அமெரிக்காவில் முதல் முறை: 605 அடி உயர கோபுரத்தில் பறந்த இந்திய தேசிய கொடி

வேறொரு நாட்டின் கொடி இந்தக் கோபுரத்தில் ஏற்றப்பட்டது இது முதல் முறை ஆகும். இந்திய வம்சாவளியினர் பலரும் தேசிய கொடி அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அமெரிக்காவில் முதல் முறை: 605 அடி உயர கோபுரத்தில் பறந்த இந்திய தேசிய கொடி
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இந்திய வம்சாவளியினர் பலர் வசித்து வருகின்றனர். அந்நகரின் வளர்ச்சிக்கு அவர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.

இந்நிலையில், சியாட்டில் நகரை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்த இந்திய-அமெரிக்க வம்சாவளியினரை அங்கீகரிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, சியாட்டில் நகரின் ஸ்பேஸ் நீடில் என்ற கோபுரத்தின் உச்சியில் இந்தியாவின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

605 அடி உயரம் கொண்ட இந்தக் கோபுரத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்படுவது வரலாற்று தருணம் ஆகும். வேறொரு நாட்டின் கொடி இந்தக் கோபுரத்தில் ஏற்றப்பட்டது இது முதல் முறையாகும். இந்திய வம்சாவளியினர் பலரும் தேசிய கொடி அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com