search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muslims"

    • மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அறிவித்தார்.

    இதற்கிடையே கோவை- சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி-வேர் கிளம்பி பகுதிகளில் பிறை தெரிந்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அறிவிக்கப்பட்டது.

    அந்த வகையில், தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில், "ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த சந்தர்ப்பம் இரக்கம், ஒற்றுமை மற்றும் அமைதியின் உணர்வை மேலும் பரப்பட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கட்டும். ரமலான்! " என குறிப்பிட்டுள்ளார்.

    • அபித் ஹசன் என்ற முஸ்லிம்தான் 'ஜெய் ஹிந்த்' கோஷத்தை முதலில் எழுப்பினார்
    • நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதில் முஸ்லிம்களுக்கும் பெரும் பங்குண்டு

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட 4-வது கண்டன பொதுக்கூட்டம் மலப்புரத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், "நாட்டின் வரலாறு மற்றும் சுதந்திர இயக்கத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் முக்கிய பங்கை ஆற்றியுள்ளனர்.

    இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சில சங்பரிவார் தலைவர்கள், எதிரில் அமர்ந்திருந்தவர்களிடம், 'பாரத மாதா கி ஜே' கோஷம் எழுப்பும்படி கூறினர். ஆனால், அந்த முழக்கத்தை உருவாக்கியவர் யார்? அவர் பெயர் அஜிமுல்லா கான் என்பது சங் பரிவார்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.

    இந்த முழக்கத்தை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம் என்பதால் அவர்கள் அதை பயன்படுத்துவதை நிறுத்துவார்களா என்பது எனக்கு தெரியாது. அதேபோல் அபித் ஹசன் என்ற முஸ்லிம்தான் 'ஜெய் ஹிந்த்' முழக்கத்தை முதலில் எழுப்பினார்.

    முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மகன் தாரா ஷிகோ என்பவர்தான் 50-க்கும் மேற்பட்ட உபநிஷதங்களை சமஸ்கிருதத்தில் இருந்து பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார். இந்திய படைப்புகள் உலகின் பல பகுதிகளுக்கும் செல்ல உதவியாக அவர் இருந்தவர்.

    இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று கூறும் சங்பரிவார் தலைவர்கள், இத்தகைய வரலாறுகளை அறிய வேண்டும். நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதில் முஸ்லிம்களுக்கும் பெரும் பங்குண்டு" என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

    • ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள்.
    • ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    பிறை தெரிந்ததை தொடர்ந்து, இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியதாக தலைமை காஜி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள்.

    ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்தநிலையில், இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட ரம்ஜான் வாழ்த்துக்கள். இந்த புனித மாதம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும் கொண்டு வரட்டும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி ராம குருவாயூரப்பன் நகரில் மகா கணபதி திருக்கோவில் கட்டப்பட்டு வந்தது.
    • இஸ்லாமிய மக்கள் மகாகணபதி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூ, பழம், இனிப்புகள் உள்ளிட்ட சீர் வரிசைகள் அடங்கிய தட்டுக்களுடன் ஊர்வலமாக வந்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி ராம குருவாயூரப்பன் நகரில் மகா கணபதி திருக்கோவில் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் திருப்பணிகள் முடிவுற்று இன்று காலை மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

    இந்த நிலையில் அங்கு வசிக்கும் இஸ்லாமிய மக்கள் மகாகணபதி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூ, பழம், இனிப்புகள் உள்ளிட்ட சீர் வரிசைகள் அடங்கிய தட்டுக்களுடன் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலமாக வந்த இஸ்லாமிய மக்களை மகாகணபதி கோவில் முன்பு அவர்களை வரவேற்று பெண்கள் ஆரத்தி எடுத்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

    மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அங்கிருந்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது :- பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். இந்து கோவில்களின் திருவிழாவின் போது இஸ்லாமியர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதும், அதேபோல் இஸ்லாமியர்களின் மசூதி திறப்பு விழா மற்றும் பெரு நாட்களுக்கு இந்துக்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதும் பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது.

    மதங்களை கடந்து மனித நேயத்தை தொடர்ந்து போற்றி வருகின்றோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தஞ்சை இர்வீன்பாலம் அருகே உள்ள ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.

    தஞ்சாவூர்:

    இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.

    அதன்படி இன்று உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    தஞ்சை கீழவாசல் அறிஞர் அண்ணா மண்டப வளாகத்தில் இன்று காலை பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    தொழுகை முடிந்த பின்னர் ஒருவருக்கொ ருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    இதேபோல் தஞ்சை இர்வீன்பாலம் அருகே உள்ள ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.

    இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

    பின்னர் அவர்கள் அனைவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

    இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றன.

    பின்னர் இஸ்லாமியர்கள் பலர், தங்கள் வீடுகளில் ஆடுகளை குர்பானி கொடுத்து அவற்றை 3 சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்து விட்டு 3-வது பங்கை தங்கள் தேவை களுக்கு பயன்படுத்தினர்.

    மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கும் உணவு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    • பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
    • ஆடுகளை பலியிட்டு இறைச்சியை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து கொண்டாடினர்.

    கும்பகோணம்:

    தியாகத்திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் மற்றும் சிறப்பு திடலில்  அதிகாலை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    கும்பகோணம், மேலக்காவேரி, திருப்பனந்தாள், தத்துவாஞ்சேரி, கோணுளாம்பள்ளம், கருப்பூர், செறுகடம்பூர், சிக்கல் நாயக்கன்பேட்டை, திருலோகி,கதிராமங்கலம், சோழபுரம், திருமங்கலக்குடி, ஆடுதுறை, அவனியாபுரம் என  பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

    இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

    ஆடுகளை பலியிட்டு இறைச்சியை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து கொண்டாடினர்.

    இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர், சிறுமியர்களும்  அதிகாலை முதலே  திடலில் குவிந்தனர்.

    சரியாக 7.00 மணியளவில் பெருநாள் தொழுகையை நடத்திய இமாம்கள் ஆற்றிய உரையில் இறை நம்பிக்கை மனிதனை நல்லவனாக ஆக்குவதற்கு உதவியாக இருக்கின்றது.

    இறை தூதர்கள் உலகில் இறைவனுடைய இறை பணிகளை நடைமுறை படுத்துவதற்காகவே இறைவன் அனுப்பினான் இதில் முக்கிய பங்கு ஆற்றியவர்களில் இப்ராஹிம் நபி அவர் தன் மகன் இஸ்மாயிலை இறைவனுக்காக அறுத்து பலியிட முயன்ற போது இறைவனுக்கு மனிதர்களை நரபலி கொடுப்பது கூடாது என்பதற்காக அதற்கு பரிகாரமாக இஸ்லாமியர்கள் கால்நடை போன்ற  பிராணிகளை அறுத்து  இறைவனுக்காக குர்பானி என பலியிடுகின்றார்கள் என்றார்.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.

    • திருவாருர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் நடுத்தெரு திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    • ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் ஒரே இடத்தில் தொழுகை செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாருர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நாச்சிகுளம் நடுத்தெரு திடலில் நாச்சிகுளம் கிளை செயலாளர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.

    ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் ஒரே இடத்தில் தொழுகை செய்தனர்.

    அதே தொடர்ந்து

    நாச்சிகுளம் தவ்ஹீத் பள்ளி இமாம் முகமது தெளபிக் ஹஜ் பெருநாள் குறித்து உரை நிகழ்த்தினார்.

    அதன் பின் ஒருவொரை ஒருவர் கட்டி அனைத்து வாழ்த்துகளை பரிமாரிக் கொண்டனர்.

    இதில் மாவட்ட பொருளாளர் ஹாஜா முகைதீன் மாவட்ட துனை தலைவர் அஸாருதீன் கிளை பொருளாளர் கமருதீன் கிளை துனை தலைவர் செய்யது அபுபக்கர் கிளை துனை செயலாளர் மைதீன் கல்பான் அமீரக பொறுப்பாளர் மூசா மீரான் சாதிக் பாட்சா என 500க்கும் மேற்பட்டோர் இச்சிறப்பு தொழுகையில் கலந்துக் கொண்டனர்.

    • தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் இமாம் அப்துல் ஆலிம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் உலகம் முழுவதும் கொரோனா பேரழிவு உள்ளிட்ட பெரும் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்க வேண்டும்.
    • இதில் மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரஹ்மான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    தூத்துக்குடி:

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் இன்று இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    மாநகரில் சிதம்பரநகர் வி.வி.டி. சிக்னல் அருகே ஈத்கா தோட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட ஜமாத்துகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழு கையில் ஈடுபட்டனர். தூத்து க்குடி ஜாமியா பள்ளிவாசலில் இமாம் அப்துல் ஆலிம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் உலகம் முழுவதும் கொரோனா பேரழிவு உள்ளிட்ட பெரும் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்க வேண்டும். போர் உள்ளிட்டவை நீங்கி மனிதநேயம் உலகம் முழு வதும் தழைக்க வேண்டும். மேலும் அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரஹ்மான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    • மெக்காவில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்கள் திரண்டு வழிபாடு நடத்துவார்கள்.
    • மினா சதுக்கத்தில் உள்ள மசூதியில் விடிய விடிய தொழுகையில் ஈடுபட்டனர்.

    மெக்கா:

    முஸ்லிம்களின் முக்கிய விழாக்களில் பக்ரீத் பண்டிகையும் ஒன்று. இந்த நாளில் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் திரண்டு வழிபாடு நடத்துவார்கள்.

    இதற்காக மெக்கா செல்லும் அவர்கள் அங்கு கூடாரம் அமைத்து தங்கி இருப்பார்கள். இந்த ஆண்டுக்கான பக்ரீத் வழிபாடுகள் மெக்காவில் இன்று தொடங்கியது. இதற்காக நேற்றே அங்கு சென்ற முஸ்லீம்கள், அங்குள்ள மினா சதுக்கத்தில் உள்ள மசூதியில் விடிய விடிய தொழுகையில் ஈடுபட்டனர். நாளை அங்கு நடக்கும் அரபா சங்கமத்தில் பங்கேற்கிறார்கள்.

    இந்த ஆண்டு இந்தியா உள்பட வெளிநாடுகளில் இருந்து சுமார் 18 லட்சம் முஸ்லீம்கள் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • இஸ்லாமிய மக்கள் ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் சமம் என்பதை உணர்த்தும் விதமாக “சமத்துவ விருந்து” வழங்கி அசத்தியுள்ளனர்.
    • விருந்தில் கலந்து கொண்ட இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உணவருந்தியப்பின் ஒன்றாக கூடி அமர்ந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் உள்ள இஸ்லா மிய மக்கள் ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் சமம் என்பதை உணர்த்தும் விதமாக "சமத்துவ விருந்து" வழங்கி அசத்தி யுள்ளனர். இந்த சமத்துவ விருந்தில் அரியநாயகிபுரம் கிராம மக்கள் மட்டுமில்லா மல் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் உட்பட பலர் கலந்து கொண்டு சமத்துவ விருந்தில் வழங்கப்பட்ட சுவையான அசைவ விருந்தை ஒன்றாக கூடி அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். மேலும் விருந்தில் கலந்து கொண்ட இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உணவருந்தியப் பின் ஒன்றாக கூடி அமர்ந்து பழைய நினைவுகளை சுவைத்து அன்பையும், பாசத்தையும் பகிர்ந்து கொண்டனர்.

    மேலும், அரியநாயகிபுரம் கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் கந்தூரி திருவிழா ஆண்டுக்கு ஒரு முறை இக்கிராமத்தில் 3 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இத்திருவிழாவில் இக்கிராமத்தில் இருந்து வெளியூர், வெளிநாடு என பணி மற்றும் தொழில் ரீதியாக சென்றிருந்தவர்கள் கூட தவறாமல் கலந்து கொண்டு சொந்த பந்தங்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்க படை யெடுத்து வந்துள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில் விளாத்தி குளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன், திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் அன்வர் அலி, அரசு பதிவு பெற்ற பொறியாளர் முகமது இக்பால், அரியநாயகிபுரம் சுன்னத் ஜமாஅத் (சென் னை) தலைவர் நாகூர் பிச்சை, அரிய நாயகிபுரம் சுன்னத் ஜமாஅத் தலைவா் முகமது இப்ராஹிம், அரிய நாயகிபுரம் பஞ்சாயத்து தலைவர் மாாியம்மாள், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் வரிசை முகமது, ஜாகிர் உசேன், விளாத்திகுளம் தி.மு.க. ஒன்றிய செய லாளர்கள் சின்னமாரிமுத்து, ராமசுப்பு, பொதுக்குழு உறுப்பினர் ராஜாகண்ணு, நகர செயலாளா் வேலுச் சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், முத்தையா புரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம், முன்னாள் ராணுவ வீரர் மாரிமுத்து, சமூக வலைதள பொறு ப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

    • பெரும்பாலான பள்ளிவாசல்களில் காலை 8 மணி வரையிலும் சிறப்பு தொழுகை நடந்தது.
    • மேலப்பாளையத்தில் பஜார் திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    நெல்லை:

    ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகைக்காக இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    20 இடங்களில் தொழுகை

    நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்தே பள்ளிவாசல்களில் திரளான இஸ்லாமியர்கள் திரண்டனர். பெரும்பாலான பள்ளிவாசல்களில் காலை 8 மணி வரையிலும் சிறப்பு தொழுகை நடந்தது. நெல்லை மாநகரப் பகுதியில் மட்டும் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகை நடைபெற்றது. மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடந்த தொழுகையில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    தொடர்ந்து அவர் ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார். அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.மேலப்பாளையம் விரிவாக்க பகுதி கரீம் நகர் மஸ்ஜித் ஹுதா பள்ளி வாசல் சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை மதீனா சி.பி.எஸ்.இ. பள்ளி திடலில் நடைபெற்றது.

    பள்ளி வாசல் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி பெருநாள் உரை ஆற்றினார்.இதில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு, பசித்தோருக்கு உணவ ளியுங்கள், நோயுற்றவரை நலம் விசாரியுங்கள், நலிவடைந்தவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள் என்று இஸ்லாம் எடுத்துரைத்துள்ள சகோ தரத்துவத்தை நம் வாழ்வில் உறுதியாக பற்றி பிடித்திடுவோம்.

    புத்தாடை அணிந்து, அறுசுவை உணவுகளை உட்கொண்டு, உற்றார் உறவுகளுடன் இன்பமுடன் இந்நாளில் மகிழ்வது போல், வாழ்நாள் முழுவதும் மகிழ்வுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம் என்று தெரிவித்தார்.

    இந்த தொழுகையில் பள்ளிவாசல் நிர்வாகிகள் முஸ்தபா ஜாபர் அலி , ஜவஹர், தாவுத் ஹாஜியார்,முஸ்தபா, ஜெய்னுல் ஆபிதீன்,கட்சி நிர்வாகிகள் கனி, லெப்பை, கல்வத், சலீம் தீன், சிந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள், குழந்தைகள் பங்கேற்றனர்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்நெல்லை மேலப்பாளையம் ஈத்கா திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர். மேலப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    தமிழ்நாடு முஸ்ஸிம் முன்னேற்றம் கழகம் சார்பில் மேலப்பாளையத்தில் பஜார் திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    மாவட்டத்தில் திசையன்விளை, ராதாபுரம், ஏர்வாடி, பத்தமடை உள்பட ஏராளமான இடங்களில் திறந்த வெளிகளிலும், பள்ளி வாசல்களிலும் காலையில் தொழுகை நடத்தப்பட்டது. பின்னர் ஒருவரை யொருவர் கட்டித்தழுவி தங்களது அன்பை பரிமா றிக்கொண்டனர். மேலும் அன்பு, கருணை, சகோதரத்துவம் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று அவர்கள் தங்களது வாழ்த்து க்களை தெரிவித்துக் கொண்டனர்.

    • தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 30 பள்ளிவாசல்கள் மற்றும் பெண்கள் வழிபடும் தைக்காகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    • தொழுகையில் செயலாளர் மக்கின், முன்னாள் மாவட்ட தலைவர் சம்சுதீன் மற்றும் பெண்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி :

    ரம்ஜான் பண்டிகையை யொட்டி தூத்துக்குடி, தென்காசி, மாவட்டங்களில் இன்று காலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 30 பள்ளிவாசல்கள் மற்றும் பெண்கள் வழிபடும் தைக்காகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பங்கேற்ற இஸ்லாமிய பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து க்களை பரிமாறிக்கொண்டனர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை சார்பில் நிர்வாகி சாகுல் ஹமீது தலைமையில் கடற்கரையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகையில் செயலாளர் மக்கின், முன்னாள் மாவட்ட தலைவர் சம்சுதீன் மற்றும் பெண்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் காயல்பட்டினம் ஜெய்லானி நகர் ஷாகின்பாக் திடலிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இங்கு தேசிய தவ்ஹீத் கூட்டமைப்புடன் இணைந்த காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவையின் சார்பில் ஹசனா லெப்பை தொழுகை நடத்தினார். அப்துல் பாசித் குத்பா உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் அமைப்பின் நகர தலைவர் ஜாபர் சாதிக், செயலாளர் முகம்மது இத்ரிஸ், பொருளாளர் ரைய்யான் சாகுல் ஹமீது உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இன்று மாலை காயல்பட்டினம் கடற்கரை பூங்காவில் இஸ்லாமிய மக்கள் குடும்பத்துடன் கூடி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வர்.

    உடன்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள திடலில் தலைவர் தவுலத்துல்லா, செயலாளர் குத்புதீன், பொருளாளர் அர்சிக் ரகுமான், துனைத்தலைவர் இப்ராகிம் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். மேலும் சிதம்பர தெரு, பெரிய தெரு, புதுமனை தெரு, முகைதீன் புதுத்தெரு, சுல்தான்புரத்தில் தொழுகை நடைபெற்றது.

    தூத்துக்குடி மாநகரில் முத்தையாபுரம், திரேஸ்புரம், தாளமுத்துநகர் உள்ளிட்ட இடங்களிலும், விவிடி சிக்னல் அருகே தனியார் பள்ளியிலும் தொழுகை நடந்தது. கயத்தாறில் ஜூம்மா நயினார் பள்ளிவாசல் சார்பில் பேரணியாக சென்று ஈத்கா திடலில் திரண்டு ஜமாத் தலைவர் பீர் மைதீன் தலைமையில் தொழுகை நடத்தினர். இதில் 870 பேர் கலந்து கொண்டனர். செய்துங்கநல்லூர் பழைய பள்ளிவாசலில் 500-க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பேச்சாளர் சுலைமான் தலைமையில் தொழுகையில் ஈடுபட்டனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் 4 இடங்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல் முன்பு பஜார் சாலையில் ஜமாஅத் தலைவர் மவ்லவி ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி தொழுகை நடத்தி மக்களுக்கு குத்பா பிரசங்கம் செய்தார் . இது போல் கலந்தர் மஸ்தான் தெருவில் உள்ள பாத்திமா நகர் மஸ்ஜித் தக்வா திடலில் பஷிர் அஹ்மத் உமரியும் மக்கா நகர் மஸ்ஜித் ஆயிஷா திடலில் ஆசிரியர் ரஹ்மத்துல்லாஹ்வும் பேட்டை மஸ்ஜித் அக்ஸா திடலில் முஹிப்புல்லாஹ் உமரி ஆகியோர் தொழுகை நடத்தி மக்களுக்கு குத்பா பிரசங்கம் செய்தார்கள்.

    முன்னதாக கமிட்டி சார்பில் நகர் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டுக்கு உணவு சமைக்க தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. இதுபோல் நேஷனல் தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் இக்பால் நகர், ரகுமானியாபுரம் , மக்கா நகர் பகுதிகளில் தொழுகை நடத்தினர். இதுபோல் எஸ்.டி.பி.ஐ. சார்பில் இக்பால் நகர் ,மதினா நகர் ஆகிய பகுதிகளில் பெருநாள் தொழுகை நடத்தினர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். காயிதே மில்லத் திடலில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துல் நாசிர் தலைமை ஏற்று பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார். பெரியதெரு, புதுத்தெரு ,மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுதனர்.

    பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் முகைதீன் அல்தாபி, ரஹ்மானியாபுரம் மர்யம் பள்ளி திடலில் அப்துல் காதர் , மக்காநகர் தவ்ஹீத் திடலில் மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம், தவ்ஹீத் நகர் அல் ஹிதாயா திடலில் ரபீக் ராஜா, பாத்திமா நகர் பள்ளி திடலில் குத்தூஸ், இக்பால் நகர் ரய்யான் பள்ளி திடலில் ரயான் மைதீன் , மஹ்மூ நகர் திடலில் குல்லி அலி மதினா நகர் தவ்ஹீத் திடலில் ஹாஜா மைதீன் என நகரில் 9 இடங்களில் தொழுகை நடைபெற்றது.

    இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் தாசில்தார் சன்முகம் மேற்பார்வையில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.தொழுகைக்கு முன்பாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பித்ரா அரிசி வழங்கினர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் சார்பில் தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர் , வடகரை, வீராணம் ,சங்கரன்கோவில், புளியங்குடி , வாசுதேவநல்லூர், திரிகூடபுரம் உட்பட முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் 32-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகை நடைபெற்றது.

    சங்கரன்கோவிலில் ஈத்கா திடலில் ஜமாத் கமிட்டி தொழுகையை அசரத் முகமது ரபீக் நடத்தினார். தலைவர் அப்துல் காதர், செயலாளர் நயினா முகமது, பொருளாளர் அப்பாஸ், துணைச்செயலாளர் ரக்மத்துல்லா, அப்பாஸ், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, ம.தி.மு.க. இளைஞரணி முகமது ஹக்கீம், தே.மு.தி.க. அயூப்கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×