என் மலர்
நீங்கள் தேடியது "famine"
- மத்திய கிழக்கு வரலாற்றில் ஒரு பகுதியில் பஞ்சம் அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
- பசியை போர் ஆயுதமாகப் பயன்படுத்துவது ஒரு போர்க்குற்றம் என்று ஐ.நா மனித உரிமைகள் அதிகாரி வோல்கர் டர்க் கூறினார்.
காசாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட கொடும் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன் அறிக்கையின்படி, காசாவில் அரை மில்லியனுக்கும் (5 லட்சத்துக்கும்) அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொள்கின்றனர்
காசா நகரம் உட்பட பாலஸ்தீனத்தின் சுமார் 20 சதவீத பகுதியில் பஞ்ச நிலைமை இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
உடனடி போர்நிறுத்தம் செயல்படுத்தப்பட்டு, மனிதாபிமான உதவி கிடைக்காவிட்டால், கான் யூனிஸ் மற்றும் டெய்ர் அல்-பாலா போன்ற தெற்குப் பகுதிகளுக்கு பஞ்சம் பரவக்கூடும்.
பல்லாயிரக்கணக்கானோர் பட்டினியின் விளிம்பில் உள்ளனர். காசாவில் பசி பட்டினி முற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்டது. பசி பட்டினி அங்கு வேகமாக பரவி வருகிறது.
உதவி கிடைப்பதில் ஒரு நாள் தாமதம் கூட பட்டினி மரணங்களை அதிகரிக்கச் செய்கிறது. தடுக்கக்கூடிய இறப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்று அறிக்கை எச்சரிக்கிறது.

மத்திய கிழக்கு வரலாற்றில் ஒரு பகுதியில் பஞ்சம் அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
ஜெனீவாவில் நடந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா. உதவி பொதுச்செயலாளர் டாம் பிளெட்சர், "இது முற்றிலும் தடுக்கக்கூடிய பஞ்சம்.எல்லைகளில் உணவு விநியோகத்தை நிறுத்தும் தடைகளை இஸ்ரேல் திட்டமிட்டு உருவாக்குகிறது. இது நம் அனைவரையும் வேட்டையாடும் பஞ்சம்" என்று கூறினார்.
"காசாவின் பஞ்சம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்றும் இது மனிதகுலத்தின் தோல்வி" என்றும் ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்ரஸ் தெரிவித்தார். .
பசியை போர் ஆயுதமாகப் பயன்படுத்துவது ஒரு போர்க்குற்றம் என்று ஐ.நா மனித உரிமைகள் அதிகாரி வோல்கர் டர்க் கூறினார்.
மறுபுறம், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் ஐ.நா அறிக்கையை கடுமையாகக் கண்டித்தது. "காசாவில் பஞ்சம் இல்லை. இந்த அறிக்கை ஹமாஸால் கூறப்பட்ட பொய்களை அடிப்படையாகக் கொண்டது" என்று அது குற்றம் சாட்டியது.
பஞ்சம் எப்படி தீர்மானிக்கப்படுகிறது?
ஒரு பகுதியில் பஞ்சத்தை அறிவிக்க, ஐ.பி.சி சில கடுமையான அளவுகோல்களைப் பின்பற்றுகிறது. இந்த அளவுகோல்களில் முக்கியமானது, மக்கள்தொகையில் குறைந்தது 20 சதவீத வீடுகளாவது கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வது, 30 சதவீத குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவது, ஒவ்வொரு 10,000 பேரில் இரண்டு பெரியவர்கள் அல்லது நான்கு குழந்தைகள் பசியால் உயிரிழப்பது ஆகும். காசாவில் இந்த நிலைமைகள் இருப்பதாக IPC தீர்மானித்துள்ளது.
காசாவில் கடந்த ஓரிரு மாதங்களில் பட்டினியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
- உணவு பெற வரும் மக்கள் கூட்டம் மீது துப்பாக்கிச்சூடு நடந்து நூற்றுக்கணக்கானோரை கடந்த வாரங்களில் கொன்று குவித்தது.
- நாங்கள் ரொட்டிக்கு பதிலாக மண்ணை சாப்பிடுகிறோம். கொஞ்சமாவது கருணை காட்டுங்கள்.
காசாவில் உணவு கிடைக்காமல் தவிக்கும் சிறுவன் பேசும் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகளாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 55,500 க்கும் அதிகாமாக பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.
லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாறினார். இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் முதல் காசாவுக்குள் எந்த விதமான உணவு மற்றும் உதவிப் பொருட்களை செல்ல விடாமல் இஸ்ரேல் தடுத்தது. இதனால் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் கடும் பட்டினியில் வாடுகின்றனர்.

கடந்த சில வாரங்களாக உதவி பொருட்களை அனுமதிக்கும் இஸ்ரேல், அந்த செயல்முறையை தங்கள் கட்டிபாட்டில் எடுத்துக்கொண்டு, உணவு பெற வரும் மக்கள் கூட்டம் மீது துப்பாக்கிச்சூடு நடந்து நூற்றுக்கணக்கானோரை கடந்த வாரங்களில் கொன்று குவித்தது.
அவ்வாறு உயிரை பணயம் வைத்து உதவிகளை பெற்றாலும், அது மிகவும் சொற்ப அளவே கிடைப்பதால் மருந்து மற்றும் உணவின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வைரலாகி வரும் வீடியோவில் பேசும் சிறுவன், "காசாவில் நாங்கள் சாப்பிட உணவு எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் உணவு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய டிரக்குகள் காசாவுக்குள் வருகின்றன. ஆனால் அதில் எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.
நாங்கள் உணவு இல்லாமல் மண்ணை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு உணவு இல்லை. எங்குமே உணவு இல்லை. எங்களுக்கு உணவு சமைக்க மாவு தேவை. எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள். தயவுசெய்து கருணை காட்டுங்கள். எங்களிடம் உணவு இல்லை. நாங்கள் ரொட்டிக்கு பதிலாக மண்ணை சாப்பிடுகிறோம். உணவு இல்லாமல் மண்ணை சாப்பிடுகிறோம்.. இரக்கம் காட்டுங்கள் - கலங்க வைக்கும் காசா சிறுவனின் வீடியோ
காசாவில் தற்போது ஒரு ரொட்டித் துண்டின் விலை 5.30 டாலர் (570 ரூபாய்). அந்த ஒரு ரொட்டித் துண்டும் மிகவும் சிறியது. அது எங்களுக்குப் போதவில்லை" என்று கூறுவது பதிவாகி உள்ளது.
- காசா பகுதி தாக்குதலில் சுமார் 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்
- போர் தொடங்கி 100 நாட்கள் கடந்தும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது
கடந்த 2023 அக்டோபர் 7 அன்று தொடங்கிய ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் பாலஸ்தீன காசா பகுதியில் தொடுத்துள்ள போர், 100 நாட்களை கடந்தும் தீவிரமடந்து வருகிறது.
பாலஸ்தீன காசா பகுதியில் தற்போது வரை 24,285 பேர் உயிரிழந்ததாகவும், 61,154 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார துறை அறிவித்துள்ளது.
தற்போதைய பாலஸ்தீன நிலவரம் குறித்து ஐ.நா. சபையின் மனித உரிமை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியிருப்பதாவது:
காசா பகுதியில் உள்ள ஒவ்வொரு மனிதரும் பசியுடன் உள்ளனர். அங்குள்ள மக்கள் தொகையில் 25 சதவீதத்திற்கும் மேல் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் திண்டாடி வருகின்றனர். உணவுக்கும், நீருக்கும் அங்கே கடும் பஞ்சம் நிலவுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான உணவோ, மருத்துவ வசதியோ கிடைக்கவில்லை. 5 வயதிற்கு உட்பட்ட சுமார் 3,35,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் தவிக்கின்றனர். ஒரு தலைமுறையை சேர்ந்தவர்கள் வளர்ச்சி குன்றியவர்களாக உருவாக போகின்றனர். காசாவில் எந்த இடமும் பாதுகப்பானதாக இல்லை எனும் நிலை அங்கு தோன்றி விட்டது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் பலவந்தமாக பிடித்து சென்ற பணய கைதிகளை மீட்க இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டுள்ள அமெரிக்கா, ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் கத்தார் நாட்டுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- சூடான் உள்நாட்டு போரால் மிகப்பெரும் பசி , பட்டினி நிலை உருவாகி உள்ளது.
- மக்கள் உயிர் வாழ மண், இலைகளை சாப்பிடும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே உள்நாட்டு போர் வெடித்தது. இந்த போர் தற்போது வரை குறைய வில்லை . இதனால் மக்கள் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர்.
சூடானில் தற்போது சுமார் 49 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 18 மில்லியன் மக்கள் உணவு தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்,

உள்நாட்டு போரில் காயம் அடைந்த 160- க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 60 - க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சூடானில் ஏற்பட்ட சண்டையால் விவசாய பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது இதனால் மக்கள் உணவைத் தேடி வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். மக்கள் இடம் பெயர்வால் அங்கு மலேரியா மற்றும் பிற நோய்கள் பரவுகின்றன.

மேலும் சூடானுக்கு வரும் சர்வதேச உதவிகள் பட்டினியால் வாடும் பகுதிகளில் உள்ள மக்களை சென்றடைவதை ராணுவம் தடுத்து வருகிறது. சூடான் உள்நாட்டு போரால் மிகப்பெரும் பசி , பட்டினி நிலை உருவாகி உள்ளது.

உணவு பொருட்கள் அனைத்தும் தீர்ந்து விட்டதால், விவசாயிகள் நடவுக்காக வாங்கிய விதை தானியங்களை சாப்பிட்டுள்ளனர். மக்கள் உயிர் வாழ மண், இலைகளை சாப்பிடும் அவல நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.
- பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கையை விட மோசமான இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது
- தீவிரமான பசி- பட்டினி பிரச்சனைகள் கொண்ட நாடாக இந்தியா வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டிற்கான உலக பட்டினி குறியீடு அறிக்கையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கையை விட மோசமான இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்டுவைட் மற்றும் ஜெர்மனியின் வேர்ல்ட் ஹங்கர் லைஃப் ஆகிய அமைப்புகள் இணைந்து வருடந்தோறும் பட்டினிக் குறியீடு அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் 127 நாடுகளில் நடத்திய ஆய்வின்படி 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 19 வது உலக பட்டினி குறியீட்டு அறிக்கையான இதில் இந்தியா 105 ஆவது இடத்தில் உள்ளது. அதன்படி தீவிரமான பசி- பட்டினி பிரச்சனைகள் கொண்ட நாடாக இந்தியா வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் மூலம் இந்தியாவில் குழந்தைகளிடையே, ஊட்டச்சத்துக் குறைபாடு பாதிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. குழந்தை வளர்ச்சி குன்றிய விகிதம் 35.5 சதவீதமாகவும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாகவும் உள்ளது.
மேலும் ஊட்டச்சத்து குறைபாடு 13.7 சதவீதமாக உள்ளது. இதற்கு முன்னர் வெளிவந்த பட்டினி குறீயிட்டு அறிக்கைகளை மத்திய அரசு நிராகித்தது குறிப்பிடத்தக்கது.
- ஓயோ மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 35 குழந்தைகள் வரை கொல்லப்பட்டனர்
- தேவாலயத்தில் வைத்து வழங்கப்பட்ட உடைகள் மற்றும் உணவைப் பெற 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. பட்டினியால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் சிரமங்களை சந்தித்து வளர்கின்றனர்.
இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த வாரம் நைஜீரியாவின் பல்வேறு நகரங்களில் உணவு வழங்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 67க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஓயோ மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 35 குழந்தைகள் வரை கொல்லப்பட்டனர். சனிக்கிழமையன்று, தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் 22 பேர் இறந்தனர், தலைநகர் அபுஜாவில் 10 பேர் இறந்தனர், அபுஜாவில் தேவாலயத்தில் வைத்து வழங்கப்பட்ட உடைகள் மற்றும் உணவைப் பெற 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.


இந்த சம்பங்கள் குறித்த முழுமையான விசாரணைக்கு நைஜீரிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜனாதிபதி போலா டினுபு, வரவிருக்கும் அனைத்து கொண்டாட்டங்களையும் ரத்து செய்துள்ளார்.
இந்த துயரங்களுக்கு நாட்டில் நிலவும் அதிகப்படியான வறுமை, அதிக உணவு விலைகள் மற்றும் அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளே காரணம் என்று தொழிலாளர் கட்சித் தலைவர் பீட்டர் ஓபி குற்றம் சாட்டியுள்ளார்.
பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு கிடக்கிறது.
கடந்த ஆண்டு 4 ஏரிகளிலும் 3278 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது. ஆனால் இன்று 261 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. சென்னைக்கு தினமும் 854 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் இப்போது 400 மில்லியன் லிட்டர் குடிநீர் தான் வினியோகிக்கப்படுகிறது.
வீராணம் ஏரியில் இருந்து வரும் குடிநீர், கடல் குடிநீர், கல்குவாரியில் இருந்து கிடைக்கப்பெறும் தண்ணீர் ஆகியவைதான் சென்னைக்கு வினியோகிக்கப்படுகிறது. இதுதவிர விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரையும் லாரி மூலம் வினியோகம் செய்து வருகின்றனர்.

1 லாரி தண்ணீர் வந்தால் 500 காலி குடங்களுடன் பெண்கள் சூழ்ந்துவிடுகின்றனர். சென்னையில் 900 லாரிகள் மூலம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடைகள் தண்ணீர் வினியோகம் நடைபெறுவதாக கூறினாலும் நிறைய தெருக்களில் 1 முறை தான் லாரி தண்ணீர் கிடைக்கிறது என்று மக்கள் ஆதங்கப்படுகின்றனர். சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டை, மேடவாக்கம், சிட்லபாக்கம், வில்லிவாக்கம், சேலையூர், கோவிலம்பாக்கம், திருவொற்றியூர், சூளைமேடு, அடையார், கிண்டி பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் வறண்டுவிட்டதால் வாடகைக்கு குடியிருக்கும் பலர் வீடுகளை காலி செய்து விட்டு குடிநீர் வசதி உள்ள வீடுகளுக்கு இடம்மாறி வருகின்றனர்.
ஆனால் வீட்டு வாடகை 2 ஆயிரம் ரூபாய் அதிகமாக சொல்கிறார்கள். ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டின் வாடகை ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாகவும், இருபடுக்கை அறை வீட்டின் வாடகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் மாடிக்கு தண்ணீர் ஏற்றும் அளவுக்கு நீர்வரத்து இல்லாததால் மாடியில் இருப்பவர்களும் வீடுகளை காலிசெய்து வருகிறார்கள்.
சென்னை குடிநீர் வாரியம் லாரி தண்ணீரை வினியோகம் செய்தாலும் வீட்டுக்கு வீடு குடிப்பதற்கு ‘கேன் வாட்டர்’ தான் பலர் வாங்குகின்றனர். இதனால் ‘கேன் வாட்டர்’ விலையை ரூ.25 முதல் ரூ.50 வரை கடைக்காரர்கள் உயர்த்தி விட்டனர்.
‘அக்வாபினா’ ‘கின்லே’ போன்ற ‘கேன் வாட்டர்’ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. குடிநீர் வாரியத்தில் லாரி தண்ணீருக்கு பதிவு செய்தால் 1 வாரம் கழித்து தான் வருகிறது. தனியார் லாரிகளும் அழைத்தவுடன் வருவதில்லை. இதனால் குடிநீருக்கு நடுத்தர குடும்பத்தினர் பெரிதும் அல்லல்பட்டு வருகின்றனர்.
சென்னை நகருக்குள் 1 நாள் விட்டு 1 நாள் ஓரளவு தண்ணீர் கிடைத்தாலும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் கிடைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 500 ரூபாய்க்கு கிடைத்த மினி லாரி தண்ணீர் இப்போது ரூ.1000 கொடுத்தால் தான் கிடைக்கிறது.
இதுபற்றி குடிநீர் வாரிய அதிகாரி கூறுகையில் கிடைக்கிற தண்ணீரை சமமாக பிரித்து தெருக்களுக்கு அனுப்பி வைக்கிறோம். பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் வறண்டுவிட்டதால் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. மழை பெய்தால் தான் இதற்கு நிரந்தர தீர்வு காணமுடியும். அதுவரை தட்டுப்பாடு இருக்கத்தான் செய்யும். நிலைமையை சமாளிக்க லாரி தண்ணீரை அதிக அளவு அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.
முகப்பேரில் வாட்டர் கேன் வியாபாரம் செய்யும் பி.வி.தமிழ்ச்செல்வன் கூறுகையில், ‘தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகவும், சுத்தமான குடிநீர் கிடைக்காத காரணத்தாலும் ‘கேன் வாட்டர்’ வாங்காத வீடுகளே இல்லை என்ற அளவுக்கு வீட்டுக்கு வீடு கேன் வாட்டர் வாங்குகிறார்கள்.
இதனால் கேன்வாட்டர் விற்பனை அதிகரித்துள்ளது. விலையும் ஏறிக்கொண்டே போகிறது. பிராண்டுக்கு ஏற்ப விலை உள்ளது. ரூ.20 முதல் ரூ.80 வரை கேன் வாட்டர் விற்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #DrinkingWater






