என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Greta Thunberg"

    • காசாவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
    • இஸ்ரேலியப் படைகள் கப்பல்களில் ஏறும் வீடியோ காட்சிகளையும் சுமுட் புளோட்டிலா வெளியிட்டுள்ளது.

    பாலஸ்தீன நகரமான காசா மீது தொடர் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், அங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் உதவிப்பொருட்கள் கிடைப்பதையும் கட்டுப்படுத்தி வருகிறது.

    இதனால் ஒரு புறம் இஸ்ரேலின் வெடிகுண்டு, பீரங்கி, துப்பாக்கிகளுக்கு இரையாகும் மக்கள் மறுபுறம் பட்டினியாலும் உயிரிழந்து வருகின்றனர்.

    இந்நிலையில் காசாவிற்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற குளோபல் சீ ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) கப்பல்களை இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளது.

    மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கில், ஸ்பெயினின் பார்சிலோனாவிலிருந்து குளோபல் சீ ஃப்ளோட்டிலா புறப்பட்டது. இந்த ஃப்ளோட்டிலா 44 நாடுகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிய கப்பல்களைக் கொண்ட குழுவாகும்.

    இவை இன்று (வியாழக்கிழமை) காலை உதவிகளுடன் காசாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் காசாவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. அதில் வருகை தந்த ஸ்வீடிஷ் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மற்றும் பிறரை இஸ்ரேல் இராணுவம் தடுத்து நிறுத்தி சிறைபிடித்துள்ளது.

    குளோபல் சுமுட் கப்பல்கள் பாதுகாப்பாக தடுத்து நிறுத்தப்பட்டு, அதில் இருந்த மக்கள் இஸ்ரேலிய துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மோதல் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்று இஸ்ரேலிய கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அவர்களின் பாதையை மாற்றுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சுமுட் புளோட்டிலா தனது அறிக்கையில், இஸ்ரேலிய கடற்படை, அல்மா, சிரியஸ் மற்றும் அதாரா ஆகிய கப்பல்களை இடைமறித்து, கப்பல்களில் ஏறி நேரடி தகவல்தொடர்புகளைத் துண்டித்ததாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் கப்பல்களில் ஏறும் வீடியோ காட்சிகளையும் சுமுட் புளோட்டிலா வெளியிட்டுள்ளது. 

    • உணவு விநியோக மையத்தில் காத்திருந்த 25க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
    • இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 55,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    காசாவுக்கு உதவிப் பொருட்களுடன் 'மேடலின்' கப்பலில் சென்ற பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க், இஸ்ரேலிய ராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை இரவு தனது சொந்த நாடான ஸ்வீடனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

    நேற்று, ஸ்டாக்ஹோமில் உள்ள அர்லாண்டா விமான நிலையத்தில் பாலஸ்தீனக் கொடிகளுடன் அவரது ஆதரவாளர்கள் அவரை வரவேற்றனர்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இஸ்ரேலிய இராணுவத்திற்கு நான் பயப்படவில்லை; காசாவில் நடக்கும் இனப்படுகொலை குறித்து உலகம் தொடர்ந்து மௌனம் காப்பதைக் கண்டுதான் பயப்படுகிறேன்" என கிரேட்டா தெரிவித்தார்.

    சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் தனது குழுவைக் கடத்திச் சென்றதாகவும், இஸ்ரேலிய ராணுவம் தங்களை அவமானப்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

    காசாவில் பாலஸ்தீனியர்கள் எதிர்கொள்ளும் இனப்படுகொலை மீது உலகின் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

    காசாவின் நிலை:

    சர்வதேச அழுத்தத்தை மீறி, காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றன. சமீபத்திய தாக்குதல்களில் உணவு விநியோக மையத்தில் காத்திருந்த 25க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    மேற்கு காசாவில் இஸ்ரேலிய ஆளில்லா விமானத் தாக்குதலில் அகதிகள் கூடாரம் தாக்கப்பட்டதில் நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

    அக்டோபர் 7, 2023 முதல் காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 55,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 18 அன்று நடந்த போர்நிறுத்த மீறலுக்குப் பிறகு மட்டும் 4,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

    • இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடைமுறைகளை உலகிற்கு அம்பலப்படுத்தும் நோக்கமாக காசா பயணம்.
    • இஸ்ரேல் ராணுவம் அவர்களை தடுத்து நிறுத்தியது. தற்போது தன்பர்க்கை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.

    காசாவுக்குள் கடந்த 3 மாதங்களாக உணவு மற்றும் உதவிப் பொருட்கள் செல்வதை இஸ்ரேல் தடுத்தது. இந்நிலையில் காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச்சென்ற மெடலின் என்ற கப்பலை இஸ்ரேல் சிறை பிடித்துள்ளது.

    ஸ்வீடனை சேர்ந்த காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் தலைமையிலான 12 தன்னார்வலர்களுடன் அந்த கப்பல் ஜூன் 1ஆம் தேதி இத்தாலியின் மத்திய தரைக்கடல் தீவுப் பகுதியான சிசிலியிலிருந்து புறப்பட்டது.

    சர்வதேச சட்டத்தை மீறும் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடைமுறைகளை உலகிற்கு அம்பலப்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கமாகும். காசாவில் உள்ள ஒரே பெண் மீனவரின் பெயரால் 'மேடலின்' என்று கப்பலுக்கு பெயரிடப்பட்டது.

    ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் பிரெஞ்சு உறுப்பினர் ரிமா ஹாசன், நடிகை லியான் கன்னிங்ஹாம் மற்றும் ஜெர்மன் மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் அகார் ஆகியோரும் இந்த பயணக்குழுவில் இருந்தனர்.

    கப்பலை கைப்பற்றிய இஸ்ரேல், அதில் உள்ள பயணிகள் காசாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தது.

    இந்த நிலையில் கிரேட்டா தன்பர்க்கை, அவரது சொந்த நாடானா ஸ்வீடனுக்கு இஸ்ரேல் அனுப்பி வைத்துள்ளது. பிரான்ஸ்க்கு அவர் விமானத்தில் ஏற்றி விட்டுள்ளனர். பிரான்ஸ் சென்று அங்கிருந்து ஸ்வீடன் செல்கிறார்.

    தடுத்து நிறுத்தப்பட்டுள்ள மற்ற ஆர்வலர்களையும் விடுவிக்க வேண்டும் என தன்பர்க் வலியுறுத்தியுள்ளார். மேலும், தடுத்து நிறுத்தியபோது குழப்பமான, நிச்சயமற்ற சூழ்நிலை உருவானது எனத் தெரிவித்துள்ளார்.

    • காசாவில் உள்ள ஒரே பெண் மீனவரின் பெயரால் 'மேடலின்' என்று கப்பலுக்கு பெயரிடப்பட்டது.
    • கிரேட்டா தன்பர்க் தலைமையிலான 12 தன்னார்வலர்களுடன் அந்த கப்பல் கடந்த வாரம் பயணத்தை தொடங்கியது.

    காசாவுக்குள் கடந்த 3 மாதங்களாக உணவு மற்றும் உதவிப் பொருட்கள் செல்வதை இஸ்ரேல் தடுத்தது. இந்நிலையில் காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற மெடலின் என்ற கப்பலை இஸ்ரேல் சிறை பிடித்துள்ளது.

    அந்தக் கப்பல் இஸ்ரேலின் ஆஷ்டோட் துறைமுகத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    ஸ்வீடனை சேர்ந்த காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பர்க்  தலைமையிலான 12 தன்னார்வலர்களுடன் அந்த கப்பல்  ஜூன் 1 ஆம் தேதி இத்தாலியின் மத்திய தரைக்கடல் தீவுப் பகுதியான சிசிலியிலிருந்து கப்பல் புறப்பட்டது.

    சர்வதேச சட்டத்தை மீறும் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடைமுறைகளை உலகிற்கு அம்பலப்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கமாகும்.

    காசாவில் உள்ள ஒரே பெண் மீனவரின் பெயரால் 'மேடலின்' என்று கப்பலுக்கு பெயரிடப்பட்டது.

    ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் பிரெஞ்சு உறுப்பினர் ரிமா ஹாசன், நடிகை லியான் கன்னிங்ஹாம் மற்றும் ஜெர்மன் மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் அகார் ஆகியோரும் இந்த பயணக்குழுவில் உள்ளனர்.

    இந்நிலையில் கப்பலை கைப்பற்றியுள்ள இஸ்ரேல், அதில் உள்ள பயணிகள் காசாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இஸ்ரேல் மேடலின் கப்பலையும் தன்னார்வலர்களையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் காசாவில் தனது படுகொலைகளைத் தொடர்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், காசாவில் 108 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உணவு தேடி உதவி மையம் வந்த மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்துள்ளனர்.  

    ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா. பருவநிலை மாநாடு கடந்த 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    கிளாஸ்கோ:

    கிளாஸ்கோவில் பருவநிலை மாநாடு நடக்கும் இடத்திற்கு வெளியே சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் ஒரு பேரணியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    கிளாஸ்கோவில் நடந்த ஐ.நா. பருவநிலை மாநாடு தோல்வி அடைந்துள்ளது. விதிகளில் ஓட்டைகளை தீவிரமாக உருவாக்கி அங்குள்ள தலைவர்கள் தங்கள் நாட்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மாசுபடுத்துபவர்களைக் கட்டுப்படுத்த கடுமையான விதிகளை உருவாக்க வேண்டும்.

    உலகத் தலைவர்கள் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவர்களால் தப்பிக்க முடியாது.

    அவர்களிடம் பருவநிலை மாற்றம் குறித்து பேசி பேசி நாம்தான் சோர்வாகிவிட்டோம். ஆகவே இனி அவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, மாற்றத்துக்கான முன்னெடுப்பை நாமே எடுப்போம். ஒருமித்த கருத்தைப் புறக்கணிக்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களால் நம்மைப் புறக்கணிக்க முடியாது என தெரிவித்தார்.

    ×