

தெற்கு லெபனானில் வாகனம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக லெபனான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இது இரு தரப்பினருக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மற்றுமொரு "மீறல்" என ஹிஸ்புல்லா தீவிரவாத குழு கூறியுள்ளது.
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக, ஹிஸ்புல்லா மார்ச் 2-ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தி லெபனானை மத்திய கிழக்கு போருக்குள் இழுத்தது.
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்கள் மற்றும் தரைவழி தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்தது. இதில் 4,100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக லெபனான் கூறுகிறது.
கஃபார் ருமான் நகருக்கு அருகே இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ஒன்று அவர்களது வாகனத்தை தாக்கியதில் "இருவர் கொல்லப்பட்டனர்" என்று லெபனானின் அரசுக்கு சொந்தமான தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நபாத்தியே நகருக்கு அருகிலுள்ள அலி அல்-தாஹெர் ரிட்ஜ் பகுதியில் "அச்சுறுத்தலாக இருந்த ஆயுதம் ஏந்திய இரண்டு ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை" குறிவைத்ததாக இஸ்ரேலிய இராணுவம் முன்னதாகக் கூறியிருந்ததுடன், "உடனடி அச்சுறுத்தல்களை அகற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்" என்றும் உறுதியளித்திருந்தது.