search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opening"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொடர்மழையால் தொழுதூர் அணைக்கட்டிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது
    • கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டார்

    பெரம்பலூர்,

    வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொழுதூர் அணைக்கட்டு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலைஅருகே, பெரம்பலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.

    அணைக்கட்டின் இடது கரையில் கால்வாய் வெட்டப்பட்டு, கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான வெலிங்டன் நீர்த்தேக்கத்துக்கும், வலது கரையில் உள்ள கால்வாய் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒகளுர், வடக்கலூர், வடக்கலூர் அக்ரஹாரம் ஆகிய 3 ஏரிகளுக்கும் வெள்ளநீர் திருப்பி விடப்படுகிறது.

    தொழுதுார் அணைக்கட்டின் மூலம் மொத்தம் 26 ஏரிகளும், 10,468 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

    தொடர் மழை காரணமாக பெரம்பலூர் மாவட்டம் வெள்ளாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், குறுக்கே கட்டப்பட்டுள்ள தொழுதூர் அணைக்கட்டிலிருந்தும், கீழக்குடிக்காடு அணைக்கட்டிலிருந்தும் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டார்.

    வெள்ளாற்றிலிருந்து வரும் நீர் மூலம் கீழக்குடிகாடு அணைக்கட்டுக்கும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன்மூலம் அத்தியூர் ஏரி, கிழுமத்தூர் ஏரி, வயலூர் ஏரி மற்றும் கைப்பெரம்பலூர் ஏரி ஆகிய 4 ஏரிகளுக்கு நீர் செல்கிறது. இந்த ஏரிகள் மூலம் மொத்தம் 1,193 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் தினகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்சபேட்டையில் பகுதிநேர அங்காடி திறக்கப்பட்டது
    • கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை திறந்து வைத்தார்

    கந்தர்வகோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்சபேட்டை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பகுதி நேர அங்காடியை கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை திறந்து வைத்து அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா, ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா சுப்ரமணியன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க மேலாளர் கணேசன், மாவட்டக் குழு ராமையன், சித்திரவேல் , ரத்தினவேல், இளையராஜா மற்றும் துணைத் தலைவர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலையில் மாணவிகள் திறந்து வைத்தனர்.
    • சொக்கநாதன்புத்தூர், மேலூர்துரைச்சாமியாபுரம் ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு பல்வேறு நிதிகள் வழங்கப் பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி யில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி யிலிருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட 3 வகுப் பறை கட்டிட திறப்பு விழா நடந்தது. தங்கப் பாண்டியன் எம்.எல்.ஏ முன்னிலையில் பிளஸ்-2 மாணவிகள் ரிப்பன் வெட்டி கூடுதல் வகுப்பறை கட்டி டத்தை திறந்து வைத்த னர்.

    விழாவில் தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    சொக்கநாதன்புத்தூர், மேலூர்துரைச்சாமியாபுரம் ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு பல்வேறு நிதிகள் வழங்கப் பட்டுள்ளது. சொக்கநாதன் புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்காக இதுவரையில் (2021-22, 2022-23) 70 லட்சம் ருபாய் நிதி ஒதுக்கீடு செய்யபட் டுள்ளது. தற்போது பள்ளி சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையான கலை யரங்கம் ஆடிடோரியம் கட்டிடத்திற்கு முதல் கட்ட மாக சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கலை யரங்கம் அமைக்கப்படும்.

    ஆடிட்டோரிய கட்டி டத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் தி.மு.க விற்கு வாக்களித்தவர்களுக்கும் மற்றும் வாக்களிக்காதவர்கள் ஏன் தி.மு.க.விற்கு வாக்களிக்கவில்லை என்று எண்ணுமளவிற்கு அனை வருக்கும் சேர்த்து உழைக்க வேண்டுமென அறிவுரை கூறியுள்ளார். அவர் வழி யில் ராஜபாளையம் தொகுதி யில் அனைத்து பொது மக்களின் வளர்ச்சிக் காகவும் செயல்பட்டு வரு கிறேன்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் பரம சிவம், பாலசுப்பிர மணியன் கிளைச் செய லாளர்கள் சின்னதம்பி, அமுதரசன், சீதாராமன், தங்கப்பன் வைரவன், மகளிரணி சொர்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது.
    • மண்டல, மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை இன்று (17-ந்தேதி) தொடங்கியது.

    இதற்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். பின்பு 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டது.

    தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ், மாளிகைபுரம் கோவிலின் புதிய மேல்சாந்தி பி.ஜி.முரளி ஆகியோர் இருமுடி கட்டி சன்னிதானம் நோக்கி வந்தனர். அவர்களுக்கு மேளதாளம் முழங்க 18-ம் படிகளுக்கு கீழ் அழைத்து வரப்பட்டனர்.

    பின்பு மாலை 6.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் புதிய மேல்சாந்திகள் மூலமந்திரம் கூறி பொறுப் பேற்றுக் கொண்டனர். பின்பு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டனர். பின்பு இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கபபட்டு, சாவி புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷிடம் ஒப்ப டைக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து இன்று (17-ந்தேதி) அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ் கோவில் நடையை திறந்து வைத்தார். பின்பு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடை பெற்றன. தொடர்ந்து நெய் அபிஷேகம் நடைபெற்றது.

    இந்தநிலையில் கோவில் நடை நேற்று மாலை திறக்கப் பட்டதால் சபரிமலையில் நேற்றே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மண்டல பூஜை தொடங்கிய தையடுத்து இன்றும் பக்தர்கள் குவிந்தனர். மழை பெய்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமரிமலையில் திரண்டனர்.

    சன்னிதானம், நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப் பட்டது. ஆன்லைனில் முன்பதிவுசெய்த பக்தர்களே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன.

    பக்தர்கள் வரும் வாக னங்களை நிலக்கல்லில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. அங்கிருந்து பம்பைக்கு பக்தர்கள் வருவதற்கு கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன.

    சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதி நடக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டல பூஜை முடிந்ததும் டிசம்பர் 27-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது.

    பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 15-ந் தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். ஜனவரி 15-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மகரஜோதி தரிசனம் நடை பெறும். தொடர்ந்து 19-ந்தேதி வரை பூஜைகள் நடைபெறும். மறுநாள் 20-ந்தேதி பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி சாமி தரிசனம் செய்த பிறகு கோவில் நடை சாத்தப்படும். அன்றுடன் மகர விளக்கு பூஜை நிறைவு பெறும்.

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதி களில் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    சபரிமலையில் இன்று

    அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு, 3.30 மணிக்கு கணபதி ஹோமம், 3.35 மணிக்கு முதல் 7 மணி வரை நெய் அபிஷேகம்

    காலை 7.30 மணிக்கு உஷ பூஜை,  8.30 மணி முதல் 11 மணி வரை நெய் அபிஷேகம்

    காலை 11 மணி முதல் 11.30 மணி வரை அஷ்டாபிஷேகம்

    மதியம் 12.30 மணிக்கு உச்ச பூஜை, 1 மணிக்கு நடை அடைப்பு

    மாலை 3 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணி தீபாராதனை

    இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை புஷ்பாபிஷேகம்

    இரவு 9.30 மணிக்கு அத்தாழ பூஜை, 11 மணி நடை அடைப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 56-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு அரியலூரில் புத்தக கண்காட்சி
    • ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்

    அரியலூர்,

    56-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில், பொது நூலக இயக்கம், மாவட்ட நுலக ஆணைக் குழு, வாசகர் வட்டம் மற்றும் தமிழ்களம் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த புத்தகக் கண்காட் சியை அரியலூர் கோட்டாட் சியர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசி னார்.

    அப்போது அவர் பேசியதாவது:-புத்தகங்களைத் தேடி நூலகத்துக்குச் சென்றவர் கள் இன்று மிகப் பெரிய தலைவர்களாகவும், அரசு உயர் அதிகாரிகளாகவும் உள்ளனர்.ஆனால் இன்றைய தலை முறையினர் வாசிப்பு பழக் கத்தை மறந்து, கைப்பேசி, காட்சி ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் தங்களின் அறிவு மட்டுமல்லாமல் மனநிலையும் கெட்டுப் போக வாய்ப்புகள் அதிகம் உண்டு .எனவே மாணவர்களும் இளைஞர்களும் நல்ல நூல்களை வாசித்தால் எந்த பாதிப்பும் இல்லாமல் தாங்கள் அடைய விரும்பும் லட்சியங்களை எளிதில் அடையலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்டட நூலக அலுவலர் ஆண்டாள் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் மங்கையர்க்கரசி முன்னிலை வகித்தார். அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் தமிழினி ராமகிருஷ்ணன், சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை, தமிழ்களம் இளவரசன், உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில துணைச் செயலர் சௌந்தர்ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.முன்னதாக முதல்நிலை நூலகர் க.ஸன்பாஷா வரவேற்றார். முடிவில் நூலக உதவியாளர் மலர்மன்னன் நன்றி தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குப்பகுடி ஊராட்சி மூட்டாம்பட்டியில் ௧௦ ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறந்து வைக்கப்பட்டது
    • அமைச்சர் மெய்யநாதன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடி ஊராட்சி மூட்டாம்பட்டி பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேல் நிலை நீர்தேக்க தொட்டி கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் பேரில் புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது.  புதிதாக கட்டப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். இவ்விழாவில்  திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை, திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி, சுப்பையா, சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையம் திறக்கப்பட்டது
    • 15-ந் தேதி வரை செயல்படும் என்று அறிவிப்பு

    திருச்சி, 

    தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகை தினங்க ளில் அதிக அளவிலான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல் வது வழக்கம். இதற்காக கூடுதல் அரசு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்ப டும்.

    அவ்வாறான நேரங்களில் பயணிகளின் கூட்ட நெரி சலை தடுக்கும் வகையில் திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் வருகிற 12-ந் தேதி கொண்டா டப்படும் தீபாவளி பண்டி கையை முன்னிட்டு தற்கா லிக பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கான ஏற்பாடு கள் நடந்தன.

    இதையடுத்து திருச்சியில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகளுக்காக மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள சோனா மீனா திரையரங்கம் அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

    அதேபோல் மதுரை மற்றும் புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மன்னார்புரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து அங்கிருந்து இயக்கப்பட உள்ளது.

    இதனைத் தொடர்ந்து இதன் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.

    விழாவில் மாநகர காவல்துறை ஆணையர் காமினி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன், துணை மேலாளர் (வணிகம்) சங்கர், நகர கோட்ட மேலாளர் புகழேந்திராஜ், மற்றும் துணை மேலாளர் (தொழில்நுட்பம்) கார்த்திகேயன், புறநகர் கோட்ட மேலாளர் யேசுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இன்று (9-ந்தேதி) முதல் 15-ந் தேதி வரை செயல்படும் இந்த தற்காலிக பேருந்து நிலையங்களில், பயணிகள் வசதிக்கான மின்விளக்குகள், கழிவறை, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் விற்பனை மையம் திறப்பு விழா நடைபெற்றது
    • கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா திறந்து வைத்து பார்வையிட்டார்

    கரூர்,

    கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கூட்டுறவு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை மையம் திறக்கப்பட்டது. கோவாப்மார்ட் என்ற இந்த விற்பனை நிலையம் மற்றும் இசேவை மையம் ஆகியவற்றை கரூர் ஜவஹர் பஜாரில், கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா திறந்து வைத்து பார்வையிட்டார்.

    கரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் தயாரிக்கும் அனைத்து பொருட்களும் கோவாப்மார்ட்டில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இசேவை மையமும் துவங்கப்பட்டுள்ளது. இந்த இசேவை மையத்தில் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களும் பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் பெற்றுப்பயனயடைலாம் எனவும் இணைப்பதிவாளர் தெரிவித்தார். திறப்பு விழாவில் கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குநரும், பொதுவிநியோகத்திட்ட துணைப்பதிவாளருமான அபிராமி, கரூர் சரக துணைப்பதிவாளர் ஆறுமுகம் மற்றும் சங்கப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கறம்பக்குடி அருகே பகுதி நேர கால்நடை மருத்துவமனை திறக்கப்பட்டது
    • முத்துராஜா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கரு கீழத்தெரு மற்றும் வளம் கொண்டான் விடுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதிகளில் பகுதி நேர கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டது.

    இந்த மருத்துவமனை களை புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் முத்து ராஜா திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான தவ பாஞ்சாலன், கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவரும் மாவட்ட மகளிர் அணி தலைவியுமான மாலா ராஜேந்திர துரை, மலையூர் வட்டார கால்நடை மருத்துவ அலுவலர் முத்தழகு,

    கறம்பக்குடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரமேஷ் மற்றும் அரசு ஒப்பந்தக்காரர் கருக்கா குறிச்சி பரிமளம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சிந்தாமணி முருகேசன், லட்சுமி கோவிந்தன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள், தி.மு.க. நிர்வாகிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த எம்எல்ஏவுக்கும், தமிழக அரசுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆதிரா’ஸ் பேக்கரிஸ் புதிய கிளையை நகர சபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் திறந்து வைத்தார்.
    • அனைத்து வகையான இனிப்பு, காரவகைகள் மற்றும் பாதாம் பால், பருத்திப்பால் உள்ளிட்ட பானங்களும் ஆர்டரின் பேரில் குறித்த நேரத்தில் தயாரித்து வழங்க உள்ளோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பழைய பஸ் நிலையம் ரெயில்வே ஸ்டேஷன் அருகில் ஆதிரா'ஸ் பேக்கரிஸ் புதிய கிளை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

    ராமநாதபுரம் தி.மு.க வடக்கு நகர செயலா ளரும், நகரசபை தலைவருமான ஆர்.கே.கார்மேகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.முன்னதாக திறப்பு விழா விற்கு வருகை தந்த நகரசபை தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமு கர்களை பேக்கரி உரிமை யாளர்கள் பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.

    ஆதிரா'ஸ் பேக்கரிஸ் உரிமையாளர் சிவசண்மு கம், சசிக்குமார், சதீஷ்குமார் ஆகியோர் 'மாலைமலர்' நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் எங்களது ஆதி'ராஸ் குழு மங்களின் கிளை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் பேராதர வுடன் நன்மதிப்பை பெற்று செயல்பட்டு வருகிறது.தொடர்ந்து புதிய கிளையை ராமநாதபுரத்தில் தொடங்கி உள்ளோம். வீட்டு விஷே சங்களுக்கு தேவையான அனைத்து வகையான இனிப்பு, காரவகைகள் மற்றும் பாதாம் பால், பருத்திப்பால் உள்ளிட்ட பானங்களும் ஆர்டரின் பேரில் குறித்த நேரத்தில் தயாரித்து வழங்க உள்ளோம்.

    ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் பேராதரவை வேண்டு கிறோம் என்றார். திறப்பு விழா நிகழ்ச்சியில் ஆதிரா'ஸ் பேக்கரிஸ் உரிமையாளர்கள் சிவ சண்முகம், சசிக்குமார்,நகர் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், ஐஸ்வர்யா குழுமங்களின் உரிமையாளர் தொழிலதிபர் சுப்பு, பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கேணிக்கரை பாலன் ஹோட்டல் உரிமையாளர் சோமு, தி.மு.க அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் பழ. பிரதீப் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo