என் மலர்
நீங்கள் தேடியது "உதவி மையம்"
- இதில் 10 பேர் உதவி விநியோக மையத்தில் உணவுக்காக காத்திருந்தவர்கள்
- இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை சுமார் 56,331 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 62 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதில் 10 பேர் உதவி விநியோக நிலையத்தில் உணவுக்காக காத்திருந்தவர்கள் என்று காசா சுகாதாரத் துறையை தெரிவித்தது.
மேலும் மத்திய காசா நகரமான டெய்ர் அல்-பாலாவில் உள்ள உணவு விநியோக மையத்தில் இஸ்ரேல் குறிவைத்து நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெய்ர் அல்-பாலாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து கோதுமை மாவு மூட்டைகளைப் பெற வந்த பொதுமக்கள் மீதும் தாக்குதல் அரங்கேறி உள்ளது.
2023 அக்டோபர் 7 ஆம் தேதி முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 56,331 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 132,632 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே காசாவில் மனிதாபிமான உதவி கோரி வந்த பாலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இஸ்ரேலிய இராணுவத் தளபதிகள் உத்தரவிட்டதாக வெளியான செய்தியை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மறுத்துள்ளார்.
- உணவு பெற வரும் மக்கள் கூட்டம் மீது துப்பாக்கிச்சூடு நடந்து நூற்றுக்கணக்கானோரை கடந்த வாரங்களில் கொன்று குவித்தது.
- நாங்கள் ரொட்டிக்கு பதிலாக மண்ணை சாப்பிடுகிறோம். கொஞ்சமாவது கருணை காட்டுங்கள்.
காசாவில் உணவு கிடைக்காமல் தவிக்கும் சிறுவன் பேசும் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகளாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 55,500 க்கும் அதிகாமாக பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.
லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாறினார். இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் முதல் காசாவுக்குள் எந்த விதமான உணவு மற்றும் உதவிப் பொருட்களை செல்ல விடாமல் இஸ்ரேல் தடுத்தது. இதனால் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் கடும் பட்டினியில் வாடுகின்றனர்.

கடந்த சில வாரங்களாக உதவி பொருட்களை அனுமதிக்கும் இஸ்ரேல், அந்த செயல்முறையை தங்கள் கட்டிபாட்டில் எடுத்துக்கொண்டு, உணவு பெற வரும் மக்கள் கூட்டம் மீது துப்பாக்கிச்சூடு நடந்து நூற்றுக்கணக்கானோரை கடந்த வாரங்களில் கொன்று குவித்தது.
அவ்வாறு உயிரை பணயம் வைத்து உதவிகளை பெற்றாலும், அது மிகவும் சொற்ப அளவே கிடைப்பதால் மருந்து மற்றும் உணவின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வைரலாகி வரும் வீடியோவில் பேசும் சிறுவன், "காசாவில் நாங்கள் சாப்பிட உணவு எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் உணவு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய டிரக்குகள் காசாவுக்குள் வருகின்றன. ஆனால் அதில் எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.
நாங்கள் உணவு இல்லாமல் மண்ணை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு உணவு இல்லை. எங்குமே உணவு இல்லை. எங்களுக்கு உணவு சமைக்க மாவு தேவை. எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள். தயவுசெய்து கருணை காட்டுங்கள். எங்களிடம் உணவு இல்லை. நாங்கள் ரொட்டிக்கு பதிலாக மண்ணை சாப்பிடுகிறோம். உணவு இல்லாமல் மண்ணை சாப்பிடுகிறோம்.. இரக்கம் காட்டுங்கள் - கலங்க வைக்கும் காசா சிறுவனின் வீடியோ
காசாவில் தற்போது ஒரு ரொட்டித் துண்டின் விலை 5.30 டாலர் (570 ரூபாய்). அந்த ஒரு ரொட்டித் துண்டும் மிகவும் சிறியது. அது எங்களுக்குப் போதவில்லை" என்று கூறுவது பதிவாகி உள்ளது.
- உணவு மையங்களை அடைய முயற்சிக்கும்போது தினசரி துப்பாக்கிச்சூடுகளில் மக்கள் உயிரிழந்த வண்ணம் உள்ளனர்.
- இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் வழியாக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உணவு மையங்களை அடைய முயற்சிக்கின்றனர்.
உணவுக்காக திரண்ட மக்கள் மீது துப்பாக்கிசூடு.. 38 பேரை கொன்று குவித்த இஸ்ரேல் ராணுவம்தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவுடன் செயல்படும் உணவு விநியோக மையங்களுக்கு அருகே நேற்று (ஜூன் 16) இஸ்ரேலிய ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 38 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் ராஃபா நகரத்திற்கு அருகிலுள்ள காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மையத்தை அடைய முயன்றபோது கொல்லப்பட்டனர் என்றும், சில பேர் அருகிலுள்ள கான் யூனிஸ் நகரின் புறநகரில் புதிதாக திறக்கப்பட்ட மையத்திற்குச் செல்லும் வழியில் சுடப்பட்டதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் வழியாக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உணவு மையங்களை அடைய முயற்சிக்கும்போது தினசரி துப்பாக்கிச்சூடுகளில் மக்கள் உயிரிழந்த வண்ணம் உள்ளனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் போர்வையில், அதிகாலை 4 மணியளவில் இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இஸ்ரேலிய இராணுவம் உடனடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. முன்னதாக நடந்த இதுபோன்ற சம்பவங்களில், தங்கள் நிலைகளை நெருங்கும் சந்தேக நபர்கள் மீது எச்சரிக்கை செய்வதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறியிருந்தது.
இஸ்ரேலின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கை மற்றும் உதவிப் பொருட்கள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள், காசா பகுதியைப் பஞ்சத்தின் விளிம்பில் தள்ளியுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2023-24-ம் கல்வியாண்டு இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு, மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- கல்லூரி வேலை நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சேவை மையத்தில் தங்களது சேர்க்கை விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
நாமக்கல்:
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2023-24-ம் கல்வியாண்டு இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு, மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க, நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம், இன்று முதல் வருகிற 19-ந் தேதி வரை செயல்பட உள்ளது.
பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவியர் பாஸ்போட் சைஸ் போட்டோ, 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, இ-மெயில் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றுடன் கல்லூரி வேலை நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சேவை மையத்தில் தங்களது சேர்க்கை விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
பொது பிரிவினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ48, பதிவுக் கட்டணமாக ரூ.2 என மொத்தம் ரூ.50 (ஒவ்வொரு 5 கல்லூரிகளுக்கும்) செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு பதிவு கட்டணமாக ரூ.2 மட்டும் செலுத்தினால் போதும்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் இண்டர்நெட் வழியாக செலுத்தலாம். இண்டர்நெட் மூலம் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள், கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் பேங்க் டிராப்ட் மற்றும் நேரடியாக பணமாகவும் செலுத்தலாம்.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை கலை பிரிவில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல் மற்றும் வர லாறு பாடப்பிரிவு களுக்கும், அறிவியல் பிரிவில் கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளுக்கும் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜா தெரிவித்துள்ளார்.
- தகுதியான பயனாளிகளுக்கு இன்று காலையிலும் குறுஞ்செய்திகள் வந்தது
- பெண்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போயிருந்தனர்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் 4 லட்சத்து 77 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். ரேஷன் கார்டுதாரர்களுக்கு கலைஞர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதில் 4 லட்சம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டன.
பூர்த்தி செய்து பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களில் ஒரு சில குறைபாடுகள் இருந்தது. இதையடுத்து அதை கள ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2 லட்சம் விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டது. கள ஆய்வுக்கு பிறகு விண்ணப்ப படிவங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கான தகுதியான பயனாளிகள் குறித்த விவரங்கள் செல்போனில் குறுஞ்செய்தி மூலமாக வெளியானது. குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 2000 பயனாளிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கலைஞர் உரிமை திட்டத்திற்கான டெபிட் கார்டை வழங்கி தொடங்கி வைத்தார். நேற்று காலை வரை மாவட்டம் முழுவதும் ஒரு சில பெண்களுக்கு மட்டுமே கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கான குறுஞ்செய்திகள் வந்திருந்தது. சில பெண்களுக்கு குறுஞ்செய்திகள் வரவில்லை. இதனால் பெண்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போயிருந்தனர்.
இந்த நிலையில் அந்த பெண்களுக்கும் தாமதமாக குறுஞ்செய்திகள் வந்து சேர்ந்தன. நேற்று நள்ளிரவு வரை குறுஞ்செய்திகள் வந்து கொண்டே இருந்தது. இதை பார்த்த பிறகு பெண்கள் உற்சாகம் அடைந்தனர். இன்று காலையிலும் ஒரு சில பெண்களுக்கு குறுஞ்செய்திகள் வந்துள்ளது. இதுவரை சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு குறுஞ்செய்திகள் வந்துள்ளது தெரியவந்துள்ளது. மீதமுள்ள தகுதியானவர்களுக்கும் படிப்படியாக குறுஞ்செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.
தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் வருகிற 18-ந்தேதிக்குள் குறுஞ்செய்திகள் வந்து வங்கி கணக்கில் ரூபாய் ஆயிரம் டெபிட் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறுஞ்செய்திகள் வராதவருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர்களுக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட காரணத்திற்கான தகவலை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். 18-ந்தேதி நிராகரிக்கப்பட்ட பயனாளிகளுக்கான குறுஞ்செய்திகள் வரும் எதற்காக விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்பட்டது என்ற விபரம் தெரிவிக்கப்படும். அதன் பிறகு அந்த பயனாளிகள் பக்கத்தில் உள்ள இ சேவை மையங்களுக்கு சென்று ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மூலமாக மீண்டும் அதை விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு அதிகாரிகள் அதை பரிசீலித்து கலைஞர் உரிமை திட்டத்திற்கான திட்டத்தில் சேர்த்துக்கொள்வது குறித்து பரிசீலனை மேற்கொள்வார்கள்.
இது தொடர்பாக குமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம்,விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டாறு தாலுகா அலுவலகங்களில் உதவி மையங்கள் திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த உதவி மையங்கள் வருகிற 18-ந்தேதி முதல் செயல்பட தொடங்கும். கலைஞர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக தகவல்களை தெரிந்துகொள்ள பொதுமக்கள் நேரடியாக அந்த தாலுகா அலுவலகங்களுக்கு சென்று சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.
- ரூ.1000 கிடைக்காததால் வந்திருந்தனர்
- உதவி மையத்தில் கலெக்டர் ஆய்வு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக பொது மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள் ஆகியவற்றில் உதவி மையங்கள் தொடங்கப்பட்டு நேற்று முதல் செயல்படுகின்றன.
நேற்று வாலாஜா தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பணம் கிடைக்கப்பெறாத பெண்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
தாலுகா அலுவலகத்தில் குவிந்த பெண்களின் குடும்ப அட்டையை வைத்து செல்போன் செயலியில் சரிபார்த்து உதவி மைய அதிகாரிகள் விண்ணப்பத்தின் நிலை பற்றி தெரிவித்தனர்.
இதில் செல்போன் செயலியில் அதிகாரிகள் விண்ணப்பத்தின் நிலையை அறிய முயன்ற போது சர்வரால் தாமதம் ஏற்பட்டதால் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது தமிழ்நாடு முழுவதும் பணி நடைபெறுவதால் செயலி சர்வரில் கால தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் வாலாஜா தாலுகா அலுவல கத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறாவர்கள் தங்கள் விண்ணப்பங்களை மேல் முறையீடு செய்தால் கண்டிப்பாக தகவல்கள் சரிபார்க்கப்பட்டு அனைத்து தகுதியான பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்படும். ஆகவே, உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் அச்சப்பட தேவையில்லை என கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது வாலாஜா தாசில்தார் வெங்கடேசன் உடனிருந்தார்.
- தகுதியுடைய பெண்கள் வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் வரவு வைக்கப்பட்டது.
- மேல்முறையீடு செய்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் இ-சேவை மையத்தினை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டது
உடுமலை :
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 15 -ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதைத் தொடர்ந்து தகுதியுடைய பெண்கள் வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் தகுதி இருந்தும் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.மேலும் இதற்கென இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டது.அதன்படி நேற்று உடுமலை தாலுகா அலுவலகத்தில் முகாம் அமைக்கப்பட்டது.அப்போது உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன் கலந்து கொண்டு பொதுமக்களின் விண்ணப்பத்தின் நிலையை ஆய்வு செய்தார்.முன்னதாக அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது.அதன்படி ஒவ்வொருவரையும் வரிசையாக அழைத்து சரி பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது மேல்முறையீடு செய்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் இ-சேவை மையத்தினை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டது.இதற்கு அரசு சார்பில் கட்டணம் வசூலிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த முகமானது 30 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது பொதுமக்கள் ஆதார்கார்டு,குடும்ப அட்டையை கொண்டு வந்து சரி பார்த்துக் கொள்ளலாம் என்று வருவாய் துறையினர் தெரிவித்தனர்.முதல் நாளான நேற்று 150 விண்ணப்பதாரர்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. முகாமில் உடுமலை தாசில்தார் ப.சுந்தரம் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- ஜவுளி, பட்டாசு, இனிப்பு வாங்குவதற்காக பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.
- காந்திஜி சாலையில் போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளன. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் ஜவுளி, பட்டாசு, இனிப்பு முதல் அனைத்து வகையான பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.
தஞ்சையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க தொடங்கி விட்டனர். மேலும் தற்போது தங்கள் வீட்டுக்கு, உறவினர்களுக்கு கொடுக்க தேவைப்படும் இனிப்பு வகைகளை வாங்குவதற்கு குவிய தொடங்கியுள்ளனர்.
இதனால் தஞ்சையில் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் காணப்படுகிறது.
இன்று பிற்பகல் வரை மழை இல்லாத காரணத்தினால் வியாபாரம் பாதிப்படையவில்லை.
தஞ்சை காந்திஜி சாலை, கோர்ட் ரோடு, கீழவாசல், பழைய பஸ் நிலையம் ,புதிய பஸ் நிலையம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் தஞ்சை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் தஞ்சைக்கு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் நகரில் சாலைகளில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிக அளவில் இருந்தது.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டுவதை தடுக்க காந்திஜி சாலையில் போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் போலீசார் பணியாற்றி வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க, போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
இனி வரக்கூடிய நாட்களில் இதை விட கூட்டம் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 52 தொழில்நுட்பக் கல்லூரிகள், சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
- அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம் கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரையின்படி உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோருக்குத் தேவைப்படும் தகவல்களை வழங்கும் உதவி மையம் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக் கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள். 52 தொழில்நுட்பக் கல்லூரிகள், சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இக்கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியருக்கு வெளிப்படையான, பதிலளிக்கக்கூடிய மற்றும் அணுகுவதற்கு எளிமையான ஒரு சூழலை ஏற்படுத்தும் விதமாக, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கைக்காகவும் மற்றும் இதர காரணங்களுக்காகவும் மேற்குறிப்பிட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு வருகை தரும் மாணவியர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அந்நிறுவனங்களில் வழங்கப்படும்.
பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்கள், துறை அலுவலகங்களின் அமைவிடம், தனியார்களின் கோரிக்கை தொடர்பாக எந்த அலுவலரை அணுகுவது.
அலுவலக நடைமுறைகள், தனியார்களின் கோரிக்கைகள் தொடர்பான முன்னேற்றம் போன்ற விவரங்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள ஏதுவாக மேற்குறிப்பிட்டுள்ள உயர்கல்வித்துறையின்கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அக்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து விவரங்களையும் நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம்" கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும்.
இந்த மையம் பயனாளிகளுக்கு எளிதில் உதவும் வகையில் அமைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் கூறி உள்ளார்.
- தென்காசி மாவட்டத்தில் பொது புகார்களை கேட்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் உதவி மையத்தை தொடங்கி உள்ளது.
- உதவி மையம் மூலம் உரிய துறைக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்படும்.
தென்காசி:
தென்காசி கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தென்காசி மாவட்டத்தில் அரசாங்க சேவைகளில் உள்ள குறைகளையும், பொது புகார்களையும் கேட்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் கலெக்டர் உதவி மையத்தை தொடங்கி உள்ளது.
எனவே வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்கள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
இந்த உதவி மையத்திற்கு தொடர்பு கொண்டு தங்கள் மனுக்களை தக்க விபரங்களோடு சமர்ப்பிக்கலாம்.உதவி மையம் மூலம் உரிய துறைக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்படும்.
இந்த உதவி மையம் மூலம் மக்களுக்கும் அரசாங்கத்திற்குமான இடைவெளி குறைக்கப்படுவதோடு மக்களின் கோரிக்கைகளையும்,குறைகளையும் கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சரி செய்யும்.
பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மாவட்ட கலெக்டரின் சேவை மையத்தின் கட்டணமில்லா எண் :1800 599 3599 மற்றும் வாட்ஸ்அப் எண் :7790019008 ஆகிய எண்களில் தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும், கருத்துக்களையும் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம் திறக்கப்பட்டது.
- 15-ந் தேதி வரை செயல்படும்
பெரம்பலூர்:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு இணையவழி மூலம் விண்ணப்பிக்கவேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உதவும் வகையில் பெரம்பலுர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையம் வரும் 15ம்தேதி வரை செயல்படும். உதவி மைய எண் 98406 93775.
எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு இணையவழி மூலம் விண்ணப்பிக்க ஏற்படும் சந்தேகங்களை நேரிலோ அல்லது உதவி மைய எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என எஸ்பி மணி தெரிவித்துள்ளார்.
- ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க காவல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
- மேலும் ஏதாவது சந்தேகம் இருப்பின் 9655220100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 3,552 இடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுக்கான விண்ணப்பங்களை தகுதியுள்ள தேர்வர்கள் இணையதளம் மூலம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப உதவிடும் வகையில் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காவல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் ஏதாவது சந்தேகம் இருப்பின் 9655220100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.






