என் மலர்
நீங்கள் தேடியது "Israel"
- நேற்று முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் செல்லும் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
- சென்னைக்கு வரவேண்டிய 16 வருகை விமானங்களும் என் 33 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தங்களது விமான நிலையத்தை மூடிவிட்டது. இதனால் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் செல்லும் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
நேற்று 2-வது நாளாக சென்னையில் இருந்து வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு புறப்பட்டு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து துபாய், 3 அபுதாபி, சார்ஜா, பக்ரைன், குவைத், மஸ்கட் செல்லும் 17 புறப்பாடு விமானங்களும், அங்கிருந்து சென்னைக்கு வரவேண்டிய 16 வருகை விமானங்களும் என் 33 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் 3-வது நாளாக சென்னையில் 36 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கு வரும் 18 விமானங்கள், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்தாகி உள்ளன.
3-வது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
- ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார்.
- மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 14 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.
மேலும், அந்த நாடுகளின் முக்கிய இடங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 14 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஈரானின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று வளைகுடா நாடுகள் பரபரப்பு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "பதற்றத்தைத் தணிக்க மேற்கொண்ட பலகட்ட தூதரக முயற்சிகளையும் மீறி, ஈரான் தாக்கி வருகிறது. எங்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்.
- மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது.
இதனிடையே,பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரக அதிபா் ஷேக் முகமது பின் ஸயத் அல்நஹ்யானிடம் தொலைபேசி வாயிலாக நேற்று பேசினாா்.
அப்போது யுஇஏ மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தாா்.
இந்நிலையில், பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினார். போர் நடவடிக்கைகளை விரைவில் நிறுத்தவேண்டும் என்று பிரதமர் மோடி அவரிடம் வலியுறுத்தினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தற்போதைய பிராந்திய நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த இந்தியாவின் கவலைகளைத் தெரிவித்ததோடு, பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்குமாறு வலியுறுத்தினேன். போர் நடவடிக்கைகளை விரைவில் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.
- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடங்கியுள்ள போர் நடவடிக்கையில் 3 வீரர்கள் பலியாகினர்.
- ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறியதை அமெரிக்கா மறுத்தது.
வாஷிங்டன்:
அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடங்கியுள்ள போர் நடவடிக்கையில், அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 5 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறியதை அமெரிக்கா மறுத்துள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில், ஈரான் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன.
ஈரானின் இந்தத் தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்கின் அரசியல் நிலைத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.
- ஈரானின் நவீன Jamaran-class போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தி அழித்ததாக அமெரிக்க ராணுவம் அறிவிப்பு
- ஈரானின் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதி பலி
இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் 48 ஈரானியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் அடைந்து வரும் வெற்றியை யாராலும் நம்ப முடியவில்லை. ஒரே அடியில் (ஒரே நேரத்தில்) 48 தலைவர்கள் வீழ்த்தப்பட்டனர். மேலும் இது மிக வேகமாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறது." என அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு ட்ரம்ப் பேட்டியளித்துள்ளார்.
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் ட்ரம்பின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. இதனிடையே ஈரானின் நவீன Jamaran-class போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தி அழித்ததாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் இருநாடுகளின் தாக்குதலில் ஈரானின் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதிநெச்சாத் படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
- ஈரான் தாக்குதலில் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் முக்கிய பங்கு வகிக்கிறது.
- வளைகுடா கடல் பகுதியில் செல்லும் கப்பல்களை ஈரான் குறிவைக்கிறது.
அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அத்துடன் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. 17 ராணுவ தளங்கள் டார்கெட் செய்யப்பட்டன என்று ஈரான் தெரிவித்துள்ளது.
அத்துடன் வளைகுடா பகுதிகளில் செல்லும் எண்ணெய் கப்பல்களையும் ஈரான் குறிவைத்துள்ளது. இதற்கிடையே வளைகுடா கடல் பகுதியில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆபிரகாம் லிங்கன் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் இருந்து விமானங்கள் பறந்து சென்று ஈரானை தாக்கி வருகிறது. இந்த நிலையில் ஆபிரகாம் லிங்கன் மீது 4 பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஆனால் அமெரிக்காவின் மத்திய கமாண்ட் (CENTCOM) ஈரானின் கூற்றை மறுத்துள்ளது. ஈரான் பொய் சொல்கிறது. ஈரானின் ஏவுகணை கப்பல் அருகில் கூட வரவில்லை எனத் தெரிவித்துள்ளது.
ஒருவேளை ஈரான் சொல்வது உண்மை என்றால், அமெரிக்காவுக்கு இது மிகப்பெரிய இழப்பாகும். இதற்கிடையே நிலமும் கடலும் பயங்கரவாத ஆக்கிரமிப்பாளர்களின் கல்லறையாக மாறும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
- இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணைகள் மூலம் சரமாரி பதிலடி கொடுத்து வருகிறது.
- சைரன் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மக்களிடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இன்று இஸ்ரேல் மேற்கு ஜெருசலேமில் உள்ள பெய்ட் ஷெமேஷ் பகுதியில் ஈரான் ஏவுகணை கடுமையாக தாக்கியது. இதில் 4 குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து உருக்குலைந்து போனது. இதில் 9 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் பலர் குழந்தைகள் ஆவார்கள்.
இந்த ஏவுகணை இஸ்ரேலிய மக்கள் பதுங்கியிருந்த ஷெல்டர் வழியாக ஊடுருவி தாக்கியுள்ளது. ஷெல்டரில் விழுந்திருந்தால் உயிர்ச்சேதம் அதிகமாகியிருக்கும்.
ஈரான் அதிகமாக தாக்கக்கூடும் என கண்டறியப்பட்ட இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளை இஸ்ரேல் துரிதமாக செய்து வருகிறது.
- நாட்டின் தலைவரை வெளிப்படையாகக் கொல்வதும், ஆட்சி மாற்றத்தைத் தூண்டுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது
- 15 மாதங்களில் வீழ்த்தப்பட்ட மூன்றாவது ரஷ்யக் கூட்டாளி கமேனி
அமெரிக்கா - இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 15 மாதங்களில் வீழ்த்தப்பட்ட மூன்றாவது ரஷ்யக் கூட்டாளி கமேனி ஆவார். முன்னதாக சிரியா மற்றும் வெனிசுலாவில் மாஸ்கோவின் ஆதரவு பெற்ற தலைவர்கள் வீழ்ந்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.
"ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் உயர்மட்டத் தலைவர் சையத் அலி கமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், மனித அறநெறி மற்றும் சர்வதேச சட்டத்தின் அனைத்து விதிகளையும் அப்பட்டமாக மீறும் வகையில் படுகொலை செய்யப்பட்டதற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என புதின் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
சீனா
இந்தத் தாக்குதல் "ஈரானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கடுமையாக மீறுவதாகும், ஐநா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் மற்றும் சர்வதேச உறவுகளின் அடிப்படை நெறிமுறைகளை மிதிப்பதாகும்" என்று தெரிவித்துள்ளது. ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைவரை வெளிப்படையாகக் கொல்வதும், ஆட்சி மாற்றத்தைத் தூண்டுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் ஈ தெரிவித்துள்ளார். சீனா இதை கடுமையாக எதிர்க்கிறது மற்றும் வன்மையாகக் கண்டிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.
வட கொரியா
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களை "சட்டவிரோத ஆக்கிரமிப்பு நடவடிக்கை" என்று வட கொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் அதன் கூட்டாளியும் "சுயநல மற்றும் மேலாதிக்க அபிலாஷைகளை" நிறைவேற்றுவதற்காக இராணுவ பலத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், "வெட்கமற்ற மற்றும் குண்டர் கும்பல் போன்ற நடத்தையில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
ஏமன் ஹூத்திகள்
"இந்தக் கொடூரமான குற்றம் அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் அப்பட்டமான மீறலைக் குறிக்கிறது மற்றும் இஸ்லாமிய தேசத்தின் மீதான அநியாயத் தாக்குதலின் தொடர்ச்சியை உள்ளடக்கியது" என்று ஏமனில் உள்ள ஹூத்திகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹமாஸ்
கமேனியின் மரணத்திற்கும் துக்கம் அனுசரிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. "அவர் எங்கள் மக்களுக்கும், எங்கள் நோக்கத்திற்கும், எங்கள் எதிர்ப்பிற்கும் அனைத்து வகையான அரசியல், இராஜதந்திர மற்றும் இராணுவ ஆதரவையும் வழங்கினார்.
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இறையாண்மைக்கு எதிரான இந்த அப்பட்டமான ஆக்கிரமிப்பு மற்றும் கொடூரமான குற்றத்திற்கும், பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு, அதன் கடுமையான விளைவுகளுக்கும் அமெரிக்காவும் இஸ்ரேலும் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என ஒரு அறிக்கையில் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
- சனிக்கிழமை இரவு மட்டும் 200 விமானங்கள் மூலம் 500 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- ஈரானின் 900 இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்றது. 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் உடன்பாடு எட்டவில்லை.
இந்த நிலையில்தான் சனிக்கிழமை நள்ளிரவு திடீரென்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உச்ச தலைவர் அபயதுல்லா காமேனி மற்றும் இரண்டு அமைச்சர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பல இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தாக்குதல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஈரானின் பல்வேறு இலக்குகளை குறிவைத்து 1200 குண்டுகள் வீசப்பட்டன என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை இரவு மட்டும் 200 விமானங்கள் மூலம் 500 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
முதலாவதாக இஸ்ரேலை ஒட்டியுள்ள தெஹ்ரான் பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயார் படுத்தி வைத்திருந்த பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தப்ரிஸ் என்ற பகுதியில் இருந்துதான் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப்படை இஸ்ரேல் நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது. இதனால் இந்த இடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
ஈரானின் 900 இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்கா இன்று காலை தெரிவித்துள்ளது.
- ஈரான் அறிவுப்பூர்வமான பாதைக்குத் திரும்ப வேண்டும்
- அண்டை நாடுகளுடன் பகுத்தறிவோடும், பொறுப்புணர்வோடும் பழக வேண்டும்
ஈரான் தனது அண்டை நாடுகளுடன் போரில் ஈடுபடாமல் புத்திசாலித்தனமாக செயல்படவேண்டும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தெரிவித்துள்ளார். மேலும், "வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் இந்த வன்முறை செயல் ஒரு தவறான கணக்கீடு ஆகும். இது ஒரு இக்கட்டான தருணத்தில் ஈரானைத் தனிமைப்படுத்தியுள்ளது. உங்கள் போர் உங்கள் அண்டை நாடுகளுடன் கிடையாது" என ஐக்கிய அரபு அமீரக அதிபரின் ராஜதந்திர ஆலோசகர் அன்வர் கர்காஷும் தெரிவித்துள்ளார்.
"தனிமைப்படுத்தப்படுதல் மற்றும் மோதல்கள் தீவிரமடைதல் எனும் வட்டம் மேலும் விரிவடைவதற்கு முன்பாக, ஈரான் அறிவுப்பூர்வமான பாதைக்குத் திரும்ப வேண்டும்; தனது அண்டை நாடுகளுடன் பகுத்தறிவோடும், பொறுப்புணர்வோடும் பழக வேண்டும்." எனவும் கூறியுள்ளார்.
மேலும் இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்க தங்களுக்கு முழுமையான மற்றும் நியாயமான உரிமை உள்ளதாக அமீரகம் எச்சரித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பையும், நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு இராணுவ நடவடிக்கையில் ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வளைகுடா நாடுகள்மீது ஈரான் குறிவைத்ததை அடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த கருத்துகளும், கண்டனங்களும் வந்துள்ளன.
- இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லாத காஸாவின் ஒரே எல்லை
- பிப்ரவரியில் தற்காலிகமாக திறக்கப்பட்டது
ஈரான் மீது அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுத் தாக்குதல்களை தொடர்ந்துவரும் நிலையில், எகிப்துடனான காசாவின் ரஃபா எல்லைக் கடவையை இஸ்ரேல் மூடியுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'காசா பகுதிக்குள் நுழையும் ரஃபா எல்லை உள்ளிட்ட அனைத்து கடவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவது உட்பட, பல அவசியமான பாதுகாப்பு மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா முனையின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள ரஃபா எல்லைக் கடப்பு, கடந்த மாதம் தான் மீண்டும் திறக்கப்பட்டது. இதன் மூலம் பல மாதங்களில் முதல்முறையாக, அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் உட்பட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
பிப்ரவரியில் ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காசா பகுதிக்குள் மருந்துகள், புனரமைப்புப் பொருட்கள், உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தது. இந்நிலையில் மீண்டும் இந்த எல்லை மூடப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பான COGAT மேலும் கூறியதாவது:
"போர்நிறுத்தம் ஆரம்பித்தது முதல் உள்ளே சென்றுள்ள உணவின் அளவு, மக்களின் ஊட்டச்சத்து தேவையை விட நான்கு மடங்கு அதிகம். எனவே, தற்போது கையிருப்பில் உள்ள உணவுப் பொருட்கள் நீண்ட காலத்திற்குப் போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது." என தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தத் தகவலை உறுதிப்படுத்த எந்தவொரு ஆதாரத்தையும் அந்த அமைப்பு வழங்கவில்லை.
எல்லைக் கடப்புகள் மூடப்படுவது, காசா பகுதியின் மனிதநேயச் சூழலில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அந்த அமைப்பு மேலும் கூறியுள்ளது. அத்துடன், சர்வதேச சமூகத்துடன் தொடர்பில் இருப்போம் என்றும், இது குறித்த மாற்றங்கள் அல்லது முன்னேற்றங்கள் குறித்து அவ்வப்போது தகவல்களை வழங்குவோம் என்றும் அது தெரிவித்துள்ளது.
- யதுல்லா அலி காமேனி (86 வயது) மறைவுக்கு ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கடுகிறது.
- அனைத்து நாடுகளும் இந்தக் கொடூரக் குற்றத்தைக் கண்டிக்க வேண்டும்.
ஈரான் மீது நேற்று அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் அதன் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார்.
தெஹ்ரானில் நடந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த நிலையில், ஈரான் அரசு ஊடகமாக IRNA அவரது மரணத்தை உறுதி செய்தது.
கடந்த 35 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்தி வந்த அயதுல்லா அலி காமேனி (86 வயது) இயற்கை எய்தியதாக IRNA அறிவித்துள்ளது. அவரது மறைவுக்கு ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கடுகிறது.
இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதலில் காமேனியுடன் அவரது மகள், பேரன், மருமகன், மருமகள் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து உலக நாடுகள் மௌனம் காக்காமல் கண்டிக்குமாறு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகெங்கிலும் உள்ள சுதந்திரத்தை விரும்பும் அனைத்து நாடுகளும் இந்தக் கொடூரக் குற்றத்தைக் கண்டிக்க வேண்டும். சட்டவிரோதம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு முன்னால் அமைதியாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பெருமைமிக்க ஈரான் நாடு, எப்போதும் போல, வலிமை, மற்றும் உறுதியுடன் அதன் உன்னதமான பாதையைத் தொடரும். நாட்டின் தற்போதைய விவகாரங்களில் எந்த இடையூறும் அனுமதிக்கப்படாது. தியாகிகளின் தியாகம், ஈரானிய மக்களின் சுதந்திரம், கண்ணியம் மற்றும் உயர்ந்த இலட்சியங்களைப் பாதுகாப்பதில் அவர்களின் உறுதியை வலுப்படுத்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






