என் மலர்
நீங்கள் தேடியது "lebanon"
- தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள சாலையில் கட்டிட இடிபாடுகள் சிதறிக்கிடந்தன.
- பலியானவர்களின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் 2 ஆண்டு களுக்கும் மேலாக போர் நடந்தது. இந்த போரின் போது காசா நகரம் மீது இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
இந்த போரின் போது ஹமாஸ் படையை லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படை ஆதரித்தது. இதையடுத்து இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா படைக்கும் இடையே மோதல் நடைபெற்று வந்தது. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், ஹிஸ்புல்லா படையை குறிவைத்து லெபனானில் அவ்வப்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடைசியாக கடந்த ஜூன் மாதம் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு எந்த தாக்குதலும் நடத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள புகா் பகுதிகளில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. மூத்த ஹிஸ்புல்லா படை தலைவரான அலி தப்தாவை குறிவைத்து அங்குள்ள கட்டிடம் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. 9 மாடி கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது தளங்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் பொது மக்களில் 5 பேர் கொல்லப் பட்டனர். 28 போ் படுகாயம் அடைந்தனா். இதை லெபனான் சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. பலியானவர்களின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள சாலையில் கட்டிட இடிபாடுகள் சிதறிக்கிடந்தன. தெருவில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு கார் சேதம் அடைந்தது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் மீட்பு படையினர் உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கட்டிடத்தில் இருந்து புகை வெளிவந்து கொண்டிருந்தது.
சம்பவ இடத்துக்கு ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மீட்பு குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பாதுகாப்புக்காக அந்த இடத்தில் லெபனான் வீரர்கள் குவிக்கப்பட்டனர். கட்டிடத்தின் மீது 3 ஏவுகணைகள் வீசப்பட்டதாக லெபனானின் அதிகாரப்பூர்வ தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் உள்ள ஹரேத் ஹிரீக் பகுதியில் இந்த தாக்குதல் நடந்தது. இது ஹிஸ்புல்லா படையினர் ஆதிக்கம் செலுத்தும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியாகும்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் இந்த தாக்குதலுக்கான உத்தரவை வழங்கியதாக கூறியுள்ளது. 'பெய்ரூட்டின் மையப்பகுதியில் பயங்கரவாத அமைப்பின் கட்டமைப்பையும், மறுசீரமைப்பையும் வழி நடத்தி வந்த ஹிஸ்புல்லா தலைமை தளபதியை இஸ்ரேல் ராணுவம் தாக்கியது' என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 'இஸ்ரேல் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் தனது நோக்கங்களை அடைவதற்கான செயல்பாட்டில் உறுதியாக உள்ளது' என்றும் கூறியுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் கட்ஸ் கூறுகையில், 'இஸ்ரேலுக்கு எதிராக கையை உயர்த்தும் எவரின் கையும் வெட்டப்படும், இஸ்ரேலின் அதிகபட்ச அமலாக்க கொள்கை தொடரும்' என்று எச்சரித்தார்.
ஹிஸ்புல்லா படையினர் மீண்டும் ஆயுதங்களை ஏந்தக்கூடாது, அந்த படை மீண்டும் கட்டமைக்கப்படக்கூடாது என்று இஸ்ரேல் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது. மேலும் இஸ்ரேலுக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு லெபனான் அதிபா் ஜோசப் ஓன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- கடந்த ஜூன் மாதத்திற்குப் பின் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
- துல்லியமான தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு இன்று லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் கடுமையான வகையில் வான்தாக்குதல் நடத்தியுள்ளது.
துல்லியமான தாக்குதல் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேற்கொண்டு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஹிஸ்புல்லா இது தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை கீழே போடுமாறு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. லெபனான அரசு, ஹிஸ்புல்லா அமைப்பினரை ஆயுதமில்லா அமைப்பினராக்க ராணுவத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதேவேளையில் ராணுவ திறனை மீண்டும் கட்டமைக்க ஹிஸ்புல்லா முயற்சி செய்து வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், லெபனான் அரசு அதை மறுத்துள்ளது.
- செவ்வாய்க்கிழமை இரவு அகதிகள் முகாம் மீது தாக்குதால் நடத்தப்பட்டது.
- இன்று காலை கார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல்.
தெற்கு லெபனானில் உள்ள டிரி கிராமம் அருகே இன்று காலை இஸ்ரேல், கார்மீது வான்தாக்குதல் நடத்தியது. இதில் காரில் சென்ற ஒருவர் கொல்லப்பட்டார். அவர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. அந்த கார் அருகே சென்று கொண்டிருந்த பேருந்தும் இந்த தாக்குதலில் சேதமடைந்தது. இதில் மாணவர்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு பாலஸ்தீன அகதிகள் முகாம் (ஐன்-எல்-ஹல்வே) மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே ஒரு வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்றது. காசாவுக்கு உதவி பொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்ததால், இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன்பின் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹமாஸ் பயிற்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்தினோம். இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்த தயாராகி வந்த நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
அதேவேளையில் தாக்குதல் நடத்தப்பட்டது விளையாட்டு மைதானம், பயிற்சி மையம் இல்லை என ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
- லெபனான் ஐந்து மலைப் பகுதிகளை இஸ்ரேல் தன் கைவசம் வைத்துள்ளது.
- ஹிஸ்புல்லாவை ஆயுதமில்லாத நிராயுதபாணியாக்க லெபனான் அமைச்சரவை ஒப்புதல்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு லெபனானில் உள்ள ஆயுதமேந்திய குழு இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் லெபனான் எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தை குவித்துள்ளது. ஹிஸ்புல்லாவை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் லெபனானை சேர்ந்த பலன் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில்தான் இந்த மாதம் தொடக்கத்தில் ஹிஸ்புல்லாவை ஆயுதம் இல்லாத குழுவாக்க லெபனான் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையை லெபனான் ராணுவம் மேற்கொள்ள வேண்டும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ராணுவம் ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களை பறிமுதல் செய்து வருகிறது. இந்த நிலையில் லெபனான் அமைச்சரவை முடிவை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் ஹிஸ்புல்லா ஆயுதங்களை ஏந்தவில்லை என்றால், இஸ்ரேல் ராணுவம் லெபனானில் இருந்து வெளியேறும் எனத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் லெபனானில் உள்ள ஐந்து மலைப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஹிஸ்புல்லா நிலைகளை லெபனான் கைப்பற்றி வருகிறது.
- ஆயுதக் கிடங்கை அப்புறப்படுத்தும்போது திடீரென விபத்து ஏற்பட்டது.
லெபனானில் ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிப்பொருட்களை அகற்றும் பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் நிபுணர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வெடித்து சிதறியது. இதில் 6 ராணுவ நிபுணர்கள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 14 மாதங்களாக இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் மோதல் நடைபெற்று வந்தது. கடந்த நவம்பர் மாதம் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக லெபனான் ராணுவம் மற்றும் ஐ.நா. அமைதிப்படை ஹிஸ்புல்லாவின் நிலைகளை கைப்பற்றி வருகிறது.
குறிப்பாக லிடானி ஆற்றுப் பகுதியின் தெற்குப் பகுதியில், ஹிஸ்புல்லா திரும்பிய பகுதியில் பல ஆயுதக் கிடங்குகள் உள்ளன. ஆயுதக் கிடங்கில் உள்ள வெடிப்பொருட்களை லெபனான் ராணுவம் அப்புறப்படுத்தி வருகிறது. அவ்வாறு தைரே மாகாணத்தில் உள்ள ஜிப்கின் கிராமத்தில் இன்று ஆயுதக் கிடக்கில் உள்ள ஆயுதங்களை அப்புறப்படுத்தியபோது, திடீரென வெடிப்பொருட்கள் வெடித்து சிதறின. இதில் 6 ராணுவ நிபுணர்கள் உயிரிழந்தனர். பல் காயம் அடைந்தனர்.
நேற்று முன்தினம் அமெரிக்காவின் ஆதரவு திட்டமான ஹிஸ்புல்லாவை ஆயுதமில்லாமல் ஆக்கும் திட்டம் மற்றும் இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஆகியவை தொடர்பாக லெபனான் அமைச்சரவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆதரவாக வாக்களிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வருட இறுதிக்குள் சிறிய நாடானா லெபனானில் நாட்டில், நாட்டின் அமைப்புகள் மட்டுமே ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான திட்டத்திற்கு தயாராகும்படி ராணுவத்திடம் கேடடுக்கொண்டுள்ளது.
இதன்படி ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதம் இல்லாத நிராயுதபாணியாகும். அதேவேளையில் எல்லையில் உள்ள ஐந்து மலைப் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு முன்பு, நிராயுதபாணியாகமாட்டோம் என ஹிஸ்புல்லா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தின் காசா முனையில் உள்ள ஹமாஸ்க்கு உதவி செய்து வந்த ஹிஸ்புல்லா உறுப்பினரை குறிவைத்து தாக்குதல்.
- 3 பேர் உயிரிழந்த நிலையில், 7-க்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாக லெபனான் அறிவிப்பு.
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும், இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனால் இருதரப்பில் இருந்தும் ஏவுகணை, ராக்கெட் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
ஆனால் கடந்த மாதம் இறுதியில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தத்திற்கு பிறகு முதன்முறையாக தாக்குல் நடத்தியது.
இந்த நிலையில் இன்று காலை தெற்கு பெய்ரூட்டில் உள்ள ஒரு கட்டிடம் மீது இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 7-க்கும் அதிகமானோர் பேர் காயம் அடைந்துள்ளனர் என லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தின் காசா முனையில் உள்ள ஹமாஸ்க்கு உதவி செய்து வந்த ஹிஸ்புல்லா உறுப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இருதரப்பு எல்லைகளில் உள்ள மக்கள் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
- இஸ்ரேல் வடக்குப் பகுதியில் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதா இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
- இதற்குப் பதிலடியாக இன்று பெய்ரூட் புறநகர் பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல்- லெபனான் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. தற்போது இந்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் முதன்முறையாக லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியுள்ளது.
மிகப்பெரிய அளவில் வெடிகுண்டு சத்தம் கேட்டதாகவும், மிகப்பெரிய அளவில் புகை மண்டலம் வெளிப்பட்டதாகவும் நேரில் பார்த்த பத்திரிகை நிருபர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹிஸ்புல்லா ஆதிக்கம் செலுத்தி வரும் தஹியே பகுதியில் ஹிஸ்புல்லா டிரோன்களை மறைத்து வைத்திருந்த இடத்தை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பெய்ரூட் புறநகர்ப் பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் "இஸ்ரேல் வடக்குப் பகுதியில் அமைதி இல்லாதவரை, பெய்ரூட்டிற்கும் அமைதி இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் வடக்குப்பதியில் நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என ஹிஸ்புல்லா தெரிவித்து, லெபனானை தாக்குவதற்கு ஒரு சாக்குப்போக்கை தேடுகிறது என இஸ்ரேல் மீது குற்றம்சாட்டியுள்ளது.
லெபனான் பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் ஜனவரி மாதம் இறுதிக்குள் வெளியேற வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் காலக்கெடு பிப்ரவரி 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. வடக்கு இஸ்ரேலில் இருந்து லெபனான் பகுதி வரை ஐந்து இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது.
இஸ்ரேல்- காசா இடையிலான போர் நிறுத்தம் பிப்ரவரி 2-வது வாரத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படாத நிலையில் காசா மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதன்பின் ஹிஸ்புல்லா- இஸ்ரேல் இடையே தாக்குதல் தொடங்கியுள்ளது.
- கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 41 உயிரிழப்புகளையும் சேர்த்து தற்போது மொத்த பலி எண்ணிக்கை 50,021 ஆக உள்ளது.
- பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற ஐநாவின் அறிக்கை மேற்கொள் காட்டுகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முடிவுக்கு வந்ததை அடுத்து மீண்டும் போர் தொடங்கியுள்ளது.
கடந்த 5 நாட்களில் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், லெபனானில் மீதும் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்ததாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 41 உயிரிழப்புகளையும் சேர்த்து தற்போது மொத்த பலி எண்ணிக்கை 50,021 ஆக உள்ளது. மேலும் அதன் அறிக்கையில் இதுவரை 113,000 க்கும் மேற்பட்டோர் போரில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் எத்தனை பேர் ஹமாஸ் அமைப்பினர், எத்தனை பேர் பொதுமக்கள் என அமைச்சகம் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற ஐநாவின் அறிக்கை மேற்கொள் காட்டுகிறது.


காசா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏமனின் ஹவுதிகள் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளைத் ஏவி தாக்கி வருகின்றனர்.
இதில் ஈரானின் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் சந்தேகிக்கிறது. இதன் காரணமாக, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாவினர் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் ஏவி வருகின்றனர்.
ஹமாஸ் அமைப்பும் ஏவுகணை தாக்குதலைகளை தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட போர் நிறுத்தத்தின்படி பணய கைதிகள் பரிமாற்றம் நடந்தது. ஆனால் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் காசாவில் நிலவிய தற்காலிக அமைதி தற்போது வெடிகுண்டுகளால் மீண்டும் முற்றாக சீர்குலைந்து வருகிறது.


கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் இருந்து இஸ்ரேல், காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இடைவிடாது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் பக்கம் 1200 பேர் வரை உயிரிழந்தனர். அதற்கு விலையாக காசாவில் தற்போது 50,021 உயிர்களை இஸ்ரேல் குடித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றே தற்போதைய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

- காசா மீது தாக்குதலை அதிகப்படுத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
- இதனைத் தொடர்ந்து லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஏழு வார போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், போர் நிறுத்தம் நீட்டிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறவில்லை.
இந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் இன்னும் அதிகரிக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் லெபனானில் இருந்து இஸ்ரேலின் மெடுலா நகரை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை வானில் இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்திருந்தது. எச்சரிக்கை விடுத்த நிலையில் லெபனான் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் 2023ஆம் அண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனான்- இஸ்ரேல் எல்லையில் உள்ள இஸ்ரேல் நகரங்கள் மீது லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட், ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா சண்டையில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லெபனான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலைச் சேர்ந்த 60 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
லெபனான்- இஸ்ரேல் இடையே கடந்த நவம்பர் மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது ஜனவரி மாதம் இறுதிக்குள் லெபனான் பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது, பின்னர் பிப்ரவரி 18-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தங்கள் நாட்டில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற உத்தரவிடக்கோரி லெபனான் ஐ.நா. உதவியை நாடியுள்ளது.
- அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.
- ஹமாஸ்-க்கு எதிராக இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
காசா பகுதி, தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உள்பட பத்து பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்த ஆயத்தமான பயங்கரவாதிகளை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள போதிலும், இஸ்ரேல் தரப்பில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கடந்த இரண்டு வாரங்களாக காசா பகுதிக்குள் உணவு, மருத்து, எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் மாற்றங்களை ஒப்புக் கொள்ள வலியுறுத்தி ஹமாஸ்-க்கு எதிராக இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் பஷார் ஆசாத் வீழ்த்தப்பட்ட நிலையில், சிரியாவில் ஒரு பகுதியை இஸ்ரேல் கைப்பற்றி இருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிராக எந்த அச்சுறுத்தலையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும், தற்போது சிரியாவை ஆளும் முன்னாள் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை இது என்று இஸ்ரேல் கூறுகிறது.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் சிரியாவின் தெற்கில் அமைந்துள்ள தாரா என்ற குடியிருப்பு பகுதியை தாக்கி அழித்தது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் நான்கு பேர் குழந்தைகள் ஆவர். இந்த தாக்குதலில் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேதமுற்றதாகவும், மற்ற தாக்குதல்கள் நகரின் ராணுவ தளங்களை தாக்கியதாக சிரிய பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
- ஹிஸ்புல்லாவினர் சிரியாவிற்குள் நுழைந்து மூன்று ராணுவ வீரர்களைக் கடத்தினர்.
- மக்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் இணையத்திலும் உள்ளூர் ஊடகங்களிலும் வெளியானது.
லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லாவினர் கடந்த சனிக்கிழமை சிரியாவிற்குள் நுழைந்து மூன்று ராணுவ வீரர்களைக் கடத்தி லெபனான் எல்லையில் அவர்களைக் கொன்றதாக சிரிய இடைக்கால அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்தது.
ஆனால் ஹிஸ்புல்லா தங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டது. இதற்கிடையே இந்த சம்பவத்தால் லெபனான் - சிரியா இல்லையில் தற்போது மோதல் வெடித்தது.
எல்லையில் சிரிய வீரர்களைக் கொன்ற ஹிஸ்புல்லா கூட்டங்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக சிரிய ராணுவம் வட்டாரங்ககள் தெரிவிக்கின்றன.

எல்லையில் உள்ள சிரிய கிராமமான ஹெர்மல் மீது பீரங்கிகள் மூலம் ஷெல் தாக்குதல் நடந்துள்ளது. இதில் இருந்து மக்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் இணையத்திலும் உள்ளூர் ஊடகங்களிலும் வெளியானது.
பதிலாக வடகிழக்கு லெபனானில் உள்ள எல்லை நகரமான அல்-காசர் மீது சிரியா துப்பாக்கிச் சூடு நடத்தியதாக லெபனானின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூத்த ஹிஸ்புல்லா சட்டமன்ற உறுப்பினர் ஹுசைன் ஹாஜ் ஹசன் பேட்டி ஒன்றில், சிரியாவை சேர்ந்த போராளிகள் லெபனான் எல்லைக்குள் நுழைந்து அங்குள்ள எல்லை கிராமங்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார்.
லெபனானின் அல்-காசர் எல்லைக் கிராமத்தில் நிலைகொண்டுள்ள, சிரிய இராணுவத்திற்கும், முன்னாள் சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்துடைய ஆதரவு குழுக்களுக்கும், ஆயுதமேந்திய லெபனான் ஷியா குழுக்களுக்கும் இடையேய சமீப காலமாக வன்முறை அதிகரித்த வண்ணம் உள்ளது. சிரியாவும், லெபனானும் எல்லையில் தங்கள் படையினரை அதிகம் நிலைநிறுத்தி வருகின்றன.
இதற்கிடைய சிரியாவின் லடாகியாவில் உள்ள ஒரு ஆயுதப் பிரிவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சிரியாவின் சிவில் பாதுகாப்புத் துறை அறிவித்தது. நான்கு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உலோகத் துகள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் வெடிப்புவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- பொருளாதார சிக்கல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது
- டெபாசிட் செய்த பணத்தை திரும்ப வழங்காததால் பொதுமக்கள் போராட்டம்
மேற்காசிய நாடான லெபனானில் கடுமையான பொருளாதார சிக்கல் நிலவுகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசாங்கமும், மத்திய வங்கியும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்களின் வங்கி சேமிப்புகளை எடுக்க முடியாத சூழல் நிலவுவதால், இதனை எதிர்த்து பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பல வங்கி கட்டிடங்களை போராட்டக்காரர்கள் சூறையாடினார்கள். வங்கிகளுக்கு முன்பாக பெரிய டயர்களை கொளுத்தியும், வங்கி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் எதிர்ப்புகளை காட்டி வருகிறார்கள். தலைநகர் பெய்ரூட்டிற்கு வெளியே ஆடி வங்கி, பெய்ரூட் வங்கி, மற்றும் மவுண்ட் லெபனான் சின் எல்-ஃபில்.ல் உள்ள பிப்லோச் வங்கி ஆகியவற்றுக்கெதிராக போராட்டம் தீவிரமாக நடைபெற்றது.
பலரின் வாழ்வாதார சேமிப்புகள் அழிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டும் போராட்டக்காரர்கள், தங்கள் பணத்தை திரும்ப கேட்டும், இந்த நெருக்கடிக்கு மத்திய வங்கி ஆளுநர் ரியாத் சலாமே உட்பட ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரும் பொறுப்பெற்க வேண்டும் என்றும் கூறினர்.
போராட்டக்காரர்களில் ஒருவர், "நாங்கள் நீண்ட காலம் பொறுத்து விட்டோம். இனி அது முடியாது" என கூறினார். மற்றொரு போராட்டக்காரர், "வங்கிகளுக்கு நாங்கள் ஒரு செய்தியை இந்த போராட்டத்தின் வழியாக தெரிவிக்கிறோம். எங்கள் உரிமைகளை இன்றும் சரி, இன்னும் 100 ஆண்டுகளானாலும் சரி இழக்க மாட்டோம். இந்த செய்தியை வங்கிகள் புரிந்து கொள்ள வேண்டும்" என கூறினார்.
இந்த நெருக்கடி நிலை உருவாகக் காரணமான அதிகாரிகளில் அரசியல் தொடர்புடையவரான சலாமே குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார். பல்லாயிரக்கணக்கான டாலர்கள் மக்கள் பணத்தை கையாடல் செய்ததாக அவருக்கெதிரான விசாரணைக்காக பிரான்ஸ் நாடு ஒரு கைது வாரண்ட் பிறப்பித்திருக்கும் சூழ்நிலையில் இண்டர்போல் அமைப்பும் அவருக்கெதிராக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால், சலாமே இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
பல மாதங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் முட்டுக்கட்டைகளை நீக்கி, ஒரு அதிபரை தேர்வு செய்ய லெபனான் நாடாளுமன்றத்தால் 12-வது முறையாக இயலாமலிருக்கும் சூழ்நிலையில் இந்த போராட்டம் வெடித்துள்ளது.
2019-ல் இருந்து லெபனானின் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. நவீன வரலாற்றில் இது மிகவும் மோசமானது என்று உலக வங்கி தெரிவித்திருந்தது. அமெரிக்க டாலருக்கு இணையாக லெபனானின் பணமதிப்பு மிகவும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.






