என் மலர்
நீங்கள் தேடியது "காஞ்சிபுரம் கலெக்டர்"
- பொதுமக்களிடம் பட்டா மாற்றம் செய்ய ரூ.5000 முதல் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது.
- தாசில்தார் மோகனை ஓரகடம் சிப்காட் தனி வட்டாட்சியர் பணிக்கு மாற்றம் செய்து கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பட்டா பெறுதல், பட்டா பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு நகர நிலவரித்திட்ட தாசில்தாரிடம் பொதுமக்கள் விண்ணப்பித்து வருகிறார்கள்.
அவ்வாறு விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் பட்டா மாற்றம் செய்ய ரூ.5000 முதல் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. சொத்தின் மதிப்புக்கு ஏற்றவாறு லஞ்சம் அதிக அளவில் கேட்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த அலுவலகத்துக்கு சென்ற தினேஷ், டில்லிபாபு ஆகிய இருவரிடம் அலுவலகத்தில் பணியாற்றும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் லஞ்சம் கேட்கும் `ஆடியோ, வீடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து தாசில்தார் மோகன் மற்றும் அலுவலக ஊழியர்களிடம், கோட்டாட்சியர் கனிமொழி விசாரணை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக தாசில்தார் மோகனை ஓரகடம் சிப்காட் தனி வட்டாட்சியர் பணிக்கு மாற்றம் செய்து கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
அவரது பணியிடத்தில் இந்துமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 9 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
- விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர்.
- அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டகலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 59 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் தாசில்தார்கள் மூலம் விண்ணப்பங்கள் கூராய்வு செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று எழுத்து தேர்வு கீழ்கண்ட மையங்களில் நடத்தப்படவுள்ளது.
எம்.எல்.எம்.மாமல்லன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பெரிய காஞ்சிபுரம். பாரதி தாசன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, தாண்டவராய நகர், ஓரிக்கை, பெரிய காஞ்சிபுரம், எஸ்.எஸ்.கே.வி. மெட்ரிக் பள்ளி, பெரிய காஞ்சிபுரம்.
ஆதி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, சங்கராபுரம், வாலாஜாபாத் எம்.சி.ஏ. மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பழைய சீவரம், வாலாஜாபாத், செயின்ட் ஜோசப் மேல்நிலை பள்ளி, பாரதி நகர், வாலாஜாபாத்.மீனாட்சி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உத்திரமேரூர்மீனாட்சி அம்மாள மெட்ரிக் மேல்நிலை பள்ளி, உத்திரமேரூர். மீனாட்சி அம்மாள் குளோபல் பள்ளி, பெருங்கோழி, உத்திரமேரூர். மகரிஷி பள்ளாட்டு உறைவிட பள்ளி, சுங்குவார் சத்திரம், மாதா என்ஜினீயரிங் கல்லூரி, குன்றத்தூர்.
இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைபேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலம் அனுமதி சீட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கிராம உதவியாளர் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியானேhttps://agaram.tn.gov.in/olineforms/formpage-open.phd?id=43-174என்ற இணையதளத்தினுள் சென்று பதிவு எண்ணையும், கைபேசி எண்ணையும் பதிவு செய்து அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் பதிவஞ்சலில் தேர்வு அனுமதிசீட்டு அனுப்பி வைக்கப்படும்.
மேலும், கூராய்வு செய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தேர்வர்கள் கேட்டு்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து விண்ணப்பதாரர்களும் தேர்வு நாளன்று கீழ்காணும் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்:
விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் எவரும் தேர்வு அறைக்குள் காலை 9.50-க்கு பின் அனுமதிக்கப்படமாட்டார்கள் மற்றும் காலை 10.50-க்கு முன் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள் கருப்பு பால்பாயின்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதி சீட்டு மற்றும் கருப்பு பால்பாயின்ட் பேனாவை தவிர தேர்வறைக்குள் வேறு எந்த பொருளையும் கொண்டுவரக் கூடாது.
விண்ணப்பதாரர்கள் அலைபேசி, புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டுவரக்கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனப் போட்டியில் அதிகபட்சம் 4 நிமிடங்கள் ஆட அனுமதிக்கப்படுவார்கள்.
- போட்டியில் சினிமா பாடல்களுக்கான நடனம் மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கலைப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் ஓரிக்கையில், சதாவரம் பகுதியில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகத்தில் அரசு காதுகோளாதோர் பள்ளி அருகில் வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். இதில் குரலிசைப் போட்டியில் முறையாக இசை பயிலும் சிறார்கள் பங்கு பெறலாம்.
தமிழில் அமைந்த இசை வடிவங்கள் பாட வேண்டும். பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனப் போட்டியில் அதிகபட்சம் 4 நிமிடங்கள் ஆட அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டியில் சினிமா பாடல்களுக்கான நடனம் மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை. நாட்டுப்புற நடன போட்டியில் நமது பாரம்பரிய கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் போன்ற நடனங்கள் மட்டும் ஆடப் பெற வேண்டும். ஓவியப் போட்டிக்கு ஓவியத்தாள், வண்ணங்கள் தூரிகைகள் உள்பட தங்களுக்கு தேவையானவற்றை போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும்.
ஓவிய தலைப்புகள் போட்டி தொடங்கும் முன்னர் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மண்டல உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம் மற்றும் தொலைபேசி எண். 044-2729148 அல்லது 8015136911 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கினார்.
- மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த டாக்டர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ-மாணவிகளால் அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சக்கர நாற்காலி, திறன்பேசி, ஊன்றுக்கட்டைகள், காதுக்கு பின் அணியும் காதொலிக்கருவி, மோட்டார் பொருந்திய தையல் எந்திரம் போன்ற உபகரணங்கள் 25 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 93 ஆயிரத்து 300 மதிப்பில் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த டாக்டர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) டாக்டர் செந்தில்குமரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மருத்துவர்கள், அனைத்து சிறப்பு பள்ளியின் தாளாளர்கள், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- காலிப்பணியிடமாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடம் மாவட்ட சமூக நல அலுவலர் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளது.
- விண்ணப்பப்படிவத்தினை https://Kancheepuram.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005 என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் காலிப்பணியிடமாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடம் மாவட்ட சமூக நல அலுவலர் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளது.
தகுதி உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பப்படிவத்தினை https://Kancheepuram.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டிடம் முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகம், காஞ்சிபுரம் என்ற முகவரியில் வருகிற 7-ந்தேதி மாலை 5.45க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடியில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
- சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.100 சேர்த்து மொத்தம் ரூ.2,160/- ம், இதர நெல் ரகங்களுக்கு ரூ.75 உயர்த்தி மொத்தம் ரூ.2,115 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடியில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் தங்களது நெல் அறுவடை மகசூலினை நல்ல விலைக்கு விற்பனை செய்ய காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் மூலமாக 11 தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து நெல் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்கண்ட வருவாய் கிராமங்களில் தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெறுகிறது. சிறுகாவேரிப்பாக்கம் குறுவட்டம், விஷார் கிராமத்திலும், பரந்தூர் குறுவட்டம், தொடூர் மற்றும் புரிசை கிராமங்கள், கோவிந்த வாடி குறுவட்டம், வேலியூர் மற்றும் கம்மவார்பாளையம் கிராமங்கள், சிட்டியம் பாக்கம் குறு வட்டம், சிட்டியம்பாக்கம் மற்றும் மருதம் கிராமங்களிலும், ஸ்ரீபெரும்புதூர் குறுவட்டம் (பிர்கா), நாவலூர் கிராமம் மற்றும் மதுரமங்கலம், மேல்மதுரமங்கலம் கிராமங்களிலும், படப்பை குறுவட்டம் (பிர்கா), அமரம்பேடு கிராமத்திலும், நெல் கொள்முதல் பணிகள் நடைபெறும்.
சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.100 சேர்த்து மொத்தம் ரூ.2,160/- ம், இதர நெல் ரகங்களுக்கு ரூ.75 உயர்த்தி மொத்தம் ரூ.2,115 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய விரும்பும் விவசாய பெருமக்கள் அனைவரும் உரிய ஆவணங்களான அடங்கல் சான்று, ஆதார், சிட்டா மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேரில் கொண்டு சென்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஸ்ரீதேவியும் இருளர் குடியிருப்பு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
- மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் திட்ட அலுவலர் ஸ்ரீதேவியின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினர்களுக்கு 76 குடியிருப்புகள் கட்டும்பணி நடந்து வருகிறது. இதேபோல் சிங்காடி வாக்கத்தில் 100 குடியிருப்புகளும், குண்டுகுளம் ஊராட்சியில் 58 குடியிருப்புகளும், மலையங்குளம் ஊராட்சியில் 178, குடியிருப்புகளும், காட்ரம்பாக்கத்தில் 31 குடியிருப்புகளும் என மொத்தம் 443 குடியிருப்புகள் ரூ.19 கோடியே 37 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது.
இந்த பணியை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கயல்விழி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்கிடையே முன்னதாக ஊத்துக்காடு ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் இருளர் குடியிருப்பு வீடுகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பணிகள் தரமற்று இருப்பது தெரிந்தது. அவர் சுவரில் செங்கல்களுக்கு இடையே இருந்த சிமெண்டுகளில் கைவைத்தபோது அது பெயர்ந்து விழுந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர் ஆர்த்தி காண்டிராக்டரை கண்டித்தார். மேலும் ஒதுக்கப்பட்ட நிதியில் முறையாக கட்டுமான பணி செய்ய வேண்டும் என்று எச்சரித்தார்.
இதேபோல் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஸ்ரீதேவியும் இருளர் குடியிருப்பு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பணிகள் மந்தமாகவும் தரமற்றும் இருப்பதை கண்டு அவர் அங்கிருந்த ஊழியர்களை கண்டித்தார்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவிவருகிறது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் திட்ட அலுவலர் ஸ்ரீதேவியின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி உள்ளனர். அனைத்து திட்டங்களிலும் இதேபால் அதிகாரிகள் ஆய்வு செய்தால் எந்த முறைகேடும் நடைபெறாமல் நலத்திட்டங்கள் முழுமையாக பயனாளிகளுக்கு கிடைக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
- தரமற்று கட்டுமான பணி செய்த ஒப்பந்ததாரரை கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- ஊத்துக்காடு ஊராட்சியில் தரமற்ற முறையில் இருளர் குடியிருப்பு வீடுகளை கட்டிய விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினருக்கு 76 குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதனை நேற்று முன் தினம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது குடியிருப்பு வீடுகள் தரமற்று கட்டப்படுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
அங்கேயே கட்டுமான ஒப்பந்ததாரரை அழைத்து கடுமையாக கண்டித்தார். ஒதுக்கப்பட்ட நிதியில் தரத்துடன் குடியிருப்புகளை கட்டி முடிக்க வேண்டும். இல்லையெனில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.
தரமற்று கட்டுமான பணி செய்த ஒப்பந்ததாரரை கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில் ஊத்துக்காடு ஊராட்சியில் தரமற்ற முறையில் இருளர் குடியிருப்பு வீடுகளை கட்டிய விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
வாலாஜாபாத் ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதா, கள ஆய்வாளர் சுந்தரவதனம் ஆகியோரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் ஆர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
கட்டுமானப்பணி செய்து வரும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
- ஊராட்சி தலைவர் அதே கிராமத்தில் 3 இடங்களில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார்.
- ஒரு கிராமத்தில் பல இடங்களில் குடியரசு தின விழா நடைபெற்றால் அனைத்து இடங்களிலும் ஒரே நபர் தேசியக் கொடியை ஏற்ற முடியாது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுகுணா. பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணான இவர் திருப்புட்குழி ஊராட்சியில் பொது வார்டில் போட்டியிட்டு ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளார். இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்.
இவர் குடியரசு தின விழாவில் பங்கேற்க திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தேசிய கொடியை ஏற்றச் சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்கள் தடுத்துள்ளனர்.
இதனால் அங்கு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தேசியக்கொடியை ஏற்றவில்லை.
இதுபற்றி ஊராட்சி தலைவர் சுகுணா பாலுசெட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் தன்னை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்ததாக பாலசந்தர், செல்வம் ஆகியோர் மீது புகார் செய்தார். இதுகுறித்து சுகுணா கூறுகையில், என்னை எதிர்த்து போட்டியிட்டவர்களின் ஆதரவாளர்கள் என்னை பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர். பள்ளியில் என்னை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்தனர். அவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளேன். தலைமை ஆசிரியர் விஜயகுமாரி மீது பள்ளிக் கல்வித்துறையில் புகார் கொடுக்க உள்ளேன் என்றார்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் விஜயகுமாரி கூறுகையில், "நான் எனது விளக்கத்தை கலெக்டரிடம் தெரிவித்துவிட்டேன்" என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி கூறுகையில், "ஊராட்சி தலைவர் ஆரம்ப பள்ளியில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடியை ஏற்ற வரும்போது முன் விரோதத்தில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் சுகுணா அங்கிருந்து வெளியேறினார். எனவே வேறு நபரை வைத்து தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர்" என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
ஊராட்சி தலைவருக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தான் கொடி ஏற்ற முழு அதிகாரம் உள்ளது. பள்ளிக்கூடம் என்பது முழுக்க முழுக்க தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு அவர் தேசியக்கொடியை ஏற்றுவார். அவர் இல்லை என்றால் வேறு யாராவது ஏற்றலாம்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஊராட்சி தலைவர் அதே கிராமத்தில் 3 இடங்களில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார். ஒரு கிராமத்தில் பல இடங்களில் குடியரசு தின விழா நடைபெற்றால் அனைத்து இடங்களிலும் ஒரே நபர் தேசியக் கொடியை ஏற்ற முடியாது. பள்ளிகளில் ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று எந்த விதியும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை அவர்களது வங்கி சேமிப்பு கணக்கில் அனுப்பட்டு வருகிறது.
- தேசிய அடையாள அட்டை பெற்றிருப்பின் அதன் நகல் ஆகிய சான்றுகளை அரசுக்கு சமர்பிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வழியாக மனவளச்சி குன்றிய மாற்றுத்திறனாளி, கடுமையாக பாதிக்கப்பட்டவர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் மற்றும் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையானது மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் அவர்களது வங்கி சேமிப்பு கணக்கில் அனுப்பட்டு வருகிறது.
தற்போது பயனாளிகளில் சுய விவரங்களான மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை நகல், ரேஷன்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், வங்கி புத்தக நகல் புகைப்படம்-1 மனவளர்ச்சி குன்றியோரயிருப்பின் பெற்றோர்ருடன் இணைந்த புகைப்படம்-1 தனித்துவம் வாய்ந்த, தேசிய அடையாள அட்டை பெற்றிருப்பின் அதன் நகல் ஆகிய சான்றுகளை அரசுக்கு சமர்பிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
தாங்கள் டிசம்பர்-2022 மாதம் வரை பராமரிப்பு உதவித்தொகை பெற்று, ஜனவரி-2023 மாதம் உதவித்தொகை பெறாதவர்கள் மட்டும், பராமரிப்பு உதவிதொகை தொடர்ந்து பெறவேண்டுமாயின் தாங்கள் உடனடியாக மேற்கானும் சான்றுகளை, இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தரைதளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், காஞ்சிபுரம் (அலுவலக தொலைபேசி எண்:-044-29998040 என்ற அலுவலகத்தில் இந்த மாதம் 17-ந்தேதி (வெள்ளிகிழமை)-க்குள் சமர்பித்து தங்களுக்கான பராமரிப்பு உதவித்தொகையினை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மனுநீதி நாள் முகாமை முன்னிட்டு பெறப்பட்ட மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
- வில்லிவலம் நியாய விலைக்கடையை பார்வையிட்டு, வழங்கப்படும் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தார்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், வில்லிவலம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 181 பயனாளிகளுக்கு ரூ.93.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி வழங்கினார். அப்போது பேசிய அவர் மனுநீதி நாள் முகாமை முன்னிட்டு பெறப்பட்ட மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
பின்னர் வில்லிவலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு சமையல் கூடத்தை ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, உணவின் தரத்தை ஆய்வு செய்தார். பின்னர் வில்லிவலம் கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடையை பார்வையிட்டு, வழங்கப்படும் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் இருப்பு பதிவேட்டினை ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை, அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகிறது.
மேலும், மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகிறது. இதை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது இந்த திட்டம் மூலம் தற்போது அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணையவழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் நோக்கமானது, இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.
மேலும், இ-சேவை வலைத்தளத்திலிருந்து (www.tnesevai.tn.gov.in/www.tnega.tn.gov.in) இணையவழி சேவைகளை மக்களுக்கு வழங்கும் "அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்கள் அடுத்த மாதம் 14-ந்தேதி இரவு வரை விண்ணப்பிக்கலாம். அவர்களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






