் தர முட்டாள். அசாம் இளைஞர்களை அவர் இழிவுப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சி இதுவரை அவருக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

    அசாம் மக்களுக்கு கல்வி அறிவு இல்லை. போட்டியான இளைஞர்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இது அசாம் இளைஞர்களை இழிவுப்படுத்துவதாகும். இதனால் அவர் மீது வழக்கு தொடர்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    • அசாமில் கடந்த பத்தாண்டுகளாக முஸ்லிம் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது.
    • வரும் 2041-ல் முஸ்லிம்கள் எண்ணிக்கை 50 சதவீதத்தை தொட்டு விடும் என தெரிவித்தார்.

    கவுகாத்தி:

    அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா சமீபத்தில் பேசுகையில், மக்கள்தொகையை மாற்றுவது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. அசாமில் முஸ்லிம் மக்கள்தொகை என்பது 40 சதவீதமாக உள்ளது. 1951-ல் 12 சதவீதமாக இருந்த முஸ்லிம் மக்கள் எண்ணிக்கை தற்போது 28 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் தேர்தலில் பல மாவட்டங்களை இழந்துள்ளோம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அசாமில் முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது அதிகரித்து வரும் மக்கள்தொகையின்படி பார்த்தால் வரும் 2041-ம் ஆண்டில் முஸ்லிம்கள் எண்ணிக்கை இந்துக்களின் எண்ணிக்கைக்கு சமமாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. முஸ்லிம்கள் எண்ணிக்கை 50 சதவீதத்தை தொட்டு விடும் என தெரிவித்தார்.

    • ஹிமாந்தா மற்றும் அவரது குடும்பம் அவர்களுடைய ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
    • சிறைக்கு அவர் செல்வதை மீடியாக்கள் காட்டும் என ராகுல் காந்தி கூறியிருந்தார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும், இந்திய பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி "அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தன்னை 'ராஜா' என்று நினைத்துக்கொண்டு உங்கள் செல்வத்தையும், நிலத்தையும் அதானி மற்றும் அம்பானிக்கு ஒப்படைப்பதில் 24 மணி நேரமும் மும்முரமாக இருக்கிறார்.

    ஆனால் நீங்கள் அவரது குரலைக் கவனமாகக் கேட்டால், டிவியில் அவரது முகத்தை உற்றுப் பார்த்தால் பயம் அதிகமாக இருக்கும். பயப்படாத காங்கிரஸ் தொண்டர்கள், அவரை ஜெயிலில் வைப்பார்கள் என்பது ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுக்கு தெரியும்.

    ஹிமாந்தா மற்றும் அவரது குடும்பம் அவர்களுடைய ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டும். சிறைக்கு அவர் செல்வதை மீடியாக்கள் காட்டும். மோடி அல்லது அமித் ஷாவால் கூட அவரை காப்பாற்ற முடியாது. காங்கிரஸ் அதை செய்ய வேண்டியதில்லை. இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அனைத்து சமுதாயத்தினர் மற்றும் மதத்தினருக்கு அவர் எப்படி ஊழல் செய்துள்ளார் என்பது தெரியும். அவர்கள் அதை செய்வார்கள்" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் எனக்கு முன்னரே ராகுல் காந்தி சிறைக்கு செல்லாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் என ஹிமாந்தா பிஸ்வா சர்மா பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    ஒரு மாநிலத்திற்கு வந்து ஒருவரை சிறைக்கு அனுப்புவேன் அல்லது மாட்டேன் என்று சொல்வது ஒரு தேசியத் தலைவருக்குப் பொருந்தாது. நான் எவ்வளவு முக்கியமானவன் என்பதை இது நிரூபிக்கிறது. எனக்கு முன்னதாகவே ராகுல் காந்தி சிறைக்கு செல்லமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?.

    நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட பல குற்ற வழக்குகளில் தானும் ஜாமினில் வெளியே இருப்பதை காங்கிரஸ் தலைவர் (ராகுல் காந்தி) "வசதியாக மறந்துவிட்டார்.

    இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

    • ஹிமாந்தா மற்றும் அவரது குடும்பம் அவர்களுடைய ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
    • மோடி அல்லது அமித் ஷாவால் கூட அவரை காப்பாற்ற முடியாது.

    அசாம் மாநில முதல்வராக இருக்கும் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, தன்னை ராஜாவாக நினைத்துக் கொண்டிருக்கிறார். ஊழலுக்காக சிறைக்கு செல்வார் என காங்கிரஸ் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:-

    முதல்வர் தன்னை 'ராஜா' என்று நினைத்துக்கொண்டு உங்கள் செல்வத்தையும், நிலத்தையும் அதானி மற்றும் அம்பானிக்கு ஒப்படைப்பதில் 24 மணி நேரமும் மும்முரமாக இருக்கிறார். ஆனால் நீங்கள் அவரது குரலைக் கவனமாகக் கேட்டால், டிவியில் அவரது முகத்தை உற்றுப் பார்த்தால் பயம் அதிகமாக இருக்கும். பயப்படாத காங்கிரஸ் தொண்டர்கள், அவரை ஜெயிலில் வைப்பார்கள் என்பது ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுக்கு தெரியும்.

    ஹிமாந்தா மற்றும் அவரது குடும்பம் அவர்களுடைய ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டும். சிறைக்கு அவர் செல்வதை மீடியாக்கள் காட்டும். மோடி அல்லது அமித் ஷாவால் கூட அவரை காப்பாற்ற முடியாது.

    காங்கிரஸ் அதை செய்ய வேண்டியதில்லை. இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அனைத்து சமுதாயத்தினர் மற்றும் மதத்தினருக்கு அவர் எப்படி ஊழல் செய்துள்ளார் என்பது தெரியும். அவர்கள் அதை செய்வார்கள்.

    பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் இருந்து மகாராஷ்டிரா தேர்தலை திருடியது. பீகார் மீண்டும் அதை செய்ய முயற்சி செய்கிறார்கள். வடகிழக்கு மாநிலமான அசாமில் இதுபோன்ற எந்த முயற்சியும் நடப்பதை தடுக்க விழிப்புணர்வுடன் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இருக்க வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    ×