என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய கொடி"

    • வேறொரு நாட்டின் கொடி இந்தக் கோபுரத்தில் ஏற்றப்பட்டது இது முதல் முறை ஆகும்.
    • இந்திய வம்சாவளியினர் பலரும் தேசிய கொடி அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இந்திய வம்சாவளியினர் பலர் வசித்து வருகின்றனர். அந்நகரின் வளர்ச்சிக்கு அவர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.

    இந்நிலையில், சியாட்டில் நகரை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்த இந்திய-அமெரிக்க வம்சாவளியினரை அங்கீகரிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி, சியாட்டில் நகரின் ஸ்பேஸ் நீடில் என்ற கோபுரத்தின் உச்சியில் இந்தியாவின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

    605 அடி உயரம் கொண்ட இந்தக் கோபுரத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்படுவது வரலாற்று தருணம் ஆகும். வேறொரு நாட்டின் கொடி இந்தக் கோபுரத்தில் ஏற்றப்பட்டது இது முதல் முறையாகும். இந்திய வம்சாவளியினர் பலரும் தேசிய கொடி அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றி உரையாற்றினார்.
    • சிவலிங்கத்துக்கு தேசிய கொடி வண்ணங்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    லக்னோ:

    நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடி ஏற்றி உரையாற்றினார்.

    நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

    இந்நிலையில், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அமைந்துள்ள சிவலிங்கத்துக்கு தேசிய கொடி வண்ணங்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின் காசி விஸ்வநாதருக்கு தீப ஆராதனை நடந்தது. இந்த சிறப்பு அலங்காரத்தை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


    • கொடி கம்பங்கள் அகற்றுவதற்கு மாநகராட்சி சார்பில் ஊழியர்கள், ஜே.சி.பி. வாகனத்துடன் சென்றனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர்.

    கடலூர்:

    பொது இடங்களில் கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்தந்த நிர்வாகத்தினர் கொடி கம்பங்கள் அகற்றுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கடலூர் முதுநகர் அடுத்த சோனாங்குப்பம் பகுதியில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றுவதற்கு மாநகராட்சி சார்பில் ஊழியர்கள், ஜே.சி.பி. வாகனத்துடன் சென்றனர். பின்னர் அங்குள்ள கொடி கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் தேசியக்கொடி ஏற்றக்கூடிய கொடிக்கம்பத்தை மாநகராட்சி ஊழியர்கள் திடீரென்று இடித்து அகற்றினார்கள்.

    இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து கடும் கோபம் அடைந்து மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஜே.சி.பி. வாகனத்தை சிறை பிடித்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர்.

    பின்னர் பொதுமக்கள் ஜே.சி.பி. வாகனம் மற்றும் மாநகராட்சி ஊழியர்களை விடுவித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • இதில் 1,683 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
    • இந்த முயற்சி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

    ஆனேக்கல் :

    பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஹெப்பகோடியில் உள்ள தனியார் அகாடமி சார்பில் காகித படகுகள் மூலம் தேசிய கொடியை உருவாக்கும் முயற்சி நடந்தது. இதில் 1,683 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவ-மாணவிகள் காகிதத்தில் தேசிய கொடியை வரைந்து அதனை படகு போல வடிவமைத்து பிரமாண்ட தேசிய கொடியை உருவாக்கினர். சுமார் ஒரு மணி நேரத்தில் 2.30 லட்சம் காகித படகுகள் மூலம் தேசிய கொடியை மாணவ-மாணவிகள் உருவாக்கினர்.

    மாணவ-மாணவிகளின் இந்த முயற்சி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. மேலும் இந்த சாதனையை பாராட்டி எலைட் வேர்ட் ரெக்கார்ட், ஆசிய ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்திய ரெக்கார்ட்ஸ் அகாடமி ஆகியவை மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி உள்ளன. மேலும் மாணவ-மாணவிகளின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

    • தேசியக் கொடிகள் இறக்கப்படாமல் அலட்சியத்துடன் விடப்பட்டுள்ளன.
    • தேசியக் கொடிகளை முறையாக இறக்கி வைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    திருப்பூர் : 

    நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடு, கடைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களில் உள்ளிட்டவற்றில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார்.

    இதையடுத்து, குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்திலும் தேசியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன.

    மத்திய அரசின் அறிவுறுத்தலை பின்பற்றி கடைகள், வீடுகளுக்கு நேரடியாக சென்ற உள்ளாட்சி அமைப்பினர், தேசிய கொடிகளை வினியோகித்தனர். அவ்வாறு ஏற்றப்பட்ட தேசிய கொடிகளை முறையாக இறக்கி பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்எனவும் அறிவுறுத்தப்பட் டது. ஆனால் பெரும்பாலான குடியிருப்புகள், கடைகளில் நீண்ட நாட்கள் ஆகியும் தேசிய கொடி இறக்கப்படாமல் விடப்பட்டன.

    சிலர் தேசப்பற்றை வெளிப்படுத்துவதாக கூறி, பொது இடங்கள், மின் கம்பங்கள், செல்போன் டவர்கள், தொலைபேசி கம்பங்கள் உள்ளிட்டவற்றில் ஏற்றி வைத்தனர். சுதந்திர தினம் முடிந்ததும் இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை.தேசிய கொடியை சேதமடைய செய்வது மற்றும் அவமதிக்கும்படியான செயல்களை செய்தால் அது தேச விரோத குற்ற செயலாக கருதப்படுகிறது. குடியிருப்புகள், கடைகளில் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு 100 நாட்கள் நிறைவடைய உள்ளது. இருந்தும் பெரும்பாலான இடங்களில் தேசியக் கொடிகள் இறக்கப்படாமல் அலட்சியத்துடன் விடப்பட்டுள்ளன.

    இதனால் தேசிய கொடிகள் காற்றில் கீழே விழுந்து அழுக்கடைவதும், சேதமடைவதுமாக அவமதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே ஏற்றி வைக்கப்பட்டுள்ள தேசியக் கொடிகளை முறையாக இறக்கி வைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இது குறித்து உள்ளாட்சி நிர்வாகங்களுக்குமாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பெரியகுளம் நேரு நகர் சாந்தகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காமாட்சி என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
    • மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்ததால் காமாட்சியை விடுவித்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாயின் முதுகில் இந்திய தேசிய கொடியை கட்டிவிட்டு உலவவிட்டனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தேச விரோத செயல்களில் ஈடுபடும் இதுபோன்ற நபர்களை கைது செய்ய வேண்டும் என தேனி மாவட்ட பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நகரின் முக்கிய வீதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் அந்த நாய் எங்கெல்லாம் சென்று வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பெரியகுளம் நேரு நகர் சாந்தகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காமாட்சி(49) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்ததில் தான் குடிபோதையில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதனைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்ததால் காமாட்சியை விடுவித்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பா.ஜ.க நிர்வாகிகள் தெரிவிக்கையில், உண்மையான குற்றவாளிகளை பிடிக்காமல் வேறு ஒருவரை பிடித்து அவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்காமல் போலீசார் விடுவித்து விட்டதாக குற்றம்சாட்டினர்.

    • மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற காதியில் தயாரிக்கப்பட்ட தேசிய கொடிகளையே ஏற்ற வேண்டும்.
    • விதிகளுக்கு உட்பட்டு சென்னையில் உள்ள காதி கிராமோத் யோக் பவன் வாயிலாக தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    நாட்டின் 74-வது குடியரசு தினம் நாளை (26-ந் தேதி) வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை கடற்கரை சாலையில் தேசிய கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

    அதன் பிறகு தேசிய கொடி கோட்டையில் பறக்க விடப்படும். இந்த தேசிய கொடி ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற தேசிய கொடியாகும். மகாராஷ்டிரா மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட இந்த கொடி சென்னை வரவழைக்கப்பட்டு காதி கிராமோத் யோக் பவனில் தயாராக உள்ளது.

    இந்த தேசிய கொடி தயாரிப்பு பற்றி காதி கிராமோத் யோக் பவன் மேலாளர் சுந்தர் கூறியதாவது:-

    மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற காதியில் தயாரிக்கப்பட்ட தேசிய கொடிகளையே ஏற்ற வேண்டும்.

    மத்திய அரசின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நான்டெக் மரத்து வாடாவில் காதி நிறுவனத்தில் நான்கு இழைகளால் தேசிய கொடிகள் தயாரிக்கப்படுகிறது.

    இந்த தேசிய கொடிகளுக்கு என்று தனித்தனி அளவுகள் உள்ளது. கதர் வாரியம்தான் இந்த கொடிகளை விற்பனை செய்யும்.

    அந்த வகையில் விதிகளுக்கு உட்பட்டு சென்னையில் உள்ள காதி கிராமோத் யோக் பவன் வாயிலாக தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது.

    கோட்டையில் பறக்க விடப்படும் தேசிய கொடி உள்பட அனைத்து மத்திய-மாநில அரசு அலுவலகங்களும் நிறுவனங்களும் காதி நிறுவனத்தில்தான் தேசிய கொடியை வாங்குவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்தனர்
    • அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

    அரியலூர்ஞ

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் குடியரசுதின விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பெ.ரமண–சரஸ் வதி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். உலக சமா–தானத்தை விரும்பும் பொருட்டு வெண் புறாக் களை பறக்க–விடப்பட்டன.

    அரியலூர்:

    பின்னர் கலெக்டர் பெ.–ரமண–சரஸ்வதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகி–யோர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணி–வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப் புத்துறை, வருவாய்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பனியாற்றிய 162 பேருக்கு சான்றிதழ் வழங் கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கலை–வாணி, மாவட்ட திட்ட அலுவலர் ஈஸ்வரன், ஊராட்சி உதவி இயக்குனர் விஜய்சங்கர், பிற்பட்டோர் அலுவலர் குமார், ஆதி திராவிட நலஅலுவலர் விஜயபாஸ்கர், வேளாண் மைத்துறை இணை இயக்குனர் பழனி–சாமி, கலெக்டர் அலுவலக மேலாளர் முத்து–கிருஷ்ணன், கூட்டுறவு சங்க இணை–பதிவாளர் தீபாசங்கரி, இணைஇயக்குனர் ஜெயரா–மன், ஊரக வாழ்வா–தார திட்ட இயக்குனர் முரு–கண்ணன்,

    செய்திமக்கள் தொடர்பு அதிகாரி சுருளிபிரபு, உதவி அலுவலர் பிரபாகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, பொதுப்பணித்துறை அதிகாரி தேவேந்திரன், மணிவண்ணன், கலெக்ட–ரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை, அரசு மருத்து–வக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், ஆர்.டி.ஓ.க்கள் அரியலூர் ராமகிருஷ்ணன், உடை–யார்பாளையம் பரிமளம், தாசில்தார் அரியலூர் கண்ணன், செந்துறை பாக்கி–யம் விக்டோரியா, ஜெயங் கொண்டம் துரை, ஆண்டிமடம் அலிபுரகு–மான்,

    அரசு கேபிள் டி.வி. தாசில்தார் தேன்மொழி, நகராட்சி கமிஷனர் தம–யந்தி, யூனியன் கமிஷ–னர் அரியலூர் ஸ்ரீதேவி, செந்துறை விஸ்வநாதன், தமிழரசன், திருமானூர் ஜெயராஜ், ராஜா, ஜெயங் கொண்டம் முருகா–னந்தம், அமிர்த–லிங்கம், ஆண்டி–மடம் ஜாகிர்உசேன், குரு–நாதன், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் காம–ராஜ், ரவிசேகரன், டி.எஸ்.பி. ஆயுதப்படை மணவா–ளன், அரியலூர் சங்கர்கணேஷ், ஜெயங் கொண்டம் ராஜா சோமசுந்தரம், மாவட்ட குற்றப்பிரிவு பதிவேடு பிரிவு சுேரஷ் குமார், சமூகநீதி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் கோபிநாத், கார்த்திகேயன் உட்பட அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து–கொண்டனர்.

    பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, கிராம ஊராட்சிகளில் தேசியக்கொடி ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கி சிறப்பு கிராமசபை கூட்டம் நடை–பெற்றது.




    • ராஜபாளையத்தில் குடியரசு தினவிழா நடந்தது.
    • பள்ளி செயலர் பாலசுப்பிரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம், அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் 74-வது குடியரசு தினவிழா நடந்தது. மேனேஜிங் டிரஸ்டி என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ரமேஷ் தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    ராஜபாளையம் கிங்ஸ் சிட்டி ரோட்டரி சங்கம் ராமசுப்பிரமணியராஜா முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி விவே கானந்த கேந்திரத்தில் மாநில அளவில் நடந்த நாடகப்போட்டியில் முதல்பரிசு பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

    தேசிய மாணவர் படை மற்றும் சாரணர் இயக்க மாணவ தொண்டர்கள் நிகழ்த்திய அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர்கள் ஏற்றுக்கொண்டனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் என்.கே.ராம்விஷ்ணு ராஜா,

    என்.கே.ராம்வெங்கட் ராஜா, ராஜவேல்.சிவ குமார், செல்வ அழகு, சங்கிலி விக்ரம், கருத்தாளர் சிவகுமார், பழனியப்பன், ராமசாமி ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    ராஜபாளையம் முடங்கியார்ரோட்டில் பொன்விழா மைதானம் அருகில் உள்ள பண்ணையார் ஆர்ச் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் வந்து சென்ற புனித தலமான சுதந்திர தின நினைவு வளைவு கொடிக்கம்பத்தில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றபட்டது.

    ராஜுக்கள் கல்லூரி தேசிய மாணவர்படை மாணவர்கள், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் முன்னிலையில் ராஜபாளையம் தீயணைப்புநிலைய அதிகாரி சீனிவாசன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    இதற்கான ஏற்பாடுகளை தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோயில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் செய்திருந்தார்.

    வைமா கல்விக் குழுமப் பள்ளிகளில் ஒன்றான வைமா வித்யால யாவில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை ராஜலட்சுமி வரவேற்றார். முதல்வர் கற்பகலட்சுமி தேசியக் கொடி ஏற்றினார். 3-ம் வகுப்பு மாணவர் ருசித் வசீகரன், 2-ம் வகுப்பு மாணவர் அகிலேஷ் குடியரசு தினம் பற்றி பேசினர். 2-ம் வகுப்பு மாணவர் எழிலின்பன் தேச பக்தி பாடல் பாடினார்.

    5-ம் வகுப்பு மாணவி அமிர்தா குடியரசு தின கவிதை வாசித்தார். பிரி.கே.ஜி, எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. மாணவர்கள் தேசத் தலைவர்கள் போல் வேடம் அணிந்து வந்தனர். மாணவிகள் நடனம் ஆடினர். விழாவில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வைமா திருப்பதி செல்வன்.மேனேஜிங் டிரஸ்டி அருணா திருப்பதி செல்வன் வழிகாட்டுதலின்படி விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    ராஜபாளையம் பச்சமடம் திருவனந்தபுரம் தெருவில் உள்ள ராமலிங்கவிலாஸ் ஜெயராம் தொடக்க பள்ளியில் 74-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை வாசுகி வரவேற்றார்.

    பள்ளி செயலர் பால சுப்பிரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 31-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். அவருக்கு பள்ளி செயலர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

    • ஊராட்சி தலைவர் அதே கிராமத்தில் 3 இடங்களில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார்.
    • ஒரு கிராமத்தில் பல இடங்களில் குடியரசு தின விழா நடைபெற்றால் அனைத்து இடங்களிலும் ஒரே நபர் தேசியக் கொடியை ஏற்ற முடியாது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுகுணா. பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணான இவர் திருப்புட்குழி ஊராட்சியில் பொது வார்டில் போட்டியிட்டு ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளார். இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்.

    இவர் குடியரசு தின விழாவில் பங்கேற்க திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தேசிய கொடியை ஏற்றச் சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்கள் தடுத்துள்ளனர்.

    இதனால் அங்கு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தேசியக்கொடியை ஏற்றவில்லை.

    இதுபற்றி ஊராட்சி தலைவர் சுகுணா பாலுசெட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் தன்னை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்ததாக பாலசந்தர், செல்வம் ஆகியோர் மீது புகார் செய்தார். இதுகுறித்து சுகுணா கூறுகையில், என்னை எதிர்த்து போட்டியிட்டவர்களின் ஆதரவாளர்கள் என்னை பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர். பள்ளியில் என்னை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்தனர். அவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளேன். தலைமை ஆசிரியர் விஜயகுமாரி மீது பள்ளிக் கல்வித்துறையில் புகார் கொடுக்க உள்ளேன் என்றார்.

    இதுகுறித்து தலைமை ஆசிரியர் விஜயகுமாரி கூறுகையில், "நான் எனது விளக்கத்தை கலெக்டரிடம் தெரிவித்துவிட்டேன்" என்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி கூறுகையில், "ஊராட்சி தலைவர் ஆரம்ப பள்ளியில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடியை ஏற்ற வரும்போது முன் விரோதத்தில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் சுகுணா அங்கிருந்து வெளியேறினார். எனவே வேறு நபரை வைத்து தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர்" என்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    ஊராட்சி தலைவருக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தான் கொடி ஏற்ற முழு அதிகாரம் உள்ளது. பள்ளிக்கூடம் என்பது முழுக்க முழுக்க தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு அவர் தேசியக்கொடியை ஏற்றுவார். அவர் இல்லை என்றால் வேறு யாராவது ஏற்றலாம்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஊராட்சி தலைவர் அதே கிராமத்தில் 3 இடங்களில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார். ஒரு கிராமத்தில் பல இடங்களில் குடியரசு தின விழா நடைபெற்றால் அனைத்து இடங்களிலும் ஒரே நபர் தேசியக் கொடியை ஏற்ற முடியாது. பள்ளிகளில் ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று எந்த விதியும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தேசிய கொடி ஏற்றி வைத்து கட்டிடத்தை திறந்து வைத்தார்.
    • விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தென்னங்–கன்றுகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், கோடியக்காடு ஊராட்சியில் ரூ.23.56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தேசிய கொடி ஏற்றி வைத்து கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    இதில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், ராஜூ, ஒன்றிய பொறியாளர் மணிமாறன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சரவணன், ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான், சுந்தரம் உதவி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நீலமேகம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தென்னங்–கன்றுகள் வழங்கப்பட்டது.

    • இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • அத்துடன் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். ஒரு சிலர் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அதிகாரிகள் தூதரக வளாகத்தில் புதிய தேசியக் கொடியை பறக்கவிட்டனர்.

    இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்ற இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் மத்திய அரசு தலைநகர் புதுடெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரக அதிகாரிகளை அழைத்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய தூதரக வளாகம் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் இங்கிலாந்து அரசின் அலட்சியத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாது. தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வது மற்றும் வழக்கு தொடரும் வகையில் இங்கிலாந்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    ×