என் மலர்
உள்ளூர் செய்திகள்

புங்கனூரில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம்
- புங்கனூரில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு
- அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்
திருச்சி:
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங் கம் சட்டமன்ற தொகு–தியை உள்ளடக்கிய மணி–கண்டம் ஊராட்சி ஒன்றி–யத்திற்குட்பட்டது புங்க–னூர் ஊராட்சி.
அமைச்சர் திறந்துவைத்தார்
2,975 ஆண்கள் மற்றும் 3,094 பெண்கள் என மொத்தம் 6,069 மக்கள் தொகை கொண்ட புங்க–னூரில் ஊராட்சியில் ஊராட்சி மன்றத்திற்கென ரூ.17.64 லட்சம் மதிப்பில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டுள் ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
விழாவுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பி–ரதீப்குமார் தலைமை தாங்கினார். புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் அனைவரையும் வரவேற்றார் ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்துவைத்து குத்து–விளக்கேற்றினார்.
அறைகள்
ஊராட்சி மன்றத் தலைவ–ருக்கான அறை, வார்டு உறுப்பினர்களுக்கான கூட்ட அறை மற்றும் ஊராட்சி செயலருக்கான அறைகளுடன் இந்த ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் ரூ.17.64 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் கமலம் கருப்பையா, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் கங்காதாரணி, புங்கனூர் ஊராட்சி மன்றத்தலைவர் தாமோதரன்,
ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாத்தூர் கருப்பையா, புங்கனூர் கவுன்சிலர் கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர்கள் வயலூர் மணிமேகலை முருகேசன், சேதுராபட்டி வசந்தா தங்கரத்தினம் , ஆளுந்தூர் எமல்டா லில்லி கிரேசி ஆரோக்கியசாமி, சோமரசம்பேட்டை குணவதி துரைப்பாண்டியன், அம்மாபேட்டை தமிழ்ச்செல்வி காந்தி மற்றும் புங்கனூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாரியப்பன், வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற செயலாளர் கண்ணன்,
தி.மு.க. பிரதிநிதிகள் கைக்குடி சாமி, ரெத்தினமூர்த்தி சுப்பிரமணி, சண்முகம், முருகேசன், அய்யாதுரை, சண்முகப்பிரியா, கருப்பையா, சண்முகம், தங்கவேல், அமிர்தராஜ், பாலன், கார்த்திக், சுதாகர், அன்பு, மூக்கன், தீனன், ரமேஷ், வசந்த், முன்னாள் துணைத் தலைவர் வெங்கட் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.






