என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலுவலகம்"

    • அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, மெக்சிகோ மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 11 நாடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
    • இளைஞர்கள் குறிப்பாக 18 முதல் 24 வயதுடையவர்கள், மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளனர்.

    ஆஷ்லே மேடிசன் யூகோவ் உடன் இணைந்து நடத்திய புதிய சர்வதேச ஆய்வில், பத்து பேரில் நான்கு பேர் இந்தியர்கள் ஒரு சக ஊழியருடன் டேட்டிங் செய்திருக்கிறார்கள் அல்லது தற்போது டேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

    அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, மெக்சிகோ மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 11 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு, 13,581 வயதானவர்களையும் உள்ளடக்கியது. மேலும் பணியிடத்தில் காதலை ஒப்புக்கொள்ளும் நபர்களை பொறுத்தவரை உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    இந்தப் பட்டியலில் மெக்சிகோ முன்னணியில் உள்ளது. ஆய்வில் 43 சதவீத பேர் சக ஊழியருடன் காதல் கொண்டிருந்ததாகக் கூறியுள்ளனர். அதே நேரத்தில் இந்தியா 40 சதவீத பேர் நெருக்கமாக உள்ளனர். தொழில்முறை எல்லைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும், பணியிட உறவுகள் இந்தியாவில் நவீன அலுவலக கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாகவே உள்ளன என்பதை கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.

    பெண்களை விட (36%) ஆண்கள் (51%) சக ஊழியரை டேட்டிங் செய்ததற்கான வாய்ப்புகள் அதிகம். தொழில்முறை விளைவுகளுக்கு பயந்து அலுவலக உறவுகளைத் தவிர்ப்பதாக 29% பெண்கள் கூறியுள்ளனர். ஆண்கள் 27% தனிப்பட்ட விளைவுகளைப் பற்றி அதிகம் கவலைப்படுகின்றனர். ஆண்களுடன் ஒப்பிடும்போது 26% பெண்கள் கவலைப்படுகின்றனர்.

    இளைஞர்கள் குறிப்பாக 18 முதல் 24 வயதுடையவர்கள், மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளனர். 34% பேர் அத்தகைய உறவுகள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கலாம் என்பது குறித்து கவலை தெரிவித்தனர். இது இளைஞர்களிடையே வளர்ந்து வரும் தொழில்முறை உணர்வு மற்றும் எல்லை விழிப்புணர்வு ஆகியவற்றைக் குறிக்கிறது.

    இந்தியாவின் உயர் தரவரிசை, சமூக மதிப்புகள் மாறி வருவதாலும், பாரம்பரியமற்ற உறவுகளை நோக்கிய வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதாலும் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

    திருமணமானவர்களுக்கான டேட்டிங் செயலியான க்ளீடனின் மற்றொரு ஆய்வில், 35% இந்தியர்கள் தற்போது வெளிப்படையான உறவுகளில் இருப்பதாகவும், 41% பேர் தங்கள் துணை பரிந்துரைத்தால் பரிசீலிப்பார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்தப் போக்கு பெருநகரங்களுக்கு அப்பாலும் பரவியுள்ளது. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் போன்ற நகரங்கள் திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்களில் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

    பணியிட காதல்கள் சாதாரணமாகி வரும் நிலையில், அவை ஆர்வ மோதல்கள் முதல் தொழில்முறை அபாயங்கள் வரை இன்னும் சவால்களைக் கொண்டுள்ளன.

    இந்தியாவின் வளர்ந்து வரும் உறவு கலாச்சாரம், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில் வாழ்க்கைக்கும் இடையிலான கோட்டை எவ்வாறு தொடர்ந்து மங்கலாக்குகிறது, வேலையில் காதலை பொதுவானதாகவும் சிக்கலானதாகவும் ஆக்குகிறது என்பதை இந்த ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

    • விபத்துகளில் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு, முதலாளிகள் இழப்பீடு வழங்க வேண்டும்.
    • இது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கியமான தீர்ப்பாகும்.

    பணியில் இருக்கும்போது விபத்து ஏற்பட்டால் நிறுவனம் இழப்பீடு கொடுக்க வேண்டும். இந்நிலையில், பணியிடத்திற்குச் சென்று திரும்பும் போது ஏற்படும் விபத்துகளுக்கும், ஊழியர்களுக்கு மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் பணியாளர் இழப்பீட்டுச் சட்டம், 1923-ன் கீழ் இழப்பீடு வழங்க உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    சர்க்கரை ஆலை காவலாளி வேலைக்குச் செல்லும் வழியில் இறந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

    வேலைக்குச் செல்லும்போதோ அல்லது திரும்பும்போதோ விபத்து ஏற்பட்டு நீங்கள் காயமடைந்தால், மருத்துவரின் கட்டணம் மற்றும் மருந்துகள் உட்பட சிகிச்சைக்கான அனைத்து செலவையும் அவரது முதலாளி தான் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, பணியிடத்திற்கு செல்லும் அல்லது திரும்பும் பயணத்தை, பணியின் ஒரு பகுதியாகக் கருதுகிறது.

    எனவே, இத்தகைய விபத்துகளில் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு, முதலாளிகள் அல்லது காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும்.

    பணியாளர்கள் அலுவலகத்திற்கு பயணிக்கும்போது அல்லது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது விபத்து ஏற்பட்டால் கூட இழப்பீடு பெறமுடியும். ஆனால் விபத்து நடந்தவுடன் இதுகுறித்து முதலாளிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விபத்துக்கான ஆதாரங்கள், மருத்துவ அறிக்கைகள் ஆகியவை இழப்பீடு பெற தேவை என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கியமான தீர்ப்பாகும்.

    • பெரும்பாலான ஆண்கள் சரியான அளவில் பொருந்தும் பேன்ட்களை அணிவதில்லை.
    • எந்தவொரு உடை அலங்காரத்தையும், காலணிகள்தான் முழுமையாக நிறைவு செய்கின்றன.

    அலுவலக மீட்டிங்கிற்கு தயாராகும் போது கவனிக்கவேண்டிய சில விஷயங்கள்:-

    * மென்மையான சட்டை

    அலுவலகத்தில் நடக்க இருக்கும் மீட்டிங்கிற்கு, மென்மையான நிற சட்டைகளை அணிந்து செல்வதுதான் நல்லது. கடுமையான நிறங்களை தவிர்க்கலாம்.

    * பொருத்தமற்ற பேன்ட்கள்

    பெரும்பாலான ஆண்கள் சரியான அளவில் பொருந்தும் பேன்ட்களை அணிவதில்லை. பேன்ட் மிகவும் இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ இருந்தால், அது முழுமையான தோற்றத்தை கெடுத்துவிடும். ஆண்களுக்கான பார்மல் பேன்ட்கள் இடுப்பு மற்றும் நீளத்திற்கு சரியாக பொருந்த வேண்டும்.

    * காலணி

    எந்தவொரு உடை அலங்காரத்தையும், காலணிகள்தான் முழுமையாக நிறைவு செய்கின்றன. அதனால் அலுவலக உடையை நிறைவு செய்ய, முறையான காலணிகளைத் தேர்ந்தெடுக்கவும். அலுவலக சந்திப்பு, கலந்துரையாடல் போன்றவற்றுக்கு பார்மல் காலணிகளை மட்டும் பயன்படுத்தலாம்.

    * தேர்வு

    அலுவலக சந்திப்பிற்கு சின்னசின்ன விஷயங்களும் ரொம்ப முக்கியம். குறிப்பாக பெல்ட், நேர்த்தியான கைக்கடிகாரம் மற்றும் பிரீமியம் கப்லிங்க்ஸ் போன்றவற்றை சரியாக தேர்ந்தெடுத்து அணியுங்கள்.

    • தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம். எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வந்த பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் அலுவலகம், பூதப்பாண்டி கட்டிடபிரிவு உதவி பொறியாளர் அலுவலகம் ஆகியவை பராமரிப்புக்கு என்று தென்காசி மாவட்டம் ஆலங்கு ளம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதே போன்று தக்கலையில் இயங்கி வந்த கட்டிட பிரிவு அலுவலகம் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

    தமிழக பொதுப்பணித்து றையில் கட் டிடஅமைப்பு உருவாக்கப்பட்டபோது, குமரி மாவட்டத்தில் ஒரு கோட்டம், 4 உப கோட்டம் மற்றும் 10 பிரிவு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அரசு கட்டிடங்களை பராமரிப்பு செய்து வருவ துடன், புதிய கட்டிடங்க ளையும் கட்டி வருகிறது.

    இந்த அலுவலகங்கள் குமரி மாவட்டத்தில் இருந்து மாற் றப்படுவதால் ஒரு உதவி செயற்பொறியாளர் பணியிடம், 3 உதவி பொறி யாளர் இளம் பொறியாளர், ஒரு கண்காணிப் பாளர், ஒரு உதவியாளர் பணியிடம் போன்றவை இந்தமாவட் டத்தில் இருந்து பறிபோய் விடுகிறது. இதனைக் கருத் தில் கொண்டு, குமரி மாவட்டத்தில் இயங்கி வந்த அலுவலகங்களை பிற மாவட்டங்களுக்கு மாற்றுவதற்கு பிறப்பிக்கப் பட்ட அரசு உத்தரவை உடனே ரத்து செய்ய வேண் டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    மேலும் இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம் அனுப்பியுள்ளார்.

    • மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை எடுத்துச் சென்றனர்.
    • அதிரடி படையினருடன் இணைந்து போலீஸ் சூப்பிரண்டு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் போலீஸ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    ஆய்வின் போது போலீஸ் நிலைய வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கி வருகிறார். இந்தநிலையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் தூய்மை பணி நடந்தது.அதிரடி படை யினருடன் இணைந்து வளா கத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த பகுதியில் கிடந்த குப்பைகளை போலீ சாருடன் இணைந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் அகற்றி னார். பின்னர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த குப்பைகளை எடுத்துச் சென்றனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் ஆங்காங்கே பூந்தொட்டிகளை வைத்து பராமரிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

    • புங்கனூரில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு
    • அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங் கம் சட்டமன்ற தொகு–தியை உள்ளடக்கிய மணி–கண்டம் ஊராட்சி ஒன்றி–யத்திற்குட்பட்டது புங்க–னூர் ஊராட்சி.

    அமைச்சர் திறந்துவைத்தார்

    2,975 ஆண்கள் மற்றும் 3,094 பெண்கள் என மொத்தம் 6,069 மக்கள் தொகை கொண்ட புங்க–னூரில் ஊராட்சியில் ஊராட்சி மன்றத்திற்கென ரூ.17.64 லட்சம் மதிப்பில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டுள் ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

    விழாவுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பி–ரதீப்குமார் தலைமை தாங்கினார். புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் அனைவரையும் வரவேற்றார் ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்துவைத்து குத்து–விளக்கேற்றினார்.

    அறைகள்

    ஊராட்சி மன்றத் தலைவ–ருக்கான அறை, வார்டு உறுப்பினர்களுக்கான கூட்ட அறை மற்றும் ஊராட்சி செயலருக்கான அறைகளுடன் இந்த ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் ரூ.17.64 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் கமலம் கருப்பையா, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் கங்காதாரணி, புங்கனூர் ஊராட்சி மன்றத்தலைவர் தாமோதரன்,

    ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாத்தூர் கருப்பையா, புங்கனூர் கவுன்சிலர் கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர்கள் வயலூர் மணிமேகலை முருகேசன், சேதுராபட்டி வசந்தா தங்கரத்தினம் , ஆளுந்தூர் எமல்டா லில்லி கிரேசி ஆரோக்கியசாமி, சோமரசம்பேட்டை குணவதி துரைப்பாண்டியன், அம்மாபேட்டை தமிழ்ச்செல்வி காந்தி மற்றும் புங்கனூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாரியப்பன், வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற செயலாளர் கண்ணன்,

    தி.மு.க. பிரதிநிதிகள் கைக்குடி சாமி, ரெத்தினமூர்த்தி சுப்பிரமணி, சண்முகம், முருகேசன், அய்யாதுரை, சண்முகப்பிரியா, கருப்பையா, சண்முகம், தங்கவேல், அமிர்தராஜ், பாலன், கார்த்திக், சுதாகர், அன்பு, மூக்கன், தீனன், ரமேஷ், வசந்த், முன்னாள் துணைத் தலைவர் வெங்கட் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கி ணைப்பாளர் ஹீமாயுன் கபீர் திறந்து வைத்தார்.
    • நகர செயலாளர் ஹாஜா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு மற்றும் கூட்டம் நடைபெற்றது.

    கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கி ணைப்பாளர் ஹீமாயுன் கபீர் திறந்து வைத்து பேசினார்.

    இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் முகமது சர்வத்கான், கிருஷ்ணகுமார், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி, மாநில ஊழல் ஒழிப்பு பாசறை ஒருங்கிணைப்பாளர் அரவி ந்தன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் உமர் முகமத், நாகை பாராளுமன்ற பொறுப்பாளர் அப்பு அகஸ்டீன் அற்புதராஜ், மாவட்ட தலைவர் செல்வம், மாவட்ட பொருளாளர் அலாவூதீன், தொகுதி தலைவர் பிஸ்மி கார்த்திக், செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் சுந்தர், கமலகண்ணன், ஒன்றிய தலைவர்கள் சந்திரமோகன், மதன் குமார், பொருளாளர் ராஜா, நகர தலைவர் மகேஷ்குமார், நகர செயலாளர் ஹாஜா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    • 14-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்
    • ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உடனே வழங்க வேண்டும்

    நாகர்கோவில்:

    காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும். தொழிலாளர்களுக்கு விடுப்பு மறுக்கக்கூடாது. 2003-க்கு பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும்.

    14-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ராணி தோட்டத்தில் உள்ள அரசுபோக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு சங்க தலைவர் சங்கரநாராயண பிள்ளை தலைமை தாங்கினார். செயல் தலைவர் லட்சுமணன் முற்றுகை போராட்டத்தை தொடங்கி வைத்தார். துணை தலைவர் லியோ, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகி சுந்தர்ராஜ், நிர்வாகிகள் ஸ்டீபன் ஜெயக்குமார், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகனன், சுரேஷ்குமார் ஆகியோர் முற்றுகை போராட்டம் குறித்து பேசினர்.

    இதில் நிர்வாகிகள் மனோஜ், ஜஸ்டின், அசோக் குமார், தோமஸ், சேவியர்ஜார்ஜ், சிங்காரன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்களது உடமைகளை வைப்பதற்கு இடவசதி இல்லாமல் இருந்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

    இதையடுத்து மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானார் வந்து மனு கொடுத்து செல்கி றார்கள். மற்ற நாட்களிலும் பொது மக்களும், அரசியல் கட்சியினரும் மனு அளிக்க வருகிறார்கள்.

    மனு அளிக்க வரும் பொது மக்கள் சிலர் தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் நடந்து வரு வதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அலுவலகத்தின் முன் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வரு பவர்களை சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்து வருகிறார்கள். பாதுகாப்பு பணியில் பெண் போலீ சாரும் ஈடுபட்டு உள்ளனர்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்க ளது உடமைகளை வைப்பதற்கு இடவசதி இல்லாமல் இருந்தது. மேலும் உணவு அருந்துவதற்கும் அவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது .

    இந்த நிலையில் போலீ சாருக்கு கலெக்டர் அலுவல கத்தின் முன் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதி யில் காலியாக இருந்த அறை ஒன்று போலீசாருக்கு வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடு படும் போலீசார் அந்த அறையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து இன்று காலை முதல் அந்த அறை யில் போலீசார் தங்களது உடமைகளையும், பொருட்களையும் வைத்தி ருந்தனர். மழை மற்றும் வெயில் நேரங்களில் இந்த அறை எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • ரூ.25.99 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான ஆணை.
    • ரூ.38 லட்சத்து 35 ஆயிரத்து 549 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், பஞ்சநதி க்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் சிறப்பு மக்கள்நேர்காணல் முகாம் கலெ க்டர்அருண்தம்பு ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    முகாமில் கலெக்டர் அருண்தம்புராஜ் பேசி யதாவது:-

    இந்த ஊராட்சியில் கடந்த முறை கணபதிதேவன்காடு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெரு சாலையை ரூ.34.86 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட சாலை அமைக்கவும், சிறுதலைக்காடு சாலையை ரூ.14.84 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலையாக அமைக்கவும், கணபதிதேவன்காடு அடப்போடை சாலையை ரூ.14.05 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பி சாலையாக மாற்றும் பணியையும் வழங்கியுள்ளது.

    அதனை தொடர்ந்து தற்போது ரூ.25.99 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான ஆணை, ஆவடைக்கோன் காடு மயான சாலையில் ரூ.27.76 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு ஜல்லி சாலையாக மாற்றுவதற்கும், கணபதி தேவன் காடு மயான கொட்டகையின் கூரை அமைக்கும் பணிக்காக ரூ.3 லட்சம் மதிப்பீட்டிலும் மூன்று பணிகள் நடைபெறுவதற்கான ஆணை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    முகாமில் மாற்றுத்தி றனாளி நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ. 59,150 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 150 பயனாளிகளுக்கு சுமார் ரூ.38 லட்சத்து 35 ஆயிரத்து 549 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார். முகாமில் வருவாய் அலுவலர் ஷகிலா, வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ பௌலின், வேளாண் இணை இயக்குனர் அகண்டாராவ், ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன், ஊராட்சிமன்ற தலைவர்கள் சத்தியகலா, தேவி தமிழரசி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பையன், ஒன்றிய கவுன்சிலர் கண்ணகி, மருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநர் உதயம் முருகையன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ராஜ், பாஸ்கர் தாசில்தார் ஜெயசீலன் தனி வட்டாட்சியர்கள் ரமேஷ், வேதையன், மாதவன், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகி பெற்று கொள்ள வேண்டும்.
    • விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இம்மாதம் 30-ந் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை யின் மூலம் 2022-23ஆம் ஆண்டிற்கு " டாக்டர் அம்பேத்கார் தமிழ்நாடு அரசு விருது" ஆதிதிராவிடர் நல மக்களின் முன்னேற்றத்திற்கும், அரிய தொண்டு செய்பவர்களுக்கும் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் ஆகியோர்களில் சிறந்தோர்க்கும் திருவள்ளுவர் திருநாளில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி 2022ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கார் தமிழ்நாடு அரசு விருது 2023ஆம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்பட உள்ளது.

    இந்த விருதுக்காக விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதற்கான உரிய படிவத்தினை தஞ்சாவூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகி பெற்று கொள்ள வேண்டும்.

    பெறப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய முன்மொழிவுகளை இந்த மாதம் 30-ந் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நவம்பர் 26-ந் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • குமரி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்றனர்.

    நாகர்கோவில்:

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ந்தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து 26-ந் தேதி அன்று உள்ளாட்சி அலுவலகங்கள், மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் உறுதிமொழி எடுக்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி குமரி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவக்குமார், செயலாளர் முருகானந்தம், கவுன்சிலர்கள் நீலபெருமாள், ஜாண்சிலின் விஜிலா, அம்பிளி, லூயிஸ், பரமேஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்.

    ×