search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "national flag"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காவல் துறையினர் ரசிகர்கள் கையில் இருந்த இந்திய தேசிய கொடிகளை பறிமுதல் செய்தனர்.
    • இந்திய தேசிய கொடியை குப்பை தொட்டியில் போட முயன்றார்.

    உலகக் கோப்பை 2023 தொடரின் லீக் போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை கண்டுகளிக்க ரசிகர்கள் அதிகளவில் மைதானத்திற்கு வந்தனர்.

    அவ்வாறு மைதானத்திற்கு வந்த ரசிகர்களில் பலர் இந்திய தேசிய கொடியுடன் மைதானத்திற்குள் செல்ல முயற்சித்தனர். அப்போது மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர் ரசிகர்கள் கையில் இருந்த இந்திய தேசிய கொடிகளை பறிமுதல் செய்தனர்.

    அந்த வகையில், காவல் துறை உதவி ஆய்வாளர் நாகராஜன் ரசிகர் ஒருவரிடம் இருந்து வாங்கிய இந்திய தேசிய கொடியை அருகில் இருந்த குப்பை தொட்டியில் போட முயன்றார். இந்த சம்பம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட காவல் துறை உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை விளக்கம் அளித்து இருந்தது.

    அதன்படி இந்திய தேசிய கொடியை குப்பை தொட்டியில் போட முயன்ற காவல் துறை உதவி ஆய்வாளர் நாகராஜன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். இதற்கான உத்தரவை சென்னை மாநகர காவல் துறை ஆய்வாளர் வெளியிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 13-ஆம் நூற்றாண்டில் ஒன்றாம் நரசிம்மதேவ அரசரால் இந்த சக்கரம் உருவாக்கப்பட்டது
    • இந்தியாவின் மூவர்ணக்கொடியின் மத்தியிலும் இச்சக்கரம் இடம்பெற்றுள்ளது

    உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுடன் இந்தியா உட்பட 19 உலக நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து உருவாக்கிய ஒரு பன்னாட்டு நாடுகளின் கூட்டமைப்பு ஜி20.

    இக்கூட்டமைப்பின் தலைமை இம்முறை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதால், இதன் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இம்மாநாடு நாளை வரை நடைபெற இருக்கிறது.

    இதில் பங்கேற்க இக்கூட்டமைப்பின் உறுப்பினர் நாடுகளை சேர்ந்த பெரும்பாலான உலக தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை தந்துள்ளனர். அவர்களை வரவேற்கும் விதமாக அம்மையத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய முறைப்படி கைகளை கூப்பி வரவேற்றார்.

    பிரதமர் மோடி நின்று வரவேற்ற இடத்திற்கு பின்னால் ஒடிசா மாநில பூரி நகரில் உள்ள புகழ்பெற்ற சூரிய பகவான் கோவிலிலிருக்கும் கொனார்க் சக்கரத்தின் பிரதி அமைக்கப்பட்டிருந்தது.

    இந்தியாவில் 13-ஆம் நூற்றாண்டில் ஒன்றாம் நரசிம்மதேவன் மன்னரால் இந்த சக்கரம் உருவாக்கப்பட்டது.

    ஒடிசாவின் சூரியபகவான் கோவிலில் உள்ள இச்சக்கரம், பண்டைய இந்தியர்களின் அறிவாற்றலையும், முன்னேறிய நாகரிக வளர்ச்சியையும், கட்டிட மற்றும் சிற்பக் கலைகளில் அவர்களுக்கிருந்த நுண்ணறிவையும் பறைசாற்றும் விதமாக இருப்பதாக உலகம் முழுவதும் புகழ் பெற்றது.

    வளர்ச்சியயும் முன்னேற்றத்தையும் குறிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட இச்சக்கரத்தில் உள்ள 24 ஆரக்கால்கள் (spokes) ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தை குறிக்கும்.

    ஜனநாயகத்தின் அடிப்படை சித்தாந்தங்களையும், சமூக முன்னேறத்திற்கான உறுதியான நோக்கத்தையும் இந்த சக்கரம் பிரதிபலிக்கிறது என்பதும் இந்திய தேசிய கொடியாகிய மூவர்ணக்கொடியின் மத்தியிலும் இச்சக்கரத்தின் பிரதி இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விழாவில் ஊராட்சி தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தேசிய கொடி ஏற்றினார்.
    • கிராம சபை கூட்டத்தை தொடர்ந்து 77 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    கடையம்:

    கடையம் பெரும்பத்து ஊராட்சியில் சுதந்திர தினவிழாவில் ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செய்தார். இதைத்தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பின்னர் 77 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் ஊராட்சி உறுப்பினர்கள், அதிகாரிகள், தொழிலதிபரும் தி.மு.க. நிர்வாகியுமான பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
    • தேசியக்கொடிக்கு செங்கமலம் யானை மரியாதை செலுத்தியது.

    திருவாரூர்:

    மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

    அப்போது அங்கு பாகனுடன் ராஜகோபாலசாமி கோவில் யானை செங்கமலம் வந்தது.

    தொடர்ந்து யானை செங்கமலம் தனது துதிக்கையை தூக்கி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியது.

    பாப் கட்டிங் செங்கமலம் என பக்தர்களால் அழைக்கப்பட்டு புகழ்பெற்ற செங்கமலம் யானை தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியது கண்கொள்ளாக்காட்சியாக இருந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டம் ஊராட்சியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது
    • ஒன்றிய பெருந்தலைவர் கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காடுவெட்டி ரவி சங்கர் தேசிய கொடி ஏற்றி மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் அலுவலக பணியாளர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதுகுளத்தூர் அருகே சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
    • சேர்மன் சண்முகபிரியா ராஜேஷ் தேசிய கொடி எற்றி வைத்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வட்டாட்சியர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தலைமை துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், அலுவலகப் பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர், மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். முதுகுளத்தூர் யூனியன் அலுவலகத்தில் சேர்மன் சண்முகபிரியா ராஜேஷ் தேசிய கொடி எற்றி வைத்தார். ஆணையாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் வெங்கல குறிச்சி கிராமத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தனது இல்லத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பண்ருட்டி கலை வித்யா மந்திர் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
    • ஸ்கேட்டிங் மாணவன் கார்த்திக் பரணிதரன் தேசியக் கொடியை ஏந்தி வந்தான்.

    கடலூர்:

    பண்ருட்டி கலை வித்யா மந்திர் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. பள்ளி நிர்வாகிகள், மாணவ -மாணவிகள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஸ்கேட்டிங் மாணவன் கார்த்திக் பரணிதரன் தேசியக் கொடியை ஏந்தி வந்து விழா மேடையில் சிறப்பு விருந்தினர்களுக்கு கொடி வணக்கம் செலுத்தினான். இதனை பார்த்த அனைவரும் பரவசம் அடைந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ.2 கோடியே 22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பின்னர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் சமாதான புறா பறக்க விட்டனர்.

    தொடர்ந்து விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.

    அதேபோல் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் ரூ.2 கோடியே 22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக, 6 ஆயிரம் தேசிய கொடிகளை முன்னாள் ராணுவ வீரர்கள் வழங்கினர்
    • 30 அரசு பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது

    செந்துறை

    அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த தமிழக முன்னாள் படைவீரர்கள் வீரமங்கையர்கள் அமைப்பு மற்றும் சோழப் பேரரசின் போர் வீரர்கள் சார்பாக 6000 தேசிய கொடிகள் செந்துறை பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது

    மாவட்டத் தலைவர் செல்வம் தலைமையில் மாநில துணை தலைவர் பொய்யாமொழி அவர்கள் முன்னிலையில் ஒருங்கிணைப்பாளர் வேணு நிர்வாகிகள் கல்யாண சுந்தரம் ஆசைத்தம்பி முருகன் தமிழரசன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 6000 தேசிய கொடிகளை வழங்கினர். இந்திய நாட்டை காக்க எல்லையில் நின்று போராடிய முன்னாள் ராணுவ வீரர்கள் பள்ளி மாணவர்களிடையே தேசப்பற்றையும் தேசப் பாதுகாப்பு ஊட்டும் விதமாக ஒவ்வொரு மாணவர்களும் தங்களது இதயத்தில் தேசிய கொடியை அணிந்து இந்திய தேசத்தை வருங்கால தலைமுறை மாணவர்கள் முன் வருவார்கள் என்ற நம்பிக்கையில் தேசிய கொடியை பள்ளிகள் தோரும் சென்று வழங்கியதை ஆசியர்களும் மாணவர்களும் பாராட்டினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் 77-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டப்பட்டது.
    • கலெக்டர்கள் தேசியக்கொடியேற்றி தியாகிகளை கவுரவித்தனர்.

    ராமநாதபுரம்

    இந்திய திருநாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாக–லமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடை–பெற்ற சுதந்திர தின விழா–வில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மூவர்ண பலூன்களையும், தேச ஒற்று–மையை வலியுறுத்தும் வித–மாக சமாதான புறாக்க–ளை–யும் பறக்க விட்டார்.

    பின்னர், திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவ–குப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறை யைச் சேர்ந்த 29 பேருக்கும், வருவாய்த்துறை, சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 124 அலுவலர்களுக்கும் நற் சான்று பாராட்டுச் சான்றி–தழ்களை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தோட்டக் கலைத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தாட்கோ, வேளாண்மை துறை சார் பில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், தொகுப்பு நிதி கல்வி உதவித் தொகை, தையல் எந்திரம், முதலமைச் சர் பொது நிவாரண நிதி, இலவச வீட்டு மனைப்பட்டா,

    சரக்கு வாகனம் வாங்க மானியக் கடன், தூய்மைப்ப–ணியாளர் நல வாரிய உறுப் பினர்களுக்கு வீடு வழங்கு–தல் என 57 பேர்களுக்கு ரூ.47 லட்சத்து 49 ஆயிரத்து 783 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக் டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 49 காவல் துறை அலுவலர்கள், பல் வேறு அரசு துறைகளைச் சார்ந்த 288 அலுவலர்கள் என மொத்தம் 337 அலுவ லர்களுக்கு பாராட்டு சான்றி தழ்களை வழங்கினார்.

    விழாவையொட்டி 700 மாணவ, மாணவிகள் பங் கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை) அபீதா ஹனீப், மாவட்ட வருவாய் அலுவலர், ராமநா தபுரம் வருவாய் கோட்டாட் சியர் உள்பட பல்வேறு அர சுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் உள்ள மைதானத்தில், இன்று நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் கலெக்டர் ஆஷா அஜித் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையி னரின் அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து, சமாதானத்தை விளக்கும் வகையி, வெண்பு றாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார்.

    விழாவில் மாற்றுத்திற னாளிகள் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலத் துறை, மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறை, வேளாண்மைத்துறை, பேரூராட்சி துறை, ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம், உள்பட பல்வேறு அரசுத்து றைகளின் சார்பில் மொத்தம் 22 பயனாளி களுக்கு ரூ.1 கோடியே 67 லட்சத்து 21 ஆயிரத்து 200 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.

    70 காவலர்களுக்கும், வருவாய்த்துறை மற்றும் பல்வேறுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 285 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நற் சான்றிதழ்கள் மற்றும் கேட யங்களை கலெக்டர் வழங்கி னார். விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சிலம் பாட்டம், யோகா, கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    காவல் துறையில் சிறப் பாக பணிபுரிந்த 70 போலீ சாருக்கும், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் பிறத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 285 அலுவலர் கள் மற்றும் பணியாளர்க ளுக்கு சான்றிதழ்களும், வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த், சிவகங்கை எம்.எல்.ஏ. பிஆர்.செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பாதேவி, வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால் துரை (தேவகோட்டை), மற்றும் அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர் கள், காவல் துறை அலுவ லர்கள், பொதுமக்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கில் சுதந்தி தின விழா கொண்டாடப் பட்டது. கலெக்டர் ஜெய–சீலன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் கருண் காரட் (அருப்புக் காோட்டை), தனஞ்ஜெயன் (சிவகாசி), ஜெகன்நாதன் (திருச்சுழி), வச்சகாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜ், திட்ட இயக்குநர் தண்ட பாணி, ஆர்.டி.ஓ.க்கள் சிவகுமார் (சாத்தூர்), விஸ்வநாதன் (சிவகாசி), கலெக்டர் நேர்முக உதவி யாளர் அனிதா உள்பட 391 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை கலெக் டர் வழங்கினார்.

    முன்னதாக ஜீப்பில் சென்று கலெக்டர் போலீ–சார் அணிவகுப்பு மரியா–தையை ஏற்றுக் கொண்டார். பள்ளி மாணவ, மாணவி–களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் வருவாய் அலுவலர் ரவிக்குமார், போலீஸ் சூப்பிரண்டு சீனி வாச பெருமாள், மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றி வேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர் யூனியன் அலுவலகத்தில் தலைவர் சுமதிராஜ சேகர் தேசியக் கொடி ஏற்றினார். நகராட்சி அலுவலகத்தில் தலைவர் மாதவன் தேசியக் கொடி ஏற்றினார். மாவட்ட பஞ்சா யத்து அலவலகத்தில் பஞ்சா யத்து தலைவி வசந்தி மான்ராஜ் தேசியக் கொடி ஏற்றினார். விருதுநகர் தேசப்பந்து திடலில் உள்ள தியாகிகள் நினைவு தூணில் தேசியக் கொடி ஏற்றப்பட் டது.

    கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் தலைவர் பாண்டுரங்கள் தேசியக் கொடி ஏற்றினார். விருதுநகர் எம்.பி. அலுவல கத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print