search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனுநீதி நாள் முகாமில் 181 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்
    X

    மனுநீதி நாள் முகாமில் 181 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்

    • மனுநீதி நாள் முகாமை முன்னிட்டு பெறப்பட்ட மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
    • வில்லிவலம் நியாய விலைக்கடையை பார்வையிட்டு, வழங்கப்படும் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தார்

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், வில்லிவலம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 181 பயனாளிகளுக்கு ரூ.93.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி வழங்கினார். அப்போது பேசிய அவர் மனுநீதி நாள் முகாமை முன்னிட்டு பெறப்பட்ட மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

    பின்னர் வில்லிவலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு சமையல் கூடத்தை ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, உணவின் தரத்தை ஆய்வு செய்தார். பின்னர் வில்லிவலம் கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடையை பார்வையிட்டு, வழங்கப்படும் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் இருப்பு பதிவேட்டினை ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×