என் மலர்
நீங்கள் தேடியது "மறைவு"
- எர்ணாகுளத்தில் கந்தநாட்டில் உள்ள அவரது வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.
- ரஜினிகாந்தும் ஸ்ரீவிவாசனுடன் வகுப்புத் தோழனாக இருந்ததை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார்.
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 69.
கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீனிவாசன் நேற்று மரணமடைந்தார்.
ஸ்ரீனிவாசனின் இறுதிச் சடங்கு இன்று காலை எர்ணாகுளத்தில் கந்தநாட்டில் உள்ள அவரது வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பு தொடர்பாக எர்ணாகுளம் சென்றிருந்த நடிகர் சூர்யா, ஸ்ரீனிவாசன் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த வந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, நான் சினிமாவில் நுழைவதற்கு முன்பில் இருந்தே அவரது படங்களைப் பார்க்கிறேன். ஸ்ரீனிவாசனின் மரணச் செய்தியைக் கேட்டதும் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
நேரில் வந்து அவரைப் பார்க்க வேண்டும் என்ற தோன்றியது. சினிமாவுக்கு அவரது பங்களிப்புகள், அவர் கற்றுக்கொடுத்த விஷயங்கள் மற்றும் அவரது எழுத்துக்கள் எப்போதும் அனைவரின் மனதிலும் இருக்கும்" என்று தெரிவித்தார். முன்னதாக நகுடிகர் ரஜினிகாந்தும் ஸ்ரீவிவாசனுடன் வகுப்புத் தோழனாக இருந்ததை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார்.
நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் மலையாளம், தமிழ் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் எழுத்தாளர்.
நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராக அவரது பங்களிப்புகளுக்காக பல வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரங்கள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஸ்ரீனிவாசனுக்கு விமலா என்ற மனைவியும், வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் என்ற மகன்களும் உள்ளனர். இருவரும் மலையாள சினிமாவில் முக்கிய நபர்களாக உள்ளனர்.
- கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
- அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி கடந்த 21ம் தேதி காலமானார்.
வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார்.
60 வயதான அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி கடந்த 21ம் தேதி காலமானார்.
இந்நிலையில், அமுல் கந்தசாமி மறைவைத் தொடர்ந்து வால்பாறை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
- வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அவர்கள் வருத்தமடைந்தேன்.
- அதிமுக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அவர்கள் வருத்தமடைந்தேன். மறைந்த செய்தியறிந்து மிகவும்
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வால்பாறை தொகுதி மக்களுக்கும், அதிமுக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த டிசம்பரில் கோவையில் அவருக்கு இதய அறுவைச் சிகிச்சைச நடந்தது.
- உடம்பு சரியில்லாமல் ராஜேஷ் காலமாகி விட்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நடிகா் ராஜேஷ் மறைவு பற்றி நடிகை வடிவுக்கரசி கூறியதாவது:-
என்ன பேசுவதென்றே தெரியவில்லை. எத்தனையோ நடிகர்களுடன் நடித்து வருகிறோம். ராஜேஷ் அவ்வளவு நல்ல மனிதர். தப்பு பண்ணுவதற்கே பயப்படுவார்.
என்னுடைய பிறந்த நாளை நான் மறந்துவிட்டால் கூட அவரோட வாழ்த்துதான் முதலில் வரும். கடைசி நிமிடம் வரை நடித்துக் கொண்டிருப்பீர்கள் என என்னைப் பார்த்து சொல்வார்.
கடந்த வாரம் என்னிடம் அவர் பட்டுக்கோட்டை போய் வந்தேன். மகனுக்கு பெண் பார்த்தாச்சு. ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் திருமணம் வைத்துக் கொள்ளலாம். அதைப் பற்றி விளக்கமாக உங்களிடம் சொல்கிறேன். என கூறினார்.
ரொம்ப சந்தோஷம் என நான் கூறியதும் மகன் திருமணத்திற்கு உங்களுக்கு நல்ல பட்டு புடவை வாங்கி தருகிறேன் என கூறினார். கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி சித்த மருத்துவமனை திறப்பு விழாவிற்காக நானும் அவரும் திருச்சி போயிருந்தோம்.
அப்போது அவரிடம் நான் கன்னிப் பருவத்திலே படம் திருச்சியில் நாம் இருவரும் தான் நடித்தோம். அதற்கு அவர் ஆமாம்... ஆமாம்.. நீங்கள் தான் என் முதல் கதாநாயகி என சொன்னார்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 அன்று கன்னிப் பருவத்திலே படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆச்சு என்று வருடம் தவறாமல் பேசுவார். சாப்பாடு, ஆரோக்கியத்திலும் ரொம்ப சரியாக இருப்பார். அவர் உடம்பு சரியில்லாமல் காலமாகி விட்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
இப்பவும் யாரையோ பற்றி பேசுகிறோம் என்று தான் உள்ளது. ராஜேஷ் சாரை பற்றி பேசுகிறோம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்பதானே பேசினோம் என்று தோன்றுகிறது.
கடந்த டிசம்பரில் கோவையில் அவருக்கு இதய அறுவைச் சிகிச்சைச நடந்தது. தற்போது அவர் மறைந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
இவ்வாறு கண்கலங்கிய படி அவர் கூறினார்.
- தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர்.
- அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நடிகர் ராஜேஷ் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ்.
தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ராஜேஷ் அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.
- சிறப்பான நடிப்பினால் சின்னத்திரை நெடுந்தொடர்கள் பல வெற்றித்தொடர்களாகப் பெரும்புகழ் பெற்றன.
நடிகர் ராஜேஷ் மறைவு தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்த்திரை மற்றும் சின்னத்திரை மூத்த நடிகர், பின்குரல் கலைஞர், எழுத்தாளர், மிகச்சிறந்த வாசிப்பாளர், வலையொளியாளர் என பன்முகத்திறன் பெற்ற படைப்பாளி, மனிதநேயமிக்க மாண்பாளர் அன்பிற்கினிய அண்ணன் இராஜேஷ் அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.
கன்னிப்பருவத்திலே, அந்த 7 நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை, பயணங்கள் முடிவதில்லை, மகாநதி, இருவர், விருமாண்டி உள்ளிட்ட பல திரைக்காவியங்களில் தன்னுடைய தனித்துவமிக்க குணச்சித்திர நடிப்பின் மூலம் தனிமுத்திரை பதித்த அண்ணன் இராஜேஷ் அவர்களின் மறைவு தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது சிறப்பான நடிப்பினால் சின்னத்திரை நெடுந்தொடர்கள் பல வெற்றித்தொடர்களாகப் பெரும்புகழ் பெற்றன.
ஓம் சரவணபவ வலையொளி மூலம் உடல்நலனைப் பாதுகாப்பது குறித்து பல அரிய தகவல்களை இறுதிநாள்வரை, தொடர்ச்சியாகப் பொதுமக்களுக்கு வழங்கி வழிகாட்டிய பெருமகன்.
தனிப்பட்ட முறையில் என்மீது பெரும் பாசமுடைய அண்ணன் ராஜேஷ் அவர்கள், அவரிடமிருந்த கிடைத்தற்கரிய சிறந்த புத்தகங்களை எனக்கனுப்பி தந்து படிக்க பரிந்துரைத்த பேரன்புக்காரர். நாங்கள் முன்வைக்கும் அரசியல் கருத்துகள் மிகச்சரியானது என்பதை பல தருணங்களில், பல மேடைகளில் தயக்கமின்றி வெளிப்படுத்திய பெருந்தகை!
அண்ணன் ராஜேஷ் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், வலையொளி பின்தொடர்பாளர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
தலைச்சிறந்த குணச்சித்திரத் திரைக்கலைஞர் அண்ணன் இராஜேஷ் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
- தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
திரைத்துறையில் இருந்து ஏராளமானோர் வந்து கவுண்டமணியின் மனைவியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மேலும், விஜய் நடிகர் கவுண்டமணியை ஆரத் தழுவி ஆறுதல் தெரிவித்தார்.
- கத்தோலிக்க திருச்சபையின் தலைமை குரு போப் பிரான்ஸ் மறைவையொட்டி நாளை அவருக்கு இறுதிச்சடங்குகள் நடக்கிறது.
- உள்துறை அமைச்சக அறிவிப்பை சுட்டிக்காட்டி தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21 அன்று காலை தனது 88 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நாளை அவரின் இறுதிச் சடங்கு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாடிகன் வருகை தருகின்றனர்.
தற்போது போப் பிரான்சிஸ் உடல் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பொதுமக்கள், உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவர்.
இந்நிலையில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, கிரண் ரிஜிஜு, மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் மற்றும் கோவா துணை சபாநாயகர் ஜோசுவா பீட்டர் டி சௌசா ஆகியோர் 2நாள் பயணமாக இன்று வாடிகன் கிளம்பியுள்ளனர். நாளை போப் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு இந்தியா சார்பில் அஞ்சலி செலுத்துவார்கள்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை குரு போப் பிரான்ஸ் மறைவையொட்டி நாளை அவருக்கு இறுதிச்சடங்குகள் நடக்கிறது.
இந்நிலையில், நாளைய தினம் (ஏப். 26) போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கையொட்டி தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும், அரசு நிகழ்ச்சிகள் கூடாது என உள்துறை அமைச்சக அறிவிப்பை சுட்டிக்காட்டி தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
- போப்பின் உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது.
- 100 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப் இவர் ஆவார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார்.
போப்பின் உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது. போப் பிரான்சிஸ் மறைவுக்கு 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் தன் கல்லறையை அமைக்க போப் பிரான்சிஸ் விரும்பவில்லை என்றும் ரோமில் உள்ள சான்டா மரியா மேகியார் பசிலிகாவில் தனது கல்லறையை அமைக்க போப் பிரான்சிஸ் விரும்பியதாக கூறப்படுகிறது.
ரோமுக்கு செல்லும்போதெல்லாம் சான்டா மரியா மேகியார் பசிலிகாவுக்கு செல்வதை போப் வழக்கமாக வைத்திருந்தார்.
பொதுவாக போப்பாக உள்ளவர்கள் சைப்ரஸ், ஈயம் மற்றும் கருவாலி மரத்தால் ஆன பேழையில் அடக்கம் செய்யப்படுவார்கள்.
ஆனால், போப் பிரான்சிஸ் ஜிங்க-ஆல் பூசப்பட்ட சவப்பெட்டியில் தன்னை அடக்கம் செய்ய விரும்பியதாக கூறப்படுகிறது.
100 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப் இவர் ஆவார்.
மேலும், போப்பின் இறுதிச் சடங்கிற்கு 2 அல்லது 3 வாரங்களுக்குப் பிறகு புதிய போப்பை தேர்தந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய போப்பை தேர்ந்தெடுக்க கார்டினல்கள் சிஸ்டைன் ஆலயத்தில் கூடுவார்கள். ரகசிய பரிமாணம் செய்து ரகசிய வாக்குச் சீட்டு மூலம் வாக்களிப்பார்கள்.
80 வயதிற்குட்பட்ட கார்டினல்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை உள்ளது.
புதிய போப்பை தேர்ந்தெடுக்க மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை தேவை. ஒவ்வொரு வாக்கெடுப்புக்குப் பிறகும், வாக்குச் சீட்டுகள் எரிக்கப்படும்.
பின்னர் பெரும்பான்மையை பொருத்து புதிய போப் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களது இரங்கலகளை தெரிவித்துள்ளனர்.
- போப் பிரான்சிஸ் விட்டுச் சென்ற மரபு, செயலில் இரக்கம் மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கை.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானார். இவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், போப் பிரான்சிஸின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களது இரங்கலகளை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கத்தோலிக்க திருச்சபையை பச்சாதாபம் மற்றும் முற்போக்கான மதிப்புகளுடன் வழிநடத்திய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நபரான போப் பிரான்சிஸின் மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன்.
அவர் ஒரு இரக்கமுள்ள மற்றும் முற்போக்கான குரலாக இருந்தார். அவர் போப் பாண்டவருக்கு பணிவு, தார்மீக தைரியம் மற்றும் ஆழ்ந்த பச்சாதாப உணர்வைக் கொண்டு வந்தார்.
ஏழைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு, ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்தல், நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான அவரது வாதங்கள் கத்தோலிக்க உலகிற்கு அப்பால் அவருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தன.
அவர் விட்டுச் சென்ற மரபு, செயலில் இரக்கம் மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.
போப் பிரான்சிஸ் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர்
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது வாழ்க்கை இரக்கம், பணிவு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது.
அமைதி, அன்பு மற்றும் ஒற்றுமை என்ற செய்தியால் மில்லியன் கணக்கான மக்களை ஊக்கப்படுத்திய ஒரு ஆன்மீகத் தலைவரை உலகம் இழந்துவிட்டது. உலகம் முழுவதும் உள்ள அவரது அனைத்து ஆதரவாளர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கல்.
அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போப் பிரசான்சிஸ் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- தைரியத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானார். இவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்லக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். இந்த துயரமான தருணத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் இரக்கம், பணிவு மற்றும் ஆன்மீக தைரியத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார்.
சிறு வயதிலிருந்தே, அவர் கர்த்தராகிய கிறிஸ்துவின் கொள்கைகளை உணர்ந்து கொள்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தார். துன்பப்படுபவர்களுக்கு, அவர் நம்பிக்கையின் உணர்வைத் தூண்டினார்.
அவருடனான எனது சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூருகிறேன். மேலும் உள்ளடக்கிய மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன்.
இந்திய மக்கள் மீதான அவரது பாசம் எப்போதும் போற்றப்படும். கடவுளின் அரவணைப்பில் அவரது ஆன்மா நித்திய அமைதியைக் காணட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
போப் பிரான்சிஸ் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது:-
கருணை, நீதி மற்றும் அமைதியின் உலகளாவிய குரலான புனித போப் பிரான்சிஸின் மறைவால் நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
அவர் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களுடன் நின்றார். சமத்துவமின்மைக்கு எதிராக அச்சமின்றிப் பேசினார், அன்பு மற்றும் மனிதநேயம் பற்றிய தனது செய்தியால் மில்லியன் கணக்கான மதங்களை ஊக்கப்படுத்தினார்.
இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க சமூகத்துடன் எனது எண்ணங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் காலமானார்.
- சுமார் 20 ஆயிரம் சதுர அடியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்தார்.
பூந்தமல்லி:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் இன்று காலமானார். அவர் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் அட்கோ நகர் பகுதியில் சுமார் 20 ஆயிரம் சதுர அடியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்தார். அதில் குடியேற ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இந்த வீட்டின் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொய்வடைந்த நிலையில் மீண்டும் வீடு கட்டும் பணிகள் வேகம் எடுத்தது. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த வீட்டில் பால் காய்ச்சப்பட்டதாகவும் விஜயகாந்த் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் 10 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் இந்த வீட்டில் விஜயகாந்த் வசிக்க வேண்டும் என தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில் அந்த ஆசை நிறைவேறாமலே போனது.






