என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Israel"

    • காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 70,369 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் சுமார் 20,000 பேர் குழந்தைகள் ஆவர்.
    • 3,000 முதல் 4,000 குழந்தைகள் தங்கள் கை அல்லது கால்களை இழந்து ஊனமுற்றுள்ளதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது.

    காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் 2025-ஆம் ஆண்டு பாலஸ்தீனியர்களுக்கு மற்றுமொரு துயரமான ஆண்டாகவே அமைந்தது.

    காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையை முன்னெடுத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஆண்டாகவும் இது அமைந்தது. 

    காசா போர்

    பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது.

    இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 250 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர். இதில் பாதி பேர் மீடகப்பட்ட நிலையில் 96 பேர் இன்னும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

    தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்க கடந்த 26 மாதங்களாக காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 70,369 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் சுமார் 20,000 பேர் குழந்தைகள் ஆவர்.  1.7 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

    சுமார் 3,000 முதல் 4,000 குழந்தைகள் தங்கள் கை அல்லது கால்களை இழந்து ஊனமுற்றுள்ளதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது.

    இனப்படுகொலை

    செப்டம்பர் 2025-ல் ஐநா விசாரணை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது.

    உயிரிழப்புகள், பசி மற்றும் மருத்துவத் தேவைகளைத் தடுத்தல் போன்றவை இதற்கு ஆதாரங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டன.

    மக்களைக் கொல்லுதல், கடுமையான உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துதல், வாழ்க்கைச் சூழலை அழித்தல், பிறப்புகளைத் தடுத்தல் ஆகிய 4 குற்றங்களையும் இஸ்ரேல் திட்டமிட்டு தொடர்வதால் காசாவில் இஸ்ரேல் புரிவது இனப்படுகொலையே என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    இஸ்ரேலின் தாக்குதல்கள் தற்செயலானவை அல்ல, அவை காசா மக்களின் அன்றாட வாழ்வை முடக்குவதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

    பசி, பட்டினி, பஞ்சம்:

    இஸ்ரேல் விதித்த கடுமையான தடைகளால் 2025-ல் பஞ்சம் உச்சத்தை அடைந்தது. போர் தொடங்கியதில் இருந்து 461 பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறந்துள்ளனர், இதில் பெரும்பாலான மரணங்கள் 2025-ல் நிகழ்ந்தவை.

    5 வயதிற்குட்பட்ட 54,600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    காசாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட கொடும் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    அதன் அறிக்கையின்படி, காசாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொள்கின்றனர்.

    காசா நகரம் உட்பட பாலஸ்தீனத்தின் சுமார் 20 சதவீத பகுதியில் பஞ்ச நிலைமை இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

    மத்திய கிழக்கு வரலாற்றில் ஒரு பகுதியில் பஞ்சம் அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.

    இடிபாடுகளாக எஞ்சிய காசா:

    அக்டோபரில் வெளியான ஐநா அறிக்கைபடி, இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவின் 80% கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.

    மொத்த சேத மதிப்பு 4.5 டிரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 373.5 டிரில்லியன்) ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் இடிபாடுகள் உள்ளிட்ட 51 மில்லியன் டன் குப்பைகள் குவிந்துள்ளன. இவற்றை அகற்ற மட்டும் ரூ.99.6 டிரில்லியன் செலவாகும்.

    போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை முழுமையாக அகற்ற 10 ஆண்டுகள் ஆகலாம். மேலும், காசாவின் வளமான நிலப்பரப்பை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று அறிக்கை தெரிவித்தது.

    நவம்பரில் வெளியான ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (UNCTAD) கடந்த நவம்பரில் வெளியிட்ட அறிக்கை, காசா பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப 70 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவாகும் என்றும், அதை முடிக்க பல தசாப்தங்கள் ஆகலாம் என்று தெரிவிக்கிறது.

    அந்த அறிக்கையில், காசாவில் நடந்த போரும், அந்தப் பிரதேசத்தின் மீது விதிக்கப்பட்ட தடைகளும் பாலஸ்தீனப் பொருளாதாரத்தை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன.

    காசாவில் தொடர்ந்து, திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அழிவு, அந்தப் பகுதி வாழத் தகுதியான இடமாகவும், சமூக ரீதியாக மீண்டும் கட்டியெழுப்பப்படவும் முடியுமா என்பதில் கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காசாவின் ஒட்டுமொத்த மக்களும் கடுமையான, பல பரிமாண வறுமையை எதிர்கொள்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

     அடிப்படை தேவைகளுக்கு அலைமோதும் காசா மக்கள்:

    இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் காசாவின் அடிப்படை உள்கட்டமைப்பை முற்றிலுமாக முடக்கியுள்ளன.

    காசாவின் ஒரே மின் உற்பத்தி நிலையம் எரிபொருள் தட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்டது. ஒட்டுமொத்த மின் விநியோக அமைப்பில் 80% சிதைக்கப்பட்டுள்ளது.

    மக்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும், சிறிய ஜெனரேட்டர்கள் மூலமும் மிகக் குறைந்த அளவே மின்சாரத்தைப் பெறுகின்றனர்.

    இஸ்ரேலின் குண்டுவீச்சுகள் கடல்நீரை நன்னீராக்கும் நிலையங்கள் மற்றும் தண்ணீர் பம்பிங் நிலையங்களை அழித்ததால் மக்கள் உப்பு மற்றும் உலோக வாடை வீசும் பாதுகாப்பற்ற தண்ணீரை அருந்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது குழந்தைகளுக்கு தோல் வியாதிகள் மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற நோய்களை உண்டாக்கி வருகிறது.

    மருத்துவமனைகள் போதிய மருந்துகள், மின்சாரம் மற்றும் உபகரணங்கள் இன்றி இயங்குகின்றன. மருத்துவர்கள் மொபைல் போன் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யும் அவலநிலை நீடிக்கிறது.

    சாலைகள் தகர்க்கப்பட்டுள்ளதால், மனிதாபிமான உதவிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மக்களைச் சென்றடைவதில் பெரும் தாமதம் ஏற்படுகிறது.

    வெனிஸ் வெளிச்சம்

    இஸ்ரேலால் சுட்டுக் கொல்லப்பட்ட 5 வயது பாலஸ்தீன சிறுமியான ஹிந்த் ரஜப்பின் கதையைச் சொல்லும் 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' 82வது வெனிஸ் திரைப்பட விழாவில் சில்வர் லயன் விருதை வென்றது.

    பிரெஞ்சு-துனிசிய இயக்குனர் கவுதர் பென் ஹனியாவால் இயக்கப்பட்ட இந்த ஆவணப்படம் ஹிந்த் ரஜப் உடைய வாழ்வின் இறுதித் தருணங்களை ஆவணப்படுத்தி உள்ளது.

    ஐநா பொதுச் சபையும், தனி நாடு அங்கீகாரமும்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் கடந்த செப்டம்பரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாலஸ்தீன பிரச்சனை முதன்மையாக விவாதிக்கப்பட்டது.

    "தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்திற்கு நாம் வழங்கும் பரிசு அல்ல, மாறாக அது அவர்களின் உரிமை" என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.

    இந்த ஐநா பொதுச்சபை கூடுவதற்கு முன்னதாக, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா,போர்ச்சுகல் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தன.

    ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் வைத்து, பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பர்க், மால்டா, மொனாக்கோ, அன்டோரா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தன.

    இதன் மூலம், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்தது. இதை இஸ்ரேலும், அமெரிக்காவும் கடுமையாக எதிர்த்தது.

    டிரம்ப் அமைதி திட்டமும், கண்துடைப்பு போர் நிறுத்தமும்:

    அக்டோபர் 10, 2025 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்சத் திட்டத்தின் அடிப்படையில் காசாவில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.

    காசாவில் ஒரு தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட அரசாங்கத்தை அமைப்பது, இஸ்ரேலியப் படைகளுக்குப் பதிலாக சர்வதேச அமைதிப் படையை நிலைநிறுத்துவது இதில் அடங்கும்.

    மேலும், ஒப்பந்தப்படி, டிசம்பர் 9-க்குள், ஹமாஸிடம் எஞ்சியிருந்த இஸ்ரேல் பணய கைதிகள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டனர். பதிலாக, இஸ்ரேல் சிறையிலிருந்த பாலஸ்தீனியர்களை விடுவித்தது.

    போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும், இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தவில்லை.

    தீவிரவாதிகளைத் தாக்குகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், நவம்பர் 30 வரை மட்டும் 352 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

    2025-ஆம் ஆண்டு முடிவடையும் நிலையிலும், காசா மக்களின் துயரமும் கண்ணீரும் முடிவுக்கு வந்தபாடில்லை.  இதற்கிடையே 2026 ஜனவரி 1-ந்தேதி முதல் காசாவில் பல உதவி அமைப்புகளின் செயல்பாடுகளை நிறுத்தப்போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 

    • காசாவில் ஹமாஸ் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு உதவுவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு.
    • ஸ்டாஃப்களின் செயல்பாடுகள் குறித்த தகவலை பரிமாற்றம் செய்ய சில அமைப்புகள் தவறியதாகவும் குற்றச்சாட்டு.

    இஸ்ரேல்- காசா (ஹமாஸ் அமைப்பு) இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு காசாவில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு பல்வேறு மனிதாபிமான அமைப்புகள் உதவி செய்து வருகின்றன. சில அமைப்புகள் ஹமாஸ் மற்றும் மற்ற பயங்கரவாத குழுவினருக்கு உதவுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக எல்லைகள் அற்ற டாக்டர்கள் அமைப்பு சில ஸ்டாஃப்களின் பணி என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்க தவறி விட்டது எனத் தெரிவித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து வருகின்ற 1-ந்தேதி முதல் ஸ்டாஃப், நிதி மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக தகவல்களை பரிமாற்றம் செய்யவில்லை என்றால், காசாவில் செயல்பட தடைவிதிக்கப்படும் எனத் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதற்கான எல்லைகள் அற்ற டாக்டர்கள் அமைப்பு பதில் அளிக்கவில்லை. ஆனால் மற்ற சர்வதேச அமைப்புகள் இது ஸ்டாஃப்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்துள்ளன.

    • முந்தைய நாள் கடுமையான குளிரின் காரணமாக கான் யூனிஸில் எட்டு மாத குழந்தை இறந்தது.
    • பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ள 850,000 பாலஸ்தீனியர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

    இஸ்ரேல் தாக்குதலால் உருக்குலைந்த பாலஸ்தீன நகரமான காசாவில் 'பைரன்' புயல் பாதிப்பால் 14 பேர் உயிரிழந்தனர்.

    புயலில் நான்கு பேர் இறந்த நிலையில் புயலை தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் காற்று காரணமாக கூடாரம் இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் இறந்தனர். போரில் அழிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தின் சுவர் கூடாரத்தின் மீது விழுந்ததில் இரண்டு பேர் இறந்தனர்.

    கடுமையான குளிரால் உறைந்து சில குழந்தைகளும் இறந்தனர். முந்தைய நாள் கடுமையான குளிரின் காரணமாக கான் யூனிஸில் எட்டு மாத குழந்தை இறந்தது.

    வரும் நாட்களில் காசாவில் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ள 850,000 பாலஸ்தீனியர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

    போரில் வீடுகள் அழிக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் தற்போது தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்றனர். ஆனால் கூடாரங்கள் தொடர்ந்து இடிந்து விழுகின்றன. மக்கள் குளிர் மற்றும் கனமழையில் தப்பி ஓட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து எரிபொருள் பற்றாக்குறை மற்றும் சேதமடைந்த உபகரணங்கள் காரணமாக வெள்ளம் மற்றும் குளிரை எதிர்த்துப் போராடுவது சாத்தியமில்லை என்று உள்ளூர் நிர்வாகம் கூறியுள்ளது.   

    • எகிப்து கொண்டுவந்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 123 நாடுகள் ஆதரவு
    • 7 நாடுகள் எதிர்ப்பும் 43 நாடுகள் புறக்கணிப்பும் செய்தது.

    1967 ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு நாடுகளுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. அப்போது ஜோர்டானிடமிருந்து கிழக்கு ஜெருசலேம், சிரியாவிலிருந்து கோலன் ஹைட்ஸ் மற்றும் எகிப்திடமிருந்து காசா பகுதி மற்றும் சினாய் தீபகற்பம் உள்ளிட்ட மேற்குக் கரையை இஸ்ரேல் கைப்பற்றியது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற ஐநா சபை கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தில் , "சிரியாவின் கோலன் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்து இருப்பதை சட்டவிரோதம் என்றும், அப்பகுதியை விட்டு அந்நாடு வெளியேற வேண்டும்" என்று எகிப்து கோரியிருந்தது.

    எகிப்து கொண்டுவந்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 123 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில் 7 நாடுகள் எதிர்ப்பும் 43 நாடுகள் புறக்கணிப்பும் செய்தது. இதன் முடிவில் இந்த தீர்மானம் ஐநா சபையில் நிறைவேறியது.

    இதனையடுத்து தங்களுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு சிரியா நன்றி தெரிவித்தது.

    • அதிபர் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு கவிழ்ந்தது.
    • ஐ.நா. கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளது.

    சிரியாவில் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.

    சிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு கவிழ்ந்தது. இதையடுத்து அந்நாட்டின் அதிபராக அகமது அல் ஷரா பொறுப்பேற்றார்.

    ஆசாத் ஆட்சி கவிழ்ந்தபோது சிரியாவில் ஐ.நா. கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், சிரியாவில் ரைப் டிமாஷ்கியு மாகாணம் குவாண்டனா மாவட்டம் பெட் ஜின் கிராமத்தில் இன்று இஸ்ரேல் படையினருக்கும், உள்ளூர் ஆயுதக்குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த மோதலில் பொதுமக்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் படையினர் 6 பேர் காயமடைந்தனர். 

    • அவர்களை கீழே தள்ளி உதைத்த இஸ்ரேல் வீரர்கள் மீண்டும் அவர்களை கேரேஜுக்குள் தவழ்ந்தபடி நுழைய செய்தனர்.
    • அவர்களின் உடல்கள் அங்கே கிடக்க புல்டோசர் கேரேஜின் ஷட்டரை இடிக்கும் பணியை தொடர்ந்தது.

    இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட காசாவின் மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகளால் நிராயுதபாணியான இரண்டு பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    வியாழக்கிழமை நடந்த சம்பவத்தின் வீடியோ மத்திய கிழக்கு ஊடங்களில் வெளியிடப்பட்டது.

    அந்த வீடியோவில், இஸ்ரேல் ராணுவம் ஒரு கேரேஜை புல்டோசரால் இடித்துக் கொண்டிருந்தது. அப்போது உள்ளிருந்து 2 ஆண்கள் கைகளை தூக்கியபடி வெளியே வந்தனர்.

    தங்களிடம் எந்த ஆயுதமும் இல்லை என்பதை காட்ட அவர்கள் அவ்வாறு செய்தனர். அவர்களை கீழே தள்ளி உதைத்த இஸ்ரேல் வீரர்கள் மீண்டும் அவர்களை கேரேஜுக்குள் தவழ்ந்தபடி நுழைய செய்தனர்.

    அப்போது மற்றொரு வீரர் அவர்களை சுட்டுக் கொன்றார். அவர்களின் உடல்கள் அங்கே கிடக்க புல்டோசர் கேரேஜின் ஷட்டரை இடிக்கும் பணியை தொடர்ந்தது.

    நிராயுதபாண்டியாக வந்தவர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்றது போர் குற்றம் ஆகும்.

    இஸ்ரேலிய இராணுவம் இறந்தவர்களை தேடப்படும் போராளிகள் என்று விவரித்துள்ளது. அவர்கள் வீரர்கள் மீது வெடிபொருட்களை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் ராணுவம் கூறியது.

    இந்த செயலுக்காக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் ராணுவத்தைப் பாராட்டினார். பயங்கரவாதிகள் இறக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

    இது சர்வதேச சட்டத்தை மீறி செய்யப்பட்ட கொலை என்பதை பாலஸ்தீன பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

    • காசாவில் தொடர்ந்து, திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அழிவு, அந்தப் பகுதி வாழத் தகுதியான இடமாக மாற்றுகிறது.
    • காசாவின் ஒட்டுமொத்த மக்களும் கடுமையான, பல பரிமாண வறுமையை எதிர்கொள்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் பாலஸ்தீன பிரதேசத்தின் பொருளாதாரத்தை அழித்து அதன் இருப்பையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

    போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப 70 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவாகும் என்றும், அதை முடிக்க பல தசாப்தங்கள் ஆகலாம் என்றும் ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (UNCTAD) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

    அந்த அறிக்கையில், காசாவில் நடந்த போரும், அந்தப் பிரதேசத்தின் மீது விதிக்கப்பட்ட தடைகளும் பாலஸ்தீனப் பொருளாதாரத்தை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன.

    காசாவில் தொடர்ந்து, திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அழிவு, அந்தப் பகுதி வாழத் தகுதியான இடமாகவும், சமூக ரீதியாக மீண்டும் கட்டியெழுப்பப்படவும் முடியுமா என்பதில் கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காசாவின் ஒட்டுமொத்த மக்களும் கடுமையான, பல பரிமாண வறுமையை எதிர்கொள்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

    மேலும், 2023-24 ஆம் ஆண்டில் காசாவின் பொருளாதாரம் 87% சுருங்கியது என்றும், காசாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 161 டாலர் ஆக இருந்தது என்றும், இது உலகளவில் மிகக் குறைவு என்றும் அறிக்கை கூறியுள்ளது.

    பாலஸ்தீன சுகாதார அமைச்சக புள்ளிவிவரங்களின்படி கடந்த 2 ஆண்டுகளில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 69,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    இதற்கிடையே கடந்த மாதம் ஏற்பட்ட போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் கடந்த 44 நாட்களில் 500 க்கும் அதிகமான முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

    • தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள சாலையில் கட்டிட இடிபாடுகள் சிதறிக்கிடந்தன.
    • பலியானவர்களின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

    இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் 2 ஆண்டு களுக்கும் மேலாக போர் நடந்தது. இந்த போரின் போது காசா நகரம் மீது இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

    இந்த போரின் போது ஹமாஸ் படையை லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படை ஆதரித்தது. இதையடுத்து இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா படைக்கும் இடையே மோதல் நடைபெற்று வந்தது. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், ஹிஸ்புல்லா படையை குறிவைத்து லெபனானில் அவ்வப்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடைசியாக கடந்த ஜூன் மாதம் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு எந்த தாக்குதலும் நடத்தப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள புகா் பகுதிகளில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. மூத்த ஹிஸ்புல்லா படை தலைவரான அலி தப்தாவை குறிவைத்து அங்குள்ள கட்டிடம் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. 9 மாடி கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது தளங்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

    இந்த தாக்குதலில் பொது மக்களில் 5 பேர் கொல்லப் பட்டனர். 28 போ் படுகாயம் அடைந்தனா். இதை லெபனான் சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. பலியானவர்களின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

    தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள சாலையில் கட்டிட இடிபாடுகள் சிதறிக்கிடந்தன. தெருவில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு கார் சேதம் அடைந்தது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் மீட்பு படையினர் உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கட்டிடத்தில் இருந்து புகை வெளிவந்து கொண்டிருந்தது.

    சம்பவ இடத்துக்கு ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மீட்பு குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பாதுகாப்புக்காக அந்த இடத்தில் லெபனான் வீரர்கள் குவிக்கப்பட்டனர். கட்டிடத்தின் மீது 3 ஏவுகணைகள் வீசப்பட்டதாக லெபனானின் அதிகாரப்பூர்வ தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் உள்ள ஹரேத் ஹிரீக் பகுதியில் இந்த தாக்குதல் நடந்தது. இது ஹிஸ்புல்லா படையினர் ஆதிக்கம் செலுத்தும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியாகும்.

    இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் இந்த தாக்குதலுக்கான உத்தரவை வழங்கியதாக கூறியுள்ளது. 'பெய்ரூட்டின் மையப்பகுதியில் பயங்கரவாத அமைப்பின் கட்டமைப்பையும், மறுசீரமைப்பையும் வழி நடத்தி வந்த ஹிஸ்புல்லா தலைமை தளபதியை இஸ்ரேல் ராணுவம் தாக்கியது' என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 'இஸ்ரேல் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் தனது நோக்கங்களை அடைவதற்கான செயல்பாட்டில் உறுதியாக உள்ளது' என்றும் கூறியுள்ளது.

    இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் கட்ஸ் கூறுகையில், 'இஸ்ரேலுக்கு எதிராக கையை உயர்த்தும் எவரின் கையும் வெட்டப்படும், இஸ்ரேலின் அதிகபட்ச அமலாக்க கொள்கை தொடரும்' என்று எச்சரித்தார்.

    ஹிஸ்புல்லா படையினர் மீண்டும் ஆயுதங்களை ஏந்தக்கூடாது, அந்த படை மீண்டும் கட்டமைக்கப்படக்கூடாது என்று இஸ்ரேல் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது. மேலும் இஸ்ரேலுக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

    இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு லெபனான் அதிபா் ஜோசப் ஓன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    • கடந்த ஜூன் மாதத்திற்குப் பின் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
    • துல்லியமான தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு இன்று லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் கடுமையான வகையில் வான்தாக்குதல் நடத்தியுள்ளது.

    துல்லியமான தாக்குதல் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேற்கொண்டு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஹிஸ்புல்லா இது தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை கீழே போடுமாறு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. லெபனான அரசு, ஹிஸ்புல்லா அமைப்பினரை ஆயுதமில்லா அமைப்பினராக்க ராணுவத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    அதேவேளையில் ராணுவ திறனை மீண்டும் கட்டமைக்க ஹிஸ்புல்லா முயற்சி செய்து வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், லெபனான் அரசு அதை மறுத்துள்ளது.

    • கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களால் ஜான் பாப்டிஸ்ட் கல்லறை இருந்த இடம் என்று நம்பப்படுகிறது.
    • இந்த ஆண்டு மேற்குக் கரையில் உள்ள மூன்று அகதிகள் முகாம்களில் இருந்து 32,000 பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

    பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிப்பிட்ட மேற்குக் கரையில் உள்ள முக்கிய வரலாற்றுத் தலத்தின் பகுதிகளை இஸ்ரேல் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

    இஸ்ரேலின் சிவில் நிர்வாகம், மேற்குக் கரையில் உள்ள ஒரு பெரிய தொல்லியல் தளமான செபாஸ்டியாவின் பெரும் பகுதிகளை கையகப்படுயத்தும் உத்தரவை கடந்த நவம்பர் 12 வெளியிட்டது.

    குடியேற்ற எதிர்ப்பு கண்காணிப்புக் அமைப்பான Peace Now கூற்றுப்படி, இந்தத் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தளம் சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

    இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஒலிவ மரங்கள் உள்ளன. இது பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமானது என பீஸ் நவ் தெரிவித்துள்ளது.

     தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வளவு பெரிய அளவிலான நிலத்தை இஸ்ரேல் கைப்பற்றுவது இதுவே முதல் முறை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    செபாஸ்டியா இடிபாடுகளுக்கு அடியில் பண்டைய இஸ்ரவேல் ராஜ்யத்தின் தலைநகரான சமாரியா இருந்ததாகக் கருதப்படுகிறது.

    மேலும் இது, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களால் ஜான் பாப்டிஸ்ட் கல்லறை இருந்த இடம் என்று நம்பப்படுகிறது.

    இஸ்ரேல் இந்த தளத்தை ஒரு சுற்றுலா மையமாக மேம்படுத்த 2023-ல் அறிவித்தது. இதற்காக அரசாங்கம் சுமார் 9.24 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது.

    மேற்கு கரை ஆக்கிரமிப்பு:

    இஸ்ரேல் 1967 போரில் மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா ஆகியவற்றை ஆக்கிரமித்தது.

    அது முதல், மேற்குக் கரையில் 500,000-க்கும் மேற்பட்ட யூதர்களை அங்கீகரிக்கப்படாத குடியேற்றங்களில் குடியேற்றியுள்ளது. கிழக்கு ஜெருசலேமில் 200,000-க்கும் மேற்பட்ட யூதர்கள் குடியேறியுள்ளனர்.

    இதற்கிடையே அண்மையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் பெத்லஹேமுக்கு அருகில் ஒரு புதிய, அங்கீகரிக்கப்படாத குடியேற்றப் புறக்காவல் நிலையத்தை அமைத்துள்ளனர்.

    மேலும் அங்கு பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேல் குடியேற்றவாசிகளின் வன்முறை சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.

    அண்மையில் மேற்குக் கரையில் குடியேற்றவாசிகள் வன்முறையை ஆவணப்படுத்திய பாலஸ்தீனிய ஆர்வலர் ஐமன் கிரையேப் ஓடே கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறையை தூண்டியதாக அவர் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவர் விசாரணையற்ற காலவரையற்ற தடுக்குக்காவலில் அடைக்கபடலாம் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே இந்த ஆண்டு மேற்குக் கரையில் உள்ள மூன்று அகதிகள் முகாம்களில் இருந்து 32,000 பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதன் மூலம் இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) குற்றம் சாட்டியுள்ளது.

    இஸ்ரேல் 1967-ல் ஆக்கிரமித்ததில் இருந்து அப்பகுதியில் நடந்த மிகப்பெரிய இடம்பெயர்வு இதுவாகும்.

    அங்கு 850-க்கும் மேற்பட்ட வீடுகளும் கட்டிடங்களும் அழிக்கப்பட்டதாகவோ அல்லது பலத்த சேதமடைந்ததாகவோ செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

    • போர் நிறுத்தம் அளவுக்கு வந்ததற்கு பின் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 280 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
    • ஐநா பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இஸ்ரேல் காசாவை தாக்கியுள்ளது

    காசா மீது நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா மத்யஸ்தத்தில் கடந்த 5 வாரங்களுக்கு முன் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதும் இஸ்ரேல் காசா மீது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. 

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில் காசா நகர் மற்றும் கான் யூனிஸ் பகுதிகளில் இஸ்ரேலிய விமானப்படை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்கள் நாட்டைத் தாக்கத் தயாராகி வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் அளவுக்கு வந்ததற்கு பின் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 280 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

    டிரம்ப்பின் அமைதி திட்டம் மூலம் சர்வதேச படைகளை காசாவுக்கு அனுப்புவது குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இஸ்ரேல் காசாவை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • செவ்வாய்க்கிழமை இரவு அகதிகள் முகாம் மீது தாக்குதால் நடத்தப்பட்டது.
    • இன்று காலை கார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல்.

    தெற்கு லெபனானில் உள்ள டிரி கிராமம் அருகே இன்று காலை இஸ்ரேல், கார்மீது வான்தாக்குதல் நடத்தியது. இதில் காரில் சென்ற ஒருவர் கொல்லப்பட்டார். அவர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. அந்த கார் அருகே சென்று கொண்டிருந்த பேருந்தும் இந்த தாக்குதலில் சேதமடைந்தது. இதில் மாணவர்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.

    செவ்வாய்க்கிழமை இரவு பாலஸ்தீன அகதிகள் முகாம் (ஐன்-எல்-ஹல்வே) மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

    இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே ஒரு வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்றது. காசாவுக்கு உதவி பொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்ததால், இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன்பின் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஹமாஸ் பயிற்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்தினோம். இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்த தயாராகி வந்த நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

    அதேவேளையில் தாக்குதல் நடத்தப்பட்டது விளையாட்டு மைதானம், பயிற்சி மையம் இல்லை என ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    ×