என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாஜக தலைவர்"
- நட்டாவின் மனைவி மீண்டும் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.
- சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மனைவி தனது காரை தென்கிழக்கு டெல்லியில் உள்ள கோவிந்த புரியில் இருக்கும் பழுது பார்க்கும் மையத்தில் சோதனைக்காக கொடுத்திருந்தார்.
அந்த காரை அவரது டிரைவர் ஜோகிந்தர் திரும்ப பெற்று வந்தார். அந்த சமயத்தில் அந்த கார் திருட்டு போய்விட்டதாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
அந்த கார் குருகிராம் நகரை நோக்கி சென்றதாக சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
அந்த காரை மீட்டு தருமாறு நட்டாவின் மனைவி மீண்டும் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.
- கோவை வந்த பிரதமர் மோடி பேரணியை நடத்தினார்.
- ரமேஷ் இரவும் பகலுமாக கட்சிக்காக உழைத்தவர்.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பிரமதர் மோடி முதல்முறையாக தமிழக வந்தார்.
நேற்று மாலை கோவை வந்த பிரதமர் மோடி பேரணியை நடத்தினார். பிறகு, இன்று சேலம் வந்த பிரதமர் மோடி கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாஜகவின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசினார்.
அப்போது, பிரதமர் மோடி மேடையில் மறைந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் 'ஆடிட்டர்' வி.ரமேஷ் ஆகியோரை நினைவு கூர்ந்து பேசினார். அப்போது அவர், கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இன்னைக்கு நான் சேலத்தில் இருக்கிறேன். ஆடிட்டர் ரமேஷ் இன்று நம்முடன் இல்லை. ரமேஷ் இரவும் பகலுமாக கட்சிக்காக உழைத்தவர்.
அவர் கட்சியின் அர்ப்பணிப்புள்ள தலைவராக இருந்தார். அவர் ஒரு சிறந்த பேச்சாளர் மற்றும் மிகவும் கடின உழைப்பாளி. அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
அவசரநிலைக்கு எதிரான போராட்டத்தில்
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் ஆற்றிய பங்கு மறக்க முடியாதது. மாநிலத்தில் பல பள்ளிகளையும் அவர் தொடங்கினார்.
தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய தமது அரசு கடுமையாக உழைத்துள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு சேலம் மாநகரம் மரவனேரி பகுதியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி ரமேஷ் (54), வீட்டின் வளாகத்தில் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
- பா.ஜ.க. தேசிய தலைமையை சந்தித்து பேச்சுவார்த்தை.
- மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி செல்கிறார்.
மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அங்கு, பா.ஜ.க. தேசிய தலைமையை சந்தித்து கூட்டணி குறித்து அண்ணாமலை பேசவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது
- பாஜகவில் இணைந்ததில் இருந்து அவருக்கு டெல்லி பிரிவில் எந்த நிர்வாகப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.
- பாஜகவின் மத்தியப் பொறுப்பாளர்கள் பட்டியலை, தலைவர் ஜேபி நட்டா மறுசீரமைத்தார்.
பாரதிய ஜனதா கட்சி தலைவர் கபில் மிஸ்ராவை டெல்லி பாஜக துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மிஸ்ராவை நியமித்த டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, "இந்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலில் அவரது பெயர் இருப்பதாகவும், ஆனால் சில காரணங்களால் அதை அறிவிக்க முடியவில்லை" என்றும் கூறினார்.
இந்துத்துவா சித்தாந்தம் குறித்த அவரது "தீவிரமான" பேச்சுகளுக்கு பெயர் பெற்ற மிஸ்ரா, பாஜகவில் இணைந்ததில் இருந்து அவருக்கு டெல்லி பிரிவில் எந்த நிர்வாகப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.
கடந்த ஜூலை 29 அன்று, பாஜக அமைப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மறுசீரமைப்பை அறிவித்தது. பாஜகவின் மத்தியப் பொறுப்பாளர்கள் பட்டியலை, தலைவர் ஜேபி நட்டா மறுசீரமைத்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் அரசில் இருந்த முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) மகளிர் அணித் தலைவர் ரிச்சா பாண்டேவுடன் இணைந்து 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாஜகவில் இணைந்த சிந்தியா தற்பொது மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரியாக உள்ளார்.
- தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் நடத்திய வாகன அணிவகுப்பு பேசுபொருளாக மாறியிருக்கிறது.
போபால்:
மத்திய பிரதேசத்தில் கடந்த 2020ல் கமல் நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இந்த மோதலின் உச்சகட்டமாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த அவர்கள், பாஜகவில் இணைந்தனர். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சியை கைப்பற்றியது. பாஜகவில் இணைந்த சிந்தியா தற்போது மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரியாக உள்ளார்.
இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு கிளர்ச்சியின்போது ஜோதிராதித்ய சிந்தியாவைப் பின்பற்றி பாஜகவில் இணைந்து பணியாற்றிய தலைவர்களில் ஒருவரான பைஜ்நாத் சிங் மீண்டும் தாய்க்கட்சியான காங்கிரசில் இணைந்துள்ளார். சிவபுரியில் அரசியல் செல்வாக்கு மிக்க தலைவரான பைஜ்நாத் சிங்குடன், மாவட்ட அளவிலான 15 பாஜக தலைவர்களும் காங்கிரசில் இணைந்தனர். அவர்களை மூத்த தலைவர்கள் கமல் நாத், திக்விஜய் சிங் ஆகியோர் வரவேற்றனர்.
தலைவர்கள் அதிருப்தி காரணமாக கட்சி தாவுவது சகஜம் என்றாலும், பைஜ்நாத் சிங் மீண்டும் தாய்க்கட்சிக்கு திரும்புவதை கொண்டாடும் வகையிலும், தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையிலும் நடத்திய வாகன அணிவகுப்பு பேசுபொருளாக மாறியிருக்கிறது. 400 வாகனங்கள் அணிவகுக்க, தனது தொகுதியான சிவபுரியில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள போபாலுக்கு சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து கட்சியில் இணைந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பைஜ்நாத் சிங், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்காக தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வந்தார். ஆனால், சீட் கிடைக்கும் என எந்த நம்பிக்கையும் ஏற்படாததால் மீண்டும் காங்கிரசில் சேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- கைது செய்யும் முன் காவல் துறை அதிகாரிகளிடம் பந்தி சஞ்சய் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- பந்தி சஞ்சய் குமார் கைது நடவடிக்கையை கண்டித்து தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
தெலுங்கானா மாநிலத்தின் பாஜக தலைவர் பந்தி சஞ்சய் குமார் நேற்று இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யும் முன் காவல் துறை அதிகாரிகளிடம் பந்தி சஞ்சய் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனினும், கைது செய்வதற்கான காரணத்தை காவல் நிலையத்தில் வைத்து சொல்வதாக கூறி போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
காவல் துறை துணை ஆணையர் துலா ஸ்ரீனிவாஸ் தலைமையிலான காவல் துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு 12.45 மணி அளவில் மாமியார் வீட்டில் இருந்த பந்தி சஞ்சய் குமாரை கைது செய்து பொம்மலா ராமரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
கைது நடவடிக்கையின் போது பந்தி சஞ்சய் வீட்டிற்கு விரைந்த பாஜக-வினர், போலீசாரை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் காவல் துறைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இருந்த போதிலும், காவல் துறையினர் பந்தி சஞ்சய் குமாரை கைது செய்தனர். பந்தி சஞ்சய் குமார் கைது நடவடிக்கையை கண்டித்து தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
டிஎஸ்பிசி வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் ஆதாரம் காண்பிக்க காவல் துறை சார்பில் பலமுறை பந்தி சஞ்சய் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. எனினும், ஒருமுறை கூட பந்தி சஞ்சய் குமார் ஆஜராகவில்லை, மாறாக தனது சட்ட வல்லுனர் குழுவை மட்டும் அனுப்பி வந்துள்ளார். சிறப்பு விசாரணைக்கு ஆஜராகாததே இவரின் கைதுக்கு காரணம் ஆகும்.
இதுதவிர 10 ஆம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாகவும் பந்தி சஞ்சய் குமார் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாகவும் பந்தி சஞ்சய் குமார் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
- காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி கட்டாயம் என இருந்தது.
- 3 மொழியை கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்வி கொள்கை.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் அண்ணமலை பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அக்டோபர் 30ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை எதுவும் இல்லை. திமுக அரசின் கபட நாடகம்தான் இந்தி எதிர்ப்பு போராட்டம்.
மேலும், இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி கட்டாயம் என இருந்தது. 3 மொழியை கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்வி கொள்கை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கைதான சீமா பத்ராவின் கணவர் மகேஷ்வர பத்ரா ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சுனிதா உருக்கமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அசோக்நகரில் வசித்து வருபவர் சீமா பத்ரா. பாரதிய ஜனதா பெண் தலைவரான இவர் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவரது வீட்டில் பழங்குடி இனத்தை சேர்ந்த சுனிதா( வயது 29) என்ற பெண் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக இவரை சீமா பத்ரா கொடூரமாக சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. சூடான பொருட்களை சுனிதா உடலில் வைத்தும், இரும்பு கம்பியால் பயங்கரமாக தாக்கியும் அவர் சித்ரவதை செய்தாக புகார்கள் எழுந்தது.
இரும்பு கம்பியால் அடித்ததில் சுனிதாவின் பற்கள் உடைந்தன. மேலும், முகம் முழுவதும் காயங்கள் ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் துடித்தார். ஆனாலும் சீமா பத்ரா இதனை கண்டுகொள்ளவில்லை. இதன் உச்சகட்டமாக சுனிதாவை கழிவறையில் சிதறி கிடந்த சிறுநீரை நாக்கால் சுத்தம் செய்யுமாறு கட்டாயபடுத்தியதாக கூறப்படுகிறது.
வேலைக்கார பெண்ணை தனது தாய் கொடுமைபடுத்தியதை அறிந்த சீமா பத்ராவின் மகன் ஆயுஸ்மான் அவருக்கு உதவ முன் வந்தார். வீட்டில் நடந்த கொடுமை பற்றி அவர் தனது நண்பர்களிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் மூலம் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டது.
போலீசார் விரைந்து செயல்பட்டு சீமா பத்ரா வீட்டில் இருந்த சுனிதாவை மீட்டனர். முகம் மற்றும் உடலில் பல இடங்களில் காயங்களுடன் இருந்த அவர் ஆஸ்பத்திரியில் சிசிச்சைக்காக சேர்க்கபட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக சீமா பத்ராவை சஸ்பெண்டு செய்து பாரதீய ஜனதா நடவடிக்கை எடுத்தது. மேலும் ராஞ்சி போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான சீமா பத்ராவின் கணவர் மகேஷ்வர பத்ரா ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சுனிதா உருக்கமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவரால் படுக்கையில் சரிவர எழுந்து உட்கார கூட முடியவில்லை. வாயில் பல பற்கள் இல்லாமல் மோசமான நிலையில் உள்ளார்.
தன்னை சீமா பத்ராவின் மகன்தான் காப்பாற்றினார். தனக்கு சில நாட்களாக சாப்பாடு, குடிநீர் கூட கொடுக்கவில்லை என உருக்கமாக பேசி உள்ளார். வேலைக்கார பெண்ணுக்கு மகன் உதவுவதை அறிந்த சீமா பத்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை உடல் நிலை சரியில்லை என கூறி அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இருந்த இவர், முன்னர் மத்தியில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஆறுமாதங்கள் ரெயில்வே மந்திரியாகவும் பதவி வகித்தார். தலைமை மீது கொண்ட கருத்து வேற்றுமையால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பா.ஜ.க.வில் இணைந்தார். பின்னர், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், முகுல் ராயின் அரசியல் குருவாக இருந்த மிரினால் கான்ட்டி சிங்கா ராய் என்பவரை திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரி தொடர்ந்த வழக்கில் முகுல் ராய்க்கு கொல்கத்தா ஐகோர்ட் இன்று முன் ஜாமின் அளித்துள்ளது.
கடந்த 8-6-2011 அன்று வடக்கு 24-வது பர்கானா மாவட்டத்துக்கு உட்பட்ட கஞ்ச்ரப்பாரா - ஹலிசாஹர் சாலை வழியாக வாகனத்தில் சென்ற மிரினால் கான்ட்டி சிங்கா ராய் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஓரளவுக்கு உடல்நிலை தேறிய அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்காமல் முகுல் ராயின் யோசனையின்படி கொல்கத்தாவில் உள்ள ஒரு லாட்ஜில் தங்க வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லாட்ஜில் தங்கி இருந்த மிரினால் கான்ட்டி சிங்கா ராய், தொண்டை தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மரணத்துக்கு தொண்டையில் இருந்த ரத்தக்கசிவு காரணமாக இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் மூலம் பின்னர் தெரிய வந்ததாகவும், அவரது மரணத்தில் முகுல் ராய்க்கு தொடர்பு இருப்பதாகவும் சந்தேகப்பட்ட மிரினால் கான்ட்டி சிங்கா ராயின் சகோதரி சோனாலி, தனது புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்து விட்டதால் கொல்கத்தா ஐகோர்ட்டின் உதவியை நாடினார்.
இவ்விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்ததையடுத்து, இடைப்பட்ட காலத்தில் பா.ஜ.க.வில் இணைந்துவிட்ட முகுல் ராய் இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்ய கூடாது என கொல்கத்தா ஐகோர்ட்டில் கடந்த ஜனவரி மாதம் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருந்ததால் அவரை கைது செய்ய ஐகோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில், முகுல் ராயிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் காப்புறுதி பத்திரத்தை பெற்ற கொல்கத்தா ஐகோர்ட் அவருக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் அளித்துள்ளது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றுவரும் வடக்கு 24-வது பர்கானா மாவட்டத்துக்கு உட்பட்ட பிஜப்பூர் போலீஸ் நிலையத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை ஆஜராக வேண்டும் என அவருக்கு முன் ஜாமின் அளித்த நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். #MukulRoy #MrinalKantiSinghaRoy
நாட்டின் பல்வேறு துறைகளின் பணிகளை ஆய்வு செய்வதற்காகவும், உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் பாராளுமன்ற எம்.பி.க்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்படுவது வழக்கம்.
இவ்வாறு பாராளுமன்றத்தில் 24 குழுக்கள் செயல்படுகின்றன. அவற்றில் மக்களவைக்கு 16 குழுக்களும், மேல்-சபைக்கு 8 குழுக்களும் அமைக்கப்படும்.
இந்த குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் மூத்த எம்.பி.க்கள் தலைவராகவும், மற்றவர்கள் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். இந்த குழுவுக்கு பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்படும்.
எங்குவேண்டுமானாலும் ஆய்வு நடத்தலாம், எந்த அதிகாரியை வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம் என்ற அளவிற்கு உயர்ந்தபட்ச அதிகாரங்கள் இந்த குழுக்களுக்கு உண்டு.
எனவே இந்த குழுக்களில் இடம் பெறுவதற்கு எம்.பி.க்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் மேல்சபை எம்.பி.யாக உள்ள பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா எந்த குழுவிலும் இடம் பெறாமல் ஒதுங்கியே இருக்கிறார்.
மேல்-சபையில் எம்.பி.க்களின் பதவி காலம் முடிவு மற்றும் மரணம் காரணமாக 50 எம்.பி.க்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். எனவே 8 நிலைக்குழுக்களும், மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு குழுவிலும் கூட அமித்ஷா இடம் பெறவில்லை. ஏன் அவர் இதில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரியவில்லை.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட அவர் தலைவராக இருந்த காலத்தில் எந்த நிலைக் குழுவிலும் இடம் பெறவில்லை. இப்போது தலைவர் பதவி இல்லாத நேரத்திலும் குழுவில் இடம் பெறவில்லை. அதே போல பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் எந்த குழுவிலும் இடம் பெறவில்லை.
அதே நேரத்தில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு பொதுச் செயலாளர் சீத்தாராம் எச்சூரி பல்வேறு குழுக்களில் இடம் பெற்றுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூட நிதி கமிட்டியில் இடம் பெற்று இருக்கிறார். அதே போல காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளி விவகார கமிட்டியில் இடம் பெற்றுள்ளார். #BJP #AmitShah
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்