என் மலர்
பிரிட்டன்
- சர்வதேச கடல்சார் அமைப்பின் நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது.
- மொத்தமுள்ள 169 வாக்குகளில் 154 வாக்குகள் இந்தியாவுக்கு கிடைத்தது.
லண்டன்:
சர்வதேச கடல்சார் அமைப்பு (ஐ.எம்.ஓ) கடல்சார் தொழிலை ஒழுங்குபடுத்தும் முன்னணி அதிகார அமைப்பாகும். இது உலகளாவிய கடல்சார் வர்த்தகம், போக்குவரத்து மற்றும் அனைத்து கடல்சார் நடவடிக்கைகளையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
இந்நிலையில், சர்வதேச கடல்சார் அமைப்பின் நிர்வாகக் கூட்டம் லண்டனில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது சர்வதேச கடல்சார் அமைப்பின் (ஐ.எம்.ஓ) கவுன்சிலுக்கு இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. மொத்தமுள்ள 169 வாக்குகளில் 154 வாக்குகள் இந்தியாவுக்கு ஆதரவாகக் கிடைத்தது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய கடல்சார் களத்தில் தொடர்ந்து சேவை செய்வதற்காக, இந்தியாவிற்கான சர்வதேச கடல்சார் அமைப்பில் சர்வதேச சமூகத்தின் பெரிய அளவிலான ஆதரவை இந்தியா பெற்றுள்ளது என தெரிவித்தது.
- உலகையே உலுக்கிய இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகள் மீட்கப்பட்டு அவை ஏலத்துக்கு விடப்படுகின்றன.
லண்டன்:
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவுக்கு 1912-ம் ஆண்டு டைட்டானிக் என்ற கப்பல் புறப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலில் சென்றபோது அந்தக் கப்பல் பனிப்பாறையில் மோதியது.
உலகையே உலுக்கிய இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து 1997-ம் ஆண்டு டைட்டானிக் என்ற பெயரில் திரைப்படமாக வந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது.
இதற்கிடையே, அந்தக் கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகள் மீட்கப்பட்டு அவ்வப்போது ஏலத்துக்கு விடப்படுகின்றன.
இந்நிலையில், அமெரிக்க தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் என்ற பயணியின் தங்க கடிகாரம் ஒன்று இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரில் ஏலத்துக்கு விடப்பட்டது. இந்தக் கடிகாரம் சுமார் ரூ.20 கோடிக்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
இது டைட்டானிக் கப்பல் தொடர்பான நினைவுப் பொருட்களின் அதிகபட்ச ஏலத்தொகை ஆகும். இதன்மூலம் டைட்டானிக் தொடர்பான மொத்த ஏலத்தொகை ரூ.35 கோடியை தாண்டியதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
- போரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த 66,000 போ கொல்லப்பட்டனர்.
- காசாவில் சுமார் 20,000 பேர் பசி, பட்டினியால் தவிக்கவிடப்பட்டனர்.
பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தாக்குதல் நடத்தியது. 2 ஆண்டுகளாக நீடித்த இந்தப் போர் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. இருப்பினும், அங்கு அவ்வப்போது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தப் போரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த 66,000 போ கொல்லப்பட்டனர். சுமார் 20,000 பேர் பசி, பட்டினியால் தவிக்கவிடப்பட்டனர்.
இந்நிலையில், "ஈரானை விட பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது இஸ்ரேல்தான்" என அறிவித்து Oxford Union Society தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இங்கிலாந்தின் 202 ஆண்டுகள் பழமையான விவாத சங்கமான Oxford Union Society-யில், பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு நடந்த வாக்கெடுப்பில் தீர்மானம் நிறைவேறியது.
- கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் இதன் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மன்னர் சார்லஸ் பணிமனை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
லண்டன்:
இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் நகரில் சுமார் ரூ.1,100 கோடி மதிப்பில் ரெயில் பணிமனை கட்டும் பணி நடந்து வந்தது.
இதில் 36 புதிய டிராம் வண்டிகள் நிறுத்தப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இதன் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற மன்னர் சார்லஸ் பணிமனை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
அதன்பின் யாரும் எதிர்பாரா வகையில் திடீரென அவரே அந்த டிராம் வண்டியை சிறிது தூரத்துக்கு ஓட்டிச் சென்றார்.
அதன்பிறகு டிராம் வண்டிக்குள் பொதுமக்களுடன் பயணித்தார். இச்சம்பவம் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
- இலக்கியத்துக்கான உயரிய கவுரவங்களில் ஒன்றாகக் கருதப்படுவது புக்கர் பரிசு.
- இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசு ஹங்கேரி எழுத்தாளர் டேவிட் சலாய்க்கு அறிவிக்கப்பட்டது.
லண்டன்:
இலக்கியத்துக்கான உயரிய கவுரவங்களில் ஒன்றாகக் கருதப்படும் புக்கர் பரிசு இங்கிலாந்து அரசாங்கத்தால் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது. 1969-ம் ஆண்டு முதல் காமன்வெல்த் நாடுகளுக்கு வழங்கப்பட்ட இந்த விருது தற்போது உலக நாடுகளில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தாண்டுக்கான புக்கர் பரிசு ஹங்கேரி எழுத்தாளர் டேவிட் சலாய் எழுதிய பிளெஷ் என்னும் புனைவு நாவலுக்கு அறிவிக்கப்பட்டது.
கனடாவில் பிறந்து இங்கிலாந்தில் வளர்ந்து தற்போது ஹங்கேரி நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இது பூமிக்கும் மனிதனுக்கும் இடையிலான ஆத்மார்த்த உறவு குறித்து பேசப்படுவதாக அமைந்துள்ளது.
லண்டனில் அவருக்கு புக்கர் பரிசுக்கான நினைவு சின்ன கோப்பையும், ரூ.55 லட்சத்திற்கான (66 ஆயிரம் டாலர்கள்) காசோலையும் வழங்கப்பட்டது.
- ஹண்டிங்டன் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டு சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர்.
- கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கெர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இங்கிலாந்தில் டான்காஸ் டரில் இருந்து லண்டன் கிங்ஸ் கிராஸ் பகுதிக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் கேம்பிரிட்ஜ்ஷையர் அருகே ஹண்டிங்டன் பகுதியில் வந்தபோது மர்ம நபர்கள் பயணிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். சிலர் கழிவறைக்குள் சென்று பதுங்கி கொண்டனர்.
இதுகுறித்து பயணிகள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஹண்டிங்டன் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டு சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது ரெயிலில் இருந்து பயணிகள் பயத்துடன் அவசர அவசரமாக வெளியேறினார்கள்.
இந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 9 பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பயங்கரவாத எதிர்ப்பு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவர் பெரிய கத்தியை வைத்து இருந்தார் என்றும் எங்கே பார்த்தாலும் ரத்தம் இருந்தது என்றும் சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் அதிர்ச்சியுடன் தெரிவித்தார்.
கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கெர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்து உள்ளார். "ஹண்டிங்டன் அருகே ரெயிலில் நடந்த தாக்குதல் சம்பவம் பயங்கரமானது மற்றும் ஆழ்ந்த கவலைக்குரியது. பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன.
அவசர நடவடிக்கைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் போலீசாரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்" என்றார்.
- பஞ்சாப்பை சேர்ந்த அந்த பெண் ஓல்ட்பரி பகுதியில் வசித்து வந்துள்ளார்.
- வெள்ளையின இளைஞர் ஒருவர் இந்திய பெண் என்பதால் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இங்கிலாந்தின் வெஸ்ட்மிட்லாண்ட்ஸ் பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கராம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப்பை சேர்ந்த அந்த பெண் ஓல்ட்பரி பகுதியில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த பெண்ணை 30 வயதுடைய வெள்ளையின இளைஞர் ஒருவர் இன ரீதியாக இந்திய பெண் என்பதால் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த பெண் மன உளைச்சலுடன் தெருவில் அமர்ந்திருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வால்சாலின் பார்க் ஹால் பகுதிக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட இளைஞர் ஒருவர் பெண்ணின் வீட்டு கதவை உடைத்து அத்துமீறி உள்ளே சென்று அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் சேகரித்தனர். இதில் கருப்பு நிற உடை அணிந்து வந்த வாலிபர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அவரின் புகைப்படத்தை வெளியிட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
குற்றவாளியை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்
- மான்செஸ்டர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது.
- இதை புனரமைக்கும் பணி கடந்த சில மாதமாக நடைபெற்று வந்தது.
லண்டன்:
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்தக் கட்டிடத்தை புனரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
அப்போது கட்டிடத்தின் ஒரு பகுதியை இடிக்க அனுமதி கோரப்பட்டு இருந்தது. எனவே அந்தக் கட்டிடத்தின் இடிபாடுகள் இர்வெல் ஆற்றில் விழும்படி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து சுமார் 500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து அடுக்குமாடி கட்டிடத்தின் ஒரு பகுதி வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. கட்டிடம் இடிந்து விழுந்தபோது அங்கு வசிக்கும் மக்கள் பயங்கர அதிர்வை உணர்ந்தனர். இதனால் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக கருதி பீதியடைந்தனர்.
- ஆண்ட்ரூ மீதான வர்ஜீனியாவின் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
- வர்ஜீனியா இந்தாண்டு ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டார்
அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூவும் மீது வர்ஜீனியா கியூஃப்ரே (41) என்ற பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், பாலியல் அடிமையாகப் பயன்படுத்தியதாகவும், இளவரசர் ஆண்ட்ரூவும் 17 வயதில் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் வர்ஜீனியா குற்றம் சாட்டினார்.
இளவரசர் ஆண்ட்ரூவுடன் உடலுறவு கொள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனக்கு 15,000 டாலர் கொடுத்ததாக வர்ஜீனியா வெளிப்படுத்திய ஆதாரங்கள் அடங்கிய நீதிமன்ற ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் பல சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்த வழக்கில் 2008 இல் தண்டனை பெற்ற ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019 இல் நியூயார்க் நகர சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் அளித்த வர்ஜீனியா இந்தாண்டு ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தொடர்ந்து தனது அரச பட்டங்களை துறப்பதாக பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து இளவரசர் ஆண்ட்ரூ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதற்கான எனது முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன்.
தற்பொழுது மன்னராட்சியின் ஒப்புதலுடன் எனது பட்டத்தையோ அல்லது எனக்கு வழங்கப்பட்ட கௌரவங்களையோ இனி நான் பயன்படுத்த மாட்டேன் என்று முடிவு செய்துள்ளேன். நான் முன்பு கூறியது போல், என் மீதான குற்றச்சாட்டுகளை நான் உறுதியாக மறுக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- ஹிலாரி என்ற பெயரில் சாலிஸ்பரி அருகே வசிப்பது தெரிய வந்தது.
- இதையடுத்து, தந்தை - மகள் இருவரும் நேரில் சந்தித்தனர்.
லண்டன்:
இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரைச் சேர்ந்தவர் கெவின் ஜோர்டான். இவர் தனது பள்ளி பருவத்தில் ஜாக்கி என்பவரை காதலித்து வந்தார்.
அப்போது அவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பள்ளி பருவம் என்பதால் அவர்களது பெற்றோர் இதனை அவமானமாகக் கருதினர்.
எனவே அவர்களது அறிவுறுத்தலின் பேரில் அந்தக் குழந்தையை தத்து கொடுத்தனர். ஆனால் அவர்கள் வளர்ந்த பிறகு இருவரும் திருமணம் செய்து குழந்தைகள் பிறந்தன.
இதற்கிடையே, கடந்த 2013-ம் ஆண்டு ஜாக்கி இறந்தார். அதன்பிறகு சிறு வயதில் தத்து கொடுத்த தனது மகளை கண்டுபிடிக்க கெவின் முடிவு செய்தார். இதற்காக தனியார் தொலைக்காட்சி உதவியை நாடினார்.
இந்நிலையில், அவரது மகள் ஹிலாரி என்ற பெயரில் சாலிஸ்பரி அருகே வசிப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரும் நேரில் சந்தித்தனர்.
50 ஆண்டுக்கு பிறகு நடந்த இந்த சந்திப்பு இங்கிலாந்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- 66 டெஸ்ட் போட்டி, 69 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றி உள்ளார்.
- டிக்கி பேர்டின் துல்லியமான முடிவுகள் மற்றும் ஸ்டைலால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.
லண்டன்:
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல அம்பயர் ஹரோல்ட் டிக்கி பேர்ட், வயது முதிர்வால் இன்று காலமானார் (92).
இங்கிலாந்தின் யார்க்ஷைரின் பர்ன்ஸ்லே பகுதியைச் சேர்ந்தவர் ஹரோல்ட் டிக்கி பேர்ட். இவர் 1956 முதல் 1965 வரை யார்க்ஷையர் மற்றும் லெய்செஸ்டர்ஷையர் அணிக்காக 93 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2 சதமடித்துள்ளார்.
1970-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் கிரிக்கெட் போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்ற துவங்கினார். அதன்பின், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு அம்பயராக அறிமுகமானார். அது முதல் 66 டெஸ்ட் போட்டி, 69 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றி உள்ளார். அதில் 3 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களும் அடங்கும். டிக்கி பேர்டின் துல்லியமான முடிவுகள் மற்றும் அவரது ஸ்டைலால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.
கிரிக்கெட்டில் அவர் ஆற்றிய பணிக்காக பல விருதுகளை பெற்றுள்ளார். டிக்கி பேர்ட் மரணத்துக்கு கிரிக்கெட் ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வர்கள் லண்டன் வீதிகளில் இறங்கி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டக் காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட் டது.
இங்கிலாந்தில் வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறுபவர்களுக்கு எதிராக அந்நாட்டின் தீவிர வலதுசாரி ஆர்வலரான டாமி ராபின்சன் தலைமையில் லண்டனில் பிரமாண்ட பேரணி நடந்தது.
சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வர்கள் லண்டன் வீதிகளில் இறங்கி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக் காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட் டது. இதில் 26 போலீசார் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. இங்கிலாந்து சகிப்புத் தன்மை, பன்முகத்தன்மை, மற்றும் மரியாதை ஆகிய வற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு. நமது கொடி நமது பன்முகத்தன்மையை குறிக்கிறது. ஆனால் இன ரீதியான மிரட்டலை பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
மற்றவர்களை மிரட்டுவதன் மூலமாகவோ , அல்லது பணியில் இருக்கும் அதிகாரிகளை தாக்குவதன் மூலமாகவோ அவர்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






